PDA

View Full Version : புத்தம் புதிய சர்தார்ஜி ஜோக்குகள்



மதுரை மைந்தன்
03-11-2008, 08:47 PM
தில்லியில் இரண்டு சர்தார்ஜிகள் சந்தித்தனர். அப்போது ஒரு சர்தார்ஜி மற்றவரிடம் கேட்டார்

" இங்கிருந்து சென்னை அதிக தூரமா இல்லை வானத்து சந்திரன் அதிக தூரமா?"

" எனக்கு தெரியலை நீங்கள் கூறுங்கள்"

" சென்னை தான் அதிக தூரம் ஏன்னா சந்திரனை பார்க்க முடியும் இங்கிருந்து. சென்னையை பார்க்க முடியுமா?":lachen001:
_______________________________________________________________________


அதி வேகமாக காரில் சென்ற சர்தார்ஜியை போலிஸ்காரர் மடக்கினார்.

போலிஸ்காரர்: " வேக கட்டுப் பாட்டை மீறி போறீங்க. உங்க லைசன்சை எடுங்க"

சர்தார்ஜி: " உங்களோட ரொம்ப தொல்லையா போச்சு. நேத்து தான் என்னோட லைசன்சை ஒரு போலிஸ்கார்ர் பிடுங்கிக்கிட்டு போனார். இன்னும் திருப்பி தரலை அதை. இப்போ நீங்க வேற லைசன்சை கொண்டா எனறால் நான் எங்கே போவேன்":lachen001:
__________________________________________________________________________


சீனாக்காரர் ஒருவரும் ஒரு சர்தார்ஜியும் சந்தித்தனர்.

சீனாக்காரர்: நாங்கள் தான் முதலில் சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பினோம்

சர்தார்ஜி: இது என்ன பெரிய அதிசயம். நாங்க சூரியனுக்கே ராக்கெட்டை அனுப்பியிருக்கோம்.

சீனாக்காரர்: என்னது சூரியனுக்கு ராக்கெட்டா? அது சூரிய வெப்பத்தில் கருகி விடாதா?

சர்தார்ஜி: கருகாது. ஏன்னா நாங்க இரவில் தானே அனுப்பினோம்:lachen001:
______________________________________________________________________


சர்தார்ஜி: டாக்டர் எனக்கு உடம்பில எங்க தொட்டாலும் வலிக்குது. பாருங்க மூக்கை தொட்டா வலிக்குது. தோளை தொட்டா வலிக்குது. காலை தொட்டா வலிக்குது.

டாக்டர் (சற்று யோசித்த விட்டு): எங்கே உங்க கையை காட்டுங்க?. உங்க கையில புண் இருக்கு அதான் நீங்க எங்க தொட்டாலும் வலிக்குது.:lachen001:
_________________________________________________________________________

ஒரு சர்தாரஜியும் அவரது நண்பரும் ஒரு கட்டிடத்தின் இருபதாவது மாடிக்கு வெளியே சாரம் கட்டி வர்ணம் பூசிக் கொண்டிருந்தார்கள். மதிய உணவு வேளை வந்தது. முதல் நண்பர் தனது சாப்பாட்டு பாத்திரத்தை பிரித்து பார்த்து " இன்னிக்கும் தயிர் சாதமா? நாளைக்கும் தயிர் சாதமாக இருந்தால் நான் இங்கிருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்றார். சர்தார்ஜியும் தனது சாப்பாட்டை பார்த்து விட்டு அதே மாதிரி கூறினார்.

மறு நாள் வந்தது. சர்தார்ஜியின் நண்பர் தனது மதிய உணவை பார்த்து அது தயிர் சாதமாக இருக்கவே கீழே விழுந்து இறந்தார். சர்தார்ஜியும் கீழே விழந்து இறந்தார். இருவரின் இறுதி சடங்கில் நண்பரின் மனைவி அழுது கொண்டே " இப்படி செய்வார் என்று தெரிந்திருந்தால் நான் வேறு வகையான உணவை பாத்திரத்தில் கொடுத்திருப்பேனே" என்றார். சர்தார்ஜியின் மனைவி அழுகைக்கு நடுவே புலம்பினார் " இவருக்கு என்ன வந்தது? தனது உணவை தானே தயாரித்தாரே".:lachen001:

ராஜா
04-11-2008, 02:59 AM
ரொம்பப் புதுசு..!

நன்றி மதுரை..!

Narathar
04-11-2008, 03:51 AM
நன்றி மதுரைவீரா..........
இன்னுமின்னும் கொடுங்கள்!!

சிவா.ஜி
04-11-2008, 04:01 AM
வேறு வடிவத்தில் வாசித்தவை என்றாலும் மீண்டும் வாசிக்க நன்றாக இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி மதுரை வீரரே.

poornima
04-11-2008, 04:49 AM
முதல் இரண்டும் கேள்விப்படாதவை.. மற்ற இரண்டும் வெவ்வேறு வடிவங்களில்
வந்த நகைச்சுவை துணுக்குகள் தாம்.. எனினும் சர்தாஜிகள் கோணத்தில் படிக்க
சுவையாகத்தான் இருக்கின்றன.

நன்றி மதுரை வீரன் ஐயா

மதுரை மைந்தன்
04-11-2008, 10:56 AM
ஜோக்குகளை ரசித்து பின்னூட்டம் போட்ட நண்பர்கள் ராஜா சிவா.ஜி Narathar மற்றும் பூர்ணிமா அவர்களுக்கு எனது நன்றிகள். மேலும் சில ஜோக்குகள் இதோ.
________________________________________________________________________

ஒரு சர்தார்ஜி எல்லோரும் தன்னை ஏளனமாக பார்க்கிறார்களே என்று வருந்தி தனது தலைப்பாகையை கழட்டி வைத்து கார் ஓட்டிச் சென்றார். வழியில் ஒரு ஆட்டு மந்தை குறுக்கிட்டது. சர்தார்ஜி ஆட்டிடையனிடம் உன்னுடய மந்தையில் எத்தனை ஆடுகள் இருக்கு என்று நான் சொன்னால் எனக்கு ஒரு ஆட்டை தருவாயா? என்று கேட்டார்.

ஆட்டிடையனும் சம்மதிக்கவே சர்தார்ஜி குருட்டாம் போக்கில் மொத்தம் 352 ஆடுகள் என்றார். ஆட்டிடையன் சர்தார்ஜியின் சரியான விடையைக் கேட்டு ஆச்சரியமடைந்தான். நீஙக சரியான விடையை சொன்னதாலே நான் என்னுடய வாக்குறுதியை நிறைவேற்றணும். உங்களுக்கு பிடித்த ஆட்டை எடுத்துக் கொள்ளுஙகள் என்றான் சர்தாரஜியிடம்.

சர்தார்ஜி தனக்குப் பிடித்த ஆட்டை எடுத்துக் கொண்டவுடன் ஆட்டிடையன் அவரிடம் இப்போ நான் நீங்க யாரு என்று சரியாகச் சொன்னால் அந்த ஆட்டை திருப்பித் தருவீர்களா எனறான். சர்தாரஜி சம்மதிக்க அவன் நீங்கள் ஒரு சர்தார்ஜி என்றான். சர்தார்ஜிக்கு ஒரே ஆச்சரியம். நான் சர்தாரஜி என்ற எப்படி கண்டு பிடித்தாய் என்று ஆட்டிடையனிடம் கேட்டார். அதற்கு அவன் நீங்கள் எடுத்துக் கொண்டது ஆடு இல்லை என்னுடன் வந்த நாய் எனறான். :lachen001:
__________________________________________________________________________

சர்தார்ஜி டாக்டரிடம்: டாக்டர் இரவெல்லாம் எனக்கு தூங்க முடியலை. இந்த பாழாய் போன தெரு நாய்கள் சதா குலைத்துக் கொண்டே இருக்கின்றன.

டாக்டர்: கவலைப் படாதீரகள். என் கிட்ட நல்ல ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதோ இவைகளை எடுத்துக்கங்க. உங்க கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்.

சில நாட்கள் கழித்து சர்தார்ஜி பழையபடி டாக்டரிடம் வந்தார்.

சர்தார்ஜி: டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரை வேலை செய்யலை.

டாகடர்: ஆச்சரியமா இருக்கே. நான் கொடுத்து உண்மையில் ஸ்டராங்கான மாத்திரைகள் ஆச்சே.

சர்தார்ஜி: இருக்கலாம். ஆனால் என்னால் ஒரு நாயைக் கூட துரத்திப் பிடித்து மாத்திரைகளை கொடுக்க முடியலை.:lachen001:
___________________________________________________________________

ஒரே ஆபீஸில் வேலை பார்த்த இரண்டு சர்தார்ஜிகளில் ஒருவருக்கு எப்படியாவது மானேஜரிடமிருந்து லீவு வாங்கி விட வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார். பிறகு ஆபீஸ் கூரையிலிருந்து தலை கீழாகத் தொங்கினார். இதைப்பார்த்த மற்ற சர்தார்ஜி அவரிடம் நீ என்ன செய்கிறாய் என்று கேட்டார். அதற்கு தொங்கிக் கொண்டிருந்த சர்தாரஜி சொன்னார் மானேஜர் வந்து என்னைப் பார்த்து தலை கீழாய் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் நான் ஒரு பல்பாக தொங்கிக் கொண்டிருப்பதாக சொல்வேன். அவர் எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு என்று சில நாட்கள் லீவு கொடுப்பார் என்றார். மானேஜர் சர்தாரஜியைப் பார்த்து விட்டு பாவம் வேலைப் பழுவால் இப்படி ஆகி விட்டார் என்று இரங்கி அவருக்கு லீவு கொடுத்து அனுப்பினார். அந்த சர்தார்ஜி சென்றவுடன் மற்ற சர்தார்ஜியும் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானார் மானேஜர் அவரிடம் நீங்கள் எங்கே கிளம்பிட்டீர்கள் என்று கேட்க அவர் சொன்னார் " என்னால் இருட்டில் வேலை செய்ய முடியாது". :lachen001:

Ranjitham
10-11-2008, 10:01 PM
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு தொடருங்க.
வாழ்துக்களுடன்
இரன்சிதம்

ஓவியா
10-11-2008, 10:48 PM
கலக்கல்... அந்த மெட்ராஸ் நகைச்சுவை சூப்பர்.

நன்றிங்கண்ணா..

pgk53
11-11-2008, 12:55 AM
அனைத்து சிரிப்புகளும் முதல் தரமாக இருக்கின்றது.
மதுரை வீரரே....வாழ்த்துக்கள்.

aren
11-11-2008, 12:56 AM
கலக்குங்க!!!

சிறுபிள்ளை
12-11-2008, 03:11 AM
நல்லா இருக்குதுங்க... இதோ என் பங்குக்கு

என்யா சர்வர் சிக்கன்ல ஈ செத்துக் கிடக்கு பாக்கலயா..?

ஆமா இவ்லோ பெரிய கோழியே செத்து கிடக்கு அத சாப்பிடுர தாம்மாத்துன்டு ஈ இதுக்கு போய்.. இந்த கூப்பாடு போடுறியே.??