PDA

View Full Version : பஸ் வேகமாக சென்றது



ரங்கராஜன்
02-11-2008, 12:16 PM
okhweoighog

மதி
02-11-2008, 12:28 PM
அன்றாடம் மெரினாவில் வந்து நிற்கும் சிறுவர்களின் உரையாடல்களையும் அவரின் மனஓட்டங்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். நான் கேட்டுக் கொண்ட காரணத்திற்காக நீங்கள் முயற்சி செய்தது மிகுந்த சந்தோஷமளிக்கிறது.

வாழ்த்துகள் மூர்த்தி

இளசு
02-11-2008, 01:13 PM
வாழ்த்துகள் மூர்த்தி..

மிக இலகுவாக மிகக்கடினமான கருவை எழுதும் கலை உங்களுக்கு..

பாராட்டுகள்..

சிறுவர்கள் உலகம் தனி.. அதன் பார்வையில் எண்ணங்கள்..உரையாடல்கள்..
பெரியவர்கள் உலகை சன்னல் வழி பார்த்ததன் வெளிச்ச-இருட்டுக்க்கீற்றுகள்...

பலவீனனும் தன்னைவிடப் பலவீனனைப் பயன்படுத்திக்கொள்வான்
எனும் உலகியல் பாடம்..

முயற்சியில் வெற்றி கண்டமைக்கு மீண்டும் வாழ்த்துகள்..

அமரன்
05-11-2008, 08:05 AM
எங்கெங்கோ அழைத்துச் சென்றாலும் எங்கும் அலுப்புத் தட்டவில்லை. எதையோ மிச்சம் வைச்சுட்டு சென்றது பஸ்.

படகோனர் என் ஃபிரண்டு, கப்பலோனர் அப்பா ஃபிரண்டு என்ற அளப்புகளில் சுற்றிய சிறுவர் உலகத்தில் சந்தேகம் ஏற்பட்டாலும் எதுவென்று சொல்ல முடியாமல் செய்தது மெச்சத்தக்கது.

நெகிழ்ந்த பாராட்டுகள்.

Narathar
15-11-2008, 12:55 PM
உண்மையாகவே........... சில நிமிடங்கள் சிறுவனாஇ இருந்த உணர்வு... மிக அற்புதமாக எழுதியிருக்கின்றீர்கள்!

வாழ்த்துக்கள்! உங்கள் கதைகளெல்லாம் நாளுக்கு நாள் மெருகேரிக்கொண்டே வருகின்றது...

பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை

ரங்கராஜன்
15-11-2008, 04:09 PM
உண்மையாகவே........... சில நிமிடங்கள் சிறுவனாக இருந்த உணர்வு...

நன்றி தலைவா
இந்த வார்த்தைகள் வர வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினான், மிக்க நன்றி தலைவா

SivaS
16-11-2008, 07:47 AM
மு.கு : நம்முடைய நண்பர் திரு. மதி அவர்கள், கதை களன்களை பற்றி எனக்கு சில அறிவுரைகளை கூறினார். திடீர் மாற்றம், எதிர்ப்பார்க்காத டீவிஸ்டுகள் இல்லாமல், மென்மையான அதே சமயம் மனதை கணக்கவைக்கும் கதை வேண்டும் என்றார். நண்பனின் அறிவுரையை ஏற்று. இதோ அதற்க்கான முயற்சி


சொன்னதை செய்திருக்கிறீர்கள்:icon_b:

Keelai Naadaan
16-11-2008, 12:14 PM
நண்பர்கள் குறிப்பிட்டுள்ளது போல, இளம் பிராய காலத்துக்கே அழைத்து சென்று விட்டீர்கள்.
அருமை...அருமை..:icon_b:
வாழ்த்துக்கள் மூர்த்தி.

MURALINITHISH
22-11-2008, 09:12 AM
சிறுவர்கள் மட்டுமல்ல சில நேரங்களில் மனிதர்களின் மனநிலையும் இதுதான்

சுகந்தப்ரீதன்
24-11-2008, 10:41 AM
பட்ட காலிலேயே படும்ங்கிறதை சரியா சொல்லியிருக்கீங்க மூர்த்தி..!!
பிஞ்சு மனதில் நஞ்சு.. அந்த நஞ்சால் நஞ்சிப்போன பிஞ்சு..!!
நீங்கள் கதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது நண்பரே...!! வாழ்த்துக்கள்..!!

ரங்கராஜன்
04-10-2012, 05:41 AM
எல்லாருக்கும் சில சென்டிமென்ட் இருக்கும்...... எனக்கும் இருக்கு, நான் எந்த சிறுகதை எழுதுவதற்கு முன்பு, இரண்டு விஷயங்களை செய்வேன்....... மழை வருமா, என்று ஜன்னல் வழியாக இருந்து வானத்தை பார்ப்பேன்.......(இரவாக இருந்தாலும் கூட)...... மற்றொன்று இரண்டு பேரின் பழைய பின்னூட்டங்களை தேடிச் சென்று படிப்பேன்......... அவர்கள் யார் தெரியுமா நம்ம இளசு அண்ணாவும், மனோஜி அண்ணாவும் தான்........ இருவரும் தற்போது மன்றத்திற்கு பழையபடி வருவதில்லை...... இருந்தாலும் அவர்கள் அளித்த பின்னூட்டங்கள் எனக்கு தரும் போதை இருக்கிறதே...... சான்ஸே இல்லை........ மன்றத்தில் நான் சேர்ந்த புதிதில் எனக்கு இவர்களின் பின்னூட்டம் தரும் போதை இருக்கிறதே...வார்த்தைகளால் சொல்லி மாளாது.. அந்த உற்சாகத்தில் தினமும் ஒரு கதை எழுதி இருக்கேன்......... மனது சோர்வாக இருந்தது, பின்னூட்டங்களை தேடி அலைந்த போது, இந்த கதை கண்ணில் பட்டது............மிக்க நன்றி உறவுகளே......நேரம் இருந்தால் படியுங்கள்........

ஜானகி
04-10-2012, 09:46 AM
மீண்டும் அந்தச் சிறுவன் கடற்கரைக்கு வந்தானா...?

எது எப்படியோ...பரந்த கடற்கரைப் பரப்பு, எத்தனை பேர்களுக்குத் தங்கள் பிரச்சனைகளிலிருந்து சிலமணிநேர அடைக்கலம் தருகிறதோ ? அதற்காகவே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிறர் மனதை ஊடுறுவும் எக்ஸ்ரே கண்களோ உனக்கு....?

அடிக்கடி ஜன்னலை எட்டிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கட்டும் ! சுயநலம் தான்...எங்களுக்கு நல்ல கதை கிடைக்கும் !

A Thainis
05-10-2012, 06:31 PM
கதையின் அமைப்பு சிறப்பு, சிறுவர்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த கதையின் ஒவ்வொரு வரியும் தெளிவாக உள்ளது. வாசிப்பில் உறைந்து போனேன். சிறுவர்களின் எதார்த்தத்தை ஆசிரியர் எதார்த்தமாக கொடுத்துள்ளார் வாழ்த்துக்கள்.

கீதம்
06-10-2012, 09:56 AM
மனம் பிசையும் கதை. இளசு அவர்கள் சொன்னதுபோல் பலவீனன் தன்னை விடவும் பலவீனனை எத்திப் பிழைக்கிறான். ஜகனுக்குப் பிழைக்கத் தெரிந்திருக்கிறது. பாவம் தயாவும் வருணும் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. ஜகனின் தயவால் அவர்களும் கற்றுக்கொள்ளவேண்டும்.இல்லையேல் நாதியற்றலையும் அவர்களின் கதி?

கடற்கரை வெயிலின் கானலில் தூர வரும் சிறுவர்களின் உருவம் நெளிந்து நெளிந்து வந்தது என்னும் வரிகளால் ஒரு ஒளிப்படத்தையே கண்முன் காட்டிவிட்டாய். உன்னுடைய பல கதைகளில் இதுபோன்று உயிரோட்டமாய் ஒரு மெல்லிய உணர்வோட்டம் ஓடக் கண்டிருக்கிறேன். அவற்றுக்கெல்லாம் இதுதான் முன்னோடியோ? மனம் நிறைந்த பாராட்டுகள் தக்ஸ்.

jayanth
07-10-2012, 02:52 AM
முடிவே ஆரம்பம்...
சிறுவர்களின் கற்பனை உலகம்...
அலைபாயும் மனம்...
இதனிடையே சுயநலவாத மனிதர்கள்...
கதை நன்றாக இருந்தது ரங்கராஜன்...

மயூ
15-10-2012, 09:13 AM
மென்மையான கருவைச் சுற்றி அருமையான கதை. மெரீனா அப்படியே அருகில் வந்து நின்றது.