சிவா.ஜி
23-07-2008, 10:54 AM
எட்டு வருடம் ஆகிறது இந்த அடுக்குமாடி குடியிருப்பு உருவாகி. அங்கு குடியிருந்த எல்லோருமே மேல் நடுத்தர மக்கள். தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு கட்டிடத்தின் பராமரிப்பிலிருந்து, கலை இலக்கிய விழாவை ஆண்டுதோறும் கொண்டாடுவதுவரை நேர்த்தியாக செய்துகொண்டு வந்தார்கள்.
ஒரு வருடத்துக்கு முன்பு தான் சிவராமன் தன் குடும்பத்துடன் அந்த குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு வசிக்க வந்தார். நல்ல சாரீரம் அவருக்கு. நல்ல தமிழறிவு. அவரே பாட்டுக்களை எழுதி அதற்கு மெட்டமைத்து பாடுவார். அழகான கவிதைகளும், கதைகளும் எழுதுவார். பிள்ளைகள் இருவரும் அமெரிக்காவில். வாரம் ஒருமுறை ஒரு மணிநேரம் தொலைபேசியில் பேசுவார்கள். பேரன், பேத்திகளின் பிரசவத்துக்கு மட்டும் வந்து போனார்கள். இதுவரை அந்த பேரன் பேத்திகளின் புகைப்படத்தை மட்டும்தான் பார்க்க முடிந்தது.
சிவராமன் அந்த எண்ணங்களின் பாரத்தை தன் இசையிலும், தமிழிலும் இறக்கி வைத்துக்கொண்டிருந்தார். சரோஜாம்மா அதிகம் பேசாதவர். கணவருக்குப் பணிவிடை செய்வதையே தன் முழுநேரத் தொழிலாய் செய்து வருகிறார். இவரும் முடிந்தவரை தன் மனைவிக்கு பல சமயங்களில் உதவி செய்து அவரின் பளுவைப் பங்குபோட்டுக்கொள்வார்.
அதுவரை தன் எழுத்துக்களுக்கு தன் மனைவி சரோஜா மட்டுமே வாசகியாய் இருந்தார். இங்கு வந்தபிறகு அவர் மட்டுமல்ல அந்த குடியிருப்பில் இருக்கும் அனைவருமே இவருடைய ரசிகர்கள்ஆகிவிட்டார்கள். கல்லூரியில் நடக்கும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளுக்கு இளைஞர்களும், இளைஞிகளும் ஆலோசனைக் கேட்க இவரிடம் வருவார்கள். அவர்கள் எழுதியதை மனதாரப் பாராட்டி அதில் சில நுணுக்கமான திருத்தங்களைச் செய்து அவற்றை ஜொலிக்கச் செய்வதால், இவர்மேல் அனைவருக்கும் நல்ல அபிப்பிராயம். சொஸைட்டியின் செயலாளர் கமலனும் இவருடைய பாட்டுக்கு ரசிகர்.
அன்று செயலாளர் கமலன் வந்திருந்தார். அந்த ஆண்டு சொஸைட்டியின் சார்பில் நடத்தப்படும் ஆண்டுவிழாவில் சிவராமன் ஒரு பாட்டுப் பாட வேண்டுமென்றும், ஆண்டுமலரில் அவரது கதையும், கவிதைகளும் இடம் பெற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். சிவராமன் சந்தோஷமாய் சம்மதித்தார்.
ஆண்டுவிழாக் குழுவினர் எல்லா ஏற்பாடுகளையும் நல்லமுறையில் செய்து வந்தார்கள். விழாவுக்கான நாள் நெருங்கி வரும்போது ஒரு கூட்டத்தைக் கூட்டி எந்தெந்த நிகழ்ச்சிகளை வைத்துக்கொள்ளலாம் என்றும், ஆண்டுமலரில் எந்தெந்த படைப்புகளைப் போடலாம் என்றும் உறுப்பினர்களின் பரிந்துரைகள் கேட்கப்பட்டது. அன்று சிவராமனுக்கு முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்ததால் மருத்துவமனைக்கு போகவேண்டியிருந்தது. அவரால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.
ஆண்டு விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்பு ஆண்டுமலர் அச்சாகி வந்துவிட்டது. அந்த மலரின் ஒரு பிரதியும், விழாவுக்கான அழைப்பிதலும் அவருக்கு அளிக்கப்பட்டது. இதுவரைத் தன் எந்தப் படைப்புமே அச்சில் வந்திராத காரணத்தால் அவருக்கு தன் எழுத்தை அச்சில் பார்க்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. திருத்தி வந்த விடைத்தாளைப் பார்க்கும் பதட்டத்துடன் கூடிய ஆர்வத்தில் அந்த மலரை புரட்டினார். இரண்டாம் பக்கத்திலிருந்த பதிவுகளின் பட்டியலில் அவருடைய பெயரைக் காணவில்லை. சரி பட்டியலில் விட்டுப் போயிருக்கும் உள்ளே இருக்கும் என்ற நம்பிக்கையில் புரட்டினார். ஒவ்வொரு பக்கமாகப் புரட்டப் புரட்ட....அவருடைய படைப்புகளைக் காணாமல்...கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகம் வடிந்துகொண்டிருந்தது. கடைசி பக்கம் வரைப் பார்த்துவிட்டு, மலரை மூடி வைத்தார். ஆயாசமாய் சாய்ந்துகொண்டார்.
ஏன் என் படைப்புகள் ஒன்றுமே இல்லை. சரி மற்ற படைப்புகளைப் படித்துப் பார்ப்போம் என்று வாசித்தார். சிறந்த படைப்புகள் இல்லாமலில்லை, அதே சமயம் அவற்றுக்கு இணையாக என் படைப்புகளும் இருக்கிறதே?.அப்படியென்றால் இதில் ஏன் இல்லை? ஏன் இப்படி? தெரியாமல் நடந்ததா...? இல்லை தெரிந்தே ஒதுக்கிவிட்டார்களா...? மனதுக்குள் சங்கடமான பல கேள்விகள் முளைத்தன.
விழா அழைப்பிதழைப் பார்த்தார். நிகழ்ச்சி நிரலிலும் இவர் பெயர் இல்லை. மனம் வலித்தது. எதற்கு இந்த ஒதுக்குதல்? அவருக்குப் புரியவில்லை. பண்பட்டவர்தான். இருந்தாலும் அவரால் சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேரே போய் கமலனைக் கேட்டாலென்ன? எண்ணம் தோன்றியதும் அதை உடனே செயல்படுத்தினார்.
"சார்..என்னோட கதையோ, கவிதையோ எதுவுமே இந்த மலர்ல வரலையே...அதுமட்டுமில்ல விழாவுல நான் பாடனுன்னு சொன்னீங்க...ஆனா என் பேர் எந்த நிகழ்ச்சியிலயும் இல்லையே ஏன் சார்?"
தர்மசங்கடத்துடன் கமலன் நெளிந்தார்.
"சிவராமன் சார்...உங்களுக்கேத் தெரியும் நம்ம சொஸைட்டியில எந்த முடிவா இருந்தாலும் கமிட்டி மீட்டிங் போட்டு அஜெண்டா பாஸ் பண்ணித்தான் எடுப்போம். நீங்க அன்னிக்கு கூட்டத்துக்கு வரலை. எந்த உறுப்பினருமே உங்க கவிதையையோ, கதையையோ பரிந்துரைக்கலையே. அப்படி இருக்கும்போது நான் எப்படி சார்....?"
"சார் நிஜமாவா சொல்றீங்க...? யாருமேவா பரிந்துரைக்கல? ஆனா என் கவிதையையும், கதையையும் படிச்சிட்டு ரொம்ப நல்லாருக்கு, இதை பத்திரிக்கைக்கு அனுப்பினா கண்டிப்பா வரும், நிச்சயமா இந்தப் படைப்பு நம்ம ஆண்டுமலர்ல வரனுன்னு சொன்னதெல்லாம் சும்மாவா சார். அப்ப யாருமே மனசார அதை சொல்லலையா சார்..? அந்த விஜயா மேடம் கூட சார் நீங்க என்னோட அண்ணனா பொறக்கலையேன்னு வருத்தமா இருக்கு. அவ்ளோ நல்லாருக்கு உங்க எழுத்துன்னு சொன்னது.....எல்லாமே பாசாங்கா சார்?"
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சங்கடத்துடன் தரை நோக்கினார் கமலன். சிவராமன் தொடர்ந்து,
"அது போகட்டும் சார். ரெண்டு மூணு பேரோட கதை, கட்டுரைன்னு வந்திருக்கு. ஆனா அவங்க இந்த சொஸைடியை விட்டுப் போய் ரொம்ப வருஷம் ஆகுது. அவங்க படைப்புகளே வந்திருக்கும்போது, இப்ப இருக்கறவங்களோடது ஏன் சார் வரக்கூடாது? அந்த கதையும், கட்டுரையும் நல்லால்லன்னு சொல்ல வரல. அருமையாத்தான் இருக்கு. அதுக்காக...இப்ப இங்க இருக்கறவங்களை ஒதுக்கிட்டு இல்லாதவங்களுக்கு முன்னுரிமை குடுக்கறது எனக்கு அவ்ளவு சரியாப் படல சார்"
'சார் நீங்க இப்பதான் வந்தீங்க. அவங்களும் நாங்களும் ஆரம்பத்துலருந்தே இந்த சொஸைட்டியில இருக்கோம். இதோட வளர்ச்சிக்காக அவங்க நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க"
"இருக்கட்டுமே சார். அதுக்காக வேணுன்னா ஒரு பக்கத்துல அவங்களுக்கு நன்றி சொல்லிடலாமே?"
"சரி விடுங்க சார். புக் பிரிண்ட் ஆகி வந்துடிச்சி. நீங்க வேணுன்னா தொகுப்பாளாரா இருங்களேன். விழா நிகழ்ச்சியைத் தொகுத்தளியுங்களேன். நன்றி நவிலல்ல உங்க பேரையும் சேர்த்து நன்றி சொல்லிடறோம்..."
சிவராமன் பார்த்துவிட்டுப் போன பார்வையில், அடி பட்டதைப் போல தளர்ந்துவிட்டார் கமலன்.
தன் குடியிருப்புக்கு வந்த சிவராமன் தளர்வாய் இருப்பதைப் பார்த்த சரோஜாம்மா...குளிர்ச்சியாய் மோர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவரருகில் நின்றார். மோரை வாங்கிக் குடித்துவிட்டு...பாதி தம்ளர் இருக்கும்போதே தாங்க முடியாதவராய் தன் மனக்குறையை மனையிடம் சொன்னார். கேட்டு முடித்த சரோஜாம்மா...ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று ஒரு அஞ்சலுறையுடன் வந்தார். அதை அவரிடம் கொடுத்தார். பிரித்துப் படித்த சிவராமன் முகமெல்லாம் பிரகாசமாகி..
"எப்படி சரோஜா இது நான் அனுப்பவேயில்லையே" என்றார்.
"நான் தாங்க அனுப்பி வெச்சேன். உங்க எழுத்து இங்க இருக்கிற 150 பேருக்காக மட்டுமில்லைங்க, இந்த உலகம் பூரா இருக்கிற தமிழர்களுக்காகவும்தான். இப்ப இது ஆனந்த விகடன்ல வந்திருக்கு. நாளைக்கு மத்த பத்திரிக்கைகள்லயும் வரும். நீங்க கவலைப் படாதீங்க. திறமைக்கு சிபாரிசு தேவையில்லை."
"ஆயிரத்துல ஒரு வார்த்தை" வயது மறந்து தன் இணையை அணைத்துக்கொண்டார் சிவராமன்.
ஒரு வருடத்துக்கு முன்பு தான் சிவராமன் தன் குடும்பத்துடன் அந்த குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு வசிக்க வந்தார். நல்ல சாரீரம் அவருக்கு. நல்ல தமிழறிவு. அவரே பாட்டுக்களை எழுதி அதற்கு மெட்டமைத்து பாடுவார். அழகான கவிதைகளும், கதைகளும் எழுதுவார். பிள்ளைகள் இருவரும் அமெரிக்காவில். வாரம் ஒருமுறை ஒரு மணிநேரம் தொலைபேசியில் பேசுவார்கள். பேரன், பேத்திகளின் பிரசவத்துக்கு மட்டும் வந்து போனார்கள். இதுவரை அந்த பேரன் பேத்திகளின் புகைப்படத்தை மட்டும்தான் பார்க்க முடிந்தது.
சிவராமன் அந்த எண்ணங்களின் பாரத்தை தன் இசையிலும், தமிழிலும் இறக்கி வைத்துக்கொண்டிருந்தார். சரோஜாம்மா அதிகம் பேசாதவர். கணவருக்குப் பணிவிடை செய்வதையே தன் முழுநேரத் தொழிலாய் செய்து வருகிறார். இவரும் முடிந்தவரை தன் மனைவிக்கு பல சமயங்களில் உதவி செய்து அவரின் பளுவைப் பங்குபோட்டுக்கொள்வார்.
அதுவரை தன் எழுத்துக்களுக்கு தன் மனைவி சரோஜா மட்டுமே வாசகியாய் இருந்தார். இங்கு வந்தபிறகு அவர் மட்டுமல்ல அந்த குடியிருப்பில் இருக்கும் அனைவருமே இவருடைய ரசிகர்கள்ஆகிவிட்டார்கள். கல்லூரியில் நடக்கும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளுக்கு இளைஞர்களும், இளைஞிகளும் ஆலோசனைக் கேட்க இவரிடம் வருவார்கள். அவர்கள் எழுதியதை மனதாரப் பாராட்டி அதில் சில நுணுக்கமான திருத்தங்களைச் செய்து அவற்றை ஜொலிக்கச் செய்வதால், இவர்மேல் அனைவருக்கும் நல்ல அபிப்பிராயம். சொஸைட்டியின் செயலாளர் கமலனும் இவருடைய பாட்டுக்கு ரசிகர்.
அன்று செயலாளர் கமலன் வந்திருந்தார். அந்த ஆண்டு சொஸைட்டியின் சார்பில் நடத்தப்படும் ஆண்டுவிழாவில் சிவராமன் ஒரு பாட்டுப் பாட வேண்டுமென்றும், ஆண்டுமலரில் அவரது கதையும், கவிதைகளும் இடம் பெற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். சிவராமன் சந்தோஷமாய் சம்மதித்தார்.
ஆண்டுவிழாக் குழுவினர் எல்லா ஏற்பாடுகளையும் நல்லமுறையில் செய்து வந்தார்கள். விழாவுக்கான நாள் நெருங்கி வரும்போது ஒரு கூட்டத்தைக் கூட்டி எந்தெந்த நிகழ்ச்சிகளை வைத்துக்கொள்ளலாம் என்றும், ஆண்டுமலரில் எந்தெந்த படைப்புகளைப் போடலாம் என்றும் உறுப்பினர்களின் பரிந்துரைகள் கேட்கப்பட்டது. அன்று சிவராமனுக்கு முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்ததால் மருத்துவமனைக்கு போகவேண்டியிருந்தது. அவரால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.
ஆண்டு விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்பு ஆண்டுமலர் அச்சாகி வந்துவிட்டது. அந்த மலரின் ஒரு பிரதியும், விழாவுக்கான அழைப்பிதலும் அவருக்கு அளிக்கப்பட்டது. இதுவரைத் தன் எந்தப் படைப்புமே அச்சில் வந்திராத காரணத்தால் அவருக்கு தன் எழுத்தை அச்சில் பார்க்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. திருத்தி வந்த விடைத்தாளைப் பார்க்கும் பதட்டத்துடன் கூடிய ஆர்வத்தில் அந்த மலரை புரட்டினார். இரண்டாம் பக்கத்திலிருந்த பதிவுகளின் பட்டியலில் அவருடைய பெயரைக் காணவில்லை. சரி பட்டியலில் விட்டுப் போயிருக்கும் உள்ளே இருக்கும் என்ற நம்பிக்கையில் புரட்டினார். ஒவ்வொரு பக்கமாகப் புரட்டப் புரட்ட....அவருடைய படைப்புகளைக் காணாமல்...கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகம் வடிந்துகொண்டிருந்தது. கடைசி பக்கம் வரைப் பார்த்துவிட்டு, மலரை மூடி வைத்தார். ஆயாசமாய் சாய்ந்துகொண்டார்.
ஏன் என் படைப்புகள் ஒன்றுமே இல்லை. சரி மற்ற படைப்புகளைப் படித்துப் பார்ப்போம் என்று வாசித்தார். சிறந்த படைப்புகள் இல்லாமலில்லை, அதே சமயம் அவற்றுக்கு இணையாக என் படைப்புகளும் இருக்கிறதே?.அப்படியென்றால் இதில் ஏன் இல்லை? ஏன் இப்படி? தெரியாமல் நடந்ததா...? இல்லை தெரிந்தே ஒதுக்கிவிட்டார்களா...? மனதுக்குள் சங்கடமான பல கேள்விகள் முளைத்தன.
விழா அழைப்பிதழைப் பார்த்தார். நிகழ்ச்சி நிரலிலும் இவர் பெயர் இல்லை. மனம் வலித்தது. எதற்கு இந்த ஒதுக்குதல்? அவருக்குப் புரியவில்லை. பண்பட்டவர்தான். இருந்தாலும் அவரால் சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேரே போய் கமலனைக் கேட்டாலென்ன? எண்ணம் தோன்றியதும் அதை உடனே செயல்படுத்தினார்.
"சார்..என்னோட கதையோ, கவிதையோ எதுவுமே இந்த மலர்ல வரலையே...அதுமட்டுமில்ல விழாவுல நான் பாடனுன்னு சொன்னீங்க...ஆனா என் பேர் எந்த நிகழ்ச்சியிலயும் இல்லையே ஏன் சார்?"
தர்மசங்கடத்துடன் கமலன் நெளிந்தார்.
"சிவராமன் சார்...உங்களுக்கேத் தெரியும் நம்ம சொஸைட்டியில எந்த முடிவா இருந்தாலும் கமிட்டி மீட்டிங் போட்டு அஜெண்டா பாஸ் பண்ணித்தான் எடுப்போம். நீங்க அன்னிக்கு கூட்டத்துக்கு வரலை. எந்த உறுப்பினருமே உங்க கவிதையையோ, கதையையோ பரிந்துரைக்கலையே. அப்படி இருக்கும்போது நான் எப்படி சார்....?"
"சார் நிஜமாவா சொல்றீங்க...? யாருமேவா பரிந்துரைக்கல? ஆனா என் கவிதையையும், கதையையும் படிச்சிட்டு ரொம்ப நல்லாருக்கு, இதை பத்திரிக்கைக்கு அனுப்பினா கண்டிப்பா வரும், நிச்சயமா இந்தப் படைப்பு நம்ம ஆண்டுமலர்ல வரனுன்னு சொன்னதெல்லாம் சும்மாவா சார். அப்ப யாருமே மனசார அதை சொல்லலையா சார்..? அந்த விஜயா மேடம் கூட சார் நீங்க என்னோட அண்ணனா பொறக்கலையேன்னு வருத்தமா இருக்கு. அவ்ளோ நல்லாருக்கு உங்க எழுத்துன்னு சொன்னது.....எல்லாமே பாசாங்கா சார்?"
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சங்கடத்துடன் தரை நோக்கினார் கமலன். சிவராமன் தொடர்ந்து,
"அது போகட்டும் சார். ரெண்டு மூணு பேரோட கதை, கட்டுரைன்னு வந்திருக்கு. ஆனா அவங்க இந்த சொஸைடியை விட்டுப் போய் ரொம்ப வருஷம் ஆகுது. அவங்க படைப்புகளே வந்திருக்கும்போது, இப்ப இருக்கறவங்களோடது ஏன் சார் வரக்கூடாது? அந்த கதையும், கட்டுரையும் நல்லால்லன்னு சொல்ல வரல. அருமையாத்தான் இருக்கு. அதுக்காக...இப்ப இங்க இருக்கறவங்களை ஒதுக்கிட்டு இல்லாதவங்களுக்கு முன்னுரிமை குடுக்கறது எனக்கு அவ்ளவு சரியாப் படல சார்"
'சார் நீங்க இப்பதான் வந்தீங்க. அவங்களும் நாங்களும் ஆரம்பத்துலருந்தே இந்த சொஸைட்டியில இருக்கோம். இதோட வளர்ச்சிக்காக அவங்க நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க"
"இருக்கட்டுமே சார். அதுக்காக வேணுன்னா ஒரு பக்கத்துல அவங்களுக்கு நன்றி சொல்லிடலாமே?"
"சரி விடுங்க சார். புக் பிரிண்ட் ஆகி வந்துடிச்சி. நீங்க வேணுன்னா தொகுப்பாளாரா இருங்களேன். விழா நிகழ்ச்சியைத் தொகுத்தளியுங்களேன். நன்றி நவிலல்ல உங்க பேரையும் சேர்த்து நன்றி சொல்லிடறோம்..."
சிவராமன் பார்த்துவிட்டுப் போன பார்வையில், அடி பட்டதைப் போல தளர்ந்துவிட்டார் கமலன்.
தன் குடியிருப்புக்கு வந்த சிவராமன் தளர்வாய் இருப்பதைப் பார்த்த சரோஜாம்மா...குளிர்ச்சியாய் மோர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவரருகில் நின்றார். மோரை வாங்கிக் குடித்துவிட்டு...பாதி தம்ளர் இருக்கும்போதே தாங்க முடியாதவராய் தன் மனக்குறையை மனையிடம் சொன்னார். கேட்டு முடித்த சரோஜாம்மா...ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று ஒரு அஞ்சலுறையுடன் வந்தார். அதை அவரிடம் கொடுத்தார். பிரித்துப் படித்த சிவராமன் முகமெல்லாம் பிரகாசமாகி..
"எப்படி சரோஜா இது நான் அனுப்பவேயில்லையே" என்றார்.
"நான் தாங்க அனுப்பி வெச்சேன். உங்க எழுத்து இங்க இருக்கிற 150 பேருக்காக மட்டுமில்லைங்க, இந்த உலகம் பூரா இருக்கிற தமிழர்களுக்காகவும்தான். இப்ப இது ஆனந்த விகடன்ல வந்திருக்கு. நாளைக்கு மத்த பத்திரிக்கைகள்லயும் வரும். நீங்க கவலைப் படாதீங்க. திறமைக்கு சிபாரிசு தேவையில்லை."
"ஆயிரத்துல ஒரு வார்த்தை" வயது மறந்து தன் இணையை அணைத்துக்கொண்டார் சிவராமன்.