PDA

View Full Version : சந்தேக நபர்கள்



shibly591
23-10-2008, 06:38 AM
ரயில் மற்றும் பஸ்களில் அடிக்கடி குண்டுவெடிப்பதால் சந்தேக நபர்களை அடையாளம கண்டால் பாதுகாப்புப்பிரிவுக்கு அறிவிக்கச்சொல்லி இலங்கையில் அடிக்கடி விளம்பரம் செய்யப்படுகிறது..அண்மையில் எனக்கு நேர்ந்ததொரு அனுபவம் சிறிய சாதாரண ஒரு கவிதையாக இதோ.....

ரயில் பயணமொன்றில்
எதிரிருக்கையில் அமர்ந்து கொண்டிருப்பவன்
என்னை ஒரு தீவிரவாதி என்ற கணிப்பில்
ஆக்ரோசமாக பார்க்கிறான்..

அவனுக்கு எங்கே தெரியப்போகிறது
அவனுக்கும் சேர்த்தே
ஊர் போய்ச்சேரவேண்டும் என்று
நான் பிரார்த்திப்பது....???

அமரன்
23-10-2008, 09:36 AM
வலிக்கிறது
உறவுகளை நினைத்து.
அன்பே சிவம்.

பாராட்டுக்கள் ஷிப்லி.

poornima
23-10-2008, 01:56 PM
கடைசி வரிகளில் தொனிக்கும் வலிகளில்
உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது ஷீப்லி

ஆக்ரோஷமான பார்வை என்பதன் மற்றொரு
அடையாளம் உள்பயம்..

ஓரு இனத்தான் எனில் அவனுக்குள்ளும் இருந்திருக்கும்
இந்த பிரார்த்தனை இல்லையா ஷீப்லி?

shibly591
24-10-2008, 05:01 PM
வலிக்கிறது
உறவுகளை நினைத்து.
அன்பே சிவம்.

பாராட்டுக்கள் ஷிப்லி.

நன்றிகள் அமரன்..

வலிகள் இன்னும் தொடரும்போலுள்ளது

shibly591
24-10-2008, 05:02 PM
கடைசி வரிகளில் தொனிக்கும் வலிகளில்
உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது ஷீப்லி

ஆக்ரோஷமான பார்வை என்பதன் மற்றொரு
அடையாளம் உள்பயம்..

ஓரு இனத்தான் எனில் அவனுக்குள்ளும் இருந்திருக்கும்
இந்த பிரார்த்தனை இல்லையா ஷீப்லி?

உண்மைதான் பூர்ணிமா...

என்ன செய்ய..இப்போது அநேகரின் இதயங்கள் கையளவு இல்லை..விரல் நகத்தளவே .ருக்கிறது

விடிவு வரவேண்டும் விரைவிலேயே..