எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-08-2008, 05:09 PM
வேளைக்கு ஒன்றென்ற
திரிகோணக் கோட்பாடுகளில்
விஜயமிட்ட அரசுப் பேருந்துகளெல்லாம்
சிற்றுந்துகள் வரவில்
கவனிப்பாரற்றுப் போயின
யார் என்ன எந்த வீட்டுக்கென்ற
புதியவருக்கான குசலங்களும்
மாயமாய் மறைந்து விட்டிருந்தன
அமெரிக்கர்கள் அணிந்த
வேட்டி சட்டையாய்
ஒவ்வொரு கிராமத்தானுடனும்
ஒட்டாமல் பயணிக்கின்றன
அவர்களின் நாகரீக உடைகள்
புதியன புகுதலும் பழையன கழிதலும்
ஏறக்குறைய எனதூரைப் பார்த்தே
எழுதியதை போல்
பிரம்மாண்ட மாற்றங்கள்
வானம் மட்டும் மாறாமல்
விரிந்து காட்சியளிக்கிறது
தெரு முகப்பிலிருந்து
அதன் கடைசிச் சுவரை
எட்டிய பார்வைகளெல்லாம்
இடைப்பட்ட கட்டிடங்களில் மோதி
அறுந்து விழுமளவில்
விசாலங்கள் விலகிப் போயிருந்தன
தெருவுக்கு ஒன்றென்ற
குப்பைத் தொட்டி வழமை ஒழிந்து
அனைத்து வீடுகளின் முகப்பில்
ஒவ்வொன்று முளைத்திருக்கின்றன
பெருசுகள் கதை பேசிக் கழித்த
திண்ணைகளெல்லாம்
ஜப்பானியப் பெயர்களைத் தாங்கிய
நவீன வாகனங்களின்
நிறுத்தலிடமாய்ப் போனது
வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தவர்கள்
தெருவிற்கு ஒரு மரம் வளர்க்கிறார்களாம்
அம்மைக்கு என்றாலும்
ஆட்டுக்குட்டிக்கு என்றாலும்
அம்மையப்பன் வீட்டில்தான்
அரைமணி நேரம் கெஞ்சி
இலை பிடுங்கிச் செல்கிறார்களாம்
என்னைப் போலவே
ஏதேனும் விசேஷமென்றால்
வந்து செல்கிறார்கள்
என் சிநேகிதர்களும் என்றான்
என் பால்ய சிநேகிதன் ஒருவன்
ஒட்டிய உறவாடிய மணலில்
மூன்றாமவனாய் இறங்கி
அப்படியே திரும்பியும் வந்தேன்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
திரிகோணக் கோட்பாடுகளில்
விஜயமிட்ட அரசுப் பேருந்துகளெல்லாம்
சிற்றுந்துகள் வரவில்
கவனிப்பாரற்றுப் போயின
யார் என்ன எந்த வீட்டுக்கென்ற
புதியவருக்கான குசலங்களும்
மாயமாய் மறைந்து விட்டிருந்தன
அமெரிக்கர்கள் அணிந்த
வேட்டி சட்டையாய்
ஒவ்வொரு கிராமத்தானுடனும்
ஒட்டாமல் பயணிக்கின்றன
அவர்களின் நாகரீக உடைகள்
புதியன புகுதலும் பழையன கழிதலும்
ஏறக்குறைய எனதூரைப் பார்த்தே
எழுதியதை போல்
பிரம்மாண்ட மாற்றங்கள்
வானம் மட்டும் மாறாமல்
விரிந்து காட்சியளிக்கிறது
தெரு முகப்பிலிருந்து
அதன் கடைசிச் சுவரை
எட்டிய பார்வைகளெல்லாம்
இடைப்பட்ட கட்டிடங்களில் மோதி
அறுந்து விழுமளவில்
விசாலங்கள் விலகிப் போயிருந்தன
தெருவுக்கு ஒன்றென்ற
குப்பைத் தொட்டி வழமை ஒழிந்து
அனைத்து வீடுகளின் முகப்பில்
ஒவ்வொன்று முளைத்திருக்கின்றன
பெருசுகள் கதை பேசிக் கழித்த
திண்ணைகளெல்லாம்
ஜப்பானியப் பெயர்களைத் தாங்கிய
நவீன வாகனங்களின்
நிறுத்தலிடமாய்ப் போனது
வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தவர்கள்
தெருவிற்கு ஒரு மரம் வளர்க்கிறார்களாம்
அம்மைக்கு என்றாலும்
ஆட்டுக்குட்டிக்கு என்றாலும்
அம்மையப்பன் வீட்டில்தான்
அரைமணி நேரம் கெஞ்சி
இலை பிடுங்கிச் செல்கிறார்களாம்
என்னைப் போலவே
ஏதேனும் விசேஷமென்றால்
வந்து செல்கிறார்கள்
என் சிநேகிதர்களும் என்றான்
என் பால்ய சிநேகிதன் ஒருவன்
ஒட்டிய உறவாடிய மணலில்
மூன்றாமவனாய் இறங்கி
அப்படியே திரும்பியும் வந்தேன்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ