அமரன்
24-08-2008, 09:53 PM
வாரத்தின் ஆறுநாட்களும் வேலை. சனி இரவுகள் இளமைக்கான வேளை. இதுதான் சயன் அன் கோவின் தற்போதைய கொள்கை. பட்டப் படிப்பு முடித்த கையோடு தனியார் துறை வேலை நிமித்தம் கொழும்புக்கு வந்து ஒன்றாகி ஒரு வீடெடுத்து தங்கி இருப்பவர்கள் சயன் அன் கோவினர் . இவர்கள் சனிக்கிழமைகளில், சாமம் தாண்டிய பின்னர்தான் உறங்குவார்கள். அப்படித் தூங்கிக்கொண்டு இருந்தபோது "டேய்.... டேய் சயன்.. எழும்படா.. செல்லடிக்குது" என்று கத்தினான் சயனின் நண்பர்களில் ஒருவன்.
சயனின் குறட்டையை வென்று அப்பத்தான் தூக்கத்தை தழுவி இருப்பான். அந்த நேரத்தில் கண்ணாடி ரீப்போவின் மேலாடிய வைப்பிறேட் மோடிலிருந்த சயனின் அலைபேசி இடைஞ்சல் செய்தது. அதனால் ஏற்பட்ட எரிச்சலை சயனை எழுப்பியபோது உணர முடிந்தது. சயனோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். "செல்லடிக்கிறாண்டா...எழும்புடா" என்று அவனுடைய அம்மா எழுப்பும் தோரணையில் நண்பன் தொடர பதட்டத்துடன் வாரிச்சுருட்டி எழும்பினான். நண்பனின் முகத்தை சற்று நேரம் எடுத்து படித்த பிறகு நிலைமையை புரிந்து செல்லை எடுத்துக்கொண்டு விறாந்தைக்கு போனான்..
"அம்மா கதைக்கிறன் தம்பி" என்று தொடங்கிய உரையாடல் முடிவடைந்தபோது ஓடிப் போயிருந்த உறக்கம் அடுத்த நாள் இரவு "நெடூ" நேரமாகியும் வந்தபாடில்லை.
சின்னவயசில் தகப்பனை இழந்த சயனுக்கு எல்லாமே மாமாதான். தமக்கை வேலைக்குப் போறன் என்று சொன்னபோது மறுத்தவன் வீட்டிலேயே கைவினைத் தொழிலுக்கு ஏற்பாடு செய்தான். தான் பார்த்துக்கொண்டிருந்த வாத்தியார் உத்தியோகத்துடன் டியூசனும் கொடுக்கத் தொடங்கினான். தன்னை விஞ்சும் வகையில் ஒழுக்கசீலனாகவும் கல்விமானாகவும் சயனை ஆக்கவேண்டும் என்ற வெறியில் ஓய்வுளைச்சல் இல்லாமல் உழைத்தான். கல்யாணம் வேண்டாம் என்பவனை கட்டாயப்படுத்தி அதுவும் சயனைக் கொண்டே பெண்ணை செலக்ட் செய்து கட்டி வைத்தார்கள்.
கல்யாணத்துக்கு முதல் நல்ல மாதிரி இருந்த மாமி கல்யாணத்துக்குப் பிறகு சுயத்தைக் காட்டத்தொடங்கினாள். மாமாவை அஞ்சு சதத்துக்கு மதிப்பதே இல்லை. தன்னோடு நின்றிருந்தாலாவது பரவாயில்லை பிள்ளைகளுக்கும் இல்லாததும் பொல்லாததும் ஓதினாள்.
மாமாவுடைய கண்ணியம் பெண்கள் வட்டத்தை அவருடன் நெருங்க வைத்தத்து. குடும்பப் பிரச்சினைகளை சொல்லி தீர்வு கேட்கும் அளவுக்கு பெண்கள் அவர்மேல் நம்பிக்கை கலந்த மரியாதை வைத்திருத்தனர். மாமியோ அதை எல்லாம் சந்தேகக் கண்ணோடு பார்த்ததாள். பிள்ளைகளுக்கு நேரடியாக சொல்லாவிட்டாலும் பட்டும் படாமலும் குத்தல் கதைகள் மூலம் சொன்னாள். இரண்டு பிள்ளைகள் அம்மா பிள்ளை. அப்படியே நம்பி நடந்தனர். கடைக்குட்டி மட்டும் அப்பன் பிள்ளை. அவளுக்காகவும் என்னதான் மிதித்தாலும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிடக்கூடாது என்பதுக்காவும் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு குடும்பம் நடத்தினார் மாமா.
சயந்தான் தானும் காரணம் என்ற குற்ற உறுத்தலால் தன்னை வருத்தினான். அந்த வருத்தம் தாயுடன் கதைத்ததிகிருந்து அதிகமாகி விட்டிருந்தது.. துக்கம் கண்களில் குடி இருக்க தூக்கம் வராமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.
என்னதான் ஆணாதிக்க சமூகம் என்றாலும் சமயங்களில் பெண்கள் சார்பாகத்தான் சமூகம் பார்க்கிறது. சில சென்சிட்டிவ்வான விசங்களை அவர்கள் சொல்லும் போது மறுபேச்சின்றி நம்பிவிடுகின்றார்கள். மாமா தன்னை தப்பான நோக்கத்துடன் அழைத்தார் என்று ஒருத்தி சொன்னாளாம். அதை பெரும்பான்மையினர் நம்பி மாவைப் பற்றிப் புறணி பேசுகின்றார்களாம். மாமா மனம் உடைந்து மூலைக்குள் முடங்கிக் கிடக்கிறாராம். தாய் சொன்னதிலிருந்து சயனின் மனதுக்குள் பிரளயம்..
ஊரைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை. அவனது கவலை எல்லாம் மாமாவின் வீட்டைப் பற்றித்தான். வெறும் வாயை மென்ற மாமிக்கு அவல் கிடைத்துவிட்டது. அவளுடைய மகுடிக்கு ஆடும் பிள்ளைகளும் சேர்ந்து விசத்தை கக்குவார்களே.. இனி மாமாவின் நிலை.. அந்த நினைப்பே சயனின் இதயத்தை ஊசிகள் கொண்டு குத்தியது.
மாமாவைப் பார்க்க வேணும்; பக்கத்தில் இருந்த ஆறுதல்படுத்தவேண்டும் போல இருந்ததால் லீவு லெட்டர் எழுதி நண்பனிடம் கொடுத்தான். யாழ்ப்பாணம்-கொழும்பு ட்ரவல் ஏஜென்சிக்குப் போனான். திங்கக்கிழமை காலமைதான் சீட் இருந்தது.. பதிவு செய்தான். தாய்க்கு தகவல் சொன்னான்.. வீட்டுக்கு வந்து நண்பர்கள் வற்புறுத்தலால் மத்தியானமும் இரவும் பேருக்குச் சாப்பிட்டான். துணிமணிகளை சூட்கேசில் அடைத்தான்.. எல்லாத்தையும் ஒரு இயந்திரம் போலவே செய்தான்.
இதோ.. பொழுது விடிஞ்சா பயணம். மணி பன்னிரெண்டு தாண்டியும் நித்திரை வரவில்லை அவனுக்கு.. விறாந்தையில் இருந்த செட்டியில் சாய்ந்திருந்தான். அவனுடைய மனம் அந்தக்கால மணிக்கூட்டின் பெண்டுலம் போல அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தது. மாமாவைப் பற்றிய நினைப்பு சொட்டுச் சொட்டாய் சொட்டியபடி இருந்தது.. "நாளைக்கு என்னை எப்படிப் பார்ப்பார்.. முகங்கொடுத்துப் பேசுவாரா.. மாட்டார்.. முன்பு போலப் பாரதியாரின் கம்பீர நடை இருக்குமா.. இருக்காது.. தன்னை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்தவன் முன்னால் இப்படி ஒரு பெயருடன் எப்படி வருவார்.. எப்படி நிமிர்ந்து நிற்பார்.. கூடுதலாக என்னை தவிர்க்கப் பார்ப்பார்.. முடியாவிட்டால் நிச்சயமாக தலை கவிழ்ந்து கூனிக் குறுகித்தான் நிற்பார்.. மாமியும் பிள்ளைகளும் இனி அவரை எப்படி நடத்துவார்கள்.."என்றெல்லாம் எண்ணினான்.. அவனுக்குநெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. தலையைப் போட்டு உடைத்துக்கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.. இரண்டு மணி அளவில் திடீரென்று செற்றியை விட்டு எழுந்தான். லைட்டை நூர்த்து விட்டு படுக்கைக்குப் போனான்.
மறுநாட்காலை.. ஏர்ப்போட்டுக்கு போவதுக்காக வாசலில் நின்ற வாடகை வாகனத்தில் ஏறியபோது பிடிமானம் பிடிபட மறுக்க படியில் சறுக்கினான்.. பக்கத்தில் வந்த நண்பன் தாங்கிப் பிடித்து "பார்த்துப்போடா" என்றவன் என்ன ஏது என்று எதுவும் கேட்காமல் தோளில் கைவைத்து ஒருமுறை அழுத்தினான்.. வாகனம் புறப்பட்ட போது செல் அழுது வடித்தது. பச்சைபட்டனை தட்டினான்.. "தம்பி.. நான் அம்மா கதைக்கிறனனை.. மாமா... மாமா... இரவு ரண்டு மணிக்கு...." தாயின் தழுதழுத்த குரல் சயனை உடைத்தது. கண்களில் கண்ணீர் துளிர்த்தது..
சயனின் குறட்டையை வென்று அப்பத்தான் தூக்கத்தை தழுவி இருப்பான். அந்த நேரத்தில் கண்ணாடி ரீப்போவின் மேலாடிய வைப்பிறேட் மோடிலிருந்த சயனின் அலைபேசி இடைஞ்சல் செய்தது. அதனால் ஏற்பட்ட எரிச்சலை சயனை எழுப்பியபோது உணர முடிந்தது. சயனோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். "செல்லடிக்கிறாண்டா...எழும்புடா" என்று அவனுடைய அம்மா எழுப்பும் தோரணையில் நண்பன் தொடர பதட்டத்துடன் வாரிச்சுருட்டி எழும்பினான். நண்பனின் முகத்தை சற்று நேரம் எடுத்து படித்த பிறகு நிலைமையை புரிந்து செல்லை எடுத்துக்கொண்டு விறாந்தைக்கு போனான்..
"அம்மா கதைக்கிறன் தம்பி" என்று தொடங்கிய உரையாடல் முடிவடைந்தபோது ஓடிப் போயிருந்த உறக்கம் அடுத்த நாள் இரவு "நெடூ" நேரமாகியும் வந்தபாடில்லை.
சின்னவயசில் தகப்பனை இழந்த சயனுக்கு எல்லாமே மாமாதான். தமக்கை வேலைக்குப் போறன் என்று சொன்னபோது மறுத்தவன் வீட்டிலேயே கைவினைத் தொழிலுக்கு ஏற்பாடு செய்தான். தான் பார்த்துக்கொண்டிருந்த வாத்தியார் உத்தியோகத்துடன் டியூசனும் கொடுக்கத் தொடங்கினான். தன்னை விஞ்சும் வகையில் ஒழுக்கசீலனாகவும் கல்விமானாகவும் சயனை ஆக்கவேண்டும் என்ற வெறியில் ஓய்வுளைச்சல் இல்லாமல் உழைத்தான். கல்யாணம் வேண்டாம் என்பவனை கட்டாயப்படுத்தி அதுவும் சயனைக் கொண்டே பெண்ணை செலக்ட் செய்து கட்டி வைத்தார்கள்.
கல்யாணத்துக்கு முதல் நல்ல மாதிரி இருந்த மாமி கல்யாணத்துக்குப் பிறகு சுயத்தைக் காட்டத்தொடங்கினாள். மாமாவை அஞ்சு சதத்துக்கு மதிப்பதே இல்லை. தன்னோடு நின்றிருந்தாலாவது பரவாயில்லை பிள்ளைகளுக்கும் இல்லாததும் பொல்லாததும் ஓதினாள்.
மாமாவுடைய கண்ணியம் பெண்கள் வட்டத்தை அவருடன் நெருங்க வைத்தத்து. குடும்பப் பிரச்சினைகளை சொல்லி தீர்வு கேட்கும் அளவுக்கு பெண்கள் அவர்மேல் நம்பிக்கை கலந்த மரியாதை வைத்திருத்தனர். மாமியோ அதை எல்லாம் சந்தேகக் கண்ணோடு பார்த்ததாள். பிள்ளைகளுக்கு நேரடியாக சொல்லாவிட்டாலும் பட்டும் படாமலும் குத்தல் கதைகள் மூலம் சொன்னாள். இரண்டு பிள்ளைகள் அம்மா பிள்ளை. அப்படியே நம்பி நடந்தனர். கடைக்குட்டி மட்டும் அப்பன் பிள்ளை. அவளுக்காகவும் என்னதான் மிதித்தாலும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிடக்கூடாது என்பதுக்காவும் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு குடும்பம் நடத்தினார் மாமா.
சயந்தான் தானும் காரணம் என்ற குற்ற உறுத்தலால் தன்னை வருத்தினான். அந்த வருத்தம் தாயுடன் கதைத்ததிகிருந்து அதிகமாகி விட்டிருந்தது.. துக்கம் கண்களில் குடி இருக்க தூக்கம் வராமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.
என்னதான் ஆணாதிக்க சமூகம் என்றாலும் சமயங்களில் பெண்கள் சார்பாகத்தான் சமூகம் பார்க்கிறது. சில சென்சிட்டிவ்வான விசங்களை அவர்கள் சொல்லும் போது மறுபேச்சின்றி நம்பிவிடுகின்றார்கள். மாமா தன்னை தப்பான நோக்கத்துடன் அழைத்தார் என்று ஒருத்தி சொன்னாளாம். அதை பெரும்பான்மையினர் நம்பி மாவைப் பற்றிப் புறணி பேசுகின்றார்களாம். மாமா மனம் உடைந்து மூலைக்குள் முடங்கிக் கிடக்கிறாராம். தாய் சொன்னதிலிருந்து சயனின் மனதுக்குள் பிரளயம்..
ஊரைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை. அவனது கவலை எல்லாம் மாமாவின் வீட்டைப் பற்றித்தான். வெறும் வாயை மென்ற மாமிக்கு அவல் கிடைத்துவிட்டது. அவளுடைய மகுடிக்கு ஆடும் பிள்ளைகளும் சேர்ந்து விசத்தை கக்குவார்களே.. இனி மாமாவின் நிலை.. அந்த நினைப்பே சயனின் இதயத்தை ஊசிகள் கொண்டு குத்தியது.
மாமாவைப் பார்க்க வேணும்; பக்கத்தில் இருந்த ஆறுதல்படுத்தவேண்டும் போல இருந்ததால் லீவு லெட்டர் எழுதி நண்பனிடம் கொடுத்தான். யாழ்ப்பாணம்-கொழும்பு ட்ரவல் ஏஜென்சிக்குப் போனான். திங்கக்கிழமை காலமைதான் சீட் இருந்தது.. பதிவு செய்தான். தாய்க்கு தகவல் சொன்னான்.. வீட்டுக்கு வந்து நண்பர்கள் வற்புறுத்தலால் மத்தியானமும் இரவும் பேருக்குச் சாப்பிட்டான். துணிமணிகளை சூட்கேசில் அடைத்தான்.. எல்லாத்தையும் ஒரு இயந்திரம் போலவே செய்தான்.
இதோ.. பொழுது விடிஞ்சா பயணம். மணி பன்னிரெண்டு தாண்டியும் நித்திரை வரவில்லை அவனுக்கு.. விறாந்தையில் இருந்த செட்டியில் சாய்ந்திருந்தான். அவனுடைய மனம் அந்தக்கால மணிக்கூட்டின் பெண்டுலம் போல அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தது. மாமாவைப் பற்றிய நினைப்பு சொட்டுச் சொட்டாய் சொட்டியபடி இருந்தது.. "நாளைக்கு என்னை எப்படிப் பார்ப்பார்.. முகங்கொடுத்துப் பேசுவாரா.. மாட்டார்.. முன்பு போலப் பாரதியாரின் கம்பீர நடை இருக்குமா.. இருக்காது.. தன்னை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்தவன் முன்னால் இப்படி ஒரு பெயருடன் எப்படி வருவார்.. எப்படி நிமிர்ந்து நிற்பார்.. கூடுதலாக என்னை தவிர்க்கப் பார்ப்பார்.. முடியாவிட்டால் நிச்சயமாக தலை கவிழ்ந்து கூனிக் குறுகித்தான் நிற்பார்.. மாமியும் பிள்ளைகளும் இனி அவரை எப்படி நடத்துவார்கள்.."என்றெல்லாம் எண்ணினான்.. அவனுக்குநெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. தலையைப் போட்டு உடைத்துக்கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.. இரண்டு மணி அளவில் திடீரென்று செற்றியை விட்டு எழுந்தான். லைட்டை நூர்த்து விட்டு படுக்கைக்குப் போனான்.
மறுநாட்காலை.. ஏர்ப்போட்டுக்கு போவதுக்காக வாசலில் நின்ற வாடகை வாகனத்தில் ஏறியபோது பிடிமானம் பிடிபட மறுக்க படியில் சறுக்கினான்.. பக்கத்தில் வந்த நண்பன் தாங்கிப் பிடித்து "பார்த்துப்போடா" என்றவன் என்ன ஏது என்று எதுவும் கேட்காமல் தோளில் கைவைத்து ஒருமுறை அழுத்தினான்.. வாகனம் புறப்பட்ட போது செல் அழுது வடித்தது. பச்சைபட்டனை தட்டினான்.. "தம்பி.. நான் அம்மா கதைக்கிறனனை.. மாமா... மாமா... இரவு ரண்டு மணிக்கு...." தாயின் தழுதழுத்த குரல் சயனை உடைத்தது. கண்களில் கண்ணீர் துளிர்த்தது..