lenram80
28-07-2008, 07:54 PM
மலை கடந்து
பல குகை குடைந்து
தரை கடைந்து
தமிழகம் அடைந்து
அக மகிழ்ந்தது ஒரு காலம்!
இன்று
மேட்டுரில் முட்டி பிரண்டு
வழி நெடுக அழுது புரண்டு
தஞ்சையில் நாக்கும் வறண்டு
ஞாபகம் இல்லை கடலில் உருண்டு!
கல்லணை ஒரு குள்ளனை பார்ப்பது போல் பார்க்கிறது!
அன்று அதன் கழுத்தில் மாலை போட்டவள் -
இன்று அதன் பாதங்களில் பூ போடுவதால்!
ஆகஸ்டு 15,
சுதந்திரம் கொடுத்தது நாட்டுக்கு!
சுதந்திரம் எடுத்தது என் தமிழ் பாட்டுக்கு!
அன்று நான் கால் விரித்து ஓடிய காவிரி!
இன்று நான் கை விரித்து நடக்கும் கால்விரி (1/4)!
அன்று நான் நன்னீர் கடல்!
இன்று நான் கண்ணீர் திடல்!
என் கரை ஓரம்
அன்று - புண்ணியம் பெற்ற மரங்கள்!
இன்று - 'புண்' ணியம் கொண்ட மரங்கள்!
அன்று நான் வேர் அறுத்ததால்
மரங்கள் கொடுத்த சாபமா
இப்படி நான் காயக் காரணம்?
அன்று என் பாதத்தை சூரியனோ, சந்திரனோ பார்த்ததில்லை!
பூ வாடை கொண்ட நீரால் பூ ஆடை கொண்டேன்!
இன்று ஆடை இல்லாத ஆப்பிரிக்கத் தாய் போல்
கானல் நீரில் ஆடை கொண்டு
கண்ணீரால் என் உடல் நனைக்கிறேன்!
தலை குளிக்கிறேன் குடகு மலையில்!
கால் நனைக்க முடியவில்லை வங்க அலையில்!
தலையில் நயாகரா!
காலில் சகாரா!
தற்காலத்திலும் கற்(கால) நாடக மனிதர்களே!
அரசியலுக்காக பந்தாடுவது என்ன விதி?
தமிழக உணர்வுகளை மதி!
நான் ஆறு கோடி மக்களின் ஜீவ நதி!
பல குகை குடைந்து
தரை கடைந்து
தமிழகம் அடைந்து
அக மகிழ்ந்தது ஒரு காலம்!
இன்று
மேட்டுரில் முட்டி பிரண்டு
வழி நெடுக அழுது புரண்டு
தஞ்சையில் நாக்கும் வறண்டு
ஞாபகம் இல்லை கடலில் உருண்டு!
கல்லணை ஒரு குள்ளனை பார்ப்பது போல் பார்க்கிறது!
அன்று அதன் கழுத்தில் மாலை போட்டவள் -
இன்று அதன் பாதங்களில் பூ போடுவதால்!
ஆகஸ்டு 15,
சுதந்திரம் கொடுத்தது நாட்டுக்கு!
சுதந்திரம் எடுத்தது என் தமிழ் பாட்டுக்கு!
அன்று நான் கால் விரித்து ஓடிய காவிரி!
இன்று நான் கை விரித்து நடக்கும் கால்விரி (1/4)!
அன்று நான் நன்னீர் கடல்!
இன்று நான் கண்ணீர் திடல்!
என் கரை ஓரம்
அன்று - புண்ணியம் பெற்ற மரங்கள்!
இன்று - 'புண்' ணியம் கொண்ட மரங்கள்!
அன்று நான் வேர் அறுத்ததால்
மரங்கள் கொடுத்த சாபமா
இப்படி நான் காயக் காரணம்?
அன்று என் பாதத்தை சூரியனோ, சந்திரனோ பார்த்ததில்லை!
பூ வாடை கொண்ட நீரால் பூ ஆடை கொண்டேன்!
இன்று ஆடை இல்லாத ஆப்பிரிக்கத் தாய் போல்
கானல் நீரில் ஆடை கொண்டு
கண்ணீரால் என் உடல் நனைக்கிறேன்!
தலை குளிக்கிறேன் குடகு மலையில்!
கால் நனைக்க முடியவில்லை வங்க அலையில்!
தலையில் நயாகரா!
காலில் சகாரா!
தற்காலத்திலும் கற்(கால) நாடக மனிதர்களே!
அரசியலுக்காக பந்தாடுவது என்ன விதி?
தமிழக உணர்வுகளை மதி!
நான் ஆறு கோடி மக்களின் ஜீவ நதி!