View Full Version : முரண்பாட்டு மூட்டை நீ
shibly591
24-07-2008, 05:59 PM
பூக்களுக்கு
புன்னகைப்பது எப்படியென்று
கற்றுக்கொடுத்தவள் நீதானே...????
இன்னும்
சூரியனுக்கு
சுட்டெரிப்பது எப்படியென்று
கற்றுக்கொடுத்தவளும் நீதானே...????
ஒரு பார்வை நோய்
மறு பார்வை மருந்து என வள்ளுவனும்
ஒரு கண்ணில் அமுதம்
மறு கண்ணில் விஷம் ..
கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு..
இப்படி இக்காலக் கவிகளும்
எக்காலமும் அதிசயித்தது இது..
ஷிப்லியும் தப்பவில்லை..
வாழ்த்துகள் ஷிப்லி!
shibly591
24-07-2008, 06:14 PM
நன்றி இளசு அண்ணா...
இந்த முரண்பாடுகள்தானே நமது வாழ்வை சுவாரசியப்படுத்தகின்றது..
அது சரி அடிக்கிற கைதானே அணைக்கம்..
மீண்டும் நன்றிகள்
அக்னி
24-07-2008, 06:27 PM
பூமிக்குப் பொறுமை சொல்லியது நீயானால்,
அதிரச் சொன்னதும் நீதானோ?
காற்றுக்குத் தளுவல் சொல்லியது நீயானால்,
புயலாகச் சொன்னதும் நீதானோ?
தாரகைக்கு வெட்கம் சொல்லியது நீயானால்,
எரிந்துவிழச் சொன்னதும் நீதானோ?
அலைகளுக்கு அசைவைச் சொல்லியது நீயானால்,
பொங்கச் சொன்னதும் நீதானோ?
பாராட்டுக்கள் ஷிப்லி...
shibly591
24-07-2008, 06:30 PM
நன்றிகள் அக்னி அண்ணா...
உங்கள் பின்னூட்டத்தை வெகுவாக ரசிக்கிறேன்..
நன்றிகள் மீண்டும்
அமரன்
24-07-2008, 06:33 PM
சூரியனின் தகிப்பு எப்போதும் போலத்தான் உள்ளது.
அது எம்மீது தாக்கும் வண்ணம் நடப்பது நாம்தானே..
அவ்வளவு ஏன், பூக்களின் மலர்வுக்கு ஆதவக் கதிர்களும் காரணம்தானே..
பொதுவாக அனைத்து இயற்கைச் சீற்றங்களில் அவள் பங்கு அவன் பங்கு என்பதை விட நம் பங்கு அதிகம்..
பாராட்டுகள் ஷிப்லி.
shibly591
24-07-2008, 06:36 PM
நன்றி அமரன்
இவ்வளவு பெரிய தத்துவம்..இலகுவாக விளக்கினீர்கள்..
புரிந்துகொண்டேன்
நன்றிகள் மீண்டும்..
பூமகள்
24-07-2008, 06:39 PM
இரு கோணத்தில் கவிதை இருக்க...
மேலும் கவி எடுகோள்கள் பெரியண்ணா விளக்க...
கவிதை தொடர்ச்சியை அக்னி அண்ணா ஒலிக்க...
மூன்றாவது தீர்வை நாட்டாமை வந்து சொல்லி சுபமெழுத...
தீர்பெழுதிய பின் என்னவென்று பாராட்ட.....
எல்லார் பதிவையும் அமைதியாய் ரசித்து வழி மொழிகிறேன்..!!
பாராட்டுகள் ஷிப்லி அண்ணா...!! :)
shibly591
24-07-2008, 06:42 PM
நன்றி பூமகள்..
உங்கள் பாராட்டுக்கள் என்னை நெகிழ வைக்கிறது..
மீண்டும் நன்றிகள் பூமகள்
அக்னி
24-07-2008, 06:46 PM
நன்றிகள் அக்னி அண்ணா...
:eek::eek::eek:
நன்றி அமரன்
:eek::eek::eek:
ஏன் எனக்கு மட்டும் அண்ணா... :confused::confused::confused:
அக்னி மட்டும் போதுமே... :)
shibly591
24-07-2008, 06:48 PM
மன்னிக்க வேண்டுகிறேன்..
இனி அக்னி என்றே அழைக்கிறேன்..உங்கள் ஆசிர்வாதங்களோடு..
மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்..
அக்னி...
திருத்துவதற்குமுன் உன் அருமைப் பின்னூட்டக்கவி கண்டேன்..
அன்பலை வீசும் உன் உவகை+ உற்சாக உள்ளம் கண்டேன்..
அண்ணனிடம் சொல்லத்தக்க நல்ல சேதி ஏதும் உள்ளதா?
shibly591
24-07-2008, 06:57 PM
அக்னி ஏதும் சேதி இருந்தால் உடனே பகிர்ந்திடுங்கள்...
ஆவலில் நாங்கள்....................
அக்னி
24-07-2008, 07:07 PM
அண்ணனிடம் சொல்லத்தக்க நல்ல சேதி ஏதும் உள்ளதா?
அக்னி ஏதும் சேதி இருந்தால் உடனே பகிர்ந்திடுங்கள்...
எப்போதோ சொல்லிவிட்டேனே... :)
ஆனால், இன்று என்னை அன்பு செய்யும் காதல், எனக்கு உள்ளது.
நிச்சயம் விரைவில் சொல்லிடுவேன்... ;)
shibly591
24-07-2008, 07:13 PM
அக்னி
காத்திருக்கிறோம்..
விரைவில் நல்ல செய்தியை பறை சாற்றுங்கள்..
பராக் பராக் பராக்...