View Full Version : ஈஸ்வரனின் துளிப்பா - 16
ஆர்.ஈஸ்வரன்
03-09-2008, 11:10 AM
காற்றே
மெளனமாயிரு
உறங்கட்டும் மரங்கள்
பிச்சி
03-09-2008, 03:24 PM
கவிதை போலவே மென்மை
வாழ்த்துக்கள் ஈஸ்வரன் அண்ணா.
ஆர்.ஈஸ்வரன்
04-09-2008, 09:39 AM
நன்றி பிச்சி பிரபா அவர்களே
காற்றே
மெளனமாயிரு
உறங்கட்டும் மரங்கள்
மரங்களே
அசையாமல் இருங்கள்
காற்று கொஞ்சம்
இளைப்பாரட்டும்!!!
கண்ணாளன் உறங்குகிறான் என்பதால்
மொட்டுகளை அப்புறம் மலரச் சொன்ன
திரைப்பாடல் உண்டு!
இங்கே மரமசைந்து காற்று அதிகரிக்காவிட்டாலும் பரவாயில்லை..
அம்மரம் உறங்கட்டும் எனக் கரிசனம் காட்டும் ஈஸ்வரன்!
ஐந்தறிவுக்கும் இரங்கும் உயர்நிலை!
வாழ்த்துகள் ஈஸ்வரன்!
அமரன்
05-09-2008, 04:29 PM
மரங்களே
அசையாமல் இருங்கள்
காற்று கொஞ்சம்
இளைப்பாரட்டும்!!!
இளைப்பற இடம் கொடுத்த
இலைகளை அசைக்கின்றது
'சில்'மிஷக் காற்று.:)
அமரன்
05-09-2008, 04:34 PM
காற்றே
மெளனமாயிரு
உறங்கட்டும் மரங்கள்
காற்று வாங்கப்போய்
கவிதை வாங்கி வந்தீர்களா..:)
மரங்களின் காதோரம்
மனித எமன்கள் வரவை
கிசு கிசுக்கிறது காற்று.
பதறுகிறது மரம்.
கூடப் பதறும் உங்கள் மனம்.:icon_b:
ஆர்.ஈஸ்வரன்
07-09-2008, 11:00 AM
அனைவருக்கும் நன்றி
ஓவியன்
07-09-2008, 05:25 PM
காற்று மரங்களின் உறக்கத்தைக் கலைக்கிறதா..??
இல்லை
மரங்கள் காற்றின் உறக்கத்தைக் கலைக்கிறதா...??