PDA

View Full Version : பிடித்த கவிதை



swasthikadoss
19-08-2008, 06:05 AM
. கனவுகள் தகர்த்தெறிந்து
இருளை சுமந்துகொண்டு
விரைந்து வந்த பட்சி
என்னைக் கெளவிப்பறந்தது...

விதிர்விதிர்த்து
கண்கள் இறுக மூடி
ஏதேதோ
முணுமுணுத்தன என்னுதடுகள்..

முட்கள் நிறைந்த புதரொன்றில்
எனை வீச்சென்றது
அப்பறவை..

வீழ்ந்து கிடத்தலைவிட
பறந்து சாதலே பெரிதென
உணர்த்தின
சவப்பெட்டிக்கு காத்திருக்கும்
துருப்பிடித்த ஆணிகள்.

அன்புரசிகன்
19-08-2008, 09:29 AM
நண்பரே...

திரியின் தலையங்கத்தினை தமிழுக்கு மாற்றலாமே... அதுதானே தமிழ்மன்றத்திற்கு அழகு...

ஓவியா
19-08-2008, 09:41 AM
நண்பரே இந்த கவிதை (இரவுக் கவிதைகள் மூன்று) நிலாரசிகன் அவர்கள் எழுதியது என்று நினைக்கின்றேன்.

தாங்கள் தான் அவரோ!!

சிவா.ஜி
19-08-2008, 11:45 AM
http://www.nilaraseeganonline.com/2008/08/blog-post_18.html

இந்த சுட்டியில் மேற்கண்ட கவிதை இருக்கிறது. அதே நிலாரசிகர் நீங்கள்தானென்றால் இங்கு பதிவதில் தவறில்லை. இல்லையாயின் படித்ததில் பிடித்தது பகுதிக்கு இந்தக் கவிதை மாற்றப்படும். நன்றி ஸ்வஸ்திகா தாஸ்.