வசீகரன்
23-08-2008, 10:51 AM
அந்தி வேளை ஒன்றில்..
ஆரவாரங்கள்
அண்டாத நீர்ப்பரப்பு ஒன்றின்
கரையில்ஆழ்ந்த அமைதியை மட்டும்
அருங்கே கொண்டு
நான் அமர்ந்திருந்தேன்.,
பார்வை நீர்ப்பரப்பின் மீது
நிலை குத்தி இருந்தது...
எண்ணங்கள் எங்கோ..
நிலைப்பெற்றிருந்தது..
இதே நதிக்கரையில் ஒரு
தருணத்தில்.. என்னை
இழந்திருக்கிறேன் அவள் காதலில்..!
தன்னை மறந்திருக்கிறேன்...
அவள் புன்னகையில்...
நேர பொழுதுகள்
அந்த நதியின் நீரோடு நீராக..
நிறைய கரைந்திருக்கிறது...,
அப்பொழுதெல்லாம்
தென்றல் அற்புதமாக உடன்
இருந்து உள்ளம் நிறைத்திருக்கிறது...
வானப் பிரதேசம் பரபரப்பான
உலகத்தை எங்களைவிட்டு
எங்கோ தள்ளி
வைத்து..கவிதையான
காலநிலையை மட்டும் எங்களுடன்
இணைத்திருந்தது...
அந்த நேரங்கள் நிரம்ப அழகானவை.!
அவை எப்போதும் நான் என்னை
கரைந்த பொழுதுகளில்
மட்டும் என்னுடன் இருக்கும்.,
ஒரு மழை நேர ரயில் பயணத்தில்
ஜன்னலோரம் பார்வையை
பதித்திருந்த பொழுது...
நண்பன் ஒருவனுடன் பின்னிரவை
தாண்டிய ஒரு அமைதியான
இரவு பொழுதில்
மனம் விட்டு பேசிக்கொண்டிருந்த
ஒரு தொலைபேசி உரையாடலின் போது...
ஆழ்ந்த உறக்கம் ஒன்றில்
கனவில் நான் எங்கோ என்னை
கரைந்திருந்த போது...
நிறைய தடவை காதல் கவிதைகள்
எழுதும்போது..!
இப்போது இந்த நதியின் கரையில்
தனிமையில் அமர்ந்திருக்கும் போது,
இன்னும் சில தருணங்களில்..!
அவை எனக்கான தருணங்கள்...
அவை எனக்கு எப்போது கிடைத்தாலும்
நான் ஆத்மார்த்தமாக அதனுடன்
கரைகிறேன்.,
ஆரவாரங்கள்
அண்டாத நீர்ப்பரப்பு ஒன்றின்
கரையில்ஆழ்ந்த அமைதியை மட்டும்
அருங்கே கொண்டு
நான் அமர்ந்திருந்தேன்.,
பார்வை நீர்ப்பரப்பின் மீது
நிலை குத்தி இருந்தது...
எண்ணங்கள் எங்கோ..
நிலைப்பெற்றிருந்தது..
இதே நதிக்கரையில் ஒரு
தருணத்தில்.. என்னை
இழந்திருக்கிறேன் அவள் காதலில்..!
தன்னை மறந்திருக்கிறேன்...
அவள் புன்னகையில்...
நேர பொழுதுகள்
அந்த நதியின் நீரோடு நீராக..
நிறைய கரைந்திருக்கிறது...,
அப்பொழுதெல்லாம்
தென்றல் அற்புதமாக உடன்
இருந்து உள்ளம் நிறைத்திருக்கிறது...
வானப் பிரதேசம் பரபரப்பான
உலகத்தை எங்களைவிட்டு
எங்கோ தள்ளி
வைத்து..கவிதையான
காலநிலையை மட்டும் எங்களுடன்
இணைத்திருந்தது...
அந்த நேரங்கள் நிரம்ப அழகானவை.!
அவை எப்போதும் நான் என்னை
கரைந்த பொழுதுகளில்
மட்டும் என்னுடன் இருக்கும்.,
ஒரு மழை நேர ரயில் பயணத்தில்
ஜன்னலோரம் பார்வையை
பதித்திருந்த பொழுது...
நண்பன் ஒருவனுடன் பின்னிரவை
தாண்டிய ஒரு அமைதியான
இரவு பொழுதில்
மனம் விட்டு பேசிக்கொண்டிருந்த
ஒரு தொலைபேசி உரையாடலின் போது...
ஆழ்ந்த உறக்கம் ஒன்றில்
கனவில் நான் எங்கோ என்னை
கரைந்திருந்த போது...
நிறைய தடவை காதல் கவிதைகள்
எழுதும்போது..!
இப்போது இந்த நதியின் கரையில்
தனிமையில் அமர்ந்திருக்கும் போது,
இன்னும் சில தருணங்களில்..!
அவை எனக்கான தருணங்கள்...
அவை எனக்கு எப்போது கிடைத்தாலும்
நான் ஆத்மார்த்தமாக அதனுடன்
கரைகிறேன்.,