leomohan
02-11-2008, 09:45 AM
இன்று அனில் கும்பளே தன்னுடைய ஓய்வை அறிவித்த போது என்றுமே எதற்குமே அசையாத ஜம்போ முன்னாள் கிரிகெட் வீர்ர்களின் பிதற்றல்களும் பத்திரிகை துறையின் புலம்பலுக்கும் வளைந்து கொடுத்துவிட்டாரோ என்றே தோன்றியது.
40 வயதிற்கும் மேற்பட்ட பல கிரிகெட் வீர்ர்களின் விளையாட்டை பார்த்திருக்கிறோம். இவரிடம் இன்னும் இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் இருக்குமோ என்றே தோன்றுகிறது.
பலமுறை தலைகட்டுடனும், கையில் கட்டுகளுடனும் இவர் விளையாடியதை பார்க்கும் போது இவரிடம் கற்றுக் கொள்ள கிரிகெட்டை தவிர பல விஷயங்கள் உள்ளன என்று அறியலாம்.
தைரியம், மனதிடம், வலிமை, எந்த சூழலிலும் தோல்வியை ஏற்காத மனப்பானமை, நேர்மை, தேசப்பற்று, எதையும் செய்யத்துடிக்கும் நெருப்பு, கடின உழைப்பு என்று பல குணங்கள் உண்டு.
இவர் ஒரு கிரிகெட் சகாப்தம். இவரை இழந்து நிற்கிறது இன்றை இந்திய கிரிகெட்.
சுமார் 500 விக்கெட் எடுத்து பிறகு அவர் கொடுத்த பேட்டியை பார்த்த போது அவர் சொன்னது நினைவிற்கு வருகிறது. இன்று லெக் ஸ்பின் எனும் புதிய பந்து வீச்சு முறையை மீண்டும் கண்டறிந்தேன் என்று.
வேகப்பந்து வீச்சாளரின் வேகம், சராசரி ஸ்பின்னர்களை விட அதிகமான ஓட்ட தூரம், எந்த நேரத்திலும் எந்த ஆடுகளத்திலும் விக்கெட்டுகள் வீழ்த்தும் திறமை இனி நாம் காட் டிராவிட் போல்ட் கும்பளே என்பதை காணமுடியாமல் போக்கிவிட்டதே எனும் துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்ளச் செய்கிறது.
எந்த பிரச்சனையிலும் மாட்டாதவர், விளையாட்டில் அரசியல் புகுந்த போதும் அதில் தலையிடாதவர் ஆடுகளத்தில் சூரன் அனைவரின் நெஞ்சில் நிற்கும் ஜம்போ.
பாகிஸ்தானுடன் எடுத்த 10 விக்கெட்டுகளாகட்டும், உலக கோப்பையில் சிரிநாத்துடன் அவருக்குள் ஒளிந்திருந்த மட்டையாளரின் திறமையாகட்டும் சமீபத்தில் அவர் தன்னுடைய முதல் சதம் அடித்த போது காட்டிய குழந்தையின் குதுகுலமாகட்டும் அவர் இந்த ஆட்டத்தின் மீது வைத்திருந்த அளப்பரியா அன்பை காட்டும்.
அனில், ஓய்வு பெறுங்கள். மற்றவர்களுக்கு கற்றுத்தாருங்கள். எப்படி பந்து வீசுவது என்பது அல்ல. அதை கற்றுக் கொடுக்க பலர் இருக்கிறார்கள். எப்படி கிரிகெட் விளையாடுவது என்பதை. எங்கிருந்து வரும் அந்த நெருப்பு, அதை எப்படி ஆடுகளத்தில் காட்டுவது என்பதை. எப்படி தோல்வியிலிருந்து வெற்றியை மீட்டு வரவேண்டும் என்பதை.
சென்று வா அனில். வாழ்த்துகள்.
40 வயதிற்கும் மேற்பட்ட பல கிரிகெட் வீர்ர்களின் விளையாட்டை பார்த்திருக்கிறோம். இவரிடம் இன்னும் இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் இருக்குமோ என்றே தோன்றுகிறது.
பலமுறை தலைகட்டுடனும், கையில் கட்டுகளுடனும் இவர் விளையாடியதை பார்க்கும் போது இவரிடம் கற்றுக் கொள்ள கிரிகெட்டை தவிர பல விஷயங்கள் உள்ளன என்று அறியலாம்.
தைரியம், மனதிடம், வலிமை, எந்த சூழலிலும் தோல்வியை ஏற்காத மனப்பானமை, நேர்மை, தேசப்பற்று, எதையும் செய்யத்துடிக்கும் நெருப்பு, கடின உழைப்பு என்று பல குணங்கள் உண்டு.
இவர் ஒரு கிரிகெட் சகாப்தம். இவரை இழந்து நிற்கிறது இன்றை இந்திய கிரிகெட்.
சுமார் 500 விக்கெட் எடுத்து பிறகு அவர் கொடுத்த பேட்டியை பார்த்த போது அவர் சொன்னது நினைவிற்கு வருகிறது. இன்று லெக் ஸ்பின் எனும் புதிய பந்து வீச்சு முறையை மீண்டும் கண்டறிந்தேன் என்று.
வேகப்பந்து வீச்சாளரின் வேகம், சராசரி ஸ்பின்னர்களை விட அதிகமான ஓட்ட தூரம், எந்த நேரத்திலும் எந்த ஆடுகளத்திலும் விக்கெட்டுகள் வீழ்த்தும் திறமை இனி நாம் காட் டிராவிட் போல்ட் கும்பளே என்பதை காணமுடியாமல் போக்கிவிட்டதே எனும் துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்ளச் செய்கிறது.
எந்த பிரச்சனையிலும் மாட்டாதவர், விளையாட்டில் அரசியல் புகுந்த போதும் அதில் தலையிடாதவர் ஆடுகளத்தில் சூரன் அனைவரின் நெஞ்சில் நிற்கும் ஜம்போ.
பாகிஸ்தானுடன் எடுத்த 10 விக்கெட்டுகளாகட்டும், உலக கோப்பையில் சிரிநாத்துடன் அவருக்குள் ஒளிந்திருந்த மட்டையாளரின் திறமையாகட்டும் சமீபத்தில் அவர் தன்னுடைய முதல் சதம் அடித்த போது காட்டிய குழந்தையின் குதுகுலமாகட்டும் அவர் இந்த ஆட்டத்தின் மீது வைத்திருந்த அளப்பரியா அன்பை காட்டும்.
அனில், ஓய்வு பெறுங்கள். மற்றவர்களுக்கு கற்றுத்தாருங்கள். எப்படி பந்து வீசுவது என்பது அல்ல. அதை கற்றுக் கொடுக்க பலர் இருக்கிறார்கள். எப்படி கிரிகெட் விளையாடுவது என்பதை. எங்கிருந்து வரும் அந்த நெருப்பு, அதை எப்படி ஆடுகளத்தில் காட்டுவது என்பதை. எப்படி தோல்வியிலிருந்து வெற்றியை மீட்டு வரவேண்டும் என்பதை.
சென்று வா அனில். வாழ்த்துகள்.