PDA

View Full Version : கடல்கோள்



நாகரா
13-10-2008, 05:18 AM
அருட்ஜோதிப் பெருங்கருணைக்
கடலாம் அவன்
இருள்சேர் இருவினைத்
தீவென்னைத்
தயவாய்த் தழுவி
பயம் நீக்கி
அழுக்கெலாங் கழுவி
மயக்கம் தெளிவித்துத்
தன்னுள் கொண்டான்

இளசு
17-10-2008, 04:57 PM
தீவுகளாய்த்தான் பல மனங்கள்..
ஒரு பக்கம் மட்டும் பற்றுவைத்து
உறவில் உழலும் தீபகற்பங்களாயும்
இன்னும் பல மனங்கள்..

எதுவுமில்லாமல் கரைந்து கலந்து கடலோடு சங்கமமாகும்..
பாரதப் பண்பாட்டு ஞானத்தேடல் சொல்லும்
ஆழ்ந்த கவிதை..

வாழ்த்துகள் நாகரா அவர்களே!