swasthikadoss
19-08-2008, 06:05 AM
. கனவுகள் தகர்த்தெறிந்து
இருளை சுமந்துகொண்டு
விரைந்து வந்த பட்சி
என்னைக் கெளவிப்பறந்தது...
விதிர்விதிர்த்து
கண்கள் இறுக மூடி
ஏதேதோ
முணுமுணுத்தன என்னுதடுகள்..
முட்கள் நிறைந்த புதரொன்றில்
எனை வீச்சென்றது
அப்பறவை..
வீழ்ந்து கிடத்தலைவிட
பறந்து சாதலே பெரிதென
உணர்த்தின
சவப்பெட்டிக்கு காத்திருக்கும்
துருப்பிடித்த ஆணிகள்.
இருளை சுமந்துகொண்டு
விரைந்து வந்த பட்சி
என்னைக் கெளவிப்பறந்தது...
விதிர்விதிர்த்து
கண்கள் இறுக மூடி
ஏதேதோ
முணுமுணுத்தன என்னுதடுகள்..
முட்கள் நிறைந்த புதரொன்றில்
எனை வீச்சென்றது
அப்பறவை..
வீழ்ந்து கிடத்தலைவிட
பறந்து சாதலே பெரிதென
உணர்த்தின
சவப்பெட்டிக்கு காத்திருக்கும்
துருப்பிடித்த ஆணிகள்.