மறத்தமிழன்
27-07-2008, 05:58 PM
மாவீரத்தாய்
கருவறையில் இருக்கும்போது
களவாய் பேசியவள்.
கைகளில் தவழும் போது
கனிவாய் பேசியவள்.
காளையாக திரிந்த போது
கண்டிப்பாய் பேசியவள்.
இன்றும்.............
கனக்க பேச வேண்டும்.
கட்டி அணைக்க வேண்டும்.
முத்தம் பொழிய வேண்டும்.
காத்திருக்கிறாள்...
காவல் தெய்வங்களின்
கல்லறைகள் முன்னால்.
வீரக்கண்மணி ஒரு தடவை
விழித்து பார்க்க மாட்டானா என்று......!
-- ஈழத்தில் ஒரு வீரனை பெற்று அவன் களத்திலே தன் சுற்றத்தாரை காக்கும் பணி கண்டு மகிழ்ந்து, பின் சமராடி மாவீரனாய் கல்லறையில் உறங்கும் மகவை அகம் உருகி மகிழ்ந்து கண்ணீரால் அரவணைக்கும் தாயின் பிரதிபலிப்பு.---
கருவறையில் இருக்கும்போது
களவாய் பேசியவள்.
கைகளில் தவழும் போது
கனிவாய் பேசியவள்.
காளையாக திரிந்த போது
கண்டிப்பாய் பேசியவள்.
இன்றும்.............
கனக்க பேச வேண்டும்.
கட்டி அணைக்க வேண்டும்.
முத்தம் பொழிய வேண்டும்.
காத்திருக்கிறாள்...
காவல் தெய்வங்களின்
கல்லறைகள் முன்னால்.
வீரக்கண்மணி ஒரு தடவை
விழித்து பார்க்க மாட்டானா என்று......!
-- ஈழத்தில் ஒரு வீரனை பெற்று அவன் களத்திலே தன் சுற்றத்தாரை காக்கும் பணி கண்டு மகிழ்ந்து, பின் சமராடி மாவீரனாய் கல்லறையில் உறங்கும் மகவை அகம் உருகி மகிழ்ந்து கண்ணீரால் அரவணைக்கும் தாயின் பிரதிபலிப்பு.---