எஸ்.எம். சுனைத் ஹஸனீ
31-07-2008, 05:58 PM
என் விழித்தலுக்கு முன்பாகவே
என் கவலைகள் விழித்துக்கொள்கின்றன
ஒவ்வொரு கதிரவக் கதிரிலும்
ஒராயிரம் சோதனைகள் பாய்வதாய்
ஒரு பிரமிப்பு உள்ளுக்குள்
சொல்லி வைத்தாற் போல்
ஒவ்வொரு எட்டுக்களிலும் தோல்வி
வரிந்து கட்டி துரத்துகிறது
இன்னுமொரு முறை
இதுதான் கடைசி முறையென்று
ஓராயிரமாவது முறையாய்
ஏதோவொன்று என்னை முடுக்குகிறது
நீராழத்திற்குள் சென்றுவிட்ட
நீச்சல் படிக்காதவனாய்
அவ்வப்போது மேலெழும்பி
சுவாசித்து
பின் அமுங்கிப்போகும்
மரண விளையாட்டுக்கள்தான்
என் நிஜ வாழ்க்கையிலும்
கூடிப் பறக்கும் பறவைகள்
ஓடித் திரியும்
கால்நடைகளெல்லாம்
என் காதில் உபதேசமிட்டுச் செல்லும்
கீழான நிலைக்கு
தள்ளப்பட்டதைப் போன்ற
பிரமை அடிக்கடி நிகழ்கிறது
எல்லாம் அச்சுப்பிசகாமல்
சரியாய் தொடர்ந்து கொண்டிருந்தாலும்
என் உலகம் மட்டும்
அப்படியே நிற்கிறது
வருடிச்செல்லும் தென்றலும்
பச்சைப்பசேல் தாவரங்களும்
என் உலகில் மட்டும்
மறைந்து போயிருக்கின்றன
சூரியன்கள் அற்ற இருள்களும்
வசந்தம் மறந்த
இலையுதிர் காலங்களும்தான்
என் உலகை
ராஜ்ஜியமிட்டுக் கொண்டிருக்கின்றன.
எல்லாம் முரண்படும் என் உலகில்
எல்லாம் என் விரல் சொடுக்குகளில்
நடந்தேறிக் கொண்டிருப்பதைப்போன்ற
கர்வம் மட்டும் எனக்குள் நீங்காமல்.
சிரத்தையுடன் தொடர்ந்தாலும்
நம்மை முந்தவியலா நிழல் போல்
எல்லாம் இருந்தும்
இல்லாத ஒன்றை நோக்கிய பயணங்கள்
நம் கால்களை விட்டு
பிற தோள்களில் பயணிக்கும் வரை
முற்றுப் பெற போவதில்லை.
என் கவலைகள் விழித்துக்கொள்கின்றன
ஒவ்வொரு கதிரவக் கதிரிலும்
ஒராயிரம் சோதனைகள் பாய்வதாய்
ஒரு பிரமிப்பு உள்ளுக்குள்
சொல்லி வைத்தாற் போல்
ஒவ்வொரு எட்டுக்களிலும் தோல்வி
வரிந்து கட்டி துரத்துகிறது
இன்னுமொரு முறை
இதுதான் கடைசி முறையென்று
ஓராயிரமாவது முறையாய்
ஏதோவொன்று என்னை முடுக்குகிறது
நீராழத்திற்குள் சென்றுவிட்ட
நீச்சல் படிக்காதவனாய்
அவ்வப்போது மேலெழும்பி
சுவாசித்து
பின் அமுங்கிப்போகும்
மரண விளையாட்டுக்கள்தான்
என் நிஜ வாழ்க்கையிலும்
கூடிப் பறக்கும் பறவைகள்
ஓடித் திரியும்
கால்நடைகளெல்லாம்
என் காதில் உபதேசமிட்டுச் செல்லும்
கீழான நிலைக்கு
தள்ளப்பட்டதைப் போன்ற
பிரமை அடிக்கடி நிகழ்கிறது
எல்லாம் அச்சுப்பிசகாமல்
சரியாய் தொடர்ந்து கொண்டிருந்தாலும்
என் உலகம் மட்டும்
அப்படியே நிற்கிறது
வருடிச்செல்லும் தென்றலும்
பச்சைப்பசேல் தாவரங்களும்
என் உலகில் மட்டும்
மறைந்து போயிருக்கின்றன
சூரியன்கள் அற்ற இருள்களும்
வசந்தம் மறந்த
இலையுதிர் காலங்களும்தான்
என் உலகை
ராஜ்ஜியமிட்டுக் கொண்டிருக்கின்றன.
எல்லாம் முரண்படும் என் உலகில்
எல்லாம் என் விரல் சொடுக்குகளில்
நடந்தேறிக் கொண்டிருப்பதைப்போன்ற
கர்வம் மட்டும் எனக்குள் நீங்காமல்.
சிரத்தையுடன் தொடர்ந்தாலும்
நம்மை முந்தவியலா நிழல் போல்
எல்லாம் இருந்தும்
இல்லாத ஒன்றை நோக்கிய பயணங்கள்
நம் கால்களை விட்டு
பிற தோள்களில் பயணிக்கும் வரை
முற்றுப் பெற போவதில்லை.