View Full Version : பூக்களின் சிரிப்பு
நம்பிகோபாலன்
01-08-2008, 09:46 AM
கடவுளே
தினந்தோறும்
ஒவ்வொரு நிமிடமும்
மலரும் பூக்களை
நீ
படைத்திருக்கிறாயா
கேட்டேன்
நீயோ
என்னவளை
பார்த்து விட்டு
என்னவளின் சிரிப்பை
என்னிடம் காட்டி
என்ன சந்தேகம்
என்று கேட்கிறாய்….
ஆர்.ஈஸ்வரன்
01-08-2008, 10:48 AM
கவிதைக்கும் காதலுக்கும் வாழ்த்துக்கள்
கவிதை நன்று நம்பி.. கவிதையை இன்னும் சுருக்கமுற தந்திருக்கலாமோ ?
கடவுளே
தினந்தோறும்
ஒவ்வொரு நிமிடமும்
மலரும் பூக்களை
நீ
படைத்திருக்கிறாயா
கேட்டேன்
நீயோ
என்னவளை
பார்த்து விட்டு
என்னவளின் சிரிப்பை
என்னிடம் காட்டி
என்ன சந்தேகம்
என்று கேட்கிறாய்….
இந்த தடித்த வரிகளை " என்னவளின் சிரிப்பை காட்டி" என்று மாற்றி எழுதினால் கவிதை கருசிதையாமல் சுருக்கமுறுமோ ?
பிச்சி
01-08-2008, 02:58 PM
ஆதி அண்ணா சொல்றது போல கவிதை யை இன்னும் சுருக்கி இருக்கலாம் அண்ணா... கவிதை அருமை...
நம்பிகோபாலன்
04-08-2008, 11:48 AM
ஆதி உங்களின் திருத்தங்களால் என் கவிதை மேலும் பெருகிறது அழகு.... நன்றி.
(வேன்டும் என்றால் எடிட் செய்து மாற்றி விடுகிறேன்.)
அன்பு நம்பிகோபாலன்,
சிரிப்பின் சிறப்பு நீடித்திருக்க வாழ்த்துகள்!
சிவா.ஜி
04-08-2008, 01:19 PM
ஒவ்வொரு நிமிடமும் சிரித்துக்கொண்டிருக்கும் காதலி...அழகுதான். எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தால் நம்மவர்கள் வேறுமாதிரி நினைத்துவிடுவார்கள். அழகான கவிதை நம்பிகோபாலன். வாழ்த்துகள்.