PDA

View Full Version : கையாலாகத காதலன்!!!



aren
22-10-2008, 06:16 PM
பித்தனைப்போல் வாழ்கிறேன் ஏன்
சாகத்தெரியவில்லை!!!

சாகத்தெரியவில்லை ஏன்
யாரும் கற்றுக்கொடுக்கவில்லை!!!

பித்தனாக வாழ்கிறாயே ஏன்
என்னவளை கை பிடிக்கவில்லை!!!

உன்னவளை கை பிடிக்கவில்லை ஏன்
அதே ஜாதியில்லை!!!

அவள் உன்னுடன் வரவில்லை ஏன்
அவள் மனதில் வலுவில்லை!!!

யார் நீ
கையாலாகாத காதலன்!!!

aren
22-10-2008, 06:18 PM
முதல்வரி கவிச்சமரில் மதுரைவீரன் அவர்கள் எழுதிய கவிதையின் கடைசி வரிகள்.

கொஞ்சம் நீளம் அதிகமாகி விட்டதால் இங்கே தனியாக பதிக்கிறேன்.

அமரன்
22-10-2008, 07:01 PM
காதலர்கள் மணவாழ்க்கையில் இணைய முடியாமைக்கான காரணங்களை இதைவிடச் சுருக்கமாக சொல்ல முடியுமா என்பது சந்தேகம். காரணம் எதுவானாலும் பல இடங்களில் பழி சுமத்தப்படுவது காதலன் மீதுதான். பாராட்டுக்கள் ஆரென் அண்ணா.


பித்தனைப்போல் வாழ்கிறேன் ஏன்
சாகத்தெரியவில்லை!!!

பித்தனாக வாழ்கிறாயே ஏன்
என்னவளை கை பிடிக்கவில்லை!!!

சாவதும் அவளைக் கைபிடிப்பதும் ஒன்று என்கின்றீர்களா?:)

Narathar
23-10-2008, 03:47 AM
வாழ்த்துக்கள் அரேன்......
இப்போதெல்லாம் அடிக்கடி கவிதையா வருதே?
விஷேச காரணங்கள் ஏதும் உள்ளனவோ?

நாராயணா!!!! :D

மன்மதன்
23-10-2008, 08:20 AM
வாழ்த்துக்கள் அரேன்......
இப்போதெல்லாம் அடிக்கடி கவிதையா வருதே?
விஷேச காரணங்கள் ஏதும் உள்ளனவோ?

நாராயணா!!!! :D

எல்லாம் மலரும் நினைவுகள்தான்..:)