poo
04-04-2003, 05:08 PM
கணிணிப் பித்தனே...
இயந்திர வாழ்க்கைவிட்டு வெளியே வா..
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்..
முறையாய் ஒட்டப்பட்ட
உன் ஒற்றைவரி மடல் வராதாவென
வழியில் விழி கொண்டு
தபால்காரருக்கு ஏங்கிய சுகம்
இண்டர்நெட்டின் இ-மெயிலில் இல்லை...
கம்ப்யூட்டர்தானே நவீனமாய்..
காதலுமா??!!..
புறாக்கள் விடும் தூதை இரசித்தேன்..
யாகூவின் யாசித்தலை ஏற்க முடியவில்லை..
இயற்கை வயல்வெளியில்
மாராப்பு மடிப்பில் மறைத்து
மறுபடியும் மறுபடியும் படித்து
இனித்த சுகம்...
இயந்திர இ-மெயிலில் இல்லை..
கம்ப்யூட்டர் காலத்தைதானே வென்றது..
காதலையுமா?!!!
தென்னை ஓலையில்
பொக்கே செய்து..
செட்டி தோட்டத்து ரோஜாப்பூவை
ஒட்டி வைத்து தந்ததை
ஆற்று சத்தத்தில்
பார்த்து ரசித்த சுகம்....
இ-கார்டு என இம்சையாய்
சத்தமெழுப்புகையில் இல்லை...
என் இதயக் காதலனே..
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்..
இயந்திர வாழ்க்கைவிட்டு வெளியே வா...
இயந்திர வாழ்க்கைவிட்டு வெளியே வா..
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்..
முறையாய் ஒட்டப்பட்ட
உன் ஒற்றைவரி மடல் வராதாவென
வழியில் விழி கொண்டு
தபால்காரருக்கு ஏங்கிய சுகம்
இண்டர்நெட்டின் இ-மெயிலில் இல்லை...
கம்ப்யூட்டர்தானே நவீனமாய்..
காதலுமா??!!..
புறாக்கள் விடும் தூதை இரசித்தேன்..
யாகூவின் யாசித்தலை ஏற்க முடியவில்லை..
இயற்கை வயல்வெளியில்
மாராப்பு மடிப்பில் மறைத்து
மறுபடியும் மறுபடியும் படித்து
இனித்த சுகம்...
இயந்திர இ-மெயிலில் இல்லை..
கம்ப்யூட்டர் காலத்தைதானே வென்றது..
காதலையுமா?!!!
தென்னை ஓலையில்
பொக்கே செய்து..
செட்டி தோட்டத்து ரோஜாப்பூவை
ஒட்டி வைத்து தந்ததை
ஆற்று சத்தத்தில்
பார்த்து ரசித்த சுகம்....
இ-கார்டு என இம்சையாய்
சத்தமெழுப்புகையில் இல்லை...
என் இதயக் காதலனே..
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்..
இயந்திர வாழ்க்கைவிட்டு வெளியே வா...