சிவா.ஜி
20-08-2008, 07:31 PM
சாலா...தேக்கே நஹி ஜாத்தா நைக்கா...."
"கஷாலா மானூஸ் துமி....."
"எந்து ஒரு மனுஷனானு....ச்சே...."
"என்னா மனுஷன்யா இவனெல்லாம்? மாடுமாதிரி மேல இடிச்சிட்டு போறான்"
ஹிந்தி, மராட்டி, மலையாளம், தமிழ் என அத்தனை மொழிகளிலும் திட்டு வாங்கிக்கொண்டேதான் தள்ளாடி, தடுமாறி போய்க்கொண்டிருந்தார்கள் அந்த பியர் அருந்தும் உணவுவிடுதிலிருந்து வெளியேறிச் சென்ற மும்பைக் குடிமகன்கள்.
அந்த விடுதிக்குள்தான் நண்பனின் வற்புறுத்தலால் சேகரும் நுழைந்தான். இருவரும் உள்ளே நுழைந்ததும், அந்த மெல்லிய வெளிச்சத்துக்குப் பழக்கப்பட சிறிது நேரமெடுத்தது அவர்களுக்கு. மெல்ல அந்த இடம் அவுட் ஆஃப் போகஸிலிருந்து தெளிவாவதைப்போல, புலப்படத்தொடங்கியதும், மூலையிலிருந்த, இருவர் மட்டுமே நேருக்கு நேர் அமரக்கூடிய, அந்த மேசையில் சென்று அமர்ந்தார்கள்.
கோவையிலிருந்து ஆறு வருடத்துக்குப் பிறகு மும்பை வந்திருந்தான் சேகர். மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து பத்து வருடங்கள் பணிபுரிந்துவிட்டு, கோவைக்கே திரும்பச் சென்றுவிட்டான். இப்போது மீண்டும் மும்பை வந்தது, வெளிநாடு செல்லும் ஆசையில். செய்தித்தாள் பார்த்து விண்ணப்பித்திருந்த வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தார்கள். அந்தேரி பகுதியில் இருக்கும் அந்த அலுவலகத்துக்கு நாளைதான் போக வேண்டும். செம்பூர் அவனுக்குப் பழக்கமான இடமென்பதாலும், நிறைய தமிழர்கள் வாழும் இடமென்பதாலும் அங்கேயே ஒரு தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கினான்.
மாலையில் அறையிலிருந்து கீழிறங்கி கடைத்தெருவுக்குள் நுழைந்தவன் சதீஷைப் பார்த்தான். தன்னுடன் ஒரே நிறுவனத்தில் முன்பு ஒன்றாகப் பணிபுரிந்தவன். இவனுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளான பிறகும் சதீஷ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலிருந்தான். கேட்டால் அக்கா, தங்கை திருமணங்கள், அப்பாக் கடன் என்று எதையெதையோ சொன்னானேத்தவிர அதனால் அவனுக்கு எந்த வருத்தமும் இருப்பதாய்க் காட்டிக்கொள்ளவேயில்லை. அவனது வற்புறுத்தலுக்காகத்தான் இப்போது இந்த பியரகத்தில்.
நுரையால் கோப்பை வழிந்துவிடாமல், பக்குவமாக அந்த பணியாளன் ஊற்றிக்கொடுத்த சில்லென்றிருந்த பியர், மும்பையின் அந்த ஏப்ரல்மாத கசகசப்புக்கு இதமாகத்தானிருந்தது. இலவச இணைப்பாகக்கிடைத்த மசாலா அப்பளத்தை கடித்துக்கொண்டே கோப்பையைக் காலி செய்துகொண்டிருந்தார்கள். இரண்டு பாட்டில்களுக்குப் பிறகு, சதீஷ் புலம்பத்தொடங்கிவிட்டான். வழக்கமான செண்டிமெண்ட் புலம்பல்கள். இதுதான் லிமிட் என்று நிறுத்திக்கொள்ள முனைந்த சேகரை வற்புறுத்தி இன்னுமொரு பியரை வரவழைத்துவிட்டான்.
இருக்கையில் அமர்ந்திருந்த சதீஷ் லேசாகச் சரியத்தொடங்கியிருந்தான். அப்போது அவனைக் கடந்துபோன ஒருவன் இவன்மேல் மோதிக்கொள்ள, போதையிலிருந்த சதீஷ் அவனை நெட்டித்தள்ளிவிட்டான். தள்ளப்பட்டவன் தடுமாறி விழ இருந்து பக்கத்து மேசையில் முட்டி நின்றுகொண்டான். ஆத்திரத்துடன் திரும்பி சதீஷை ஓங்கி அறைந்துவிட்டான். சேகர் அதிர்ச்சியில் அமர்ந்துவிட்டான். இதற்குள் அவனோடு வந்திருந்த மற்ற இருவரும் சேர்ந்து சேகரையும் சேர்த்து தாக்கத் தொடங்கினார்கள். அப்போதுதான் மணி உள்ளே நுழைந்தான்.
"ஆயியே தாதா...பைட்டியே" என்று அந்த உணவகத்தின் உரிமையாளரான ஏதோ ஒரு ஷெட்டி அவனை மரியாதையுடன் அழைத்தார். அவரது அழைப்பைக் கண்டுகொள்ளாமல் தாக்கிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து சத்தமாக அதட்டினான். அதற்குள் அந்த அறை முழு வெளிச்சத்துக்கு வந்துவிட, அதட்டிய மணி சேகரைப் பார்த்ததும்...
"டே சேகர்....எப்படா மும்பை வந்தே...சாலா....பாத்து எவ்ளோ நாளாச்சு"
ஓடி வந்து கட்டிக்கொண்டான். தாக்கிக்கொண்டிருந்தவர்கள், மெள்ள அங்கிருந்து நழுவினார்கள். மணி, உரிமையாளரைப் பார்த்து,
"ஷெட்டி சாப் இது என்னோட நன்பன். சில்லுன்னு ரெண்டு..(கூட சதீஷையும் பார்த்தவன்) மூணு பியர் கொண்டுவரச் சொல்லுங்க.." உத்தரவிட்டுவிட்டு, சேகரிடம் திரும்பி,
"என்னடா அப்படி பாக்குற? அடையாளம் தெரியலையா? நான் மணிடா....." என்றதும் சேகர்,
"டே....உன்னைத் தெரியாதாடா? திடீர்ன்னு பாத்த ஷாக்குல அப்படியே நின்னுட்டேன். அதான்"
"ஆமா....ஷாக்காத்தான் இருக்கும். அப்ப ஜெயிலுக்குப் போனவன் எப்ப வெளியில வந்தான்னு நினைச்சிருப்பே"
சேகரின் குடியிருப்பில் பக்கத்து ஃப்ளாட்டில் இருந்தது மணியின் குடும்பம். இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள், ஆதிரை...மணியின் அப்பா தமிழாசிரியர், அதனால் அழகான தமிழ்பெயரையே தன் பிள்ளைகளுக்கு வைத்திருந்தார். மணிமாறன், நெடுங்கிள்ளி, ஆதிரை. அம்மாவும் ஆசிரியைதான். கண்டிப்பான கணித ஆசிரியை. மணி சேகரோடு கராத்தே வகுப்பிலும் தோழன். இருவரும் மிக நெருக்கம்.
சேகரைவிட இரண்டு வயது இளையவன். அப்போதுதான் கல்லூரிப்படிப்பை முடித்திருந்தான். அமைதியானவன். இவனுக்கு நேரெதிர் நெடுங்கிள்ளி. அடாவடியாக நடந்துகொள்வான். உள்ளூர் மராட்டிய நன்பர்கள் அதிகம். இவனளவுக்கு தமிழை சுத்தமாகப் பேசமாட்டான். பெரும்பாலும் மராட்டிதான். ஒரு சமயம், கராத்தே வகுப்பில் சேகரும், மணியும் பழுப்புப் பட்டை வாங்கி ஒரு வாரம் ஆகியிருந்த நேரத்தில், ஆதிரையை ஏதோ ஒரு மராட்டிப்பையன் சீண்டிவிட்டான். அதற்கு மணியின் அண்ணன் அந்தப்பையனை வெளுத்துவிட்டான். அடுத்தநாள் அடி வாங்கிய பையன், அவனது நன்பர்கள் சிலருடன் வந்து, குடியிருப்புக் கட்டிடத்துக்கு கீழே விடியற்காலையில் நின்றுகொண்டு, பால் வாங்க கீழே இறங்கிய மணியின் அண்ணனைத் தாக்கினார்கள்.சத்தம் கேட்டு மணியும் கீழே இறங்கிப்போவதற்குள், நெடுங்கிள்ளி எக்குத்தப்பாக நெற்றிப்பொட்டில் அடி பட்டு இறந்துவிட்டான்.
மணிக்கு சடாரென்று வந்த ஆத்திரத்தில், அதில் ஒருவன் தலையைக் கல்லில் மோதியதில், அவனும் இறந்துவிட்டான். பிறகு போலீஸ், கோர்ட் எல்லாம் முடிந்து சிறைக்கு கொண்டுபோய்விட்டார்கள். மூத்தவன் இறந்துவிட, இளையவனும் சிறைக்குச் சென்றுவிட மிகவும் உடைந்துபோனார்கள் அவனது பெற்றோர்கள்.
சேகரும் அந்த வேலையை விட்டுவிட்டு கோவை வந்துவிட்டான். இதோ இப்போது ஆறு வருடங்களுக்குப் பிறகு மணியை சந்தித்திருக்கிறான்.
"எப்படா ஜெயில்லருந்து வந்த? அப்பா அம்மா, ஆதிரை எல்லாம் நல்லாருக்காங்களா? ஆதிரைக்கு கல்யாணம் ஆயிடிச்சா?"
சேகரின் கேள்விகளை காதில் வாங்கிக்கொண்டு, ஒரு ஆயாசப் பெருமூச்சை வெளிப்படுத்தினான் மணி.
"அப்பா நல்ல வக்கீலை ஏற்பாடு பண்ணியிருந்ததால,அவரும் தற்காப்புக்காக செஞ்ச கொலைன்னு வாதாடி ரெண்டு வருஷம் மட்டும் ஜெயில் தண்டனை கிடைக்கிற மாதிரி செஞ்சுட்டார்.ஒன்றரை வருஷத்திலேயே வெளியில வந்துட்டேன். அப்பா இதையே நினைச்சு நினைச்சு இறந்துட்டார். ஜெயிலுக்குப் போய்ட்டுவந்தவன், கொலைகாரன் இப்படி படிக்காமயே பட்டமெல்லாம் சேந்து போயிட்டதால, நம்ம ஏரியா அரசியல்வாதி என்னை அவன்கூட வெச்சுக்கிட்டு அவனுக்கு வேண்டியதையெல்லாம் சாதிச்சுக்கிட்டான். ஒரு கட்டத்துல அவன்கிட்டருந்து பிரிஞ்சி வந்து....இப்ப இவங்கள்ளாம் கூப்பிடறமாதிரி தாதாவாயிட்டேன். நல்லா படிச்சி, பெரிய பதவிக்கு வருவான்னு நினைச்சிக்கிட்டிருந்த என் வாழ்க்கை இப்படி போன துக்கத்துல, அம்மாவும், ஆதிரையும் ஊருக்கே போய்ட்டாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாலதான் ஆதிரைக்கு கல்யணமாச்சுன்னு கேள்விப்பட்டேன். எனக்கு சொல்லக்கூட இல்லை. அது சரி எப்ப வந்தே, எதுக்கு வந்த?"
மணியின் கதையைக்கேட்டு மனம் வருந்தினான் சேகர். எத்தனை நல்ல குடும்பம். தவறான சேர்க்கையால், அண்னன் உயிர்விட்டான், அண்னனுக்காக கொலை செய்து தம்பி ரத்த வாழ்க்கையை தத்தெடுத்துக்கொண்டான், அப்பா இறந்து குடும்பமே சிதறிவிட்டதே..ஏறியிருந்த லேசான போதைகூட இறங்கிவிட்டது. தான் வந்த வேலையை சொன்னான். மணி தன் அலைபேசி எண்ணை அவனிடம் கொடுத்து ஏதாவது உதவி தேவையாயிருந்தால் தன்னை தொடர்புகொள்ளுமாறு சொன்னான்.
அப்படி ஒரு சந்தர்ப்பம் சேகருக்கு ஏற்பட்டது. நேர்முகத்தேர்வில் தேர்வானதும் அவனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்து மருத்துவ சோதனை மேற்கொள்ளவேண்டுமென சொல்லி அனுப்பினார்கள் அந்த வேலைவாய்ப்பு நிறுவனத்தார். வெளியில் வந்தவனுக்கு ஒரு அழைப்பு அவனது கைப்பேசி எண்ணுக்கு வந்தது. ஏற்கனவே விண்ணப்பித்திருந்த இன்னொரு நிறுவனத்திலிருந்து. சென்று பார்த்தான். அப்போதே நேர்முகத்தேர்வை நடத்தி, வேலையை உறுதி செய்து கடிதமும் கொடுத்துவிட்டார்கள். உடனே பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்குமாறு சொன்னார்கள்.
இதற்கு முன்னால் அவன் தேர்வாகியிருந்த வேலையைவிட மிக அதிக சம்பளம் இந்த வேலைக்கு. நல்ல பேர்பெற்ற நிறுவனமும் கூட. இதைவிட்டுவிட சேகருக்கு மனமே இல்லை. உடனே அந்த பழைய நிறுவனத்துக்குப்போய் பாஸ்போர்ட்டை திருப்பிக்கேட்டான். மறுத்துவிட்டார்கள். வற்புறுத்திக்கேட்டதற்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு பாஸ்போர்ட்டை வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். இவனுக்கு ஆத்திரமாக வந்தது. அடாவடித்தனம் செய்கிறார்கள். அனாவசியமாய் எதற்கு இவர்களுக்கு இத்தனை பணம் கொடுக்கவேண்டும். அதே சமயம் அவனிடம் அத்தனைப் பணம் அந்த சமயம் இல்லை. உடனே மணியை அழைத்தான். விவரம் சொன்னான். சேகரை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, ஒரு மணி நேரத்தில் ஆட்களுடன் வந்து சேர்ந்தான்.
வேலைவாய்ப்பு நிறுவனத்தார் ஆடிப்போய்விட்டார்கள். அப்படி ஒரு மிரட்டல் மணியிடமிருந்து. அலுவலகத்தையே துவம்சம் செய்துவிடுவதாகச் சொன்னதும், மறுபேச்சு பேசாமல் சேகரின் பாஸ்போர்ட்டைக் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு திரும்ப வரும் வழியில் சயானில் ஒரு பிரபல பெண்கள் கல்லூரி அருகில் வண்டியை நிறுத்தி, எதிரிலிருந்த பெட்டிக்கடைக்குப் போனான் மணி. கடைக்காரரிடம் ஏதோ பேசியதும், அவர் அவனை கடைக்கு வலப்பக்கம் வரச் சொன்னதை காரிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான் சேகர்.
வலப்பக்கமிருந்த அந்த திறப்புக்கு அருகில் மணி சென்றதும் கடைக்காரர் ஒரு தீப்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு மணியை நாக்கை நீட்டச் சொன்னார். மணியின் நாக்கு வெளியே நீண்டதும், அதனருகே அந்த தீப்பெட்டியைக் கொண்டுபோய் லேசாகத் திறந்தார். சற்று நேரத்திலேயே மணியின் உடலில் சிறு உதறலைக் கவனிக்க முடிந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்ப வந்து காரில் அமர்ந்து ஓட்டத்தொடங்கியதும், என்னதான் நடந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில்,
"மணி என்னடா நடக்குது? நாக்கை எதுக்கு நீட்டினே?" என்றதும், சேகரைப் பார்த்து கோணல் வாயுடன் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, லேசான குழறலுடன்
"அதுக்குப் பேர் ஸ்நேக் பைட். 500 ரூபாய் ஒரு கடிக்கு. அந்த தீப்பெட்டிக்குள்ள ஒரு சின்ன பாம்பு இருக்கும். அது நாக்குல கடிச்சா 24 மணி நேரத்துக்கு போதை குறையாம இருக்கும். அந்தக் கடை ஒரு ஸ்பெஷல் கடை. பாத்திருப்பியே எத்தனை பொண்ணுங்க, பையனுங்க அங்க நின்னுக்கிட்டிருந்தானுங்கன்னு. எல்லாம் போதைக்கு வந்தவங்கதான். நீ அந்தக் கடைக்காரன்கிட்ட ஒரு ரூபா நோட்டைக் குடுத்து சாக்லேட் கேட்டா ஒரு ரூபா சாக்லேட் குடுப்பான். அதே ஒரு ரூபா காயினைக் கொடுத்துக் கேட்டா உன் முகத்தைப் பார்ப்பான். நீ சைகையால் சம்மதம்ன்னு சொன்னா...வேற ஒரு சாக்லேட் குடுப்பான். அது போதைமருந்து கலந்த சாக்லேட். அங்க ஒரு சின்னப் பையன் இருந்தானே...அவன் அப்புறமா அந்த சாக்லேட் வாங்கினவனுக்குப் பின்னாலேயே வந்து 50 ரூபா வாங்கிட்டுப் போயிடுவான். எல்லாம் போலீஸ்கிட்டருந்து தப்பிக்கத்தான்"
"அடப்பாவி, ஏண்டா உனக்கு இந்தப் பழக்கமெல்லாம்? ஒடம்பு என்னத்துக்காகறது.." உண்மையான அக்கறையுடன் கேட்ட சேகரைப் பார்த்து, கண்களில் கண்ணீர் மல்க,
"இப்படி அக்கறையா கேக்க எனக்கு யார் இருக்காங்கடா? ....என் வாழ்க்கை இப்படின்னு ஆயிடிச்சு. கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலத்தான் சாவுன்னு எனக்கும் தெரியும். வெளியிலத்தான் ரொம்ப தைரியமா இருக்கிற மாதிரி காமிச்சுக்கறேன். ஆனா உள்ளுக்குள்ள எப்பவுமே மரணபயம் இருந்துகிட்டே இருக்கு. அந்த பயம் தெரியாம இருக்கத்தான் இந்த சனியனை யூஸ் பன்றேன். சரி விட்றா என்னைக்கு ஊருக்கு கிளம்பற? போகும்போது எங்கம்மா அட்ரஸ் தரேன் தயவுசெஞ்சி எனக்காக ஒரு வாட்டி எங்க ஊருக்குப் போய் அவங்களைப் பாத்து ஆறுதல் சொல்லுடா.நான் இங்க நல்லாத்தான் இருக்கேன்னு சொன்னா கொஞ்சமாவது சந்தோஷப்படுவாங்க"
வந்த வேலை முடிந்து விட்டதால், சேகர் அடுத்த நாளே கிளம்பிவிட்டான்.பெட்டியையெல்லாம் எடுத்துக்கொண்டு, வாடகையை செட்டில் செய்துவிட்டு கடைவீதிக்கு வந்து ஆட்டோ பிடிப்பதற்காக நின்றான். பக்கத்தில் ஒரு கூட்டம். யாரோ கீழே விழுந்து கிடப்பது தெரிந்தது. அவனுக்குள் எழுந்த ஆர்வத்தில் கூட்டத்துக்குள் நுழைந்துப் பார்த்தான்.
ரத்தசகதியில் செத்துக்கிடந்தது மணி. இவனையும் யாரோ இவனது எதிரிகள் விடியற்காலையிலேயே கொன்றுபோட்டிருக்கிறார்கள். நேற்றுதான் சொன்னான்...சொன்னதைப்போலவே அவன் எடுத்த கத்தி அவனையே சாய்த்துவிட்டது. மனதில் ஒரு பெரும் சுமையை உணர்ந்தான். மணியோட அம்மாவைப் பார்த்தால் என்ன சொல்வது. நிச்சயம் இவன் இறந்துவிட்டதை சொல்லப்போவதில்லை என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
"கஷாலா மானூஸ் துமி....."
"எந்து ஒரு மனுஷனானு....ச்சே...."
"என்னா மனுஷன்யா இவனெல்லாம்? மாடுமாதிரி மேல இடிச்சிட்டு போறான்"
ஹிந்தி, மராட்டி, மலையாளம், தமிழ் என அத்தனை மொழிகளிலும் திட்டு வாங்கிக்கொண்டேதான் தள்ளாடி, தடுமாறி போய்க்கொண்டிருந்தார்கள் அந்த பியர் அருந்தும் உணவுவிடுதிலிருந்து வெளியேறிச் சென்ற மும்பைக் குடிமகன்கள்.
அந்த விடுதிக்குள்தான் நண்பனின் வற்புறுத்தலால் சேகரும் நுழைந்தான். இருவரும் உள்ளே நுழைந்ததும், அந்த மெல்லிய வெளிச்சத்துக்குப் பழக்கப்பட சிறிது நேரமெடுத்தது அவர்களுக்கு. மெல்ல அந்த இடம் அவுட் ஆஃப் போகஸிலிருந்து தெளிவாவதைப்போல, புலப்படத்தொடங்கியதும், மூலையிலிருந்த, இருவர் மட்டுமே நேருக்கு நேர் அமரக்கூடிய, அந்த மேசையில் சென்று அமர்ந்தார்கள்.
கோவையிலிருந்து ஆறு வருடத்துக்குப் பிறகு மும்பை வந்திருந்தான் சேகர். மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து பத்து வருடங்கள் பணிபுரிந்துவிட்டு, கோவைக்கே திரும்பச் சென்றுவிட்டான். இப்போது மீண்டும் மும்பை வந்தது, வெளிநாடு செல்லும் ஆசையில். செய்தித்தாள் பார்த்து விண்ணப்பித்திருந்த வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தார்கள். அந்தேரி பகுதியில் இருக்கும் அந்த அலுவலகத்துக்கு நாளைதான் போக வேண்டும். செம்பூர் அவனுக்குப் பழக்கமான இடமென்பதாலும், நிறைய தமிழர்கள் வாழும் இடமென்பதாலும் அங்கேயே ஒரு தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கினான்.
மாலையில் அறையிலிருந்து கீழிறங்கி கடைத்தெருவுக்குள் நுழைந்தவன் சதீஷைப் பார்த்தான். தன்னுடன் ஒரே நிறுவனத்தில் முன்பு ஒன்றாகப் பணிபுரிந்தவன். இவனுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளான பிறகும் சதீஷ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலிருந்தான். கேட்டால் அக்கா, தங்கை திருமணங்கள், அப்பாக் கடன் என்று எதையெதையோ சொன்னானேத்தவிர அதனால் அவனுக்கு எந்த வருத்தமும் இருப்பதாய்க் காட்டிக்கொள்ளவேயில்லை. அவனது வற்புறுத்தலுக்காகத்தான் இப்போது இந்த பியரகத்தில்.
நுரையால் கோப்பை வழிந்துவிடாமல், பக்குவமாக அந்த பணியாளன் ஊற்றிக்கொடுத்த சில்லென்றிருந்த பியர், மும்பையின் அந்த ஏப்ரல்மாத கசகசப்புக்கு இதமாகத்தானிருந்தது. இலவச இணைப்பாகக்கிடைத்த மசாலா அப்பளத்தை கடித்துக்கொண்டே கோப்பையைக் காலி செய்துகொண்டிருந்தார்கள். இரண்டு பாட்டில்களுக்குப் பிறகு, சதீஷ் புலம்பத்தொடங்கிவிட்டான். வழக்கமான செண்டிமெண்ட் புலம்பல்கள். இதுதான் லிமிட் என்று நிறுத்திக்கொள்ள முனைந்த சேகரை வற்புறுத்தி இன்னுமொரு பியரை வரவழைத்துவிட்டான்.
இருக்கையில் அமர்ந்திருந்த சதீஷ் லேசாகச் சரியத்தொடங்கியிருந்தான். அப்போது அவனைக் கடந்துபோன ஒருவன் இவன்மேல் மோதிக்கொள்ள, போதையிலிருந்த சதீஷ் அவனை நெட்டித்தள்ளிவிட்டான். தள்ளப்பட்டவன் தடுமாறி விழ இருந்து பக்கத்து மேசையில் முட்டி நின்றுகொண்டான். ஆத்திரத்துடன் திரும்பி சதீஷை ஓங்கி அறைந்துவிட்டான். சேகர் அதிர்ச்சியில் அமர்ந்துவிட்டான். இதற்குள் அவனோடு வந்திருந்த மற்ற இருவரும் சேர்ந்து சேகரையும் சேர்த்து தாக்கத் தொடங்கினார்கள். அப்போதுதான் மணி உள்ளே நுழைந்தான்.
"ஆயியே தாதா...பைட்டியே" என்று அந்த உணவகத்தின் உரிமையாளரான ஏதோ ஒரு ஷெட்டி அவனை மரியாதையுடன் அழைத்தார். அவரது அழைப்பைக் கண்டுகொள்ளாமல் தாக்கிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து சத்தமாக அதட்டினான். அதற்குள் அந்த அறை முழு வெளிச்சத்துக்கு வந்துவிட, அதட்டிய மணி சேகரைப் பார்த்ததும்...
"டே சேகர்....எப்படா மும்பை வந்தே...சாலா....பாத்து எவ்ளோ நாளாச்சு"
ஓடி வந்து கட்டிக்கொண்டான். தாக்கிக்கொண்டிருந்தவர்கள், மெள்ள அங்கிருந்து நழுவினார்கள். மணி, உரிமையாளரைப் பார்த்து,
"ஷெட்டி சாப் இது என்னோட நன்பன். சில்லுன்னு ரெண்டு..(கூட சதீஷையும் பார்த்தவன்) மூணு பியர் கொண்டுவரச் சொல்லுங்க.." உத்தரவிட்டுவிட்டு, சேகரிடம் திரும்பி,
"என்னடா அப்படி பாக்குற? அடையாளம் தெரியலையா? நான் மணிடா....." என்றதும் சேகர்,
"டே....உன்னைத் தெரியாதாடா? திடீர்ன்னு பாத்த ஷாக்குல அப்படியே நின்னுட்டேன். அதான்"
"ஆமா....ஷாக்காத்தான் இருக்கும். அப்ப ஜெயிலுக்குப் போனவன் எப்ப வெளியில வந்தான்னு நினைச்சிருப்பே"
சேகரின் குடியிருப்பில் பக்கத்து ஃப்ளாட்டில் இருந்தது மணியின் குடும்பம். இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள், ஆதிரை...மணியின் அப்பா தமிழாசிரியர், அதனால் அழகான தமிழ்பெயரையே தன் பிள்ளைகளுக்கு வைத்திருந்தார். மணிமாறன், நெடுங்கிள்ளி, ஆதிரை. அம்மாவும் ஆசிரியைதான். கண்டிப்பான கணித ஆசிரியை. மணி சேகரோடு கராத்தே வகுப்பிலும் தோழன். இருவரும் மிக நெருக்கம்.
சேகரைவிட இரண்டு வயது இளையவன். அப்போதுதான் கல்லூரிப்படிப்பை முடித்திருந்தான். அமைதியானவன். இவனுக்கு நேரெதிர் நெடுங்கிள்ளி. அடாவடியாக நடந்துகொள்வான். உள்ளூர் மராட்டிய நன்பர்கள் அதிகம். இவனளவுக்கு தமிழை சுத்தமாகப் பேசமாட்டான். பெரும்பாலும் மராட்டிதான். ஒரு சமயம், கராத்தே வகுப்பில் சேகரும், மணியும் பழுப்புப் பட்டை வாங்கி ஒரு வாரம் ஆகியிருந்த நேரத்தில், ஆதிரையை ஏதோ ஒரு மராட்டிப்பையன் சீண்டிவிட்டான். அதற்கு மணியின் அண்ணன் அந்தப்பையனை வெளுத்துவிட்டான். அடுத்தநாள் அடி வாங்கிய பையன், அவனது நன்பர்கள் சிலருடன் வந்து, குடியிருப்புக் கட்டிடத்துக்கு கீழே விடியற்காலையில் நின்றுகொண்டு, பால் வாங்க கீழே இறங்கிய மணியின் அண்ணனைத் தாக்கினார்கள்.சத்தம் கேட்டு மணியும் கீழே இறங்கிப்போவதற்குள், நெடுங்கிள்ளி எக்குத்தப்பாக நெற்றிப்பொட்டில் அடி பட்டு இறந்துவிட்டான்.
மணிக்கு சடாரென்று வந்த ஆத்திரத்தில், அதில் ஒருவன் தலையைக் கல்லில் மோதியதில், அவனும் இறந்துவிட்டான். பிறகு போலீஸ், கோர்ட் எல்லாம் முடிந்து சிறைக்கு கொண்டுபோய்விட்டார்கள். மூத்தவன் இறந்துவிட, இளையவனும் சிறைக்குச் சென்றுவிட மிகவும் உடைந்துபோனார்கள் அவனது பெற்றோர்கள்.
சேகரும் அந்த வேலையை விட்டுவிட்டு கோவை வந்துவிட்டான். இதோ இப்போது ஆறு வருடங்களுக்குப் பிறகு மணியை சந்தித்திருக்கிறான்.
"எப்படா ஜெயில்லருந்து வந்த? அப்பா அம்மா, ஆதிரை எல்லாம் நல்லாருக்காங்களா? ஆதிரைக்கு கல்யாணம் ஆயிடிச்சா?"
சேகரின் கேள்விகளை காதில் வாங்கிக்கொண்டு, ஒரு ஆயாசப் பெருமூச்சை வெளிப்படுத்தினான் மணி.
"அப்பா நல்ல வக்கீலை ஏற்பாடு பண்ணியிருந்ததால,அவரும் தற்காப்புக்காக செஞ்ச கொலைன்னு வாதாடி ரெண்டு வருஷம் மட்டும் ஜெயில் தண்டனை கிடைக்கிற மாதிரி செஞ்சுட்டார்.ஒன்றரை வருஷத்திலேயே வெளியில வந்துட்டேன். அப்பா இதையே நினைச்சு நினைச்சு இறந்துட்டார். ஜெயிலுக்குப் போய்ட்டுவந்தவன், கொலைகாரன் இப்படி படிக்காமயே பட்டமெல்லாம் சேந்து போயிட்டதால, நம்ம ஏரியா அரசியல்வாதி என்னை அவன்கூட வெச்சுக்கிட்டு அவனுக்கு வேண்டியதையெல்லாம் சாதிச்சுக்கிட்டான். ஒரு கட்டத்துல அவன்கிட்டருந்து பிரிஞ்சி வந்து....இப்ப இவங்கள்ளாம் கூப்பிடறமாதிரி தாதாவாயிட்டேன். நல்லா படிச்சி, பெரிய பதவிக்கு வருவான்னு நினைச்சிக்கிட்டிருந்த என் வாழ்க்கை இப்படி போன துக்கத்துல, அம்மாவும், ஆதிரையும் ஊருக்கே போய்ட்டாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாலதான் ஆதிரைக்கு கல்யணமாச்சுன்னு கேள்விப்பட்டேன். எனக்கு சொல்லக்கூட இல்லை. அது சரி எப்ப வந்தே, எதுக்கு வந்த?"
மணியின் கதையைக்கேட்டு மனம் வருந்தினான் சேகர். எத்தனை நல்ல குடும்பம். தவறான சேர்க்கையால், அண்னன் உயிர்விட்டான், அண்னனுக்காக கொலை செய்து தம்பி ரத்த வாழ்க்கையை தத்தெடுத்துக்கொண்டான், அப்பா இறந்து குடும்பமே சிதறிவிட்டதே..ஏறியிருந்த லேசான போதைகூட இறங்கிவிட்டது. தான் வந்த வேலையை சொன்னான். மணி தன் அலைபேசி எண்ணை அவனிடம் கொடுத்து ஏதாவது உதவி தேவையாயிருந்தால் தன்னை தொடர்புகொள்ளுமாறு சொன்னான்.
அப்படி ஒரு சந்தர்ப்பம் சேகருக்கு ஏற்பட்டது. நேர்முகத்தேர்வில் தேர்வானதும் அவனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்து மருத்துவ சோதனை மேற்கொள்ளவேண்டுமென சொல்லி அனுப்பினார்கள் அந்த வேலைவாய்ப்பு நிறுவனத்தார். வெளியில் வந்தவனுக்கு ஒரு அழைப்பு அவனது கைப்பேசி எண்ணுக்கு வந்தது. ஏற்கனவே விண்ணப்பித்திருந்த இன்னொரு நிறுவனத்திலிருந்து. சென்று பார்த்தான். அப்போதே நேர்முகத்தேர்வை நடத்தி, வேலையை உறுதி செய்து கடிதமும் கொடுத்துவிட்டார்கள். உடனே பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்குமாறு சொன்னார்கள்.
இதற்கு முன்னால் அவன் தேர்வாகியிருந்த வேலையைவிட மிக அதிக சம்பளம் இந்த வேலைக்கு. நல்ல பேர்பெற்ற நிறுவனமும் கூட. இதைவிட்டுவிட சேகருக்கு மனமே இல்லை. உடனே அந்த பழைய நிறுவனத்துக்குப்போய் பாஸ்போர்ட்டை திருப்பிக்கேட்டான். மறுத்துவிட்டார்கள். வற்புறுத்திக்கேட்டதற்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு பாஸ்போர்ட்டை வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். இவனுக்கு ஆத்திரமாக வந்தது. அடாவடித்தனம் செய்கிறார்கள். அனாவசியமாய் எதற்கு இவர்களுக்கு இத்தனை பணம் கொடுக்கவேண்டும். அதே சமயம் அவனிடம் அத்தனைப் பணம் அந்த சமயம் இல்லை. உடனே மணியை அழைத்தான். விவரம் சொன்னான். சேகரை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, ஒரு மணி நேரத்தில் ஆட்களுடன் வந்து சேர்ந்தான்.
வேலைவாய்ப்பு நிறுவனத்தார் ஆடிப்போய்விட்டார்கள். அப்படி ஒரு மிரட்டல் மணியிடமிருந்து. அலுவலகத்தையே துவம்சம் செய்துவிடுவதாகச் சொன்னதும், மறுபேச்சு பேசாமல் சேகரின் பாஸ்போர்ட்டைக் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு திரும்ப வரும் வழியில் சயானில் ஒரு பிரபல பெண்கள் கல்லூரி அருகில் வண்டியை நிறுத்தி, எதிரிலிருந்த பெட்டிக்கடைக்குப் போனான் மணி. கடைக்காரரிடம் ஏதோ பேசியதும், அவர் அவனை கடைக்கு வலப்பக்கம் வரச் சொன்னதை காரிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான் சேகர்.
வலப்பக்கமிருந்த அந்த திறப்புக்கு அருகில் மணி சென்றதும் கடைக்காரர் ஒரு தீப்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு மணியை நாக்கை நீட்டச் சொன்னார். மணியின் நாக்கு வெளியே நீண்டதும், அதனருகே அந்த தீப்பெட்டியைக் கொண்டுபோய் லேசாகத் திறந்தார். சற்று நேரத்திலேயே மணியின் உடலில் சிறு உதறலைக் கவனிக்க முடிந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்ப வந்து காரில் அமர்ந்து ஓட்டத்தொடங்கியதும், என்னதான் நடந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில்,
"மணி என்னடா நடக்குது? நாக்கை எதுக்கு நீட்டினே?" என்றதும், சேகரைப் பார்த்து கோணல் வாயுடன் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, லேசான குழறலுடன்
"அதுக்குப் பேர் ஸ்நேக் பைட். 500 ரூபாய் ஒரு கடிக்கு. அந்த தீப்பெட்டிக்குள்ள ஒரு சின்ன பாம்பு இருக்கும். அது நாக்குல கடிச்சா 24 மணி நேரத்துக்கு போதை குறையாம இருக்கும். அந்தக் கடை ஒரு ஸ்பெஷல் கடை. பாத்திருப்பியே எத்தனை பொண்ணுங்க, பையனுங்க அங்க நின்னுக்கிட்டிருந்தானுங்கன்னு. எல்லாம் போதைக்கு வந்தவங்கதான். நீ அந்தக் கடைக்காரன்கிட்ட ஒரு ரூபா நோட்டைக் குடுத்து சாக்லேட் கேட்டா ஒரு ரூபா சாக்லேட் குடுப்பான். அதே ஒரு ரூபா காயினைக் கொடுத்துக் கேட்டா உன் முகத்தைப் பார்ப்பான். நீ சைகையால் சம்மதம்ன்னு சொன்னா...வேற ஒரு சாக்லேட் குடுப்பான். அது போதைமருந்து கலந்த சாக்லேட். அங்க ஒரு சின்னப் பையன் இருந்தானே...அவன் அப்புறமா அந்த சாக்லேட் வாங்கினவனுக்குப் பின்னாலேயே வந்து 50 ரூபா வாங்கிட்டுப் போயிடுவான். எல்லாம் போலீஸ்கிட்டருந்து தப்பிக்கத்தான்"
"அடப்பாவி, ஏண்டா உனக்கு இந்தப் பழக்கமெல்லாம்? ஒடம்பு என்னத்துக்காகறது.." உண்மையான அக்கறையுடன் கேட்ட சேகரைப் பார்த்து, கண்களில் கண்ணீர் மல்க,
"இப்படி அக்கறையா கேக்க எனக்கு யார் இருக்காங்கடா? ....என் வாழ்க்கை இப்படின்னு ஆயிடிச்சு. கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலத்தான் சாவுன்னு எனக்கும் தெரியும். வெளியிலத்தான் ரொம்ப தைரியமா இருக்கிற மாதிரி காமிச்சுக்கறேன். ஆனா உள்ளுக்குள்ள எப்பவுமே மரணபயம் இருந்துகிட்டே இருக்கு. அந்த பயம் தெரியாம இருக்கத்தான் இந்த சனியனை யூஸ் பன்றேன். சரி விட்றா என்னைக்கு ஊருக்கு கிளம்பற? போகும்போது எங்கம்மா அட்ரஸ் தரேன் தயவுசெஞ்சி எனக்காக ஒரு வாட்டி எங்க ஊருக்குப் போய் அவங்களைப் பாத்து ஆறுதல் சொல்லுடா.நான் இங்க நல்லாத்தான் இருக்கேன்னு சொன்னா கொஞ்சமாவது சந்தோஷப்படுவாங்க"
வந்த வேலை முடிந்து விட்டதால், சேகர் அடுத்த நாளே கிளம்பிவிட்டான்.பெட்டியையெல்லாம் எடுத்துக்கொண்டு, வாடகையை செட்டில் செய்துவிட்டு கடைவீதிக்கு வந்து ஆட்டோ பிடிப்பதற்காக நின்றான். பக்கத்தில் ஒரு கூட்டம். யாரோ கீழே விழுந்து கிடப்பது தெரிந்தது. அவனுக்குள் எழுந்த ஆர்வத்தில் கூட்டத்துக்குள் நுழைந்துப் பார்த்தான்.
ரத்தசகதியில் செத்துக்கிடந்தது மணி. இவனையும் யாரோ இவனது எதிரிகள் விடியற்காலையிலேயே கொன்றுபோட்டிருக்கிறார்கள். நேற்றுதான் சொன்னான்...சொன்னதைப்போலவே அவன் எடுத்த கத்தி அவனையே சாய்த்துவிட்டது. மனதில் ஒரு பெரும் சுமையை உணர்ந்தான். மணியோட அம்மாவைப் பார்த்தால் என்ன சொல்வது. நிச்சயம் இவன் இறந்துவிட்டதை சொல்லப்போவதில்லை என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.