சிவா.ஜி
03-10-2008, 07:06 AM
பகல் முடிந்த வேளையில் என்
பலகனியில் நின்றுகொண்டு,
உலகின் உயர்ந்த கட்டிடம்
உருவாவதைக் காண்கிறேன்
பேரரசாய் அந்த பெருங்கட்டிடம்
சிற்றரசுகளாய் மற்றுள்ள கட்டிடங்கள்
அண்ணாந்து பார்த்து
கழுத்து முதல் இடுப்புவரை நோகிறது...
குனிந்து பார்த்தாலோ...
இதயம் வலிக்கிறது.....!
பரம்பரைப் பிழைக்க
பாட்டன் விட்டுச் சென்ற
பாதி ஏக்கரை பணயம் வைத்து
திரைகடல் ஓடி திரவியம் தேட
வளைகுடா வந்த தமிழன்
தெருக்குப்பைத் தொட்டிகளை
தூர்த்துக் கொட்டுகிறான்!
வேதனை வெளிக்காட்டாத
அலைபேசி பேச்சு....
பாதி ஏக்கரை மீட்க மட்டுமே
அவன் விடும் மூச்சு...
விதைத்து விளைந்தால்
புதைத்த பொக்கிஷம் தரும் பூமி
நசிந்த நல்குலப்பெண்ணாய்
வட்டிக்காரனிடம்
வைப்பாட்டியாய் இருக்கிறது...!
நிலத்தை மீட்க முனைந்து
குலத்தை மறந்த தமிழன்
குப்பை வாருகிறான்....
சந்தனமாய் வாழ்ந்தவன்...இங்கே
சாக்கடையாய் நாறுகிறான்!
பாருக்கே படியளக்கும் பரம்பரை
பாழாய்ப் போகுது....
ஊருக்கே உழைப்புணர்த்திய குலம்
உள்ளே சோகம் வைத்து
உரைக்குது பொய்நலம்!
என்ன வளம் இல்லை என் திருநாட்டில்
ஏன் கையை ஏந்துது இவ் வெளிநாட்டில்?
அரசியல் வேசிகள் செய்யும் விளையாட்டில்
அரிசி இல்லா வேதனை இவர் வீட்டில்!
நல்லதோர் வீணை செய்து
நலங்கெட புழுதியில் எறிந்துவிட்டனர்
நயவஞ்சக ஆட்சியாளர்....
நஞ்சையிலும், புஞ்சையிலும்
நலமாய் வாழ்ந்தோர் இன்று
நஞ்சினில் வாழ்கிறாரே...
நாளையேனும் மாறுமா இவர் நிலை?
பலகனியில் நின்றுகொண்டு,
உலகின் உயர்ந்த கட்டிடம்
உருவாவதைக் காண்கிறேன்
பேரரசாய் அந்த பெருங்கட்டிடம்
சிற்றரசுகளாய் மற்றுள்ள கட்டிடங்கள்
அண்ணாந்து பார்த்து
கழுத்து முதல் இடுப்புவரை நோகிறது...
குனிந்து பார்த்தாலோ...
இதயம் வலிக்கிறது.....!
பரம்பரைப் பிழைக்க
பாட்டன் விட்டுச் சென்ற
பாதி ஏக்கரை பணயம் வைத்து
திரைகடல் ஓடி திரவியம் தேட
வளைகுடா வந்த தமிழன்
தெருக்குப்பைத் தொட்டிகளை
தூர்த்துக் கொட்டுகிறான்!
வேதனை வெளிக்காட்டாத
அலைபேசி பேச்சு....
பாதி ஏக்கரை மீட்க மட்டுமே
அவன் விடும் மூச்சு...
விதைத்து விளைந்தால்
புதைத்த பொக்கிஷம் தரும் பூமி
நசிந்த நல்குலப்பெண்ணாய்
வட்டிக்காரனிடம்
வைப்பாட்டியாய் இருக்கிறது...!
நிலத்தை மீட்க முனைந்து
குலத்தை மறந்த தமிழன்
குப்பை வாருகிறான்....
சந்தனமாய் வாழ்ந்தவன்...இங்கே
சாக்கடையாய் நாறுகிறான்!
பாருக்கே படியளக்கும் பரம்பரை
பாழாய்ப் போகுது....
ஊருக்கே உழைப்புணர்த்திய குலம்
உள்ளே சோகம் வைத்து
உரைக்குது பொய்நலம்!
என்ன வளம் இல்லை என் திருநாட்டில்
ஏன் கையை ஏந்துது இவ் வெளிநாட்டில்?
அரசியல் வேசிகள் செய்யும் விளையாட்டில்
அரிசி இல்லா வேதனை இவர் வீட்டில்!
நல்லதோர் வீணை செய்து
நலங்கெட புழுதியில் எறிந்துவிட்டனர்
நயவஞ்சக ஆட்சியாளர்....
நஞ்சையிலும், புஞ்சையிலும்
நலமாய் வாழ்ந்தோர் இன்று
நஞ்சினில் வாழ்கிறாரே...
நாளையேனும் மாறுமா இவர் நிலை?