ரங்கராஜன்
30-10-2008, 06:57 PM
ஒரு துளி பால்
அஸ்தமனமாகும் சூரியன், வானம் முழுவது புதுசா திருமணம் ஆன பெண்ணின் முகம் போல மஞ்சளாக இருந்தது.மிகப்பெரிய ஆலமரம், விழுதுகள் அனைத்து ஆலமரத்தின் மூல தண்டை போல பெரியதாக இருந்தது, அவ்வளவு வயதான மரம். அந்த மரத்தின் கீழே உக்கார்ந்து குப்புசாமி டீ குடித்துக் கொண்டு இருந்தார். வயது 57, சற்று குண்டாக இருப்பார் இன்னும் கொஞ்ச நாளில் ஓய்வு பெற்று விடுவார். உடலும் ஒத்துழைக்கவில்லை. அவர் இருந்த இடத்தை நோக்கி கணேசன் நடந்து வந்தான்.அவர் அவனை ஒரு முறைப் பார்த்து விட்டு, அவன் இவரை கடந்து போகப் போகிறான் என்று நினைத்த குப்புசாமி
டீக் குடிப்பதில் கவனமாக இருந்தார்.
“ ஐயா என் பேரு கணேசன், நான் ..........................”
குப்புசாமிக்கு ஒரே ஆச்சர்யம், கணேசன் வந்து பேசுவது, காரணம்?. கணேசன் வயது 36, நல்ல திடகாத்திரமான உடல், சுருள் சுருள் முடி, மாநிறம், ஐந்து அடி இருப்பான், அவன் உண்டு, அவன் வேலை உண்டுனு இருப்பான். யாரிடனும் தேவையில்லாமல் பேச மாட்டான், ஏன் தேவையானாலும் பேச மாட்டான். குப்புசாமிக்கு பத்து வருடமாக அவனை தெரியும், ஆனால் இவரிடம் அவன் ஒரு வார்த்தைக் கூட பேசியது இல்லை. அப்படி இருக்கையில் திடீர்ன்னு வந்து பேசினான்
குப்புசாமி ஆச்சர்யத்துடன்,
“வாய்யா கணேசா, தெரியும்பா உன்ன என்ன திடீர்ன்னு உன் தவத்தை கலச்சிட்ட” என்றார் சிரித்துக் கொண்டு.
முதல் முறையாக கணேசனும் சிரித்தான் “அதெல்லாம் ஒண்ணு இல்லைங்க சார்”
“யோவ் உனக்கு சிரிக்க கூட வருமா, பரவாயில்லையே” என்றார்.
“சார் உங்க கூட பேசனும் ரொம்ப நாளா நனச்சுனு இருந்தேன் சார், ஆனா பேசல” என்றான் தயங்கிய படி.
“நனச்சா உடனே செஞ்சிடனும் அதான் எனக்கு பிடிக்கும், ஆமா இங்க நிறை பேர் இருக்கும் போது எதுக்கு என் கிட்ட பேச நனச்ச”
“ஆயிரம் கணக்குல ஊமத்தம் பூ இருந்தாலும், ஒரு குண்டு மல்லிக்கு ஈடாகுமா?”
“யோவ் நல்லா கவிதையா பேசறயா,................ஆமா என்னுடைய ஸைச வச்சிதான, குண்டு மல்லி சொன்ன?”
“அய்யோ சாமி சத்தியமா இல்ல சார்” என்றான் பதட்டத்துடன்.
“சும்மா விளையாட்டுக்கு கேட்டேன், டீ குடிக்கிறீயா, உக்காரு”
அவன் தன்னுடைய வலது கையை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டே குப்புசாமிக்கு எதிரில் கீழே உக்கார்ந்தான்.
“சார் எனக்கு டீ வானா, கொஞ்சம் பால் மட்டும்..........”
“யோவ் ஒரு டம்பளர் பாலுக்காயா, மல்லி, ரோஜான்னு வர்ணிச்ச, யோவ் கந்தசாமி ஒரு டம்பளர் பால் எடுத்துன்னு வாயா”
என்றார் கணேசன் தன் வலது கையை பாக்கெட்டுக்குள்ளே வைத்திருப்பதை கவனித்தார்.
“ரொம்ப தாங்க்ஸ் சார், பத்து வருஷமா உங்கள நான் பார்த்துனு இருக்கேன், எல்லாரும் உங்கள பத்தி நல்லதா தான் சொல்றாங்க,
பெரிய ஆபிஸர்ல இருந்து எல்லாரும். அதனால தான் உங்ககிட்ட பேசாமலே உங்கள் பிடிச்சி போச்சு”
டீ வந்தது இருவருக்கும் மத்தியில் வைக்கப்பட்டது.
“எடுத்துக்கோயா உனக்கு தான் டீ” என்றார் குப்புசாமி. கணேசன் இடது கையால் டம்பளரை தொட்டு விட்டு
“ஆ ரொம்ப சூடா இருக்கு சார், கொஞ்சம் ஆறட்டும் சார்”
“இது வேறயா,............(இழுத்து பெருமூச்சி விட்டு) ஆமாயா நீ சொல்லறது சரிதான், என் முப்பது வருஷ சர்வீஸ்ல நான் இதுவரை ஒரு மெமோ வாங்கினது கிடையாது, பெரியஆபிஸர்ங்க கிட்ட திட்டுவாங்கினது கிடையாது,யார்கிட்டையும் சண்ட போட்டது கிடையாதுயா, அப்படியே வாழ்க்கை ஓடிடுச்சு, பாரு இன்னும் மூணு மாசத்துல ரீட்டையர் ஆவ போறேன். என்ன வாழ்க்கையா?,இந்த முப்பது வருஷத்துல என் குடும்பத்துகூட செலவு செஞ்ச நாட்கள்னு பார்த்தா, ஒரு வாரம் கூட இருக்காது. (சுவாரஸ்யத்துடன்) என் பொண்டாட்டிக்கு கமலஹாசன் படம்னா உயிரு, நாங்க இரண்டு ஓண்ணா படம் பார்க்கனும் அவளுக்கு ஆசை, ஆனா இந்த வேலையில இருந்துக்குனு நா எங்க கூட போறது, பாவம் ராஜப்பார்வை படத்துல இருந்து இப்ப வந்த தசாவதாரம் படம் வரையும் ஓயாம கேட்டுனே இருக்கா, ரீட்டயர் ஆன அப்புறம் தினமும் அவளை கமல் படத்துக்கு கூட்டினு போணும் அதான் என் ஆசை” என்று சின்ன குழந்தைப் போல சிரித்தார்.
கணேசனும் அவர் சொல்வதை மிகுந்த சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டு இருந்தான்.
“சரி கணேசா, உனக்கு வாழ்க்கையில ஆசையெல்லாம் இருக்கா” என்றார். அவ்வளவு தான் கணேசன் உற்ச்சாகமானான், யாராவது இந்த கேள்வியை
கேட்க மாட்டாங்களா என்று இருந்தான், கேட்ட உடனே மடை திறந்து வரும் வெள்ளம் போல பேசினான்.
“எனக்கா சார், நறைய விஷயம் புடிக்கும் சார், காலையில் எழுப்பும் என் குழந்தையின் பிஞ்சி விரல்கள், என்னுடைய அம்மா வைக்கும் கறிக் குழம்பு, என் மனைவியோட வேர்வை வாசம், கமல்ஹாசன் படம், கூட்டமா இருக்கும் பஸ்ல நான் உக்கார்ந்துன்னு போறது, இளையராஜா பாட்டு, மார்கழி மாசத்துல 10 மணி வரை தூங்கறது, என் குழந்தையின் எச்சில் பட்ட பதார்த்தம். என்னிடம் சண்டை போட்டு பிறகு என் மனைவி பேசும் முதல் வார்த்தை, குளிரில் சிகரேட் அடிப்பது அப்புறம் ..........” என்ற சொல்லும் போதே
“யோவ் யோவ் தெரியாம கேட்டுடேன், நீ பாட்டுக்குனு சொல்ற. பாலை குடிச்சிட்டு எடத்த காலி பண்ணு, இருட்டாவது” என்றார் குப்புசாமி.
கணேசன் பாலை விராலால் தொட்டு பார்த்தான், நன்றாக ஆறி இருந்தது. அப்பொழுது தான், தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்த வலது கையை வெளியே எடுத்தான். அந்த கையில் பஞ்சு இருந்தது, குப்புசாமி உத்துப் பார்த்தார் விரல் அளவில் ஒரு அணில் குஞ்சு இருந்தது, கண்களை கூட திறக்காமல் தூங்கிக் கொண்டு இருந்தது, மேலே முடிகள் கூட இன்னும் முளைக்காத நிலையில்.
“யோவ் என்யா இது எலியா”
“இல்ல சார் அணில் குஞ்சு, பொறந்து பத்து நாள் தான் இருக்கும். போன வாரம் அந்த புங்கா மரத்துக்கு கீழே உக்காந்துனு இருந்தேனா, அப்போ தொமால்னு என் முதுகுல இவரு வழுந்தாரு, (விவரிக்கும் பொழுது அவன் முகத்தில் அளவு கடந்த சந்தோஷம்) காக்கா கொத்தவந்தது, அப்புறம் நான் தான் இவர காப்பாத்தி வளக்குறேன், இன்னிக்கிப் பார்த்து வாடன் பால் தர மாட்டேன்னு சொல்லிட்டார், அதான் உங்ககிட்ட.....”என்று கூறியபடி தன்னுடைய சட்டையின் நுனியை பாலில் தொட்டு அந்த அணில் குஞ்சின் வாயில் வைத்தான், அது தன்னுடைய மில்லி மீட்டர் வாயால், கண்களைக் கூட திறக்காமல் பாலை குடித்தது. இதைப் பார்த்த ஏட்டு குப்புசாமி
“யோவ் உன்ன பார்த்தா யாராவது குடும்பத்தையே கொலை செஞ்சவன்னு சொல்லுவாங்கலயா” என்றார் ஆச்சிர்யமாக.
கணேசன் அர்த்தமாக சிரித்தான், ஒரு வாரம் கடந்தது, குப்புசாமி பெரிய ஆப்பிஸர் கூப்பிட்டார்ன்னு விட்டில் இருந்து புறப்பட்டு காலையில் 8.00 மணிக்கு சென்ரல் ஜெயிலுக்கு வந்தார், ஜெயிலர் அறைக்கு சென்றார். ஜெயிலர் அவரிடம் ஒரு காகிதத்தை கொடுத்து,
”இன்னைக்கு காலையில் கணேசனை தூக்குல போடறதுக்கு முன்னாடி இத உன் கிட்ட குடுக்க சொன்னான்”
காகிதம் ஒட்டப்பட்டு இருந்தது, குப்புசாமி அவசரமாகவும் குழப்பத்துடனும் பிரித்தார்.
வணக்கம் ஐயா
நான் கணேசன் எழுதிக் கொள்வது, ஐயா என்னுடைய அறையின் வலது சுவற்றின் மேல் இருக்கு ஓட்டையில் நான் என்னுடைய சபரியை வைத்துள்ளேன். அதை தயவு செய்து இன்னும் கொஞ்ச நாள் பாதுகாப்பாக நீங்கள் உங்கள் வீட்டில் வளர்த்து, சரியாக ஒரு மாசம் ஆனது, எதாவது ஒரு பூங்காவில் இருக்கும் மரத்தில் விட்டு விடுமாரு கேட்டுக் கொள்கிறேன். என் சபரி அதற்க்குள் வளர்ந்து விடுவான். இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
பி.கு : இத்துடன் ரூபாய் ஐநூறை இந்த கவரில் வைத்துள்ளேன், சபரியின் பால் செலவுக்கு.
குப்புசாமி கண்ணீருடன் சென்று, கணேசன் அறையில் இருந்த கூண்டை எடுத்துப் பார்த்தார். தன்னுடைய பிஞ்சு கண்களை திறந்து சபரி, கணேசன் அப்பாவை தேடிக் கொண்டு இருந்தது.
அடுத்த நாள் நாளிதழ்களில் செய்தி
பழிக்கு பழியாக எதிரியின் குடும்பத்தினரை கொன்ற கணேசனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அஸ்தமனமாகும் சூரியன், வானம் முழுவது புதுசா திருமணம் ஆன பெண்ணின் முகம் போல மஞ்சளாக இருந்தது.மிகப்பெரிய ஆலமரம், விழுதுகள் அனைத்து ஆலமரத்தின் மூல தண்டை போல பெரியதாக இருந்தது, அவ்வளவு வயதான மரம். அந்த மரத்தின் கீழே உக்கார்ந்து குப்புசாமி டீ குடித்துக் கொண்டு இருந்தார். வயது 57, சற்று குண்டாக இருப்பார் இன்னும் கொஞ்ச நாளில் ஓய்வு பெற்று விடுவார். உடலும் ஒத்துழைக்கவில்லை. அவர் இருந்த இடத்தை நோக்கி கணேசன் நடந்து வந்தான்.அவர் அவனை ஒரு முறைப் பார்த்து விட்டு, அவன் இவரை கடந்து போகப் போகிறான் என்று நினைத்த குப்புசாமி
டீக் குடிப்பதில் கவனமாக இருந்தார்.
“ ஐயா என் பேரு கணேசன், நான் ..........................”
குப்புசாமிக்கு ஒரே ஆச்சர்யம், கணேசன் வந்து பேசுவது, காரணம்?. கணேசன் வயது 36, நல்ல திடகாத்திரமான உடல், சுருள் சுருள் முடி, மாநிறம், ஐந்து அடி இருப்பான், அவன் உண்டு, அவன் வேலை உண்டுனு இருப்பான். யாரிடனும் தேவையில்லாமல் பேச மாட்டான், ஏன் தேவையானாலும் பேச மாட்டான். குப்புசாமிக்கு பத்து வருடமாக அவனை தெரியும், ஆனால் இவரிடம் அவன் ஒரு வார்த்தைக் கூட பேசியது இல்லை. அப்படி இருக்கையில் திடீர்ன்னு வந்து பேசினான்
குப்புசாமி ஆச்சர்யத்துடன்,
“வாய்யா கணேசா, தெரியும்பா உன்ன என்ன திடீர்ன்னு உன் தவத்தை கலச்சிட்ட” என்றார் சிரித்துக் கொண்டு.
முதல் முறையாக கணேசனும் சிரித்தான் “அதெல்லாம் ஒண்ணு இல்லைங்க சார்”
“யோவ் உனக்கு சிரிக்க கூட வருமா, பரவாயில்லையே” என்றார்.
“சார் உங்க கூட பேசனும் ரொம்ப நாளா நனச்சுனு இருந்தேன் சார், ஆனா பேசல” என்றான் தயங்கிய படி.
“நனச்சா உடனே செஞ்சிடனும் அதான் எனக்கு பிடிக்கும், ஆமா இங்க நிறை பேர் இருக்கும் போது எதுக்கு என் கிட்ட பேச நனச்ச”
“ஆயிரம் கணக்குல ஊமத்தம் பூ இருந்தாலும், ஒரு குண்டு மல்லிக்கு ஈடாகுமா?”
“யோவ் நல்லா கவிதையா பேசறயா,................ஆமா என்னுடைய ஸைச வச்சிதான, குண்டு மல்லி சொன்ன?”
“அய்யோ சாமி சத்தியமா இல்ல சார்” என்றான் பதட்டத்துடன்.
“சும்மா விளையாட்டுக்கு கேட்டேன், டீ குடிக்கிறீயா, உக்காரு”
அவன் தன்னுடைய வலது கையை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டே குப்புசாமிக்கு எதிரில் கீழே உக்கார்ந்தான்.
“சார் எனக்கு டீ வானா, கொஞ்சம் பால் மட்டும்..........”
“யோவ் ஒரு டம்பளர் பாலுக்காயா, மல்லி, ரோஜான்னு வர்ணிச்ச, யோவ் கந்தசாமி ஒரு டம்பளர் பால் எடுத்துன்னு வாயா”
என்றார் கணேசன் தன் வலது கையை பாக்கெட்டுக்குள்ளே வைத்திருப்பதை கவனித்தார்.
“ரொம்ப தாங்க்ஸ் சார், பத்து வருஷமா உங்கள நான் பார்த்துனு இருக்கேன், எல்லாரும் உங்கள பத்தி நல்லதா தான் சொல்றாங்க,
பெரிய ஆபிஸர்ல இருந்து எல்லாரும். அதனால தான் உங்ககிட்ட பேசாமலே உங்கள் பிடிச்சி போச்சு”
டீ வந்தது இருவருக்கும் மத்தியில் வைக்கப்பட்டது.
“எடுத்துக்கோயா உனக்கு தான் டீ” என்றார் குப்புசாமி. கணேசன் இடது கையால் டம்பளரை தொட்டு விட்டு
“ஆ ரொம்ப சூடா இருக்கு சார், கொஞ்சம் ஆறட்டும் சார்”
“இது வேறயா,............(இழுத்து பெருமூச்சி விட்டு) ஆமாயா நீ சொல்லறது சரிதான், என் முப்பது வருஷ சர்வீஸ்ல நான் இதுவரை ஒரு மெமோ வாங்கினது கிடையாது, பெரியஆபிஸர்ங்க கிட்ட திட்டுவாங்கினது கிடையாது,யார்கிட்டையும் சண்ட போட்டது கிடையாதுயா, அப்படியே வாழ்க்கை ஓடிடுச்சு, பாரு இன்னும் மூணு மாசத்துல ரீட்டையர் ஆவ போறேன். என்ன வாழ்க்கையா?,இந்த முப்பது வருஷத்துல என் குடும்பத்துகூட செலவு செஞ்ச நாட்கள்னு பார்த்தா, ஒரு வாரம் கூட இருக்காது. (சுவாரஸ்யத்துடன்) என் பொண்டாட்டிக்கு கமலஹாசன் படம்னா உயிரு, நாங்க இரண்டு ஓண்ணா படம் பார்க்கனும் அவளுக்கு ஆசை, ஆனா இந்த வேலையில இருந்துக்குனு நா எங்க கூட போறது, பாவம் ராஜப்பார்வை படத்துல இருந்து இப்ப வந்த தசாவதாரம் படம் வரையும் ஓயாம கேட்டுனே இருக்கா, ரீட்டயர் ஆன அப்புறம் தினமும் அவளை கமல் படத்துக்கு கூட்டினு போணும் அதான் என் ஆசை” என்று சின்ன குழந்தைப் போல சிரித்தார்.
கணேசனும் அவர் சொல்வதை மிகுந்த சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டு இருந்தான்.
“சரி கணேசா, உனக்கு வாழ்க்கையில ஆசையெல்லாம் இருக்கா” என்றார். அவ்வளவு தான் கணேசன் உற்ச்சாகமானான், யாராவது இந்த கேள்வியை
கேட்க மாட்டாங்களா என்று இருந்தான், கேட்ட உடனே மடை திறந்து வரும் வெள்ளம் போல பேசினான்.
“எனக்கா சார், நறைய விஷயம் புடிக்கும் சார், காலையில் எழுப்பும் என் குழந்தையின் பிஞ்சி விரல்கள், என்னுடைய அம்மா வைக்கும் கறிக் குழம்பு, என் மனைவியோட வேர்வை வாசம், கமல்ஹாசன் படம், கூட்டமா இருக்கும் பஸ்ல நான் உக்கார்ந்துன்னு போறது, இளையராஜா பாட்டு, மார்கழி மாசத்துல 10 மணி வரை தூங்கறது, என் குழந்தையின் எச்சில் பட்ட பதார்த்தம். என்னிடம் சண்டை போட்டு பிறகு என் மனைவி பேசும் முதல் வார்த்தை, குளிரில் சிகரேட் அடிப்பது அப்புறம் ..........” என்ற சொல்லும் போதே
“யோவ் யோவ் தெரியாம கேட்டுடேன், நீ பாட்டுக்குனு சொல்ற. பாலை குடிச்சிட்டு எடத்த காலி பண்ணு, இருட்டாவது” என்றார் குப்புசாமி.
கணேசன் பாலை விராலால் தொட்டு பார்த்தான், நன்றாக ஆறி இருந்தது. அப்பொழுது தான், தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்த வலது கையை வெளியே எடுத்தான். அந்த கையில் பஞ்சு இருந்தது, குப்புசாமி உத்துப் பார்த்தார் விரல் அளவில் ஒரு அணில் குஞ்சு இருந்தது, கண்களை கூட திறக்காமல் தூங்கிக் கொண்டு இருந்தது, மேலே முடிகள் கூட இன்னும் முளைக்காத நிலையில்.
“யோவ் என்யா இது எலியா”
“இல்ல சார் அணில் குஞ்சு, பொறந்து பத்து நாள் தான் இருக்கும். போன வாரம் அந்த புங்கா மரத்துக்கு கீழே உக்காந்துனு இருந்தேனா, அப்போ தொமால்னு என் முதுகுல இவரு வழுந்தாரு, (விவரிக்கும் பொழுது அவன் முகத்தில் அளவு கடந்த சந்தோஷம்) காக்கா கொத்தவந்தது, அப்புறம் நான் தான் இவர காப்பாத்தி வளக்குறேன், இன்னிக்கிப் பார்த்து வாடன் பால் தர மாட்டேன்னு சொல்லிட்டார், அதான் உங்ககிட்ட.....”என்று கூறியபடி தன்னுடைய சட்டையின் நுனியை பாலில் தொட்டு அந்த அணில் குஞ்சின் வாயில் வைத்தான், அது தன்னுடைய மில்லி மீட்டர் வாயால், கண்களைக் கூட திறக்காமல் பாலை குடித்தது. இதைப் பார்த்த ஏட்டு குப்புசாமி
“யோவ் உன்ன பார்த்தா யாராவது குடும்பத்தையே கொலை செஞ்சவன்னு சொல்லுவாங்கலயா” என்றார் ஆச்சிர்யமாக.
கணேசன் அர்த்தமாக சிரித்தான், ஒரு வாரம் கடந்தது, குப்புசாமி பெரிய ஆப்பிஸர் கூப்பிட்டார்ன்னு விட்டில் இருந்து புறப்பட்டு காலையில் 8.00 மணிக்கு சென்ரல் ஜெயிலுக்கு வந்தார், ஜெயிலர் அறைக்கு சென்றார். ஜெயிலர் அவரிடம் ஒரு காகிதத்தை கொடுத்து,
”இன்னைக்கு காலையில் கணேசனை தூக்குல போடறதுக்கு முன்னாடி இத உன் கிட்ட குடுக்க சொன்னான்”
காகிதம் ஒட்டப்பட்டு இருந்தது, குப்புசாமி அவசரமாகவும் குழப்பத்துடனும் பிரித்தார்.
வணக்கம் ஐயா
நான் கணேசன் எழுதிக் கொள்வது, ஐயா என்னுடைய அறையின் வலது சுவற்றின் மேல் இருக்கு ஓட்டையில் நான் என்னுடைய சபரியை வைத்துள்ளேன். அதை தயவு செய்து இன்னும் கொஞ்ச நாள் பாதுகாப்பாக நீங்கள் உங்கள் வீட்டில் வளர்த்து, சரியாக ஒரு மாசம் ஆனது, எதாவது ஒரு பூங்காவில் இருக்கும் மரத்தில் விட்டு விடுமாரு கேட்டுக் கொள்கிறேன். என் சபரி அதற்க்குள் வளர்ந்து விடுவான். இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
பி.கு : இத்துடன் ரூபாய் ஐநூறை இந்த கவரில் வைத்துள்ளேன், சபரியின் பால் செலவுக்கு.
குப்புசாமி கண்ணீருடன் சென்று, கணேசன் அறையில் இருந்த கூண்டை எடுத்துப் பார்த்தார். தன்னுடைய பிஞ்சு கண்களை திறந்து சபரி, கணேசன் அப்பாவை தேடிக் கொண்டு இருந்தது.
அடுத்த நாள் நாளிதழ்களில் செய்தி
பழிக்கு பழியாக எதிரியின் குடும்பத்தினரை கொன்ற கணேசனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.