PDA

View Full Version : இவை கொடு இறைவா..



ஆதி
22-08-2008, 10:29 AM
எனக்கு நானே
பயப்பட வேண்டும்
எந்த நிலையிலும் மனம்
தழும்பாமல் இருக்க வேண்டும்..

பந்தியிலே பகைவரை
பார்த்தாலும் புன்னகையுடன்
பரிமாறும் பக்குவம் வேண்டும்..

சிந்தையிலே செருக்கற்று
சீரிய நோக்கும்
தேரிய அறிவும் தெய்வம்
வாரி வழங்க வேண்டும்..

எப்புறமும் துப்புறவு வேண்டும்..
சப்பரம் போலுலகில்
சாந்தி வலம் வர வேண்டும்..

கசிகிற கருணை மனம் வேண்டும்
பசித்தவனை பார்க்காத உலகை
படைத்திட வேண்டும்..
ரசிகனென மாறி பிரபஞ்ச
ரம்மியங்கள் ரகசியங்கள்
சுவைத்திட வேண்டும்..

இளைய கன்னிகள் பார்வையில்
இளகிடும் உள்ளம் வேண்டும்
இறந்து ஒருமுறை மீண்டும்
இல்லாள் மடியில் உயிர்த்திட வேண்டும்..

திறந்த நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நிலையில் முகம்
எப்பொழுது இருக்க வேண்டும்
பிறந்த குழந்தை மனம்
பெரிய வயதிலும் வேண்டும்

பேர்கெடாத வாழ்கை வேண்டும்
பேர்கெட்டு போனாலும் இந்த
பேருலகம் தூய்மையுற
குப்பை தொட்டியாகவேனும்
இருந்திட வேண்டும்..

அக்னி
22-08-2008, 10:49 AM
அனைத்தும் அவசிய வேண்டும் கள்...


பேர்கெடாத வாழ்கை வேண்டும்
பேர்கெட்டு போனாலும் இந்த
பாருலகம் தூய்மையுற
குப்பை தொட்டியாகவேனும்
இருந்திட வேண்டும்..
இறுதிவரிகள் இமயம்...

கவிதையில் வேண்டிய அனைத்தும்
நிறைவேறி,
மனிதம்,
குப்பைகள் நீங்கிய தொட்டிலாகத்
தாலாட்டிட வேண்டும்...

பாராட்ட வேறு வார்த்தைகள் இல்லை...
பாராட்டுக்கள் ஆதி...

தீபா
22-08-2008, 02:52 PM
பாரதியும் வைரமுத்துவும் வந்து போனார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை " வேண்டும் "

தொடர வேண்டும்....

அன்பு வேண்டும்
தென்றல்.

சிவா.ஜி
23-08-2008, 04:27 AM
என்ன வேண்டுமென்பதிலேயே கேட்பவனின் தரம் விளங்கிவிடும். இந்த வேண்டும்கள்...உயர் சிந்தனையாளனின் உயர்ரக வேண்டுதல்கள். அக்னி குறிப்பிட்ட அந்த ஈற்று வரிகள் பிரமாதம். குறையில்லா கவிதை. மனம் நிறைந்த பாராட்டுகள் ஆதி.

shibly591
23-08-2008, 05:22 AM
என்ன வேண்டுமென்பதிலேயே கேட்பவனின் தரம் விளங்கிவிடும். இந்த வேண்டும்கள்...உயர் சிந்தனையாளனின் உயர்ரக வேண்டுதல்கள். அக்னி குறிப்பிட்ட அந்த ஈற்று வரிகள் பிரமாதம். குறையில்லா கவிதை. மனம் நிறைந்த பாராட்டுகள் ஆதி.

சிவா.ஜி யை வழஜமொழிகிறேன்...

அருமை ஆதி தொடருங்கள்

இளசு
24-08-2008, 11:34 AM
உயரியக் கவிதை!

இறுதிவரி வீச்சு அபாரம்!

வாழ்த்துகள் ஆதி!

சாலைஜெயராமன்
24-08-2008, 11:59 AM
இந்தியாவை இயக்க என்
இனிய ஆதியைப் போல்
எத்தனையோ இளைஞர்கள்
இன்னும் வேண்டும்
கண்டும் காணாமல் செல்லும்
கயமை உள்ளம் நீங்க வேண்டும்
கருத்திலே கருணை கொண்டு
காளையர்கள் காதலில் கண்ணைத்
தொலைக்காதிருக்க வேண்டும்
கற்பனைகளின் கற்பகத்தரு
ஆதியின் கனவு மெய்ப்பட
காலமும் கருணை புரிதல் வேண்டும்

வேண்டுதலிலும் பிறர் இன்பம் இறைஞ்சும் இனிய மனம் எல்லோருக்கும் வந்துவிடுமா ? பிரபஞ்சமே கவிஞர்களுக்குச் சொந்தம்தான் என்ற கூற்றுக்கு இலக்கணமாய் நிற்கும் ஆதியைப் போற்ற வார்த்தைகள் இல்லை.