kulirthazhal
13-09-2008, 02:37 AM
பார்வையில் சுழலும் பிம்பங்கள்
வாழ்வின்
உயிர்மீது காதல்,
எல்லா
கன்னி நிகழ்வின்மீதும்
காதல் கொள்கிறேன்.
தாரமாக
எந்த பாதையும்
வழிநடத்த விழையவில்லை.
ஒவ்வொரு நொடியும்
புதியதாய் புலர்கிறது
பழயதாய் கழிகிறது.
ஒட்டிக்கொள்வதில்லை,
விட்டுச்செல்வதில்லை.
சுழலும் உலகினில்
முற்றுப்புள்ளிகளுக்கு பின்னும்
வார்த்தைகளை தேடுகிறேன்.
சுவாசத்தின் இடைவெளியில்
சோம்பலாய் சுடர்விடும்
முற்றுப்புள்ளிகளை
இட்டுச்செல்வதில்
உடன்பாடில்லை,
வெற்றியுமில்லை.
பரவசத்திற்கும்
வெறுமைக்கும்
உண்ர்ச்சிகளின் இடைவெளியில்
அழுத்தமாய் பதியும்
புள்ளிகளுக்கு
அர்த்தம் பிறப்பதில்லை.
நிழல்கள் இசைக்கும்
நெகிழ்ச்சியில்
இம்சைகளின் சுரங்கள்
இனிமைகூட்டுகிறது,
அதன்
ரிதங்கள் இதமாக
புதியதோர் பாதைக்கு
பிம்பங்களை தருகிறது.
வழிகள் பிரசவங்களால்
வகைப்படுத்தப்படுவதால்
பிறப்புகள்
தவிற்கமுடியாமல்.,,
சூத்திரங்கள் இயலாத
கணக்குகளை
சில
சுவடுகளே
வழிநடத்துகின்றன.
அன்பும், அர்ப்பனமும்,
ஏட்டுக்கல்வியாய்
எழில்கொண்டாலும்
நான்
எனும் கருப்பொருளே
காவியங்களை கட்டுகிறது,
சாத்திரங்களை சபித்துவிட்டு
சூத்திரங்களை செய்வதற்கு
உலகின் வேகத்தை
உள்ளம் அடிமைசெய்கிறது.
உலகே என்
கண்ணசைவில் சுழல்வதாய்
கர்வம் கொள்கிறது.
புறியாத புதிர்களுக்குள்
புதுமைகொண்ட பொக்கிஷங்கள்
பூத்துக்கிடப்பதாய்
எதிர்ப்பார்ப்புகள்
உறுதிமொழிகின்றன,
நானே கடவுளென்ற
உன்மையினை
உள்ளம் உணர்த்தும்போது
விழிகளைத்தழுவும்
பிம்பங்களில்
உயிர்க்கொண்டு சிரிக்கும்
கடவுள்களின் எண்ணிக்கை
கணக்கிட இயலாமல்.....
-குளிர்தழல்
வாழ்வின்
உயிர்மீது காதல்,
எல்லா
கன்னி நிகழ்வின்மீதும்
காதல் கொள்கிறேன்.
தாரமாக
எந்த பாதையும்
வழிநடத்த விழையவில்லை.
ஒவ்வொரு நொடியும்
புதியதாய் புலர்கிறது
பழயதாய் கழிகிறது.
ஒட்டிக்கொள்வதில்லை,
விட்டுச்செல்வதில்லை.
சுழலும் உலகினில்
முற்றுப்புள்ளிகளுக்கு பின்னும்
வார்த்தைகளை தேடுகிறேன்.
சுவாசத்தின் இடைவெளியில்
சோம்பலாய் சுடர்விடும்
முற்றுப்புள்ளிகளை
இட்டுச்செல்வதில்
உடன்பாடில்லை,
வெற்றியுமில்லை.
பரவசத்திற்கும்
வெறுமைக்கும்
உண்ர்ச்சிகளின் இடைவெளியில்
அழுத்தமாய் பதியும்
புள்ளிகளுக்கு
அர்த்தம் பிறப்பதில்லை.
நிழல்கள் இசைக்கும்
நெகிழ்ச்சியில்
இம்சைகளின் சுரங்கள்
இனிமைகூட்டுகிறது,
அதன்
ரிதங்கள் இதமாக
புதியதோர் பாதைக்கு
பிம்பங்களை தருகிறது.
வழிகள் பிரசவங்களால்
வகைப்படுத்தப்படுவதால்
பிறப்புகள்
தவிற்கமுடியாமல்.,,
சூத்திரங்கள் இயலாத
கணக்குகளை
சில
சுவடுகளே
வழிநடத்துகின்றன.
அன்பும், அர்ப்பனமும்,
ஏட்டுக்கல்வியாய்
எழில்கொண்டாலும்
நான்
எனும் கருப்பொருளே
காவியங்களை கட்டுகிறது,
சாத்திரங்களை சபித்துவிட்டு
சூத்திரங்களை செய்வதற்கு
உலகின் வேகத்தை
உள்ளம் அடிமைசெய்கிறது.
உலகே என்
கண்ணசைவில் சுழல்வதாய்
கர்வம் கொள்கிறது.
புறியாத புதிர்களுக்குள்
புதுமைகொண்ட பொக்கிஷங்கள்
பூத்துக்கிடப்பதாய்
எதிர்ப்பார்ப்புகள்
உறுதிமொழிகின்றன,
நானே கடவுளென்ற
உன்மையினை
உள்ளம் உணர்த்தும்போது
விழிகளைத்தழுவும்
பிம்பங்களில்
உயிர்க்கொண்டு சிரிக்கும்
கடவுள்களின் எண்ணிக்கை
கணக்கிட இயலாமல்.....
-குளிர்தழல்