shibly591
08-09-2008, 04:29 AM
தினந்தோறும்
எழுவதற்கும்
எத்தனையோ
கருப் பொருட்கள்
கண்ணெதிரே.....
காலிழந்த பிச்சைக்காரன்
தொலைந்து போன பத்து ரூபாய்
புன்னகைக்காத மனிதர்கள்
காலியாகிப் போன மனிதாபிமானம்
தனித்து நிற்கும் வெண்ணிலா
கூடவே சில நட்சத்திரங்கள்
இப்படி
எழுதுவதற்கு
எத்தனையோ
கருப்பொருட்கள்
கண்ணெதிரே
இயந்திர வாழ்க்கையின்
இடைவெளிக்குள்
நசுங்கிப் போன
மனிதர்கள்
இதை விடுத்து
எதைத்தான் தேடுகிறார்கள்?
பிரபஞ்சத்தையே
கொழுத்திப் போடும்
துணிச்சல் மிக்க
மனிதர்கள்
கடன் அட்டைக்குள்
சுருங்கிப் போனது எப்படி?
மைதீராப் பேனாக்களும்,
வெற்றுக் காகிதங்களும்,
நிறைந்து போயிற்று.....
போன நூற்றாண்டிலும்
பயன்படுத்தாததை சேர்த்து!
எல்லாம் முடிந்து
தொலைக்காட்சியிலும்,
தூக்கத்திலும்
தனிமையிலும்
நிம்மதி தேடுகிறார்கள்
மனதில் தேங்கிப் போன
உயிரோட்டங்களை
எழுதிப் பார்ப்பதில்தான்
நிம்மதி உறைந்திருக்கிறது
என்பது
எப்போதுதான் புதியுமோ?
இன்றைய நவநாகரிக
மனிதர்களுக்கு.....!
எழுவதற்கும்
எத்தனையோ
கருப் பொருட்கள்
கண்ணெதிரே.....
காலிழந்த பிச்சைக்காரன்
தொலைந்து போன பத்து ரூபாய்
புன்னகைக்காத மனிதர்கள்
காலியாகிப் போன மனிதாபிமானம்
தனித்து நிற்கும் வெண்ணிலா
கூடவே சில நட்சத்திரங்கள்
இப்படி
எழுதுவதற்கு
எத்தனையோ
கருப்பொருட்கள்
கண்ணெதிரே
இயந்திர வாழ்க்கையின்
இடைவெளிக்குள்
நசுங்கிப் போன
மனிதர்கள்
இதை விடுத்து
எதைத்தான் தேடுகிறார்கள்?
பிரபஞ்சத்தையே
கொழுத்திப் போடும்
துணிச்சல் மிக்க
மனிதர்கள்
கடன் அட்டைக்குள்
சுருங்கிப் போனது எப்படி?
மைதீராப் பேனாக்களும்,
வெற்றுக் காகிதங்களும்,
நிறைந்து போயிற்று.....
போன நூற்றாண்டிலும்
பயன்படுத்தாததை சேர்த்து!
எல்லாம் முடிந்து
தொலைக்காட்சியிலும்,
தூக்கத்திலும்
தனிமையிலும்
நிம்மதி தேடுகிறார்கள்
மனதில் தேங்கிப் போன
உயிரோட்டங்களை
எழுதிப் பார்ப்பதில்தான்
நிம்மதி உறைந்திருக்கிறது
என்பது
எப்போதுதான் புதியுமோ?
இன்றைய நவநாகரிக
மனிதர்களுக்கு.....!