சிவா.ஜி
23-08-2008, 03:41 PM
சூரியன் உதிப்பதற்கு வெகு முன்பே படுக்கையைவிட்டு எழுந்துவிடுபவள்தான் பொன்னுத்தாயி. இருந்தாலும் பூமியின் ஓரத்திலிருந்து தன் வட்டத்தின் விளிம்பை மெள்ள மெள்ளக் காட்டி கதிரவன் வெளிப்படும் அந்த நேரத்தில்தான் வீட்டின் அந்த பழங்காலக்கதவை கிறீச் சத்தத்துடன் திறந்துகொண்டு முற்றத்துக்கு வருவாள். கிழக்குப் பார்த்த அந்த நாட்டு ஓடு போர்த்திய வீட்டுக்கு முற்றம் என்பது, முள்வேலிகளால் பாதுகாக்கப்பட்ட ஒரு பரந்த இடம். சின்ன வேலிப்படலுக்கு அருகில் உயர்ந்து நின்றிருந்த அந்த வேப்பமரத்தின் அடர்ந்த இலைகளினூடே சூரியக்கதிர் காற்றின் இடைவெளிக் கண் சிமிட்டும் அழகை நெஞ்சு நிறைய ரசிப்பாள் பொன்னுத்தாயி.அந்த கண்சிமிட்டலில் ஒரு சுகமுணர்வாள். தினசரி தான் காணும் வெளியுலககாட்சி இதுவாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற விருப்பத்தாலேயே அந்த நேரங்கழித்த வாசல் திறப்பு.
அவள் கணவனுக்கு மிகவும் விருப்பமான மரம். அதை மரமென்றால் அவன் என்றுமே ஒத்துக்கொண்டதில்லை. குடியானவர்களுக்கு மரம் மட்டைகளும், பயிர் பச்சைகளும் கூட உயிர்கள்தான் என்றாலும், அவள் கணவனுக்கு இந்த மரம் அதற்கெல்லாம் ஒரு படி மேலே. அவன் பிறந்த அன்றுதான், இந்த மரத்தின் விதையும் பூமியை முட்டிக்கொண்டு முதல் தளிரை வெளிப்படுத்தியதாம். அவனுடைய அம்மா சொல்லியிருக்கிறாள். அன்றிலிருந்து இருவரும் இணைந்தே வளர்ந்தார்கள்.
அந்தப்பக்கத்திலெல்லாம் திருமணம் ஆன அடுத்த வருடமே தொட்டில் கட்டுபவர்கள்தான் அதிகம். ஆனால் பொன்னுத்தாயிக்கு சூல்கொள்ள கோள்கள் துணையில்லையா அல்லது நாள்தான் அமையவில்லையா தெரியவில்லை...நான்கு வருடங்கள் ஊரார் வாயில் விழுந்த பின் மரகதத்தைப் பெற்றெடுத்தாள். பசித்தவனுக்கு கஞ்சி கிடைத்தால் உப்பும் உறைப்புமா பார்ப்பான்...? அப்படித்தான் பெண்குழந்தையானாலும் தன்னைத் தாயாக்கிய ஆத்தா என்று மகளைக் கொண்டாடினாள். தன்னை அப்பனாக்கிவள் என்பதை அடுத்ததாக வைத்து, தன் உயிரோடு கலந்துவிட்ட உறவான மனைவியின் குறை நீக்கிய வெகுமதியாகத்தான் அவள் கணவனும் மரகதத்தை கண்ணுக்குள் வைத்து வளர்த்தான். அதுவும் ஒரு வருடம்தான். அவன் ஆயுளும் முடிந்துவிட்டது. சாரைப்பாம்பின் வாலின் விஷம் அவனது உயிரை வாங்கிவிட்டது.
மூத்தவளாகப் பிறந்த குற்றத்துக்காக, பொன்னுத்தாயி அவளுடைய பிறந்த வீட்டில், அடுத்தடுத்த உடன்பிறப்புகளுக்கு ஆயாவாகவும், அம்மாவுக்கு எடுபிடியாகவும், களையறுக்க, நாற்று நட, கதிரறுக்க உழவுத்தொழிலாளியாகவும்தான் தன் வாழ்க்கையை கழித்திருந்தாள். புகுந்தவீட்டுக்கு வந்ததும், அவள் கணவன் அவளை கைக்குள் வைத்து தாங்கினான். அவனும் ஒற்றைப்பிள்ளையாய் இருந்தான். மாமியார் ஒரு மறு அம்மாவாகவே இருந்து மறைந்தாள். தந்தையில்லா பிள்ளையாகத்தான் அவள் கணவனும் வளர்ந்திருக்கிறான். இந்த வீட்டின் சாபமோ..என்னவோ....இப்போது என் மகளும் அப்பனைப்போலவே வளர்கிறாளே என்று எப்போதும் நினைத்துக் கண்ணீர்விடுவாள் பொன்னுத்தாயி.
அவன் இறந்த அந்த நாளை அவள் எப்போது நினைத்தாலும் தலைமுதல் கால்வரை ஒரு நடுக்கம் தோன்றும். ஐந்து வருட தாம்பத்ய வாழ்க்கைதான் அவள் வாழ்ந்தாள். ஆனால் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து ஆனந்தப்பட்டாள். கணவன் நல்ல உழைப்பாளி. அதற்கும் மேல் மனைவி மகளிடம் அபரிதமான பாசம் வைத்திருந்தான். அன்று அவள் அழுத அழுகையில் இன்றுவரை அவள் கண்களில் சுரக்க கண்ணீரே இல்லாமல் தீர்ந்துவிட்டிருந்தது.
கணவன் இறந்த துக்கத்தை காலம் மெள்ள கரைத்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் ஒரு நாள், அந்த வேப்பமரத்தை பார்த்தவளுக்கு அது அவளுடைய கணவனாகத் தோற்றமளித்தது. அவள் கணவனுக்கும் அதற்கும் ஒரே வயது. இருபக்கமும் விரிந்த கிளைகள், ஆசையாய் அவளை அள்ளி அணைக்க காத்திருக்கும் அவளின் கணவனின் கைகளைப்போன்றே தோன்றியது. ஓடிச் சென்று மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். உடல் சிலிர்த்தது. மனதுக்குள் சொல்லவொனாத நிம்மதி. 'என் புருஷன் என்னைவிட்டு போகல ந்தா...இங்கனக்குள்ளதான் நிக்காக' என்று ஒரு தெம்பு வந்தது.
அன்றிலிருந்து அந்த மரமே அவளுக்கு கணவனாகிவிட்டது. வருடாவருடம் கணவனின் இறந்தநாள் படையலை அந்த மரத்துக்கு கீழ்தான் வைத்தாள். புது வேட்டியை மரத்துக்கு உடுத்தி, அதன் மேல் துண்டை போர்த்தி அழகுபார்த்தாள். மரகதம் அதன் நிழலில் விளையாடும்போதெல்லாம், அவளுடைய அப்பா கூட இருக்கிறார் என்று நிம்மதியாக இருந்தாள். தூக்கம் வராத இரவுகளில் அந்த மரத்தின் வேர்களில் தலைசாய்த்து படுத்து, மடி சுகம் உணர்ந்து உறங்கியிருக்கிறாள்.
மாமியார் இருந்த நாட்களில்,சின்னக்குழந்தையாய் மரகதம் பக்கத்தில் படுத்துக்கொண்டிருக்க, இரவுகளில் கணவனின் நினைவு வரும்போதெல்லாம், வெளியேச் சென்று, அந்த மரத்தைக் கட்டிக்கொண்டு கண்ணீரால் அந்த அவஸ்தையைக் கரைப்பாள்.வெடிப்புவிட்ட செதில்களைத் தடவித்தடவி கணவனின் காய்த்துப்போன கைத்தடவலை உணருவாள். மரத்தோடு காது பொருத்தி, கணவனின் குரலைக் கேட்பாள்.'பொன்னுத்தாயி' என அன்போடு அழைக்கும் அந்தக்குரலை உள்ளுக்குள் உணர்ந்த மாத்திரத்தில் உடலில் ஒரு சிலிர்ப்பு தோன்றும்.
மரகதத்துக்கு அம்மைப் போட்டபோது, மனம் வலிக்க கிளை ஒடித்து இலையை மகள்மீது போர்த்தியபோதும், அப்பனின் ஆதரவுக்கரங்களின் தடவலாகத்தான் அதை நினைத்தாள். ஒரு நாளைக்கு எத்தனை முறையானாலும் சலிக்காமல் அந்த மரத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். மகளுக்காக அதன் கிளையில் ஒரு ஊஞ்சல் கட்டி, அவள் ஆடுவதை தூரத்திலிருந்து பார்ப்பவளின் கண்களுக்கு, தன் கணவனே மகளை தூக்கி ஆட்டுவதைப்போல தோன்றும்.
அந்த மகளும் பெரியவளாகி திருமணத்துக்கு நின்றபொழுது, கொஞ்சமாய் இருந்த ஒரு துண்டு நிலம்தான் கல்யாண செலவாகியது. இருப்பது இந்த ஒரு வீடுதான் . அதையும் தன் கணவன், அவளுக்கேத் தெரியாமல் பொன்னுத்தாயியின் பெயரில் எழுதி, அதை அவள் உயிருடன் இருக்கும்வரை விற்கக்கூடாது என்றும் விதியொன்றை வைத்துவிட்டான். அதை நினைத்து கண்கலங்குவாள் பொன்னுத்தாயி. 'எஞ்சாமிக்கு எம்மேல எம்புட்டு பிரியம்...காலம் போன காலத்துல இந்த கெழவி அல்லல்படக்கூடாதேன்னு அப்பமே எழுதி வெச்சிடுச்சே'
என்று உள்ளுக்குள் உருகுவாள்.
வாய்த்த மருமகன் விஷயத்தில்தான் மோசம்போய்விட்டாள் பொன்னுத்தாயி. வீட்டுப் பத்திரத்திலிருக்கும் வில்லங்கம் தெரிந்ததிலிருந்து இவளைக் கண்டாலே ஆகாது அவனுக்கு. கிழவி எப்ப மண்டையைப் போடறது வீடு எப்ப நம்ம கைக்கு வர்றது என்று ஆத்திரத்துடன் அலுத்துக்கொள்வான். மரகதம் கண்ணீர் விடுவதைத் தவிர எதுவும் செய்ய முடியாதவளாக இருப்பாள்.
வீட்டுக்கு முன்னால் இருக்கும் அந்த இடத்திலேயே, காய் கறிகளைப் பயிரிட்டு அதில் கிடைக்கும் காசில் தன் வயிற்றையும் பாதி நிறைத்துக்கொண்டு, மீதியை மருமகனுக்கு கப்பம் கட்டிக்கொண்டுதான் வந்தாள். அதிலும் வயிறு நிறையாத அந்த சோம்பேறிக்கு வேப்ப மரத்தின் மீது ஒரு கண். நன்கு வளர்ந்த வயதான மரம். நல்ல விலைக்குப் போகும். ஆனால் மாமியாரிடம் அதை சொல்லவில்லை. மரகதம் சொன்னதிலிருந்து மாமியாருக்கு அந்த மரத்தின் மேலிருந்த பதிபக்தி அவனுக்கும் தெரிந்திருந்தது. அவளுக்குத் தெரியாமல்தான் அதை வெட்ட வேண்டுமென தீர்மானித்திருந்தான்.
அன்றைக்கு எப்போதுமில்லாத வழக்கமாய், பக்கத்து கிராமத்தில் கட்டிய கூத்து பார்க்கப் போயிருந்தாள் பொன்னுத்தாயி. வீடு திரும்ப. இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. காலையில் சிறிது கண்ணயர்ந்துவிட்டாள். விழித்துப்பார்த்தவள், சூரிய வெளிச்சம் முற்றம் தாண்டி வீட்டுக்குள் வீரியமாய் விழுந்து கொண்டிருந்ததைக் கவனித்தாள். அப்போதே அவளுக்கு திக்கென்றிருந்தது. அடர்ந்த அந்த மரத்தைத்தாண்டி வெளிச்சம் எப்போதுமே இப்படி வராதே...என்னவாயிற்று என்று அவசரமாய் ஓடிச் சென்று கதவைத்திறந்தவள்..மொட்டையான அந்த அடி மரத்தைப் பார்த்து....
"யப்பே.....யாத்தே....'என பெருங்குரலெடுத்து அலறினாள். அந்த வயதிலும் இளங்குமரியைப்போல பாய்ந்து ஓடி அந்த வெட்டுப்பட்ட அடிமரத்தின் மீது அப்படியே விழுந்தாள். ஈரம் உடலைத் தொட்டதும் நடந்ததை நம்ப முடியாதவளாய் திகைத்து, பின் தெளிந்து கதறினாள்.
"அய்யோ...அய்யோ...எந்த கொடும்பாவி செஞ்ச ஈனக் காரியம் இது...வெட்டுனக் கையில குட்டம் வரக்கூடாதா...அறுத்த கை...அறுந்து விழக்கூடாதா...யாத்தே...என்னை ரெண்டாவது மொறையா முண்டச்சியாக்கிட்டாகளே....அடியே மரகதம்...ஒங்கப்பனைக் கொண்னுட்டாங்கடி....'
"பட்டுத் துணியாட்டம், பாலாடை பதமாட்டம்
பாத்து பாத்து பாசம் வெச்சு பாடையில போனவரே எஞ்சாமி
ஒத்தையில நிப்பாளே பச்சப்புள்ள வெச்சுக்கிட்டுன்னு
முத்தத்துல மரமா காத்துநின்ன எஞ்சாமி
குத்தமென்ன நான் செஞ்சேன்...இப்படி
மொத்தமா மடிஞ்சீங்களே...மவராசா.........."
இருபந்தைந்து வருடங்களுக்குப் பிறகு இன்னொரு இழவு விழுந்த அந்த வீட்டின் ஒப்பாரி, காற்றைக் கடந்து வந்து, பயணம் போய்க்கொண்டிருந்த வேப்ப மரத்தை முட்டியது. வெட்டுப்பட்ட இடத்திலிருந்து இன்னும் காயாத ஈரத்தின் ஒரு சொட்டு 'பொன்னுத்தாயி' என்று கண்ணீராய் மண்ணில் விழுந்தது.
------------------
அவள் கணவனுக்கு மிகவும் விருப்பமான மரம். அதை மரமென்றால் அவன் என்றுமே ஒத்துக்கொண்டதில்லை. குடியானவர்களுக்கு மரம் மட்டைகளும், பயிர் பச்சைகளும் கூட உயிர்கள்தான் என்றாலும், அவள் கணவனுக்கு இந்த மரம் அதற்கெல்லாம் ஒரு படி மேலே. அவன் பிறந்த அன்றுதான், இந்த மரத்தின் விதையும் பூமியை முட்டிக்கொண்டு முதல் தளிரை வெளிப்படுத்தியதாம். அவனுடைய அம்மா சொல்லியிருக்கிறாள். அன்றிலிருந்து இருவரும் இணைந்தே வளர்ந்தார்கள்.
அந்தப்பக்கத்திலெல்லாம் திருமணம் ஆன அடுத்த வருடமே தொட்டில் கட்டுபவர்கள்தான் அதிகம். ஆனால் பொன்னுத்தாயிக்கு சூல்கொள்ள கோள்கள் துணையில்லையா அல்லது நாள்தான் அமையவில்லையா தெரியவில்லை...நான்கு வருடங்கள் ஊரார் வாயில் விழுந்த பின் மரகதத்தைப் பெற்றெடுத்தாள். பசித்தவனுக்கு கஞ்சி கிடைத்தால் உப்பும் உறைப்புமா பார்ப்பான்...? அப்படித்தான் பெண்குழந்தையானாலும் தன்னைத் தாயாக்கிய ஆத்தா என்று மகளைக் கொண்டாடினாள். தன்னை அப்பனாக்கிவள் என்பதை அடுத்ததாக வைத்து, தன் உயிரோடு கலந்துவிட்ட உறவான மனைவியின் குறை நீக்கிய வெகுமதியாகத்தான் அவள் கணவனும் மரகதத்தை கண்ணுக்குள் வைத்து வளர்த்தான். அதுவும் ஒரு வருடம்தான். அவன் ஆயுளும் முடிந்துவிட்டது. சாரைப்பாம்பின் வாலின் விஷம் அவனது உயிரை வாங்கிவிட்டது.
மூத்தவளாகப் பிறந்த குற்றத்துக்காக, பொன்னுத்தாயி அவளுடைய பிறந்த வீட்டில், அடுத்தடுத்த உடன்பிறப்புகளுக்கு ஆயாவாகவும், அம்மாவுக்கு எடுபிடியாகவும், களையறுக்க, நாற்று நட, கதிரறுக்க உழவுத்தொழிலாளியாகவும்தான் தன் வாழ்க்கையை கழித்திருந்தாள். புகுந்தவீட்டுக்கு வந்ததும், அவள் கணவன் அவளை கைக்குள் வைத்து தாங்கினான். அவனும் ஒற்றைப்பிள்ளையாய் இருந்தான். மாமியார் ஒரு மறு அம்மாவாகவே இருந்து மறைந்தாள். தந்தையில்லா பிள்ளையாகத்தான் அவள் கணவனும் வளர்ந்திருக்கிறான். இந்த வீட்டின் சாபமோ..என்னவோ....இப்போது என் மகளும் அப்பனைப்போலவே வளர்கிறாளே என்று எப்போதும் நினைத்துக் கண்ணீர்விடுவாள் பொன்னுத்தாயி.
அவன் இறந்த அந்த நாளை அவள் எப்போது நினைத்தாலும் தலைமுதல் கால்வரை ஒரு நடுக்கம் தோன்றும். ஐந்து வருட தாம்பத்ய வாழ்க்கைதான் அவள் வாழ்ந்தாள். ஆனால் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து ஆனந்தப்பட்டாள். கணவன் நல்ல உழைப்பாளி. அதற்கும் மேல் மனைவி மகளிடம் அபரிதமான பாசம் வைத்திருந்தான். அன்று அவள் அழுத அழுகையில் இன்றுவரை அவள் கண்களில் சுரக்க கண்ணீரே இல்லாமல் தீர்ந்துவிட்டிருந்தது.
கணவன் இறந்த துக்கத்தை காலம் மெள்ள கரைத்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் ஒரு நாள், அந்த வேப்பமரத்தை பார்த்தவளுக்கு அது அவளுடைய கணவனாகத் தோற்றமளித்தது. அவள் கணவனுக்கும் அதற்கும் ஒரே வயது. இருபக்கமும் விரிந்த கிளைகள், ஆசையாய் அவளை அள்ளி அணைக்க காத்திருக்கும் அவளின் கணவனின் கைகளைப்போன்றே தோன்றியது. ஓடிச் சென்று மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். உடல் சிலிர்த்தது. மனதுக்குள் சொல்லவொனாத நிம்மதி. 'என் புருஷன் என்னைவிட்டு போகல ந்தா...இங்கனக்குள்ளதான் நிக்காக' என்று ஒரு தெம்பு வந்தது.
அன்றிலிருந்து அந்த மரமே அவளுக்கு கணவனாகிவிட்டது. வருடாவருடம் கணவனின் இறந்தநாள் படையலை அந்த மரத்துக்கு கீழ்தான் வைத்தாள். புது வேட்டியை மரத்துக்கு உடுத்தி, அதன் மேல் துண்டை போர்த்தி அழகுபார்த்தாள். மரகதம் அதன் நிழலில் விளையாடும்போதெல்லாம், அவளுடைய அப்பா கூட இருக்கிறார் என்று நிம்மதியாக இருந்தாள். தூக்கம் வராத இரவுகளில் அந்த மரத்தின் வேர்களில் தலைசாய்த்து படுத்து, மடி சுகம் உணர்ந்து உறங்கியிருக்கிறாள்.
மாமியார் இருந்த நாட்களில்,சின்னக்குழந்தையாய் மரகதம் பக்கத்தில் படுத்துக்கொண்டிருக்க, இரவுகளில் கணவனின் நினைவு வரும்போதெல்லாம், வெளியேச் சென்று, அந்த மரத்தைக் கட்டிக்கொண்டு கண்ணீரால் அந்த அவஸ்தையைக் கரைப்பாள்.வெடிப்புவிட்ட செதில்களைத் தடவித்தடவி கணவனின் காய்த்துப்போன கைத்தடவலை உணருவாள். மரத்தோடு காது பொருத்தி, கணவனின் குரலைக் கேட்பாள்.'பொன்னுத்தாயி' என அன்போடு அழைக்கும் அந்தக்குரலை உள்ளுக்குள் உணர்ந்த மாத்திரத்தில் உடலில் ஒரு சிலிர்ப்பு தோன்றும்.
மரகதத்துக்கு அம்மைப் போட்டபோது, மனம் வலிக்க கிளை ஒடித்து இலையை மகள்மீது போர்த்தியபோதும், அப்பனின் ஆதரவுக்கரங்களின் தடவலாகத்தான் அதை நினைத்தாள். ஒரு நாளைக்கு எத்தனை முறையானாலும் சலிக்காமல் அந்த மரத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். மகளுக்காக அதன் கிளையில் ஒரு ஊஞ்சல் கட்டி, அவள் ஆடுவதை தூரத்திலிருந்து பார்ப்பவளின் கண்களுக்கு, தன் கணவனே மகளை தூக்கி ஆட்டுவதைப்போல தோன்றும்.
அந்த மகளும் பெரியவளாகி திருமணத்துக்கு நின்றபொழுது, கொஞ்சமாய் இருந்த ஒரு துண்டு நிலம்தான் கல்யாண செலவாகியது. இருப்பது இந்த ஒரு வீடுதான் . அதையும் தன் கணவன், அவளுக்கேத் தெரியாமல் பொன்னுத்தாயியின் பெயரில் எழுதி, அதை அவள் உயிருடன் இருக்கும்வரை விற்கக்கூடாது என்றும் விதியொன்றை வைத்துவிட்டான். அதை நினைத்து கண்கலங்குவாள் பொன்னுத்தாயி. 'எஞ்சாமிக்கு எம்மேல எம்புட்டு பிரியம்...காலம் போன காலத்துல இந்த கெழவி அல்லல்படக்கூடாதேன்னு அப்பமே எழுதி வெச்சிடுச்சே'
என்று உள்ளுக்குள் உருகுவாள்.
வாய்த்த மருமகன் விஷயத்தில்தான் மோசம்போய்விட்டாள் பொன்னுத்தாயி. வீட்டுப் பத்திரத்திலிருக்கும் வில்லங்கம் தெரிந்ததிலிருந்து இவளைக் கண்டாலே ஆகாது அவனுக்கு. கிழவி எப்ப மண்டையைப் போடறது வீடு எப்ப நம்ம கைக்கு வர்றது என்று ஆத்திரத்துடன் அலுத்துக்கொள்வான். மரகதம் கண்ணீர் விடுவதைத் தவிர எதுவும் செய்ய முடியாதவளாக இருப்பாள்.
வீட்டுக்கு முன்னால் இருக்கும் அந்த இடத்திலேயே, காய் கறிகளைப் பயிரிட்டு அதில் கிடைக்கும் காசில் தன் வயிற்றையும் பாதி நிறைத்துக்கொண்டு, மீதியை மருமகனுக்கு கப்பம் கட்டிக்கொண்டுதான் வந்தாள். அதிலும் வயிறு நிறையாத அந்த சோம்பேறிக்கு வேப்ப மரத்தின் மீது ஒரு கண். நன்கு வளர்ந்த வயதான மரம். நல்ல விலைக்குப் போகும். ஆனால் மாமியாரிடம் அதை சொல்லவில்லை. மரகதம் சொன்னதிலிருந்து மாமியாருக்கு அந்த மரத்தின் மேலிருந்த பதிபக்தி அவனுக்கும் தெரிந்திருந்தது. அவளுக்குத் தெரியாமல்தான் அதை வெட்ட வேண்டுமென தீர்மானித்திருந்தான்.
அன்றைக்கு எப்போதுமில்லாத வழக்கமாய், பக்கத்து கிராமத்தில் கட்டிய கூத்து பார்க்கப் போயிருந்தாள் பொன்னுத்தாயி. வீடு திரும்ப. இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. காலையில் சிறிது கண்ணயர்ந்துவிட்டாள். விழித்துப்பார்த்தவள், சூரிய வெளிச்சம் முற்றம் தாண்டி வீட்டுக்குள் வீரியமாய் விழுந்து கொண்டிருந்ததைக் கவனித்தாள். அப்போதே அவளுக்கு திக்கென்றிருந்தது. அடர்ந்த அந்த மரத்தைத்தாண்டி வெளிச்சம் எப்போதுமே இப்படி வராதே...என்னவாயிற்று என்று அவசரமாய் ஓடிச் சென்று கதவைத்திறந்தவள்..மொட்டையான அந்த அடி மரத்தைப் பார்த்து....
"யப்பே.....யாத்தே....'என பெருங்குரலெடுத்து அலறினாள். அந்த வயதிலும் இளங்குமரியைப்போல பாய்ந்து ஓடி அந்த வெட்டுப்பட்ட அடிமரத்தின் மீது அப்படியே விழுந்தாள். ஈரம் உடலைத் தொட்டதும் நடந்ததை நம்ப முடியாதவளாய் திகைத்து, பின் தெளிந்து கதறினாள்.
"அய்யோ...அய்யோ...எந்த கொடும்பாவி செஞ்ச ஈனக் காரியம் இது...வெட்டுனக் கையில குட்டம் வரக்கூடாதா...அறுத்த கை...அறுந்து விழக்கூடாதா...யாத்தே...என்னை ரெண்டாவது மொறையா முண்டச்சியாக்கிட்டாகளே....அடியே மரகதம்...ஒங்கப்பனைக் கொண்னுட்டாங்கடி....'
"பட்டுத் துணியாட்டம், பாலாடை பதமாட்டம்
பாத்து பாத்து பாசம் வெச்சு பாடையில போனவரே எஞ்சாமி
ஒத்தையில நிப்பாளே பச்சப்புள்ள வெச்சுக்கிட்டுன்னு
முத்தத்துல மரமா காத்துநின்ன எஞ்சாமி
குத்தமென்ன நான் செஞ்சேன்...இப்படி
மொத்தமா மடிஞ்சீங்களே...மவராசா.........."
இருபந்தைந்து வருடங்களுக்குப் பிறகு இன்னொரு இழவு விழுந்த அந்த வீட்டின் ஒப்பாரி, காற்றைக் கடந்து வந்து, பயணம் போய்க்கொண்டிருந்த வேப்ப மரத்தை முட்டியது. வெட்டுப்பட்ட இடத்திலிருந்து இன்னும் காயாத ஈரத்தின் ஒரு சொட்டு 'பொன்னுத்தாயி' என்று கண்ணீராய் மண்ணில் விழுந்தது.
------------------