shibly591
16-10-2008, 06:09 AM
களியாட்ட விடுதிகள்
கணக்கற்றுக்கிடக்கும் திருநாட்டில்
பதுங்குகுழியிலும்
வாழ்க்கை நகர்வதை
அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்....
இடிவிழுந்தால்
பயந்து நடுங்கும் நம்பெண்கள் மத்தியில்
செல் விழுந்தாலும்
சத்தமின்றி நகரும் பெண்களையும்
அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்..
கொலை என்பதற்கும்
படுகொலை என்பதற்கும்
பலத்த வேறுபாடு உண்டு என்பதையும்
அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்..
வாழ்க்கையில் துனபம்
என்று புலம்பிய எனக்கு
வாழ்க்கையே துன்பம்
என்று அவன் சொல்லித்தான் எனக்குததெரியும்...
போர் தின்ற கனவுகள் பற்றி
பிரிவின் இரத்த வலிகள் பற்றி
குறுக்கப்பட்ட வாழ்க்கை பற்றி
பறிக்கப்பட்ட சுதந்திரம் பற்றி
அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்..
பீதி பிறாண்டிய புன்னகைகள்
உடைந்து நொறுங்கிய நம்பிக்கைகள்
கருகித்தீய்ந்த உணர்வுகள்
எல்லாமும் அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்..
இந்த நீண்ட நெடுந்துயரம்
எங்கு போய் முடியும் என்பதும்
கொடிய இருட்டு வாழ்க்கை
என்றுதான் விடியும் என்பதும்
அவன் சொல்லாமலே எனக்குத்தெரியும்..
அவன் சொல்லாமலே எனக்குத்தெரியும்....!
கணக்கற்றுக்கிடக்கும் திருநாட்டில்
பதுங்குகுழியிலும்
வாழ்க்கை நகர்வதை
அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்....
இடிவிழுந்தால்
பயந்து நடுங்கும் நம்பெண்கள் மத்தியில்
செல் விழுந்தாலும்
சத்தமின்றி நகரும் பெண்களையும்
அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்..
கொலை என்பதற்கும்
படுகொலை என்பதற்கும்
பலத்த வேறுபாடு உண்டு என்பதையும்
அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்..
வாழ்க்கையில் துனபம்
என்று புலம்பிய எனக்கு
வாழ்க்கையே துன்பம்
என்று அவன் சொல்லித்தான் எனக்குததெரியும்...
போர் தின்ற கனவுகள் பற்றி
பிரிவின் இரத்த வலிகள் பற்றி
குறுக்கப்பட்ட வாழ்க்கை பற்றி
பறிக்கப்பட்ட சுதந்திரம் பற்றி
அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்..
பீதி பிறாண்டிய புன்னகைகள்
உடைந்து நொறுங்கிய நம்பிக்கைகள்
கருகித்தீய்ந்த உணர்வுகள்
எல்லாமும் அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்..
இந்த நீண்ட நெடுந்துயரம்
எங்கு போய் முடியும் என்பதும்
கொடிய இருட்டு வாழ்க்கை
என்றுதான் விடியும் என்பதும்
அவன் சொல்லாமலே எனக்குத்தெரியும்..
அவன் சொல்லாமலே எனக்குத்தெரியும்....!