தீபா
04-08-2008, 02:41 PM
பின்னிரவில் அழுத பெருமழை விடியலை பிறந்ததும் கண்ணீர் அறற்றுவதை நிறுத்திக் கொண்டது. வெளியே எழுந்த மண் வாசனையை சுவைத்தபடி வாசலில் அப்பியிருந்த சேற்றை விளக்குமாறால் துடைத்துக் கொண்டிருந்தாள் மீனாட்சியம்மாள். ஓட்டு வீடு என்றாலும் அங்கங்கே ஒழுகிக் கொண்டு இருக்கும். இரவில் மழை பெய்தால் தூங்கமுடியாத அளவுக்கு வீட்டினுள் மழைநீர் தேங்கி நிற்கும்; அவள் மனதில் தேங்கி நிற்கும் பாசத்தைப் போல.
மீனாட்சியம்மாளுக்கு அறுபத்தி நான்கு வயதாகிறது. மெலிந்த தேகம். தொங்கிக் கொண்டிருக்கும் சதைகள். மழுங்கிய பார்வை. அக்கிழவியை வேறெப்படியும் வர்ணிக்க எழுத்து வாராது. கணவனின் இறப்புக்குப் பிற்பாடு தனியாகவே வாழும் இவளுக்கு நான்கு ஆண் பிள்ளைகள். ஒவ்வொருவரையும் படிக்க வைத்து ஆளாக்கி மீனாட்சியம்மாள் பட்ட பாடு வேறு யாருக்கும் வந்திருக்காது. மீனாட்சியின் கணவர் மொடா குடிகாரன். இருந்த போதும் சரி, இறந்த பிறகும் சரி, குடும்பத்திற்கு ஒன்றும் அவ்வளவு நஷ்டம் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
முதல் மகன் ராமுகுமார் பிரபல வக்கீல். கணவன் மானத்தை அடமானம் வைக்க, மீனாட்சியம்மாளோ வீட்டை அடமானம் வைத்தாள். ராமு நன்றாக படித்து வரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு மேலோங்கியிருந்தது. இரண்டாம் மகன் பாலுவோ படிக்காமல் திரிந்தவன் என்றாலும் துணிக்கடை வைக்கும் அளவுக்கு உயர்த்தி விட்டாள் மீனாட்சி. மூன்றாவது மகன் சுந்தரமும் நான்காம் மகன் பாலனும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாக வெளிநாடு பறந்துவிட்டார்கள்.. ஆக மொத்தம் அனைவருமே நல்ல நிலைமையில்தான் இருக்கிறார்கள்.... மீனாட்சியம்மாளைத் தவிர,
ராமுவுக்குத் திருமணம் முடிந்ததுமே அவனோடு உண்டான பாசம் அறுந்துவிட்டது எனலாம். ராமு விருப்பப்பட்ட வாழ்வை அவனாகவே தேர்ந்தெடுக்க வழிகோலிய மீனாட்சியம்மாளுக்கு, தக்க முறையில் நன்றிக்கடனாக ராமு திருப்பிக் கொடுத்தான். என்றாவது ஒருநாள் வீட்டுக்கு வரும் தன் அம்மாவை, தன் மனைவியை விட்டே விரட்டி விடுவான். அவ்வளவு பாசம் அவனுக்கு.. மீனாட்சியம்மாள் எத்தனை முறை உதைபட்டாலும் மகனைப் பார்க்கவேண்டும் என்ற பாசத்தில் வந்துவிடுவாள்.
இரண்டாம் மகன் பாலு பெரும்பாலும் வீட்டுக்கு வருவதே இல்லை. அதனால் நேரே துணிக்கடைக்குத்தான் செல்லுவாள். ஆனால் அவளுக்கு வரவேற்பு வேறுவிதமாக இருக்கும். அனைவர் மத்தியிலும் ஏதோ ஒரு பிச்சைக்காரியைப் போலத் திட்டுவான்.. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போவாள்.. மற்ற இருவரைப் பற்றி அடிக்கடி கவலைப் பட்டுக் கொண்டே இருப்பாள். வெளிநாடு சென்றவர்கள் என்ன ஆனார்களோ என்று அனுதினமும் பதறிக் கொண்டிருப்பாள்.
தினமும் ஏதாவது ஒரு அலுவலகத்திற்குச் சென்று கூட்டிப் பெருக்கி வாரம் நூறு நூற்றைம்பது வாங்குவாள். தன் செலவு போக மீதம் வைத்து அதில் ஏதாவது துணிமணி வாங்கி பேரப்பிள்ளைகளுக்குக் கொண்டு சேர்ப்பது கிழவியின் வழக்கம்.
தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்னர்.
கையில் இருந்த நானூறு ரூபாய்க்கு ராமுவின் மகனுக்கும் பாலுவின் மகன் மற்றும் மகளுக்கும் இரண்டு பாவாடை கவுன்களும், ஒரு சட்டையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். கையில் சிறு தூக்கு குண்டாவில் ஆசையாக செய்த ரவா லட்டும் இருந்தது. ராமுவின் வீட்டில் பாலுவும் இருந்தது இரட்டை சந்தோசம் அவளுக்கு. நேரே உள்ளே சென்றவளிடம் வேண்டா வெறுப்பாக துணிமணிகளையும் லட்டு போசியையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள் மருமகள்கள். அந்த வேண்டா வெறுப்புத்தனம் நன்றாகவே தெரிந்துகொண்டாள் கிழவி. எல்லாரும் ஒருவித பரபரப்பில் இருந்தார்கள். தீபாவளிக்கு ஏதோ பெயர் நுழையமுடியாத ஊருக்குச் செல்லுவதாகத் தெரிந்துகொண்டாள்.. மகன், பேரன்களின் சந்தோசமே அவளுக்கு முக்கியமாகக் இருந்தது.
ராமு, நேராக அம்மாவிடம் வந்தான். ஊருக்குச் செல்லுகிறோம், நீ வீட்டுக்குப் போய்விடு என்று அழுத்தமாகக் கூறினான். மீனாட்சியம்மாவுக்கு சற்று ஏமாற்றம்தான். எப்படியோ சந்தோசமாக இருந்தால் சரி என்று வந்த சில மணித்துளிகளிலேயே கிளம்பிவிட்டாள்..
வாசலில் ராமுவின் மகன் விக்ரம் மோட்டார்வண்டியில் நுழைந்தான். கிழவியைக் கண்டதும் வண்டியை நிறுத்தினான். மீனாட்சியம்மாள் நேரே அவனிடம் சென்று, " ஒரு அம்பது ரூவா இருந்தா கொடுடா.. " என்றாள்.
ஐம்பது லட்சத்திற்கும் பெருமான சொத்துக்களை உருவாக்கித் தந்தவளுக்கு ஐநூறாகவே கொடுத்து வண்டியை முறுக்கினான் விக்ரம்.
கண்ணீர் துளிக்க தெருவில் நடக்கலானாள் மீனாட்சியம்மாள்.
அன்புடன்
தென்றல்
மீனாட்சியம்மாளுக்கு அறுபத்தி நான்கு வயதாகிறது. மெலிந்த தேகம். தொங்கிக் கொண்டிருக்கும் சதைகள். மழுங்கிய பார்வை. அக்கிழவியை வேறெப்படியும் வர்ணிக்க எழுத்து வாராது. கணவனின் இறப்புக்குப் பிற்பாடு தனியாகவே வாழும் இவளுக்கு நான்கு ஆண் பிள்ளைகள். ஒவ்வொருவரையும் படிக்க வைத்து ஆளாக்கி மீனாட்சியம்மாள் பட்ட பாடு வேறு யாருக்கும் வந்திருக்காது. மீனாட்சியின் கணவர் மொடா குடிகாரன். இருந்த போதும் சரி, இறந்த பிறகும் சரி, குடும்பத்திற்கு ஒன்றும் அவ்வளவு நஷ்டம் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
முதல் மகன் ராமுகுமார் பிரபல வக்கீல். கணவன் மானத்தை அடமானம் வைக்க, மீனாட்சியம்மாளோ வீட்டை அடமானம் வைத்தாள். ராமு நன்றாக படித்து வரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு மேலோங்கியிருந்தது. இரண்டாம் மகன் பாலுவோ படிக்காமல் திரிந்தவன் என்றாலும் துணிக்கடை வைக்கும் அளவுக்கு உயர்த்தி விட்டாள் மீனாட்சி. மூன்றாவது மகன் சுந்தரமும் நான்காம் மகன் பாலனும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாக வெளிநாடு பறந்துவிட்டார்கள்.. ஆக மொத்தம் அனைவருமே நல்ல நிலைமையில்தான் இருக்கிறார்கள்.... மீனாட்சியம்மாளைத் தவிர,
ராமுவுக்குத் திருமணம் முடிந்ததுமே அவனோடு உண்டான பாசம் அறுந்துவிட்டது எனலாம். ராமு விருப்பப்பட்ட வாழ்வை அவனாகவே தேர்ந்தெடுக்க வழிகோலிய மீனாட்சியம்மாளுக்கு, தக்க முறையில் நன்றிக்கடனாக ராமு திருப்பிக் கொடுத்தான். என்றாவது ஒருநாள் வீட்டுக்கு வரும் தன் அம்மாவை, தன் மனைவியை விட்டே விரட்டி விடுவான். அவ்வளவு பாசம் அவனுக்கு.. மீனாட்சியம்மாள் எத்தனை முறை உதைபட்டாலும் மகனைப் பார்க்கவேண்டும் என்ற பாசத்தில் வந்துவிடுவாள்.
இரண்டாம் மகன் பாலு பெரும்பாலும் வீட்டுக்கு வருவதே இல்லை. அதனால் நேரே துணிக்கடைக்குத்தான் செல்லுவாள். ஆனால் அவளுக்கு வரவேற்பு வேறுவிதமாக இருக்கும். அனைவர் மத்தியிலும் ஏதோ ஒரு பிச்சைக்காரியைப் போலத் திட்டுவான்.. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போவாள்.. மற்ற இருவரைப் பற்றி அடிக்கடி கவலைப் பட்டுக் கொண்டே இருப்பாள். வெளிநாடு சென்றவர்கள் என்ன ஆனார்களோ என்று அனுதினமும் பதறிக் கொண்டிருப்பாள்.
தினமும் ஏதாவது ஒரு அலுவலகத்திற்குச் சென்று கூட்டிப் பெருக்கி வாரம் நூறு நூற்றைம்பது வாங்குவாள். தன் செலவு போக மீதம் வைத்து அதில் ஏதாவது துணிமணி வாங்கி பேரப்பிள்ளைகளுக்குக் கொண்டு சேர்ப்பது கிழவியின் வழக்கம்.
தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்னர்.
கையில் இருந்த நானூறு ரூபாய்க்கு ராமுவின் மகனுக்கும் பாலுவின் மகன் மற்றும் மகளுக்கும் இரண்டு பாவாடை கவுன்களும், ஒரு சட்டையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். கையில் சிறு தூக்கு குண்டாவில் ஆசையாக செய்த ரவா லட்டும் இருந்தது. ராமுவின் வீட்டில் பாலுவும் இருந்தது இரட்டை சந்தோசம் அவளுக்கு. நேரே உள்ளே சென்றவளிடம் வேண்டா வெறுப்பாக துணிமணிகளையும் லட்டு போசியையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள் மருமகள்கள். அந்த வேண்டா வெறுப்புத்தனம் நன்றாகவே தெரிந்துகொண்டாள் கிழவி. எல்லாரும் ஒருவித பரபரப்பில் இருந்தார்கள். தீபாவளிக்கு ஏதோ பெயர் நுழையமுடியாத ஊருக்குச் செல்லுவதாகத் தெரிந்துகொண்டாள்.. மகன், பேரன்களின் சந்தோசமே அவளுக்கு முக்கியமாகக் இருந்தது.
ராமு, நேராக அம்மாவிடம் வந்தான். ஊருக்குச் செல்லுகிறோம், நீ வீட்டுக்குப் போய்விடு என்று அழுத்தமாகக் கூறினான். மீனாட்சியம்மாவுக்கு சற்று ஏமாற்றம்தான். எப்படியோ சந்தோசமாக இருந்தால் சரி என்று வந்த சில மணித்துளிகளிலேயே கிளம்பிவிட்டாள்..
வாசலில் ராமுவின் மகன் விக்ரம் மோட்டார்வண்டியில் நுழைந்தான். கிழவியைக் கண்டதும் வண்டியை நிறுத்தினான். மீனாட்சியம்மாள் நேரே அவனிடம் சென்று, " ஒரு அம்பது ரூவா இருந்தா கொடுடா.. " என்றாள்.
ஐம்பது லட்சத்திற்கும் பெருமான சொத்துக்களை உருவாக்கித் தந்தவளுக்கு ஐநூறாகவே கொடுத்து வண்டியை முறுக்கினான் விக்ரம்.
கண்ணீர் துளிக்க தெருவில் நடக்கலானாள் மீனாட்சியம்மாள்.
அன்புடன்
தென்றல்