PDA

View Full Version : எப்பொழுது வருவாய் நீ



நம்பிகோபாலன்
05-09-2008, 11:41 AM
இருட்டினை பார்த்து
வெளிச்சத்தை தேடுவதை
போல
உன்னில் நான்
காதலை எதிர்பார்த்து
காத்திருந்தேன்.....

நான்கு வருட
படிப்பை
முடித்து கொண்டு
முடிவில்
என் முகம் மலர்ந்தது
நீ காதலை சொன்னவுடன்

உனக்காக வாழ்வேன்
நல் வாழ்க்கை அமைய
சம்மதம் கேட்டு
சென்றவனுக்காக
இன்றுவரை காத்திருக்கிறேன்

ஒவ்வொரு நாளும்
உன் வருகைக்காக
காத்திருந்து
கையிலுள்ள பூக்களும்
என் விழிபோல
வாடி போகிறது

என் வாழ்க்கையில் மட்டும்
எதிர்ப்பார்ப்புகள்
ஏமாற்றத்தையே
தருகிறது
உன்னிடதிலும் என் காதலிலும்
மாறுமோ
என்றெண்ணி காத்திருக்கிறேன்
கண்களில் கண்ணீரோடு
எப்பொழுது வருவாய் நீ......

இளசு
05-09-2008, 12:42 PM
காத்திருக்கும்போது
அதுவும் அநிச்சயமாய்..
கணங்கள் ஒவ்வொன்றும் ரணங்கள்!

வலி சொன்ன கவிதைக்குப் பாராட்டுகள் நம்பி!

பென்ஸ்
06-09-2008, 02:24 AM
நல்ல முயற்சி நம்பிகோபாலன் அவர்களே...

காதலை சொல்லி காணாமல் போனவனுக்காக
காத்திருந்து தவிக்கும் இந்த பேதை...
வலி உணர தாமதம் எனக்கு.

கருத்தும், உவமையும், கருவும் அருமையாக இருக்கிறது...
ஆனால் அவற்றை சரியாக செதுக்க தெரியாமல்
வெறுமையாக ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கியது போல் ஒரு உணர்வு.

இருப்பினும், ஒரு நிமிடம் நினைவுகளை உலுக்கி சென்றது உங்கள் கவி...

வாழ்த்துகளும் நன்றியும்...

shibly591
08-09-2008, 04:39 AM
அழகாக வலிகளை பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள் நண்பரே