PDA

View Full Version : உயிருக்கு மரியாதை!!!



தாமரை
24-08-2008, 01:09 PM
தலைவரே இன்னிக்கு உங்க பேச்சு ஆளும் கட்சியை ஒரு கலக்கு கலக்கி இருக்கும்..

முன் சீட்டில் அமார்ந்திருந்த செம்மல் சுந்தரம் வாய்நிறையச் சிரிப்புடன் இருந்தார்..

பின்ன இருக்காதா, அதுமட்டுமா ஆளுங்கட்சியை முந்திகிட்டு இரயில் விபத்தில இறந்தவர்களுக்கு கட்சி சார்பா ஒரு இலட்சம் கொடுத்ததும் இல்லாம, இறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரயிவே டிபார்ட்மெண்ட்லயே வேலை தரணும்.. அப்படி அவர்கள் தராவிட்டாலும் அடுத்தது எங்கள் ஆட்சிதான்.. அதில் இப்படிப் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலை தரப்படும். இந்த அரசு உயிர்களை துச்சமாக மதிக்கிறது. ஒவ்வொரு உயிருக்கும் மரியாதை அளிக்கும் மனிதாபிமானம்தான் எங்கள் கொள்கையின் உயிர் என்று ஒரு அடி அடிச்சீங்களே.. சூப்பர்.. அடுத்த முதல்வர் தலைவர்தான்

அமைச்சர் பதவிக்கு அச்சாரமாய் ஐஸ் வைத்தார் உடுமலை உத்தமன்,

தலைமை அலுவலகத்தை அடைந்ததும் அனைவரும் அவரவர் காரில் ஏறி, தங்கள் வீட்டிற்கும் லாட்ஜிற்கும் போக...

தலைவரின் பென்ஸ் கார் மகாபலிபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் விரைந்தது. தலைவர் உற்சாகமாய்ச் சாய்ந்திருந்தார், அந்த தேக்கு மரக் காடுகளுக்கு மத்தியில் இருந்த அவரது இரகசிய பக்களாவில் இன்று அவருக்காக புதிய விருந்து காத்துக் கொண்டிருந்தது(தாள்).. அதைப் பற்றியக் கற்பனையில் கண்களை மூடி திளைத்துக் கொண்டிருந்தார். அப்போது..

தட் என்ற தடித்த சத்தம் வர வண்டி கிரீச்சிட்டு நின்றது..

டிரைவர் என்னாச்சு? அவசர அவசரமாய் டிரைவர் இறங்க முயற்சிக்க.. போ .. வேகமாகப் போ.. அதெல்லாம் கவ்னிக்க நேரமில்லை. கெஸ்ட் ஹவுஸூக்குப் போ.. விரட்டினார்.

..

...

மறுநாள் காலை.. கெஸ்ட் ஹவுஸ் வேலைக்காரிக கொண்டு வந்து கொடுத்த காஃபியைப் பருகியபடி செய்தித் தாளை எடுத்து தலைப்புச் செய்தியாய் வந்திருந்த அவரது நேற்றைய உரையைப் பார்த்து புன்னகைத்தார்.

உயிருக்கு மரியாதை. எதிர்கட்சித் தலைவர் சிங்காரம் உருக்கமானப் பேச்சு

சென்னை ஜூன் 4. சென்னையில் நேற்று நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் ...................................................
................................................................................
................................................................................

கடைசிப் பக்கத்தின் மூலையில் சிறியதாக அந்தச் செய்தி இருந்தது..

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சாவு..

சென்னை ஜூன் 4. கோவலம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் இப்பகுதியில் உள்ள ஒரு மரக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு 11 மணி அளவிற்கு இவர் வேலை முடிந்து கிழக்குக் கடற்கரைக் கரைச் சாலையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முற்றும்.

சிவா.ஜி
24-08-2008, 01:18 PM
அரசியல் வேசித்தனத்தின் அப்பட்டமான அசிங்க முகம் பல்லைக் காட்டுகிறது. உயிரிழப்புகளைக்கூட ஓட்டுகளாக்கும் வியாபாரிகள்தானே இந்த அரசியல்வாதிகள். நாளை அந்த மாணிக்கத்துக்கு இவரே போய் 1லட்சம் கொடுத்து ஏழைத்தொழிலாளிகளின் வாக்குகளைப் பெறுவார். வெட்கக்கேடு. சாட்டையடிக் கதை. பாராட்டுகள் தாமரை.

ஷீ-நிசி
24-08-2008, 01:22 PM
ம்ம்ம்.. மோதி விட்டால் தப்பித்தால் போதும் என்ற மனோபாவமே எல்லோரிடமும் இருக்கிறது.. இதில் சாமானியனும் அடங்குவர், கட்சி தலைவர்களும் அடங்குவர்...

மோதியவனின் உயிரை காப்பாற்றி காவல்துறையிடம் சரணடைபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்....

முரண் பற்றி பேசின கதை... மிகவும் நன்றாகவே உள்ளது...

கதை சொல்லும் விதம் மிக தேர்ந்த எழுத்தாளர்கள் போல உள்ளது...

வாழ்த்துக்கள் செல்வருக்கு!!

தாமரை
24-08-2008, 01:30 PM
அரசியல் வேசித்தனத்தின் அப்பட்டமான அசிங்க முகம் பல்லைக் காட்டுகிறது. உயிரிழப்புகளைக்கூட ஓட்டுகளாக்கும் வியாபாரிகள்தானே இந்த அரசியல்வாதிகள். நாளை அந்த மாணிக்கத்துக்கு இவரே போய் 1லட்சம் கொடுத்து ஏழைத்தொழிலாளிகளின் வாக்குகளைப் பெறுவார். வெட்கக்கேடு. சாட்டையடிக் கதை. பாராட்டுகள் தாமரை.

வழக்கமா சிவாஜி கதையெழுதி நாம பாராட்டுவோம். ஊக்குவிக்க சிவாஜி முதல் ஆளாக நிற்கிறார். நன்றி சிவாஜி.

தாமரை
24-08-2008, 01:32 PM
ம்ம்ம்.. மோதி விட்டால் தப்பித்தால் போதும் என்ற மனோபாவமே எல்லோரிடமும் இருக்கிறது.. இதில் சாமானியனும் அடங்குவர், கட்சி தலைவர்களும் அடங்குவர்...

மோதியவனின் உயிரை காப்பாற்றி காவல்துறையிடம் சரணடைபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்....



சில காப்பாற்றப் பட்டிருக்கக் கூடிய உயிர்கள் இதனாலேயே காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பலனிருந்தால் விலங்குகளின் உயிருக்குக் கூட மரியாதை கொடுப்பவர்கள்.. பலனில்லாவிட்டால் மனித உயிருக்குக் கூட இப்படித்தான் மரரியாதை கொடுக்கிறார்கள்.

பாராட்டுக்கு நன்றி.

இளசு
24-08-2008, 03:41 PM
எல்லாரும் வேஷதாரிகள்.

''பெரிய'' மனிதர்கள் - பெரிய வேஷமிட வேண்டியிருக்கிறது..



கதையன்று - நிஜம்!

பாராட்டுகள் தாமரை!

விகடன்
24-08-2008, 08:35 PM
சில வரிகளில் நறுக் என்று நாட்டு அரசியல் வாதிகளின் வாய்ப் புலமையையும், திறமையையும் எழுதிவிட்டீர்கள் அண்ணா.

அரசியல்வாதிகளில் மட்டுமல்ல. பலரில் இந்தக்குணம் இருக்கவே செய்கிறது. முன்னால் ஒன்றும் முதுகுக்குப் பின்னால் பிறிதொன்றுமாக செய்யும் வல்லமை.

பாரதி
24-08-2008, 09:35 PM
வார்த்தை ஜாலங்களில் மக்களை கட்டிப்போடும் வித்தை நமது அரசியல்வாதிகளுக்கு தெரியாததா என்ன...?

நல்ல சிறுகதை தாமரை.

மனமார்ந்த பாராட்டு.

அமரன்
24-08-2008, 10:04 PM
உயிரைக் கொன்று உடலைப் புசிக்கும் மனித மிருகங்கள்.. இறந்தவர்களை வைத்து சொல்வாக்காலும் செல்வாக்காலும் வாக்கு வேட்டை ஆடும் மிருகங்கள்.

அடுத்தடுத்த நாளேட்டில் "கொலையாளி கைது; போதையில் காரோட்டினார்" என்று ஒரு அப்பாவியின் போட்டோவுடனான செய் தீ வரலாம்

நீங்கள் அடிக்கடி எழுதவேண்டும் அண்ணா..

தாமரை
25-08-2008, 02:19 AM
வார்த்தை ஜாலங்களில் மக்களை கட்டிப்போடும் வித்தை நமது அரசியல்வாதிகளுக்கு தெரியாததா என்ன...?

நல்ல சிறுகதை தாமரை.

மனமார்ந்த பாராட்டு.


இப்போ என்னைப் பாராட்டுகிறீர்களா? இல்லைத் திட்டுகிறீர்களா? :D :D :D

விகடன்
25-08-2008, 04:43 AM
வார்த்தை ஜாலம் புரியும் அனைவருமே அரசியல்வாதியாவதற்கு தகுதியானவர்களாம் தாமரை அண்ணா...
முன்கூட்டிய வாழ்த்துக்கள்

தீபா
25-08-2008, 03:52 PM
நல்ல குறுங்கதை.. இதே மாதிரி எங்கோ படித்ததாக நினைவு,. ஆனால் அது வேற மாதிரி.

நீட்டி முழக்காமல் சட்டென முடித்ததுதான் ஹைலைட்.

மோனைப் பெயர், (உடுமலை உத்தமன்), நகைச்சுவை ஞாபகப்படுத்தும் எதிர்கட்சித்தலைவரின் பெயர் ( எதிர்கட்சித் தலைவர் சிங்காரம்) மட்டுமே சூடான இக்கதைக்கு ஜெர்க்.

ஒரு வரியில் மொத்த கதைக்கான கரு அமர்ந்திருக்கிறது.. (தட் என்ற தடித்த சத்தம் வர வண்டி கிரீச்சிட்டு நின்றது..) அதனைச் சுற்றியுள்ள சம்பவமே அழகுபடுத்தி கதையைக் கொண்டுவந்திருக்கிறது.. அபாரம்.

பாராட்டுக்கள் திரு.தாமரை.

MURALINITHISH
26-08-2008, 09:08 AM
ஏழை தொழிலாளியின் இறப்பை நிர்ணயிக்க பேசினான் இறப்பின் பெறுமையை

selvamurali
26-08-2008, 09:16 AM
நல்ல கருத்துள்ள கதை!

Keelai Naadaan
27-08-2008, 02:16 PM
சரியான சவுக்கடி என்பார்களே.. அது இதுதான்.
பணமும் பதவியும் எல்லா பாவங்களையும் செரிக்க செய்யும்.