ஆதி
24-07-2008, 10:32 AM
அரசுகளும் அதிகாரங்களும்
மாறுகின்றன - ஆனாலும்
அடிமைகளாகத்தான் இருக்கிறோம் நாம்
நாட்டுத்தலைவர்கள்
நாட்டை தொகுதிகளாக
பிரித்துவிட்டார்கள்..
தேர்தலுக்குமுன் ஓட்டுக்களாகவும்
தேர்தலுக்குபின் நோட்டுக்களாகவும்
நம்மை கணக்கு வைக்கிறார்கள்..
வேட்பாளர்களை போல
வாக்காளர்களையும்
அவர்களே தீர்மானிக்கிறார்கள்..
நாமும்
குடத்துக்கும் சேலைக்கும்
ஒவ்வொரு ஐந்தாண்டையும்
அடகு வைத்தோம்..
வாக்குகளுக்காக கொடுக்கப்பட்ட
வாக்குறுதிகள் ஒருவரை ஒருவர்
தாக்குவதுக்காக பயனாகிறதே தவிர
காக்கப்படுவதில்லை..
எப்போதாவது பெய்கிற மழையாய்
தரப்படுகிற மானியங்கள்
வறண்ட ஆற்று மணலின்
வறட்சியை நனைக்காத
துளிகளாய்தான் தூறுகின்றன..
விளிம்பிநிலை மனிதனின்
விரலுக்கு மோதிரமா கேட்டோம்
வீக்கம் வராத பொருளாதரம் தான் கேட்டோம்
சேறில்லா சாலையா கேட்டோம்
தாருள்ள சாலைதான் கேட்டோம்
எப்போதும் இயலாதென்றாலும்
வெள்ளம் வருகிற
போதாவது நதிநீர்
பங்கீட்டை கேட்டோம்..
உழைக்க ஒரு வேலை
உடுத்த இரண்டாடை
படுக்க ஒரு வீடு
இவைதான் கேட்டோம்..
எது கிடைத்தது இதில் ?
என்ன கொடுத்தார்கள் நமக்கு ?
எதுவுமில்லை..
காஷ்மீரில் இருந்து
கச்சதீவு வரை
நம் உயிருக்கு
காப்பீடு இல்லை..
தேர்தல் தீப்பெட்டி
வாக்கு சீட்டு தீக்குச்சி
அதில் நாம்
ஜனநாயகத்தை
கொளுத்திவிட்டோம்
ஜனநாயகம்
அழுக்கை தூய்மையாக்கும்
அசுர துவைப்பு துறை
அதை நாம்
சகதியாக்கிவிட்டோம்..
சரி,
ஆனவை ஆகட்டும்..
விழாமல் எவனும் எழுந்ததில்லை
எழாமல் எவனும் வென்றதில்லை
இங்கு
கத்திகள் சாதிக்காததை
கட்சிகள் சாதித்துவிடுகின்றன
அதனால்
நமக்கு வேண்டியதை
நாமே பூர்த்தி செய்ய
சமாதனத்துக்கு ஒரு கட்சி
சமத்துவத்திற்கு ஒரு கட்சி
என்றிரண்டு கட்சி துவங்குவோம்..
தேவையானதை நிறைவேற்றுவோம்
தேவையற்றதின் கறையகற்றுவோம்..
கையேந்தும்
களவாடும் மனிதரில்லாத
புது பூமி உருவாக்குவோம்..
மாறுகின்றன - ஆனாலும்
அடிமைகளாகத்தான் இருக்கிறோம் நாம்
நாட்டுத்தலைவர்கள்
நாட்டை தொகுதிகளாக
பிரித்துவிட்டார்கள்..
தேர்தலுக்குமுன் ஓட்டுக்களாகவும்
தேர்தலுக்குபின் நோட்டுக்களாகவும்
நம்மை கணக்கு வைக்கிறார்கள்..
வேட்பாளர்களை போல
வாக்காளர்களையும்
அவர்களே தீர்மானிக்கிறார்கள்..
நாமும்
குடத்துக்கும் சேலைக்கும்
ஒவ்வொரு ஐந்தாண்டையும்
அடகு வைத்தோம்..
வாக்குகளுக்காக கொடுக்கப்பட்ட
வாக்குறுதிகள் ஒருவரை ஒருவர்
தாக்குவதுக்காக பயனாகிறதே தவிர
காக்கப்படுவதில்லை..
எப்போதாவது பெய்கிற மழையாய்
தரப்படுகிற மானியங்கள்
வறண்ட ஆற்று மணலின்
வறட்சியை நனைக்காத
துளிகளாய்தான் தூறுகின்றன..
விளிம்பிநிலை மனிதனின்
விரலுக்கு மோதிரமா கேட்டோம்
வீக்கம் வராத பொருளாதரம் தான் கேட்டோம்
சேறில்லா சாலையா கேட்டோம்
தாருள்ள சாலைதான் கேட்டோம்
எப்போதும் இயலாதென்றாலும்
வெள்ளம் வருகிற
போதாவது நதிநீர்
பங்கீட்டை கேட்டோம்..
உழைக்க ஒரு வேலை
உடுத்த இரண்டாடை
படுக்க ஒரு வீடு
இவைதான் கேட்டோம்..
எது கிடைத்தது இதில் ?
என்ன கொடுத்தார்கள் நமக்கு ?
எதுவுமில்லை..
காஷ்மீரில் இருந்து
கச்சதீவு வரை
நம் உயிருக்கு
காப்பீடு இல்லை..
தேர்தல் தீப்பெட்டி
வாக்கு சீட்டு தீக்குச்சி
அதில் நாம்
ஜனநாயகத்தை
கொளுத்திவிட்டோம்
ஜனநாயகம்
அழுக்கை தூய்மையாக்கும்
அசுர துவைப்பு துறை
அதை நாம்
சகதியாக்கிவிட்டோம்..
சரி,
ஆனவை ஆகட்டும்..
விழாமல் எவனும் எழுந்ததில்லை
எழாமல் எவனும் வென்றதில்லை
இங்கு
கத்திகள் சாதிக்காததை
கட்சிகள் சாதித்துவிடுகின்றன
அதனால்
நமக்கு வேண்டியதை
நாமே பூர்த்தி செய்ய
சமாதனத்துக்கு ஒரு கட்சி
சமத்துவத்திற்கு ஒரு கட்சி
என்றிரண்டு கட்சி துவங்குவோம்..
தேவையானதை நிறைவேற்றுவோம்
தேவையற்றதின் கறையகற்றுவோம்..
கையேந்தும்
களவாடும் மனிதரில்லாத
புது பூமி உருவாக்குவோம்..