நாகரா
26-08-2008, 08:20 AM
கொத்துக் கொத்தாக
சிவப்புப் பூக்கள்
பூத்துக் குலுங்கும்
அந்த மரங்களில்
என் பார்வைகள்
மொட்டுக்களாய்
பூத்துக்
காய்த்துக்
கனிந்து
வெடித்து
விதை சிந்தி
மண்ணில் புதைந்து
செடிகளாய் முளை விட்டு
மரங்களாய் நெடிதுயர
விழிப்புத் தவம்
செய்கிறேன்
நான்
இமைகளும்
இலைகளாகி
ஒளிச் சேர்க்கை
நடத்த
சிவப்புப் பூக்கள்
பூத்துக் குலுங்கும்
அந்த மரங்களில்
என் பார்வைகள்
மொட்டுக்களாய்
பூத்துக்
காய்த்துக்
கனிந்து
வெடித்து
விதை சிந்தி
மண்ணில் புதைந்து
செடிகளாய் முளை விட்டு
மரங்களாய் நெடிதுயர
விழிப்புத் தவம்
செய்கிறேன்
நான்
இமைகளும்
இலைகளாகி
ஒளிச் சேர்க்கை
நடத்த