shibly591
26-10-2008, 08:44 AM
அவன் அவனாக இருக்கிறான்
என்னைத்தான் நானாக இருக்க
விடுகிறானில்லை..
அவனாக நான் ஆகவே போவதில்லை
அது தெரிந்தும்
அவன் என்னை நானாக இருக்க விடுகிறானில்லை..
அவனது வாழ்க்கை
அவனது நடத்தை
அவனது எல்லை
அவனது ஆசை
எதைப்பற்றியும் எனக்குத்தெரியாது
ஆனாலும் இவைகளை நான்
தெரிந்து கொண்டு
அவன் போலவே
அவனது எல்லைக்குள்
ஆகிவிடுவேனென்று அஞ்சுகிறான்.
அதனால்தான்
எனது வாழ்க்கையை நான் வாழ
அவன் அச்சுறுத்துகிறான்..
எனது வாழ்க்கை
அவனது நெருக்குதலால்
உருக்குலைந்து போனதும் அவனுக்குத்தெரியும்..
இருந்தும்
இன்னுமின்னும்
எனக்கெதிராய் சூழ்ச்சி வலை பின்னுகிறான்..
அவனாக அவனது
எல்லைக்குள் வாழ்வேனென்ற
கற்பனை கூட எனக்கில்லை
அவன்தான் நிறையவே கற்பனை செய்கிறான்
அவன் போலவே உடையணிந்து
அவன் போலவே நடை நடந்து
அவனது பெண்களை மணமுடித்து
அவனது எல்லையில் பங்குகேட்டு
நிறைய
நிறைய
நிறைய
அவன்தான் கற்பனை செய்கிறான்..
என்னை அழித்து விடத்துடிக்கும்
அவன் இதயத்தில் தெரிகிறது
என் மீது அவனுக்கிருக்கும்
மிகுந்த பயம்
எனது சுவாசங்களில் நிறைந்திருப்பதெல்லாம்
யாருக்கும் தீங்கற்ற ஒரு வாழ்க்கையின் வேட்கை
அவனது சுவாசங்களில் நிறைந்திருப்பதெல்லாம்
அகங்காரம் ஆணவம் அடக்குமுறை
அவனாக நானோ
நானாக அவனோ
ஒரு போதும் ஆகப்போவதில்லை
அவன் வேறு
நான் வேறு
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை நானாக இருக்கவிடாமல்
என்னை அடையாளந்தெரியாத ஒருவனாக மாற்ற
தொடர்ந்தும் போராடுகிறான்..
பாவம் அவன்
என்னை நானாக இருக்க விடாமலே
அவனாக அவன் வாழும் அற்புத தருணங்களை
வீணாக்கிக்கொண்டிருக்கிறான்..
அவன் அவனாக இருக்கிறான்
என்னைத்தான் நானாக இருக்க
விடுகிறானில்லை..
தான் வென்றுவிட்டதாக
என்னை நானாக வாழ விடாமல்
அவன் புரியும போராட்டங்களில் என்னை விட
அவனே அதிகம் தோற்றுக்கொண்டிருக்கிறான்
பாவம் அவன்
என்னைத்தான் நானாக இருக்க
விடுகிறானில்லை..
அவனாக நான் ஆகவே போவதில்லை
அது தெரிந்தும்
அவன் என்னை நானாக இருக்க விடுகிறானில்லை..
அவனது வாழ்க்கை
அவனது நடத்தை
அவனது எல்லை
அவனது ஆசை
எதைப்பற்றியும் எனக்குத்தெரியாது
ஆனாலும் இவைகளை நான்
தெரிந்து கொண்டு
அவன் போலவே
அவனது எல்லைக்குள்
ஆகிவிடுவேனென்று அஞ்சுகிறான்.
அதனால்தான்
எனது வாழ்க்கையை நான் வாழ
அவன் அச்சுறுத்துகிறான்..
எனது வாழ்க்கை
அவனது நெருக்குதலால்
உருக்குலைந்து போனதும் அவனுக்குத்தெரியும்..
இருந்தும்
இன்னுமின்னும்
எனக்கெதிராய் சூழ்ச்சி வலை பின்னுகிறான்..
அவனாக அவனது
எல்லைக்குள் வாழ்வேனென்ற
கற்பனை கூட எனக்கில்லை
அவன்தான் நிறையவே கற்பனை செய்கிறான்
அவன் போலவே உடையணிந்து
அவன் போலவே நடை நடந்து
அவனது பெண்களை மணமுடித்து
அவனது எல்லையில் பங்குகேட்டு
நிறைய
நிறைய
நிறைய
அவன்தான் கற்பனை செய்கிறான்..
என்னை அழித்து விடத்துடிக்கும்
அவன் இதயத்தில் தெரிகிறது
என் மீது அவனுக்கிருக்கும்
மிகுந்த பயம்
எனது சுவாசங்களில் நிறைந்திருப்பதெல்லாம்
யாருக்கும் தீங்கற்ற ஒரு வாழ்க்கையின் வேட்கை
அவனது சுவாசங்களில் நிறைந்திருப்பதெல்லாம்
அகங்காரம் ஆணவம் அடக்குமுறை
அவனாக நானோ
நானாக அவனோ
ஒரு போதும் ஆகப்போவதில்லை
அவன் வேறு
நான் வேறு
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை நானாக இருக்கவிடாமல்
என்னை அடையாளந்தெரியாத ஒருவனாக மாற்ற
தொடர்ந்தும் போராடுகிறான்..
பாவம் அவன்
என்னை நானாக இருக்க விடாமலே
அவனாக அவன் வாழும் அற்புத தருணங்களை
வீணாக்கிக்கொண்டிருக்கிறான்..
அவன் அவனாக இருக்கிறான்
என்னைத்தான் நானாக இருக்க
விடுகிறானில்லை..
தான் வென்றுவிட்டதாக
என்னை நானாக வாழ விடாமல்
அவன் புரியும போராட்டங்களில் என்னை விட
அவனே அதிகம் தோற்றுக்கொண்டிருக்கிறான்
பாவம் அவன்