View Full Version : அழுதவள்
ரங்கராஜன்
23-10-2008, 02:26 PM
ஒருத்தி அழுவதற்க்கு
ஊரில் அனைவரும் வேண்டினார்கள்
அழுதவள் வானம்
http://fireflyforest.net/images/firefly/2005/August/rain-on-table-480.jpg
ஓவியன்
11-11-2008, 07:53 AM
பூமி சிரிக்கவென,
வானம் அழுததோ...??
நல்ல முயற்சி மூர்த்தி, தொடருங்க...
சிவா.ஜி
11-11-2008, 07:58 AM
நல்ல குறுங்கவி. வித்தியாசப் பார்வையைத் தொடருங்கள் மூர்த்தி. வாழ்த்துகள்.
அமரன்
11-11-2008, 08:08 AM
ஒருத்தி அழுவதற்க்கு
ஊரில் அனைவரும் வேண்டினார்கள்
அழுதவள் வானம்
ஆனந்தம் மிகுந்து
அதிகமாய் அழுதுவிட்டாள்
வேண்டியவர்கள் அழுதனர்
(ஊரெல்லாம் வெள்ளம்!!)
பாராட்டுகள் மூர்த்தி.
சிவா.ஜி
11-11-2008, 08:15 AM
ஆனந்தம் மிகுந்து
அதிகமாய் அழுதுவிட்டாள்
வேண்டியவர்கள் அழுதனர்
(ஊரெல்லாம் வெள்ளம்!!)
அசத்தல் அமரன். மற்றுமோர் வித்தியாசப் பார்வை.
அமரன்
11-11-2008, 08:28 AM
அசத்தல் அமரன். மற்றுமோர் வித்தியாசப் பார்வை.
சிவா..
மூர்த்தியின் கவி பொழிந்த ஒரு துளி உங்களை மகிழ்வித்ததில் மகிழ்ச்சி.
இந்தக் கவிதையை விட்டு சற்று வெளியே போனால்,
வேண்டுதல் என்பது இரக்கம் தூண்டுதல்.
இரக்கம் அதிகமாக சுரந்தால் விளைவு விபரீதம்.
இயற்கையாக நிகழ்ந்தால் விளைவு அமிர்தம்.
சில நேரங்களில் நினைப்பதை எழுத முடிவதில்லை..:)