View Full Version : காதல(ல்)ப்பா
ஒண்மை உயர்வெண் முடியாள் ஒருமுக
நுண்துளை நூற்மனதால் நூற்ற - புலமிகு
வண்குழை வாயெழுத்து வெண்ணிற மீனுறங்கும்
விண்ணை விறைக்காதோ சொல்.
கண்ஸ் அண்ணே! நாங்களும் புதுசா அகநானூறு எழுதியிருக்கோம்ல.... :D
வாங்க தென்றல்..
நல்லதா இலக்கண சுத்தமா எழுதியிருக்கீங்கன்னு தெரியுது..
அப்படியே கோனார் உரை போல பொழிப்புரை, பதவுரையும் சொன்னால்,
பிழைப்பேன்..
முன்நன்றிகள்..
நன்றி திரு.இளசு அவர்களே!
இலக்கணமா சுத்தமா என்பதைக் காட்டிலும் இது ஒரு முயற்சியாக இருக்கட்டும் என்றுதான்.
ஒரு முதிய காதல் பற்றிய பா"விது.
ஒண்மை = அழகு
ஒண்மை உயர் = அழகில் உயர்ந்த
வெண் முடியாள் = வெண்மை நிற (நரைத்த) முடிகொண்ட கிழவி
ஒருமுக = ஒரேமுகமாய்
நுண்துளை = நுண்ணிய துளையால்
நூற்மனதால் = நூற்ற மனதால்.. (நூற்ற என்பதற்கு சரியான வழக்கு தமிழ் தெரியவில்லை செய்த என்று கூட சொல்லலாம். )
நூற்ற = செய்த
புலமிகு = புலமை மிகுந்த
வண்குழை = வண்மை மிகுந்த
வாயெழுத்து = வாய் எழுதும் எழுத்து = பேச்சு
வெண்ணிற மீனுறங்கும் = வெண்ணிறமாய் சுடரும் மீன்கள் உறங்கும்
விண்ணை - வானை
விறைக்காதோ சொல்......
நன்றி நவில்கிறேன் நண்பர்களே!
நன்றி தென்றல்..
வெண்முடியாள் என்பதில் தொக்கி நின்று பொருள் முழுமை உணராமல் சிக்கிக்கொண்டேன்..
முதிய காதல் என்ற புதிய பார்வையில்..
பொருளுரை சொல்ல - தெளிந்தேன்..
நன்றி.. பாராட்டுகள்..
சின்ன சந்தேகம் இன்னும் -
வண்குழை - வண்மை மிகுந்த என்றால்?
வன்மை தெரியும். வண்மை?
நன்றி தென்றல்..
வெண்முடியாள் என்பதில் தொக்கி நின்று பொருள் முழுமை உணராமல் சிக்கிக்கொண்டேன்..
முதிய காதல் என்ற புதிய பார்வையில்..
பொருளுரை சொல்ல - தெளிந்தேன்..
நன்றி.. பாராட்டுகள்..
சின்ன சந்தேகம் இன்னும் -
வண்குழை - வண்மை மிகுந்த என்றால்?
வன்மை தெரியும். வண்மை?
மன்னிக்கவும்.. அவசரத்தில் பதில் எழுதினேன்... இப்போது ஒரு அதிகப்பிரசங்கித்தனமாக பதில்...
வண்ணம் - அழகு
வண்ணம் ஒரு பண்பு. அதிலும் எவ்வண்ணமும் அழகு நிறைந்த பண்புகள்.
வண்ணம் நிறைந்த பூக்கள், வண்ணத்துப் பூச்சிகள்.. நிறமற்றவை என்று எதுவும் சொல்லவியலாது. ஏனெனில் நிறமற்றவைகளும் ஒரு நிறம்தானே!
அழகு..
வண்ணம் = திருமுகம்.
வண்ணன் = அழகு நிறைந்தவன்.
வண்மையும் அழகென்றே பொருளாகும்.
இன்னொன்று,
வன்மை = கடுமை,
வன்சொல் = கடுஞ்சொல்....
இது எதிர்மறையாக அல்லாமல், இப்படிச் சொல்லலாம்..
வன்மை = உறுதி
வன்சொல் = உறுதியான சொல்..
இதில் தவறு இருந்தால் உடனே கூறலாம்...
நன்றி இளசு சார்.
shibly591
19-10-2008, 05:05 AM
ஒண்மை உயர்வெண் முடியாள் ஒருமுக
நுண்துளை நூற்மனதால் நூற்ற - புலமிகு
வண்குழை வாயெழுத்து வெண்ணிற மீனுறங்கும்
விண்ணை விறைக்காதோ சொல்.
கண்ஸ் அண்ணே! நாங்களும் புதுசா அகநானூறு எழுதியிருக்கோம்ல.... :D
வாவ் பின்றீங்களே
வாழ்த்துக்கள்
(ஆனா ஒண்ணுமே புரியல)
poornima
19-10-2008, 06:45 AM
வெண்பா வடிவில் அகநானூறு முயற்சி..
பாராட்டுகள் தென்றல்...
இன்னும் தொடர்க..
வண்மை - புதிய பொருள்கள் கற்றேன்..
நன்றி தென்றலுக்கு..