View Full Version : ஏன் ?
jenitha
19-10-2008, 01:22 PM
ஏன் ?
என் தூக்கத்தைக் கெடுத்தாய்
என் கனவில் அத்துமீறி நுழைந்தாய்
என் சிந்தனையை சிதற வைத்தாய்
நானாக இருந்த என்னை நீயாக மாற்றி
மெல்ல மெல்ல என்னை உன்வசம் கொண்டவனே
ஏன் ஏன் ஏன் ஏன்
இவை ஏன் செய்தாய்?
உனக்காக நான் ஜெனித்தா.பி.
செல்வா
19-10-2008, 01:50 PM
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
கவிதையைப் பதிந்ததோடு விட்டு விடாமல் ஒருமுறை வாசித்துப் பார்த்தீர்கள் என்றால்
எத்தனைப் பிழைகள் இருக்கிறது என்பதும் வாக்கியங்கள் முற்றுப்பெற்றுள்ளதா என்பதும் நமக்கு நாமே உணர்ந்து கொள்ளலாம்.
ஏன் ஏன் ஏன் ஏன்
இவை ஏன் செய்தாய்?
என்பதில் இரண்டாவது வரியில் வரும் ஏன் நெருடுகிறது..
சற்று உணர்ந்து வாசித்தீர்கள் என்றால் இன்னும் மெருகேற வாய்ப்புள்ளது...
தொடரும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை..
அப்படியே உங்கள் அறிமுகத்திரியையும் அழகு தமிழில் மாற்றலாமே..!
shibly591
20-10-2008, 09:44 AM
ஏன் என்ற உங்கள் கேள்விக்கு "காதல்" என்பதை விடையாகச்சொல்கிறது உலகம்..
இன்பா
22-10-2008, 05:09 PM
காதலி :
ஏன் ?
என் தூக்கத்தைக் கெடுத்தாய்
என் கனவில் அத்துமீறி நுழைந்தாய்
என் சிந்தனையை சிதற வைத்தாய்
நானாக இருந்த என்னை நீயாக மாற்றி
மெல்ல மெல்ல என்னை உன்வசம் கொண்டவனே
ஏன் ஏன் ஏன் ஏன்
இவை ஏன் செய்தாய்?
உனக்காக நான் ஜெனித்தா.பி.
காதலன் : அதை தான் நான் உன்னிடம் கேட்கிறேன் ஏன் ஏன்...?
\\முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
மன்மதன்
23-10-2008, 08:42 AM
தொடர்ந்து எழுதுங்க..
கவிதைக்கு வாழ்த்துகள்..
அமரன்
23-10-2008, 08:51 AM
கவிதை தலை கீழாக இருப்பது போல் இருக்கு. வசப்பட்டு, கவனம் சிதறி, கனவுகண்டு, தூக்கம் கலைந்த பிறகு ஏன் இதெல்லாம் செய்தாய் என்று கேட்டால் கவிதை இன்னும் மிளிரும்.
காதல் இருக்கும் வரை ஏன் கேள்வியும் இருக்கும். பாராட்டுகள் ஜெனிதா.
ரங்கராஜன்
23-10-2008, 09:10 AM
ஏன் என்று மற்றவர்களை கேட்டால் காதல் ஜெயிக்கும்
ஏன் என்று உங்களையே கேட்டுக் கொண்டால் வாழ்க்கை ஜெயிக்கும்........ ஜெனித்தா வாழ்த்துக்கள்
ஆன்டனி ஜானி
17-12-2010, 03:28 PM
ஏன் ?
என் தூக்கத்தைக் கெடுத்தாய்
என் கனவில் அத்துமீறி நுழைந்தாய்
என் சிந்தனையை சிதற வைத்தாய்
நானாக இருந்த என்னை நீயாக மாற்றி
மெல்ல மெல்ல என்னை உன்வசம் கொண்டவனே
ஏன் ஏன் ஏன் ஏன்
இவை ஏன் செய்தாய்?
உனக்காக நான் ஜெனித்தா.பி.
தூக்கத்திலும் காதல் செய்து அந்த காதலன்
கனவிலும் அத்து மீறி
சிந்தனை எல்லாம் சிதற வைத்து விட்டு
நானாக இருந்த என்னை நீயாக மாற்றி
விட்டு சென்றுவிட்டானே
ஏன் ?ஏன் ?
காதல் செய்வதற்க்கு தான் .......
காதல் வாழ்க !!