kampan
26-10-2008, 02:27 PM
கொட்டும் மழையிலும் உன் கொஞ்சுமொழி கேட்டதுவே
தமிழகமே நீ எம் தாய்வழியே
வார்த்தைகள் போதுமா உன் உணர்வுகளை உணர்த்த
அதுதான் மழையாக தரித்ததுவே.
நீ இருக்கும் வரை
வீழுகின்ற இனமல்ல எம் தமிழினம்,
சாலைகள் போதவில்லை
உன் உணர்ச்சிச் சங்கிலி தொடர்வதற்கு
வீதிகள் தோறும்
தமிழகம் ஏங்கியது ஈழத்தமிழனுக்காய்
சாவிலும் வேணுமே
தாயவள் தாலாட்டு அதைத்தந்தது
இந்தத் தமிழகமே
சிறைகளும் குறைகளும் தன்பிள்ளைகளுக்கு முன்னால்
சிறியது என்பதை பறைகிறது உன் பாசம்
உம்மைப் பிரிப்பது கடலல்ல
அது எம் தொப்புள்கொடி
தமிழகமே நீ எம் தாய்வழியே
வார்த்தைகள் போதுமா உன் உணர்வுகளை உணர்த்த
அதுதான் மழையாக தரித்ததுவே.
நீ இருக்கும் வரை
வீழுகின்ற இனமல்ல எம் தமிழினம்,
சாலைகள் போதவில்லை
உன் உணர்ச்சிச் சங்கிலி தொடர்வதற்கு
வீதிகள் தோறும்
தமிழகம் ஏங்கியது ஈழத்தமிழனுக்காய்
சாவிலும் வேணுமே
தாயவள் தாலாட்டு அதைத்தந்தது
இந்தத் தமிழகமே
சிறைகளும் குறைகளும் தன்பிள்ளைகளுக்கு முன்னால்
சிறியது என்பதை பறைகிறது உன் பாசம்
உம்மைப் பிரிப்பது கடலல்ல
அது எம் தொப்புள்கொடி