shibly591
25-10-2008, 05:41 PM
2008-06-14
அந்தக்கடைப்பக்கம் நான் போவது குறைவு.காரணம் மூலைக்டை தேவனுக்கு நான் 500 ரூபா கடன்பட்டிருக்கிறேன்.எப்பவாவது அவன் என்னைக்கண்டால் சுகம் விசாரிக்க முதல் 500 ரூபாலை பற்றி பேசி என்னை கேவலப்படுத்துவான்..
இன்றும் தற்செயலாய' அவன் கண்ணில் பட்டுவிட்டேன்.
"என்ன வாத்தியாரே..நானும் எத்தனை வாட்டிதான் கேட்கிறது? 2 வருஷமா திருப்பித்தராமலே பிகு பண்றீங்களே..கொஞ்சம் ஒதவியா இருக்குமு..2 நாளில் தந்துருங்க அண்ணா.."சத்தமாக அவனது குரல் கேட்டு வெட்கமாகிப்போயிற்று.இரண்டு நாள் என்னடா நாளைக்கே உன் காச மூஞ:சியில வீசிடுறன்" என்று வீறாப்பாய் பேசிவிட்டு வீடு வந்துவிட்டேன்..
2008-06-15
இன்று தேவனுக்கு நான் பணம் கொடுப்பதாக (மூஞ்சியில் வீசுவதாக )வாக்குறுதி அளித்த நாள்..
வழமை போலவே என்னால் இன்றும் பணத்தை கொடுக்க முடியவில்லை..வேறு வேறு பிரச்சினைகளால் அவனுக்கு கொடுக்க உசிதப்பட்ட 500 ரூபாவை கொடுக்க முடியாமல் போனாலும் நாளை எப்பாடு பட்டாவது கொடுத்து தீர்ப்பது என்று தீர்க்கமாக முடிவு செய்தேன்..
2008-06-16
சந்தையில் தேவனின் கடை பூட்டியிருந்தது..பக்கத்து வெற்றிலைக்கடை சண்முகத்திடம் விசாரித்த போது அதிர்ந்து போனேன்..
"அண்ணே..தேவன் நேத்து கார் மோதி செத்துட்டான்னே" ஒங்களுக்கு தெரியாதா..??நானும் காலை வியாபாரம் முடிஞசதும் கடய பூட்டிட்டு போலாம்னு இருக்கேன்..பாவம்ணே..ரொம்ப நல்லவன்.அதான் கடவுளுக்கு பொறுக்கல போல:
தொடர்ந்த சண்முகத்தின் பேச்சை கேட்டவாறே அந்த 500 ரூபாவை எனது பாக்கெட்டில் வைத்து விட்டு எனது வீட்டை நோக்கி நடந்தேன்..
அந்தக்கடைப்பக்கம் நான் போவது குறைவு.காரணம் மூலைக்டை தேவனுக்கு நான் 500 ரூபா கடன்பட்டிருக்கிறேன்.எப்பவாவது அவன் என்னைக்கண்டால் சுகம் விசாரிக்க முதல் 500 ரூபாலை பற்றி பேசி என்னை கேவலப்படுத்துவான்..
இன்றும் தற்செயலாய' அவன் கண்ணில் பட்டுவிட்டேன்.
"என்ன வாத்தியாரே..நானும் எத்தனை வாட்டிதான் கேட்கிறது? 2 வருஷமா திருப்பித்தராமலே பிகு பண்றீங்களே..கொஞ்சம் ஒதவியா இருக்குமு..2 நாளில் தந்துருங்க அண்ணா.."சத்தமாக அவனது குரல் கேட்டு வெட்கமாகிப்போயிற்று.இரண்டு நாள் என்னடா நாளைக்கே உன் காச மூஞ:சியில வீசிடுறன்" என்று வீறாப்பாய் பேசிவிட்டு வீடு வந்துவிட்டேன்..
2008-06-15
இன்று தேவனுக்கு நான் பணம் கொடுப்பதாக (மூஞ்சியில் வீசுவதாக )வாக்குறுதி அளித்த நாள்..
வழமை போலவே என்னால் இன்றும் பணத்தை கொடுக்க முடியவில்லை..வேறு வேறு பிரச்சினைகளால் அவனுக்கு கொடுக்க உசிதப்பட்ட 500 ரூபாவை கொடுக்க முடியாமல் போனாலும் நாளை எப்பாடு பட்டாவது கொடுத்து தீர்ப்பது என்று தீர்க்கமாக முடிவு செய்தேன்..
2008-06-16
சந்தையில் தேவனின் கடை பூட்டியிருந்தது..பக்கத்து வெற்றிலைக்கடை சண்முகத்திடம் விசாரித்த போது அதிர்ந்து போனேன்..
"அண்ணே..தேவன் நேத்து கார் மோதி செத்துட்டான்னே" ஒங்களுக்கு தெரியாதா..??நானும் காலை வியாபாரம் முடிஞசதும் கடய பூட்டிட்டு போலாம்னு இருக்கேன்..பாவம்ணே..ரொம்ப நல்லவன்.அதான் கடவுளுக்கு பொறுக்கல போல:
தொடர்ந்த சண்முகத்தின் பேச்சை கேட்டவாறே அந்த 500 ரூபாவை எனது பாக்கெட்டில் வைத்து விட்டு எனது வீட்டை நோக்கி நடந்தேன்..