Keelai Naadaan
20-09-2008, 05:41 PM
இந்த பாடல் 1977-ம் வருட ஆனந்த விகடன் புத்தகத்திலே பிரசுரமாயிருக்கிறது. எழுதியவர்: ஆனந்தப்பிரியன்.
ஏனோ தெரியவில்லை, எனக்கு பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்
அவனை எழுப்ப்பாதீர்; அப்படியே தூங்கட்டும்
ஆழ்ந்த துயிலினிலே அமைதியினை காணட்டும்
அன்புக் குழந்தையவன் அரையாண்டு சிறுவனவன்
இந்த வயதினிலே இப்பொழுது தூங்குவதே
சுகமான தூக்கம்! அவன் சுகமாக தூங்கட்டும்!
கண்ணை விழித்திந்த காசினியை காணூங்கால்
என்னத்துயர் வருமோ, எங்கெங்கு அடி விழுமோ
காதல் வருமோ, காதலுக்கு தடை வருமோ
மோதல் வருமோ, முறை கெடுவார் துணை வருமோ
நன்றி இலா நண்பர்கள்தாம் நாற்புறமும் சூழ்வாரோ
நலமிழந்த பெண்ணொருத்தி நாயகியாய் வருவாளோ!
செய்யத்தொழில் வருமோ, திண்டாட்டந்தான் வருமோ
வெயில் அழைத்து வரும் வியர்வையிலே நீராடி
"ஐயா பசி" என்று அலைகின்ற நிலை வருமோ
என்ன வருமென்று இப்பொழுது யாரறிவார்?
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்!
கோடிக்கதிபதியெனக் குறையாது வந்தாலும்
நாட்டுத்தலைவனென நல்வாழ்வு பெற்றாலும்
கேட்ட பொருளெல்லாம் கிடைத்தாலும் அவன் வீட்டு
மாட்டுக்கும் கூட மரியாதை கிடைத்தாலும்
பிரச்னைகள் தீர்ந்தாலும் பால் பழங்கள் உண்டாலும்
சொத்துள்ள காரணத்தால் தூக்கம் பிடிக்காது
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்
பூப்போல தூங்குகின்றான்; பூமியிலே உள்ளதெல்லாம்
பார்க்காமல் தூங்குகின்றான்; பாவிகளை இன்று வரை
சேராமல் தூங்குகின்றான்; தெய்வத்தின் காதினிலே
ரகசியங்கள் பேசுகின்றான்; "லாலீலா" பாடுகின்றான்
வெள்ளை மலர் முகத்தை வெள்ளி நிலா பெட்டகத்தை
பிள்ளை கனியமுதை பேதையீர் எழுப்பாதீர்.
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்.
............................................................................
நன்றி: ஆனந்த விகடன் / ஆனந்தப்பிரியன்
ஏனோ தெரியவில்லை, எனக்கு பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்
அவனை எழுப்ப்பாதீர்; அப்படியே தூங்கட்டும்
ஆழ்ந்த துயிலினிலே அமைதியினை காணட்டும்
அன்புக் குழந்தையவன் அரையாண்டு சிறுவனவன்
இந்த வயதினிலே இப்பொழுது தூங்குவதே
சுகமான தூக்கம்! அவன் சுகமாக தூங்கட்டும்!
கண்ணை விழித்திந்த காசினியை காணூங்கால்
என்னத்துயர் வருமோ, எங்கெங்கு அடி விழுமோ
காதல் வருமோ, காதலுக்கு தடை வருமோ
மோதல் வருமோ, முறை கெடுவார் துணை வருமோ
நன்றி இலா நண்பர்கள்தாம் நாற்புறமும் சூழ்வாரோ
நலமிழந்த பெண்ணொருத்தி நாயகியாய் வருவாளோ!
செய்யத்தொழில் வருமோ, திண்டாட்டந்தான் வருமோ
வெயில் அழைத்து வரும் வியர்வையிலே நீராடி
"ஐயா பசி" என்று அலைகின்ற நிலை வருமோ
என்ன வருமென்று இப்பொழுது யாரறிவார்?
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்!
கோடிக்கதிபதியெனக் குறையாது வந்தாலும்
நாட்டுத்தலைவனென நல்வாழ்வு பெற்றாலும்
கேட்ட பொருளெல்லாம் கிடைத்தாலும் அவன் வீட்டு
மாட்டுக்கும் கூட மரியாதை கிடைத்தாலும்
பிரச்னைகள் தீர்ந்தாலும் பால் பழங்கள் உண்டாலும்
சொத்துள்ள காரணத்தால் தூக்கம் பிடிக்காது
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்
பூப்போல தூங்குகின்றான்; பூமியிலே உள்ளதெல்லாம்
பார்க்காமல் தூங்குகின்றான்; பாவிகளை இன்று வரை
சேராமல் தூங்குகின்றான்; தெய்வத்தின் காதினிலே
ரகசியங்கள் பேசுகின்றான்; "லாலீலா" பாடுகின்றான்
வெள்ளை மலர் முகத்தை வெள்ளி நிலா பெட்டகத்தை
பிள்ளை கனியமுதை பேதையீர் எழுப்பாதீர்.
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்.
............................................................................
நன்றி: ஆனந்த விகடன் / ஆனந்தப்பிரியன்