PDA

View Full Version : ஈஸ்வரனின் துளிப்பா - 12



ஆர்.ஈஸ்வரன்
01-08-2008, 10:29 AM
வீட்டிற்குள்ளேயே
காணாமல் போனேன்
சொற்களின் கனம்

அமரன்
06-01-2009, 05:25 PM
அதிகமாகச் சிந்திக்கவைத்த கவிதை.

"பொருளை" இன்னும் சந்திக்கவில்லை.

நிரன்
06-01-2009, 07:02 PM
வீட்டிற்குள்ளேயே
காணாமல் போனேன்
சொற்களின் கனம்


வீட்டிற்குள்ளேயே
காணாமல் போனேன்
உற்றார் குணம்!

இப்படியும் வருமோ:confused:


என்ன ஈஸ்வரன் அவர்களே வீட்டில் அமைதியில்லையோ!!!!

என் கோணத்தில் எனக்கு விளங்கியது அவ்வளவுதான்... அதனை
மனதில் நிறுத்தி எனக்கெட்டியளவு ஒரு சிறு கருத்து..


சொற்களோ கனக்கின்றன
என் சொந்தமோ என்னிடம் கனைக்கின்றன
அதனால் காணாமற்போகிறேன்
என் வீட்டினுள்ளே!!!

என்னறிவுக்கு இவ்வளவுதான் எட்டியது.... உங்கள் கவிதையைப்
படித்த பொழுது குடும்பத்தில் அமைதியின்மை எனும் கருத்தான்
என்னில் எழுந்தது...


ஆழமான கருத்தை அடியில் புதைத்திருக்கும் கவிக்கு என் பாரட்டுக்கள்:icon_b:

ஆர்.ஈஸ்வரன்
14-01-2009, 10:13 AM
நிரஞ்சன் அவர்களுக்கு என் நன்றி

ஓவியன்
19-02-2009, 12:28 PM
அமரனைப் போலவே குளம்பி,
நிரனின் விளக்கத்தினால் தெளிவுற்றேன்...

பாராட்டுக்கள் ஈஸ்வரன்..!!