PDA

View Full Version : கொட்டும் மழையிலும் கொஞ்சிய உறவுகள்



kampan
26-10-2008, 02:27 PM
கொட்டும் மழையிலும் உன் கொஞ்சுமொழி கேட்டதுவே
தமிழகமே நீ எம் தாய்வழியே
வார்த்தைகள் போதுமா உன் உணர்வுகளை உணர்த்த
அதுதான் மழையாக தரித்ததுவே.
நீ இருக்கும் வரை
வீழுகின்ற இனமல்ல எம் தமிழினம்,
சாலைகள் போதவில்லை
உன் உணர்ச்சிச் சங்கிலி தொடர்வதற்கு
வீதிகள் தோறும்
தமிழகம் ஏங்கியது ஈழத்தமிழனுக்காய்
சாவிலும் வேணுமே
தாயவள் தாலாட்டு அதைத்தந்தது
இந்தத் தமிழகமே
சிறைகளும் குறைகளும் தன்பிள்ளைகளுக்கு முன்னால்
சிறியது என்பதை பறைகிறது உன் பாசம்
உம்மைப் பிரிப்பது கடலல்ல
அது எம் தொப்புள்கொடி

shibly591
26-10-2008, 04:32 PM
அழகாகச்சொல்லிருக்கிறீர்கள்..

கவிதை முடியும் கடைசி வரி நச்...

வாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள்

அமரன்
26-10-2008, 06:23 PM
கம்பன்!
உங்கள் கவிதைகளை கவிதைப்பட்டறைப் பகுதியில் பதிகின்றீர்கள். கொஞ்சம் கவனமெடுத்து பொருத்தமான இடத்தில் பதியுங்கள்.
நன்றி.