ரங்கராஜன்
29-10-2008, 02:46 PM
தினச்செய்தி (சிறுகதை)
தினச்செய்தி தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலே மிகவும் பிரபலமான தமிழ் நாளிதழ். நகரம், கிராமம்,குக்கிராமம், மலைகிராமம், சந்து,இண்டு,இடுக்கு என்று அனைத்து இடங்களிளும் தினச்செய்தி நாளிதழ் தான். எந்த டீக்கடையாக இருந்தாலும் பால், பாய்லர், டீ மாஸ்டர் இருப்பதுப் போல கண்டிப்பாக தினச்செய்தி நாளிதழும் இருக்கும். மழையாக இருந்தாலும் சரி, புயலாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி, தினச்செய்தி கண்டிப்பாக மக்களை சேரும். மக்களும் தினச்செய்தியை காலையில் படித்தால் தான் அன்றைய தினம் அவங்களுக்கு தொடங்கும். அந்த அளவிற்க்கு தினச்செய்தி மக்களுடன் பல வருடங்களாக ஒன்றி விட்டது.
08/08/08 காலை 7.00 மணி
முகுந்தன் காலையில் எழுந்து காபியுடன் தினச்செய்தியை படிக்க துடங்கினான்.
தினச்செய்தி
08/08/08
காதலி உல்லாசத்திற்கு மறுத்ததால், கள்ளக்காதலன் தற்கொலை
கைக்குழந்தையுடன் இருக்கும் காதலியிடமும், கணவனிடமும் போலீஸ் விசாரனை.
சென்னை 08’
நேற்று மதியம் பல்லாவரம், தினகரன் நகர்-ஐ சேர்ந்த குமாரசாமி (வயது 55) என்பவருடைய மகன், வேல்(வயது 28), என்னும் வாலிபர், தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டார். போலீஸாருக்கு தகவல் சொல்லி, அவர்கள் வந்து பிணத்தை அப்புறபடுத்தினார்கள், போலீஸார் இறந்தவரின் பிரேதத்தை சோதனை செய்ததில், அவரின் சட்டை பாக்கெட்டில் ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. அந்த பெண்ணைப் பற்றி விசாரித்ததில், அவள் பெயர் கங்கா என்றும் திருமணம் ஆனவர் என்றும், மீனம்பாக்கத்தை சேர்த்தவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்து இருக்கும் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. அந்த கங்காவையும் அவரது கணவரையும், போலீஸ் விசாரனைக்கு உட்படுத்தியுள்ளனர். இன்னும் தற்கொலை பற்றிய திடிக்கிடும் காரணங்கள்
போலீஸ் விசாரனைக்கு பிறகு தெரியவரும். கங்காவுக்கு கைகுழந்தை? இருப்பது குறிப்பிடத்தக்கது.
முகுந்தன் “ச்சீ என்ன பொம்பளப்பா இது”, ரம்யா கண்ணா குளிக்க தண்ணி ரெடியா” என்று பேப்பரை வைத்து குளிக்கச்சென்றான்.
08/08/08 மாலை 6.00 மணி
கங்காவும் அவரது கணவனும் வீட்டுக்குள் நுழைந்தனர். கங்காவின் மாமியார் கதவை திறந்து விட்டாள். வீட்டில் மயான அமைதி, வீடே இருட்டாக இருந்தது. குழந்தை தூளியில் தூங்கிக் கொண்டு இருந்தது, விஷ்வா அமைதியாக கீழே உக்கார்ந்தான், கங்கா சுவரின் மூளையில் உக்கார்ந்தாள். மாமியார் மெல்ல பேச்சை எடுத்தாள்,
“டேய் விசுவா என்னடா ஆச்சு” என்றாள் கண்ணீருடன்.
“என்ன ஆச்சு மானம் போச்சு, இன்னும் என் உயிர் தான் பாக்கி” என்றான் கலங்கி கண்களுடன்.
“அய்யோ விசுவா அப்படி சொல்லாதடா, நீ இல்லனா நாங்க என்னடா பண்ணுவோம், விசுவா.....” என்றாள் தாய். ஓரத்தில் கங்கா நொறுங்கிப் போய் உக்கார்ந்து இருந்தாள்.
“என்ன ஆச்சு விசுவா யார்ரா அந்த பாழாப் போனவன், போலீஸல சொன்னாங்களா டா”
முகத்தை துடைத்துக் கொண்டு விஷ்வா பேச ஆரம்பித்தான்.
“அம்மா அவன் நம்ம கங்கா கூட காலேஜ்-ல படிச்சி இருக்கான், அப்போ இவளை காதலிக்கிறேன்னு பின்னாடியே சுத்தி இருக்கான், காலேஜ் முடிஞ்சது, அதுக்கப்புறம் அவனை காணவில்லை, ஆனால் இப்போ அவன் செத்து எல்லோரையும் சாவடிக்கிறான், பேப்பர்ல அசிங்கமா கள்ளக்காதல்ன்னு எழுதி இருக்காங்க, நாளைக்கு போட்டோ வேற வருமா, ..............பசங்க மனசாட்சியில்லாம எழுதறாங்க” என்று அழுதான்.
“விசுவா அழாதடா, அவனுங்களுக்கு நல்ல சாவே வராதுடா” என்று தாயும் அழுதாள்.
“இல்லமா பேப்பர்ல கங்காவுக்கு ஒரு கை குழந்தைன்னு போட்டு அது பக்கத்துல கேள்விக்குறி போட்டு இருக்காங்கமா, அதான் என்னால தாங்க முடியிலமா” என்று மேலும் அழுதான்.
“ஏண்டா விசுவா, அப்படி போட்டா என்னடா அர்த்தம்”
“ ...........அ........அந்த குழ....குழந்தை எனக்கு பிறந்ததா இல்ல, கள்ளகாத......பிறந்........” என்று மேலே சொல்ல முடியாமல் அழுதான்.
“பாவிங்களா ஏண்டா இப்படி ஏழைங்கள சாவடிக்கிறீங்க, பெருமாளே, இது பத்தாதுனு நாளைக்கு போட்டோ வேற போடப் போறாங்களாமே, அய்யோ......” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த கங்கா வீறுட்டுனு எழுந்தாள் தூளியில் அழுதுக் கொண்டு இருந்த குழந்தையை எடுத்தாள், தன்னுடைய
ரவிக்கையை தளர்த்திக் கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்தாள், பிறகு குழந்தையை தூளியில் போட்டாள், அறைக்கு போய் கதவை சாத்திக் கொண்டாள்.
09/08/08 காலை 7.00 மணி
முகுந்தன் காலையில் எழுந்து காபியுடன் தினச்செய்தியை படிக்க துடங்கினான்.
தினச்செய்தி
09/08/08
கள்ளக்காதலன் இறந்த துக்கம் தாளாமல், காதலியும் தற்கொலை
அதே நாளில், அதே வழியில் இவளும் இறந்தாள்.
சென்னை 09,
”கள்ளக்காதலன் இறந்த துக்கம் தாளாமல்...........................”
முகுந்தன் “ச்சீசீ இப்படியும் ஒரு ஜென்மம் இருப்பாளா, சாவட்டும் சனியன்”, ஏய் ரம்யா குளிக்க தண்ணி வச்சாச்சா, டையம் ஆகுது எனக்கு”
தினச்செய்தி தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலே மிகவும் பிரபலமான தமிழ் நாளிதழ். நகரம், கிராமம்,குக்கிராமம், மலைகிராமம், சந்து,இண்டு,இடுக்கு என்று அனைத்து இடங்களிளும் தினச்செய்தி நாளிதழ் தான். எந்த டீக்கடையாக இருந்தாலும் பால், பாய்லர், டீ மாஸ்டர் இருப்பதுப் போல கண்டிப்பாக தினச்செய்தி நாளிதழும் இருக்கும். மழையாக இருந்தாலும் சரி, புயலாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி, தினச்செய்தி கண்டிப்பாக மக்களை சேரும். மக்களும் தினச்செய்தியை காலையில் படித்தால் தான் அன்றைய தினம் அவங்களுக்கு தொடங்கும். அந்த அளவிற்க்கு தினச்செய்தி மக்களுடன் பல வருடங்களாக ஒன்றி விட்டது.
08/08/08 காலை 7.00 மணி
முகுந்தன் காலையில் எழுந்து காபியுடன் தினச்செய்தியை படிக்க துடங்கினான்.
தினச்செய்தி
08/08/08
காதலி உல்லாசத்திற்கு மறுத்ததால், கள்ளக்காதலன் தற்கொலை
கைக்குழந்தையுடன் இருக்கும் காதலியிடமும், கணவனிடமும் போலீஸ் விசாரனை.
சென்னை 08’
நேற்று மதியம் பல்லாவரம், தினகரன் நகர்-ஐ சேர்ந்த குமாரசாமி (வயது 55) என்பவருடைய மகன், வேல்(வயது 28), என்னும் வாலிபர், தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டார். போலீஸாருக்கு தகவல் சொல்லி, அவர்கள் வந்து பிணத்தை அப்புறபடுத்தினார்கள், போலீஸார் இறந்தவரின் பிரேதத்தை சோதனை செய்ததில், அவரின் சட்டை பாக்கெட்டில் ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. அந்த பெண்ணைப் பற்றி விசாரித்ததில், அவள் பெயர் கங்கா என்றும் திருமணம் ஆனவர் என்றும், மீனம்பாக்கத்தை சேர்த்தவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்து இருக்கும் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. அந்த கங்காவையும் அவரது கணவரையும், போலீஸ் விசாரனைக்கு உட்படுத்தியுள்ளனர். இன்னும் தற்கொலை பற்றிய திடிக்கிடும் காரணங்கள்
போலீஸ் விசாரனைக்கு பிறகு தெரியவரும். கங்காவுக்கு கைகுழந்தை? இருப்பது குறிப்பிடத்தக்கது.
முகுந்தன் “ச்சீ என்ன பொம்பளப்பா இது”, ரம்யா கண்ணா குளிக்க தண்ணி ரெடியா” என்று பேப்பரை வைத்து குளிக்கச்சென்றான்.
08/08/08 மாலை 6.00 மணி
கங்காவும் அவரது கணவனும் வீட்டுக்குள் நுழைந்தனர். கங்காவின் மாமியார் கதவை திறந்து விட்டாள். வீட்டில் மயான அமைதி, வீடே இருட்டாக இருந்தது. குழந்தை தூளியில் தூங்கிக் கொண்டு இருந்தது, விஷ்வா அமைதியாக கீழே உக்கார்ந்தான், கங்கா சுவரின் மூளையில் உக்கார்ந்தாள். மாமியார் மெல்ல பேச்சை எடுத்தாள்,
“டேய் விசுவா என்னடா ஆச்சு” என்றாள் கண்ணீருடன்.
“என்ன ஆச்சு மானம் போச்சு, இன்னும் என் உயிர் தான் பாக்கி” என்றான் கலங்கி கண்களுடன்.
“அய்யோ விசுவா அப்படி சொல்லாதடா, நீ இல்லனா நாங்க என்னடா பண்ணுவோம், விசுவா.....” என்றாள் தாய். ஓரத்தில் கங்கா நொறுங்கிப் போய் உக்கார்ந்து இருந்தாள்.
“என்ன ஆச்சு விசுவா யார்ரா அந்த பாழாப் போனவன், போலீஸல சொன்னாங்களா டா”
முகத்தை துடைத்துக் கொண்டு விஷ்வா பேச ஆரம்பித்தான்.
“அம்மா அவன் நம்ம கங்கா கூட காலேஜ்-ல படிச்சி இருக்கான், அப்போ இவளை காதலிக்கிறேன்னு பின்னாடியே சுத்தி இருக்கான், காலேஜ் முடிஞ்சது, அதுக்கப்புறம் அவனை காணவில்லை, ஆனால் இப்போ அவன் செத்து எல்லோரையும் சாவடிக்கிறான், பேப்பர்ல அசிங்கமா கள்ளக்காதல்ன்னு எழுதி இருக்காங்க, நாளைக்கு போட்டோ வேற வருமா, ..............பசங்க மனசாட்சியில்லாம எழுதறாங்க” என்று அழுதான்.
“விசுவா அழாதடா, அவனுங்களுக்கு நல்ல சாவே வராதுடா” என்று தாயும் அழுதாள்.
“இல்லமா பேப்பர்ல கங்காவுக்கு ஒரு கை குழந்தைன்னு போட்டு அது பக்கத்துல கேள்விக்குறி போட்டு இருக்காங்கமா, அதான் என்னால தாங்க முடியிலமா” என்று மேலும் அழுதான்.
“ஏண்டா விசுவா, அப்படி போட்டா என்னடா அர்த்தம்”
“ ...........அ........அந்த குழ....குழந்தை எனக்கு பிறந்ததா இல்ல, கள்ளகாத......பிறந்........” என்று மேலே சொல்ல முடியாமல் அழுதான்.
“பாவிங்களா ஏண்டா இப்படி ஏழைங்கள சாவடிக்கிறீங்க, பெருமாளே, இது பத்தாதுனு நாளைக்கு போட்டோ வேற போடப் போறாங்களாமே, அய்யோ......” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த கங்கா வீறுட்டுனு எழுந்தாள் தூளியில் அழுதுக் கொண்டு இருந்த குழந்தையை எடுத்தாள், தன்னுடைய
ரவிக்கையை தளர்த்திக் கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்தாள், பிறகு குழந்தையை தூளியில் போட்டாள், அறைக்கு போய் கதவை சாத்திக் கொண்டாள்.
09/08/08 காலை 7.00 மணி
முகுந்தன் காலையில் எழுந்து காபியுடன் தினச்செய்தியை படிக்க துடங்கினான்.
தினச்செய்தி
09/08/08
கள்ளக்காதலன் இறந்த துக்கம் தாளாமல், காதலியும் தற்கொலை
அதே நாளில், அதே வழியில் இவளும் இறந்தாள்.
சென்னை 09,
”கள்ளக்காதலன் இறந்த துக்கம் தாளாமல்...........................”
முகுந்தன் “ச்சீசீ இப்படியும் ஒரு ஜென்மம் இருப்பாளா, சாவட்டும் சனியன்”, ஏய் ரம்யா குளிக்க தண்ணி வச்சாச்சா, டையம் ஆகுது எனக்கு”