PDA

View Full Version : ஈஸ்வரனின் துளிப்பா - 16



ஆர்.ஈஸ்வரன்
03-09-2008, 11:10 AM
காற்றே
மெளனமாயிரு
உறங்கட்டும் மரங்கள்

பிச்சி
03-09-2008, 03:24 PM
கவிதை போலவே மென்மை

வாழ்த்துக்கள் ஈஸ்வரன் அண்ணா.

ஆர்.ஈஸ்வரன்
04-09-2008, 09:39 AM
நன்றி பிச்சி பிரபா அவர்களே

aren
05-09-2008, 12:12 PM
காற்றே
மெளனமாயிரு
உறங்கட்டும் மரங்கள்

மரங்களே
அசையாமல் இருங்கள்
காற்று கொஞ்சம்
இளைப்பாரட்டும்!!!

இளசு
05-09-2008, 12:41 PM
கண்ணாளன் உறங்குகிறான் என்பதால்
மொட்டுகளை அப்புறம் மலரச் சொன்ன
திரைப்பாடல் உண்டு!

இங்கே மரமசைந்து காற்று அதிகரிக்காவிட்டாலும் பரவாயில்லை..
அம்மரம் உறங்கட்டும் எனக் கரிசனம் காட்டும் ஈஸ்வரன்!

ஐந்தறிவுக்கும் இரங்கும் உயர்நிலை!

வாழ்த்துகள் ஈஸ்வரன்!

அமரன்
05-09-2008, 04:29 PM
மரங்களே
அசையாமல் இருங்கள்
காற்று கொஞ்சம்
இளைப்பாரட்டும்!!!

இளைப்பற இடம் கொடுத்த
இலைகளை அசைக்கின்றது
'சில்'மிஷக் காற்று.:)

அமரன்
05-09-2008, 04:34 PM
காற்றே
மெளனமாயிரு
உறங்கட்டும் மரங்கள்

காற்று வாங்கப்போய்
கவிதை வாங்கி வந்தீர்களா..:)

மரங்களின் காதோரம்
மனித எமன்கள் வரவை
கிசு கிசுக்கிறது காற்று.
பதறுகிறது மரம்.
கூடப் பதறும் உங்கள் மனம்.:icon_b:

ஆர்.ஈஸ்வரன்
07-09-2008, 11:00 AM
அனைவருக்கும் நன்றி

ஓவியன்
07-09-2008, 05:25 PM
காற்று மரங்களின் உறக்கத்தைக் கலைக்கிறதா..??
இல்லை
மரங்கள் காற்றின் உறக்கத்தைக் கலைக்கிறதா...??