PDA

View Full Version : நகரத்தில் புதுமனைவி (சிறுகதை)



ரங்கராஜன்
30-10-2008, 06:50 AM
ைுடஜரஸ3ீதஜுஸ3ீ

மதி
30-10-2008, 07:00 AM
அழகான கற்பனை... நடுவில் வித்தியாசமாக சென்ற மாதிரி தோன்றினாலும் முடிவு ஓரளவு யூகிக்க முடிந்தது.. ஒருவேளை உங்க கதைகளை ஆழ படிப்பதனால் இருக்கலாம்.. :)

நல்ல கதை. பாராட்டுக்கள்.

poornima
30-10-2008, 07:05 AM
உங்கள் தலைப்பை பார்த்தவுடன் சுஜாதாவின் சுசீலா காத்திருக்கிறாள் சிறுகதை போல்
பரபரப்பு நிறைந்ததோ என்று எண்ணி வந்தேன்.. ஆனால் மென்மையான குடும்பக் கதையை தந்திருக்கிறீர்கள்.. ஒரு சின்ன கருத்தை சொல்கிறேன்..

ஒரு பக்கச் சிறுகதை வகை எழுதும்போது ஒரு யுக்தி இருக்கிறது.. அது ஆரம்பத்தையும் முடிவையும் அழகாக முடிச்சிடும் வண்ணம் இருக்க வேண்டும்.குறிப்பாய் முடிவு யூகிக்கப் படவே இயலாததாக இருக்க வேண்டும்..

நண்பர் மதி கூறியது போல் என்னாலும் இதன் முடிவை யூகிக்க முடிந்தது.. இதை குறையாக எண்ணாதீர்கள்.. உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது..இதையும் சரி செய்ய இயன்றால் இன்னும் பரிணமிக்க இயலும்.

வாழ்த்துகள்

சிவா.ஜி
30-10-2008, 07:10 AM
“ஏய். . . ஏய். . . .எந்திரி, எந்திரி, எனக்கு பசிக்குது ” அவளுடைய வயிற்றில் ஓங்கி குத்தப்பட்டது.

இந்த வரியைப் படித்ததுமே எனக்கு விளங்கிவிட்டது. பின்னர் வந்த அனைத்து உரையாடல்களையும் அம்மாவும் குழந்தையுமே பேசுவதாகத்தான் என்னால் நினைக்க முடிந்தது. உண்மையாகவே தான் மூர்த்தி.

இருந்தாலும் நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

ரங்கராஜன்
30-10-2008, 07:23 AM
நீங்கள் அனைவரும் என்ன உணர்ந்தீர்களோ அதை அப்படியே, தங்களின் கருத்துகளாக கூறியதற்கு நன்றிகள்

அமரன்
30-10-2008, 08:21 AM
பலருடைய மணவாழ்க்கையை குறிப்பாக மங்கையர் பலரின் மணவாழ்க்கையை யதார்த்தமாக தந்துள்ளீர்கள். பாராட்டுகள்.

shibly591
30-10-2008, 08:51 AM
தொடருங்கள்

பாராட்டுக்கள்

MURALINITHISH
30-10-2008, 09:42 AM
அழகான கற்பனை தொடருங்கள் உங்கள் கதைகளை

Narathar
30-10-2008, 11:24 AM
நீங்கள் அனைவரும் என்ன உணர்ந்தீர்களோ அதை அப்படியே, தங்களின் கருத்துகளாக கூறியதற்கு நன்றிகள்

இந்த தன்னடக்கம் போதும் உங்களை
ஒரு தலை சிறந்த எழுத்தாளனாக்க......

வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்...
இங்கு வரும் விமர்சனங்களால்
உங்களை இன்னுமின்னும்
செம்மைப்படுத்திக்கொள்ளுங்கள்