PDA

View Full Version : தீயில் ஒரு பனித்துளி



ரங்கராஜன்
31-10-2008, 08:09 PM
pkjwepojporg

மதி
01-11-2008, 03:35 AM
கையை குடுங்க மூர்த்தி... கடைசி பத்தி நச்... "எல்லோருக்கும் காரணம் சொல்ல யாராவது வேணும்.." ஆனா பாருங்க.. அம்மாவுக்கு காதல் இருந்திருக்கலாம்னு அந்த பத்தியை படிக்கறதுக்கு முன்பே தோன்றிவிட்டது. :)

முன்பே சொன்ன மாதிரி.. தினம் ஒரு கதை எழுதறீங்க.... வாழ்த்துகள்.. மேலும் தொடரட்டும் உங்கள் படைப்புகள்..

ரங்கராஜன்
01-11-2008, 03:45 AM
நண்பரே
இந்த கதையை பொறுத்த மட்டில் எந்த ஒரு சஸ்பன்ஸும் கிடையாது, ரகு பெரியவரை வெறுக்கும் பொழுதே பெரியவர் நல்லவர் என்பது புலப்படுகிறது. அதேப் போல தான் அம்மாவின் காதல் விவகாரமும், அதையும் நாம் முன் கூட்டியே யூகித்து விடலாம், ஆனால் அம்மாவின் உண்மையான காதலை யூகிக்க முடியுதா?. இந்த கதையின் கரு அனைத்து மனிதர்களும் நல்லவர்கள் தான், அவர்கள் பார்வையில் இருந்து

பாபு
01-11-2008, 03:56 AM
கதை மிக அருமை. அதுவும் அந்த அட்வைஸ் ரொம்ப நல்லா இருக்கு !!

அன்புரசிகன்
01-11-2008, 05:34 AM
அவசரப்புத்திக்காரர்களுக்கு சாட்டையடியடிக்கும் கதை. அழகாக நகர்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்...

Narathar
16-11-2008, 04:41 PM
மனிதர்கள் யாரும் கெட்டவர்கள் கிடையாது, அப்படி சித்தரிக்கபடுகிறோம்................

நீங்கள் சொல்லவந்த கருத்தை அழகாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் மூர்த்தி......

கதையோட்டத்தை பார்க்கும் போதே.. அம்மாவுக்கு வேறு தொடர்பிருந்திருக்குமென்று ஊகிக்க முடிந்தாலும், முடிவில் அவர்கள் காதலை சொன்ன விதமும், சொல்லியிருந்தால் செய்துவைத்துருப்போமெ என்று சொன்னதற்கு, சொன்னதற்காகத்தான் உங்கக்கா தூக்கிலேயே தொங்கினா என்ற இடமும் நச்! என்று மனதை கவர்ந்தது..............

ஆனால் கதையின் இறுதிப்பாகத்தை கொஞ்சம் இழுத்திட்டீங்கன்னு எண்ணத்தோனுது...... கதைமுடிவு தெரிஞ்சதுக்கப்புரம் அப்பா அட்வைஸ் எல்லாம் பன்றது ஏதோ டிராமா தனமா பட்டது... ஒரு வேளை அவர் அம்மா கதையை சொல்ல முன்னாலே பீடிகையாய் இந்த அட்வைஸை சொல்றமாதிரியும், அதை மகன் சுவரஸ்யமற்ரு கேட்பதுபோலவும் எழுதியிருக்கலாமோ என்று எனக்கு தோணுது! இது என் பார்வை மட்டுமே......

மொத்தத்தில் கதை அருமை... வாழ்த்துக்கள்

ரங்கராஜன்
16-11-2008, 05:17 PM
நன்றி நாரதரே
ஆம் நீங்கள் கூறியது போல கொஞ்சம் பெருசா தான் இருக்கு, ஆனால் இதற்கு மேல் குறைத்தால் கதையில் ஒரு திருப்தி இருக்காது. இந்த கதையை நான் வேறு மாதிரி நாவலாய் எழுத யோசித்து இருந்தேன், சரி நம் மன்றத்துக்காக சிறுகதையாக வெளியிட்டேன். ஆனால் படிக்க கொஞ்ச அலுப்பு தட்ட தான் செய்யும், எழுது போது எனக்கே தட்டியது.

Narathar
16-11-2008, 05:28 PM
ஓ...............
இப்ப நாலலெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா?
சொல்லவேயில்ல?

நாராயணா!!!!

MURALINITHISH
22-11-2008, 09:06 AM
இப்படிதான் அவரவருக்கு ஒரு கதை இருக்கும் அதை அவரிடம் கேட்டால்தான் தெரியும் உலகில் அனைவருமே நல்லவர்கள்தான் அவரவர் விருப்பங்களும் சந்தர்ப்பங்களும்தான் மனிதனை சில செயல்கல் செய்ய தூண்டுகின்றன

minmini
24-11-2008, 12:19 PM
கதை நல்லா இருக்கு
இன்னும் எழுதுங்க :icon_b:

samuthraselvam
02-04-2009, 07:08 AM
ஆழமான உணர்வுகள், அழுத்தமான கதைக் கரு, அதற்கேற்ற களம் அருமை அண்ணா....!

தோல்வியாகட்டும், கோபமாகட்டும், எரிச்சலாகட்டும், காரணம் காட்ட பழிப்போட ஒரு ஆள் தேவை உங்களுக்கு
இந்த வரிகளில்தான் எத்தனை உண்மைகள்....

மனைவிமீது எத்தனை நேசம் வைத்திருந்தால், தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, அவளை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் அவளுக்கு ஒரு வாழ்க்கையும் கொடுத்து, தன் வாழ்க்கையும் வீணடித்து....... என்ன சொல்லவதென்றே தெரியவில்லை அண்ணா...
உண்மையில் இப்படி ஒரு அப்பா கிடைக்க காலங்கள் போனபின் அப்பாவின் பாசத்தை புரிந்தவனான ரகு கொடுத்துவைத்தவன்.

வரிகள் ஒவ்வொன்றும் ஒரு தேர்ந்த எழுத்தாளரைக் காட்டுகிறது... சபாஷ்.....

ரங்கராஜன்
02-04-2009, 12:15 PM
நன்றி பாசமலரே

ரொம்ப நாள் கழித்து இந்த கதைக்கு பின்னூட்டம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கு, நான் எழுதியதிலே பெரிய சிறுகதை இது தான், அதனாலே பலருக்கு இதை முழுமையாக படிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. உன்னுடைய விமர்சனத்திற்கு நன்றி

samuthraselvam
03-04-2009, 10:53 AM
நன்றி பாசமலரே

ரொம்ப நாள் கழித்து இந்த கதைக்கு பின்னூட்டம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கு, நான் எழுதியதிலே பெரிய சிறுகதை இது தான், அதனாலே பலருக்கு இதை முழுமையாக படிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. உன்னுடைய விமர்சனத்திற்கு நன்றி

கண்டிப்பாக அனைவரும் படிப்பார்கள் அண்ணா... அருமையான கதை..

அமரன்
07-05-2009, 10:39 AM
போட்டதும் படித்த கதை. படித்ததும் பதிலிட முடியாத நிலை. காரணம் கதையேதான்.

நான் தவழும் வயதில் என் தந்தை தவறினார். இயற்கை எய்தினார் என்று எழுத இயலாத மறைவு அது. மறக்கமுடியாத நிகழ்வும் கூட.

அப்பா பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் நெகட்டிவ் ஆனவை. நெகடிவ்வை பிரின்ட் போட்டுப் பார்க்கும் என் முற்சியை சூடாக்கி பல தெளிவுகளைத் தந்தது இந்தக் கதை. நன்றி மூர்த்தி.

ரங்கராஜன்
07-05-2009, 10:49 AM
போட்டதும் படித்த கதை. படித்ததும் பதிலிட முடியாத நிலை. காரணம் கதையேதான்.

நான் தவழும் வயதில் என் தந்தை தவறினார். இயற்கை எய்தினார் என்று எழுத இயலாத மறைவு அது. மறக்கமுடியாத நிகழ்வும் கூட.

அப்பா பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் நெகட்டிவ் ஆனவை. நெகடிவ்வை பிரின்ட் போட்டுப் பார்க்கும் என் முற்சியை சூடாக்கி பல தெளிவுகளைத் தந்தது இந்தக் கதை. நன்றி மூர்த்தி.

உண்மையில் என் மனம் நெகிழ்ந்து விட்டது அமரன், வார்த்தைகள் இல்லை.

நேசம்
07-05-2009, 12:18 PM
ரகுவின் தாய்க்கு முன்பே காதல் இருந்து இருக்கும், அந்த பெரியவர் தனது அக்கா மகளுக்கு தியாகம் செய்து இருப்பார் என்று முன்பே உணரமுடிந்தாலும்,கதையின் கரு எதையும் அவசரப்பட்டு முடிவு எடுக்க கூடாது என்பதை அழகாக சொல்லி இருந்தது.தொடர் எழுவதைவிட சிறுகதை எழுவதில் தான் அதிக திறமை தேவைப்படும் என்று நினைக்கிறென்.அது உங்களிடம் அதிகம் இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்

கலைவேந்தன்
17-04-2012, 04:48 AM
மனதில் நிறைந்த கதை. கதையின் தொடக்கத்திலேயே ரகுவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு பின்னணி கதை இருக்கும் என்பது புலப்பட்டாலும் எதிர்பார்த்த சஸ்பென்ஸுடனேயே கதை மிக அருமையாக நகர்ந்து அசத்தலாக முடிந்துவிட்டது.

எந்த ஒரு சிறுகதை முடிந்தபின்னும் தொடர்வதுபோல் நம் மனதைச் சுற்றிச் சுற்றி வருகிறதோ அந்த சிறுகதை மிகச்சிறந்த கதைதானென்பது என் கருத்து.

மிகச்சிறந்த கதையினைத் தந்த நண்பருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்..!