shibly591
16-10-2008, 06:08 AM
வன்மங்கள் நிரம்பி வழியும்
உலகில் எனக்கான கவிதையை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்..
ஒரு பறவையின் பாடலாக
நுரை ததும்பும் அலையோசையாக
புல்நுனியில் புரளும் வசந்த ரம்யமாக
அது இருக்கக்கூடும்..
நீண்ட மலைச்சரிவில புரண்டுவிழும்
நீர்வீழ்ச்சிகளின் ஓயா ரீங்காரமாகவோ..
மழை நாளின் குளிரில் நடுங்கும்
மெல்லிய இலைத்தூறலின் சில்லிடுப்பாகவோ..
முகிலற்ற வானில் கவிந்திருக்கும்
பௌரணமி நிலவின் ஒளிக்கற்றையாகவோ
அது இருக்கக்கூடும்...
இன்னும்
ஒரு குழந்தையின் கதறலாக
கனவுகள் செதுக்கும் கற்பனை ஓவியமாக
அந்திமாலை செஞ்சுடர் தீபமாக
ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பாக
யாரோ ஊதிச்செல்லும் புல்லாங்குழல் ராகமாக
ஏன்
தனியறையின் இருள் சூழ்ந்த மௌனமாகக்கூட
அது இருக்கலாம்...
வன்மங்கள் நிரம்பி வழியும்
உலகில் எனக்கான கவிதையை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்..
உலகில் எனக்கான கவிதையை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்..
ஒரு பறவையின் பாடலாக
நுரை ததும்பும் அலையோசையாக
புல்நுனியில் புரளும் வசந்த ரம்யமாக
அது இருக்கக்கூடும்..
நீண்ட மலைச்சரிவில புரண்டுவிழும்
நீர்வீழ்ச்சிகளின் ஓயா ரீங்காரமாகவோ..
மழை நாளின் குளிரில் நடுங்கும்
மெல்லிய இலைத்தூறலின் சில்லிடுப்பாகவோ..
முகிலற்ற வானில் கவிந்திருக்கும்
பௌரணமி நிலவின் ஒளிக்கற்றையாகவோ
அது இருக்கக்கூடும்...
இன்னும்
ஒரு குழந்தையின் கதறலாக
கனவுகள் செதுக்கும் கற்பனை ஓவியமாக
அந்திமாலை செஞ்சுடர் தீபமாக
ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பாக
யாரோ ஊதிச்செல்லும் புல்லாங்குழல் ராகமாக
ஏன்
தனியறையின் இருள் சூழ்ந்த மௌனமாகக்கூட
அது இருக்கலாம்...
வன்மங்கள் நிரம்பி வழியும்
உலகில் எனக்கான கவிதையை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்..