சிவா.ஜி
19-07-2008, 02:00 PM
"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...."
தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த கவியரசரின் அமர வரிகள் செவிக்குள் நுழைந்து, மூளையை உசுப்பி இதழோரம் குறுநகையை விளைவித்தது. ஆனால் சற்றே கோணியிருந்த வாயால் அதை வெளிப்படுத்தமுடியாமல் கட்டிலில் கிடந்தார் கவுதமன்.
இருபத்தி மூன்று வருடங்கள்.....இளமையையை, மகிழ்ச்சியைத் தின்ற வருடங்கள். வருடம் ஒருமுறை விருந்தாளியாய் வந்து குடும்பத்துடன் இருந்து போன வருடங்கள். ஆரம்பத்தில் கண் கலங்கினாலும், அடுத்தடுத்த வருடங்களில், அவருடைய சமாதானங்களும், பிள்ளைகளுக்காகத்தானே என்ற அவரது செயலில் இருந்த நியாயமும், புரிந்ததால் எந்த உணர்வும் இல்லாமல் பெட்டியைத் தயார் செய்த கமலா, அப்பா போனால் அடுத்தமுறை என்னென்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்ட பிள்ளைகள் என அனைத்திலும் அவரை, இழந்தவனாக்கிய இருபத்திமூன்று வருடங்கள்.
இரண்டு மாதத்துக்கு முன்னர்தான் போதும் என்று உறுதியாக முடிவெடுத்து நாடு திரும்பியிருந்தார். எல்லாம் நன்றாகத்தான் நிகழ்ந்துகொண்டிருந்தது, அன்றைக்கு மாலை கமலா செய்து கொடுத்த சூடான பலகாரத்தை சாப்பிட்டு முடிக்கும்வரை. சிறிது நேரத்திலேயே எந்த பிடிமானமுமில்லாமல் தரையில் சரிந்தவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். இத்தனை வருடங்களாக பெட்ரோலியத்துறையில் பணிபுரிந்ததால், தொடர்ச்சியான அந்த இரசாயனக் காற்றை சுவாசித்ததால்...அதன் நச்சு, மூளையின் ஒரு பகுதியைத் தாக்கி அதனை செயலிழக்க வைத்துவிட்டதாகச் சொல்லி உடலின் இடது பக்கம் இயங்காத நிலையில் வீட்டுக்கு அனுப்பினார்கள்.
அதனோடு தொடர்ச்சியாய் இரண்டுமுறை வலிப்பும் வந்ததால், அவரை படுக்கையில் சாய்த்துவிட்டிருந்தது. மீண்டும் மழலைக்கு மாறியவரைப் போல குழறிய சொற்களையே பேச முடிந்தது.இப்போது அவருடைய நல்ல துணை அவரது விடுபட்ட வாழ்க்கையின் நினைவுகள்தான்.
அப்பாவைப் பற்றி ஒரு கவிதை வாசித்துவிட்டு தன்னை அதில் பொருத்திப் பார்த்து எந்த விதத்திலும் பொருந்தாதைப் பார்த்து தூக்கம் வரா இரவுகளைக் கழித்திருக்கிறார். மகன் முதல் வகுப்புக்கு போகத் தொடங்கியதுமே பயணம் மேற்கொண்டவர். இப்போது அந்த மகனுக்கே ஒரு மகன் இருக்கிறான். மூன்று வயது. துரு துருவென்று கொள்ளை அழகு.
மகனை நினைக்கும் போதெல்லாம் தன் இயலாமையை நினைத்து நெஞ்சம் பதறும். வளரும் பருவத்தில், அவனுடைய வளரும் அறிவுத் தினவுக்கு அவரால் எந்த பங்கும் அளிக்க முடியவில்லை. வந்துபோகும் கொஞ்ச நாட்களில் பாதியை அவருக்காகவே காத்திருக்கும் வேலைகளே காலி பண்ணிவிடும். மீதி நாட்களில் வீட்டிலேயே இருந்தாலும் ஓய்வெடுக்கவே விரும்புவார். ஏதேனும் ஒரு கேள்வியுடன் அவரை அவன் அணுகும்போது ஆயாசமாய் அம்மாவிடம் கேள் என்று கை காட்டி விடுவார்.
மகனுக்கு ஐந்து வருட இடைவெளியில் பிறந்த மகளின் மழலையைக் கூட அருகிருந்து அனுபவிக்க முடியவில்லை. முதல் இரண்டு வருடங்களில் இவர் அருகில் சென்றாலே அலறினாள். மனம் வெறுத்துப் போவார். ஆனால் வளர வளர அப்பாவிடம் அதிகமாக ஒட்டிக்கொண்டாள். ஆனால் மகன் சற்று விலகியே இருந்தான். இப்போதும் அதே இடைவெளியை பின்பற்றுகிறான்.
ஒருமுறை அவனை அழைத்துக்கொண்டு கடைக்குப் போனபோது, பொருள்களை வாங்கும் சுவாரசியத்திலிருந்தவன் இவரைத் தாத்தா என்று அழைத்துவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான். அப்பாவைவிட அதிகமாய் தாத்தாவிடம் இருந்தவன். பாவம் அவனும் என்ன செய்வான்.
கண்களின் ஓரம் கசிந்த கண்ணீரையும் துடைக்க மனமில்லாமல் படுத்திருந்தவரின் பார்வையில் கமலா கடந்து போவது நீர்த்திரைகளுக்கிடையில் தெரிந்தது.
இத்தனை வருடங்களில் அவர் சம்பாதித்த சொத்துக்களிலெல்லாம் மிகப் பெரிய சொத்தாக கமலாவை நினைத்தார். தான் அருகில் இல்லாத குறை தெரியாமல், வீட்டு நிர்வாகத்தையும் பார்த்துக்கொண்டு, பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டு அவள் பட்ட கஷ்டங்கள் தான் பட்டதைவிட அதிகம் என்று எப்போதுமே நினைப்பார். ஆனால் அவளையும் காயப் படுத்தியிருக்கிறார்.
பக்கத்து தெருவில் அமைத்திருந்த பஞ்சமுகவிநாயகர் ஆலயத்தில் விநாயகச் சதுர்த்தியில் சிலை வைக்கும் அந்த ஒன்பது நாட்களும் காலையில் விசேஷ அர்ச்சனையும், அபிஷேகமும் நடை பெறுமென்றும், முன் கூட்டியே பணம் கொடுத்து பெயரைப் பதிவு செய்துகொள்பவர்களின் பெயரில் அவர்கள் முன்னிலையில் அபிஷேகம் நடத்தப்படுமென்றும் அறிவித்திருந்தார்கள். அதற்கு பணம் செலுத்தப் போனவரைப் பார்த்து அந்த கோவில் நிர்வாகி
"வாங்க சார்...என்ன வேணும்?" என்றதும், தயங்கி...
"அபிஷேகத்துக்கு பணம் கட்ட வந்திருக்கேன்....."
' சார் நீங்க..............." என்று நிர்வாகி இவர் யாரெனத் தெரியாமல் இழுத்ததும்,
'பக்கத்துல அம்மன் நகர்ல இருக்கேன்..."
"அம்மன் நகர்லயா? அங்க எந்த வீடு?"
"அதாங்க செகெண்ட் கிராஸ்ல இருக்கே அந்த மாடி வீடு"
" செல்வரத்தினம் வீடா?"
"இல்ல சார்...மனைவி பெயரை சொல்லவிடாமல் இதுவரைத் தடுத்து வந்த அவரது ஈகோவை விட்டு, தயக்கத்துடன், கமலா...." என்று சொன்னவுடன்,
"அடடே நீங்கதான் கமலா மேடத்தோட கணவரா? நீங்கதான் துபாய்ல இருக்கீங்களா? எப்ப சார் வந்தீங்க? "
அவர் வரிசையாய் எழுப்பியக் கேள்விகளாலும், என்னைவிட என் மனைவியை அதிகமாகத் தெரிந்திருக்கிறதே என்ற எரிச்சலிலும் அவருக்கு கோபம் வந்தது. அடக்கிக்கொண்டு,
"ஆமா சார். ஒரு வாரம் ஆச்சு. இந்தாங்க புதன் கிழமைக்கு புக் பண்ணிடுங்க" என்று மேலும் பேச விருப்பமில்லாதவராக காசைக் கொடுத்துவிட்டு ரசீது வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவர் கமலாவைப் பார்த்து,
"மேடம் இந்த ஏரியாவுல ரொம்ப பிரபலம் போல இருக்கு. ரெண்டுதெரு தள்ளி இருக்கிற கோவில்ல இருக்கிற ஆளுங்களுக்குக் கூட உன்னை நல்லா தெரிஞ்சிருக்கு?"
அவரது நக்கல் பேச்சைப் புரிந்துகொள்ளாமல் கமலாவும் எதார்த்தமாக,
'அப்படியெல்லாம் இல்லைங்க. நான் அடிக்கடி கோவிலுக்குப் போவேன். பசங்கப் பேர்ல அர்ச்சனை செய்யப் பணம் கொடுப்பேன் அதான் தெரிஞ்சிருக்கும்"
"இல்லையே நான் இன்னாருன்னு சொன்னா தெரியல, ஆனா உன்னோட புருஷன்னு சொன்னதும் உடனே தெரிஞ்சிக்கிட்டாங்களே" விஷமமாய் அவர் கேட்டதையும் விஷமமாக எடுத்துக்கொள்ளாமல்,
" யார்ன்னு கேட்டா துபாய்ல இருக்கிறவர்ன்னு சொல்லியிருந்தீங்கன்னா டக்குன்னு தெரிஞ்சிகிட்டிருப்பாங்களே. இந்த ஏரியாவுல நீங்க மட்டும்தானங்க துபாய்ல இருக்கீங்க' என்று சாதரணமாய்ச் சொன்னாள்.
அதானே அப்படி முதலிலேயே சொல்லியிருக்கலாமே என்று அவள் சொன்னதில் உள்ள நியாயம் புரிந்தாலும், தன் சுயத்துக்கு நேர்ந்த அடியாக அந்த நிகழ்வை நினைத்த அவர் அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு கமலாவிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தார்.
படுக்கையிலேயே நிகழ்ந்துவிடும் தன் இயற்கை கழிவு வெளியேற்றத்தையும் சின்ன முகச் சுழிவு கூட இல்லாமல் சுத்தம் செய்யும் அவளை, அவரது சைகையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அவரது தேவைகளை பூர்த்தி செய்யும் அவளை, நினைத்து மீண்டும் கண்ணீர் முட்டியது. நான் பாவிம்மா. பணம் மட்டுமே பாக்கத் தெரிஞ்ச நான், உங்க மனங்களைப் பாக்கத் தவறிட்டேனே. என்று மனதுக்குள் மருகினார்.
மகள் திருமணம் முடிந்து ஒரு வாரம் தங்கள் வீட்டிலிருந்து விட்டு புகுந்த வீடு போவதாக இருந்தார்கள். ஆனால் அவரது விடுமுறை அவர்கள் கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னமே முடிவதால் அவரால் வழியனுப்புமன்று இருக்க முடியாது என்று சொன்னதும், மகள் அழுதுகொண்டே,
"அப்பா இன்னும் ரெண்டு நாள்தானே. லீவை ஒருநாலு நாளைக்கு நீட்டிக்க முடியாதா?" என்று கேட்டதற்கு,
'அதான் கல்யாணமெல்லாம் நல்லபடியா முடிஞ்சிடிச்சில்ல. நல்ல நாள்ங்கறதால நாளன்னக்கிப் போகப் போறீங்க. நான் எதுக்கும்மா. என்னால விடுமுறையை நீட்டிக்க முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அடுத்தமுறை மகளுடன் தொலைபேசியில் பேசும்போது மிகவும் வருத்தப்பட்டுப் பேசினாள். இதோ அந்த செல்ல மகளும் தன் மகளுடன் என்னைப் பார்க்க வந்திருக்கிறாள். தாய்க்கு தான் கொஞ்சமும் சலைத்தவளல்ல என்று சொல்வதைப் போல எனக்குப் பணிவிடைகள் செய்கிறாள். அவள் எப்படி வளர்ந்தாள், யாரிடம் கதை கேட்டாள், கதை சொன்னாள்....என்று எதுவுமே அவருக்குத் தெரியாது.
நான் ஒரு ஆதர்ச அப்பாவாய் என்றுமே இருந்ததில்லை. ஆனால் எனக்குக் கிடைக்காத எல்லாம் என் பிள்ளைகளுக்குக் கிடைக்கவேண்டும் என்ற வெறியில் பணம் சேர்த்தேன். ஆனால் சேர்ந்திருந்து மகிழலாம் என்று நினைத்து வந்த நேரத்தில் இந்த நிலையில் ஆண்டவன் என்னை வைத்துவிட்டான்...எண்ணங்களின் இட வலமில்லா பலமுனைத் தாக்குதலில் உள்ளமும் சோர்வாகி கண்களை இறுக மூடிக் கொண்டார்.
பேச்சுக் குரல் கேட்டது. மகனிடம் மருமகள் பேசுவது கேட்டது.
" என்னங்க..வாசல்ல இருக்கிற உங்க அப்பாவோடப் பெயர்ப் பலகையை மாத்திட்டு உங்கப் பேரை வெய்யுங்கன்னா கேக்க மாட்டேங்கறீங்களே. என் பிரண்ட்ஸ்செல்லாம் கேக்கறாங்க. என்னடி உங்க கணவருக்கு எதுவும் முக்கியத்துவம் இல்லையான்னு?"
" இங்க பாரு குமுதா....இது அவர் கட்டின வீடு. அவர் வாழற வரைக்கும் மட்டுமில்ல, அவர் போன பிறகும் அந்த போர்ட் அங்கதான் இருக்கும். எங்களுக்காக அவர் இழந்ததெல்லாம் போதும். இதையும் அவர் இழக்கவேண்டாம். எங்களோட இருக்க முடியலையேன்னு அவர் எவ்வளவு வருத்தப் பட்டிருப்பார்? அது மட்டுமில்ல குமுதா, அவர் சின்ன வயசுல ஆசைப்பட்ட எதுவும் அவருக்குக் கிடைக்கல. அந்த நிலைமை எங்களுக்கும் வந்துடக்கூடாதுன்னுதான் இவ்ளோ கஷ்டப்பட்டார். அந்தக் கஷ்டத்தோட பலன் தான் இப்ப நாங்க நல்லா இருக்கறதும், அவர் நல்லாயில்லாம இருக்கறதும். ஸோ இனி இதைப் பத்தி பேசாதே. தெரியுதா?"
மகன் சொன்னதைக் கேட்டதும் கவுதம் மனம் லேசானது. இதுவரை மனதைப் பிறாண்டிய சுயகழிவிரக்கம் அகன்றுவிட்டது. என் விருந்தாளி வாழ்க்கையில் எங்கோ ஒரு இடத்தில் என் செயல் அவர்களுக்கு என்னை ஆதர்ச அப்பாவாய்க் காட்டியிருக்கிறது. அவர்களை நான் புரிந்து கொண்டதை விட என்னை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோதும் எனக்கு. என் மிச்சமுள்ள வாழ்நாளை நிம்மதியாய்க் கழித்துவிடுவேன்......
மனதெல்லாம் சந்தோஷத்துடன் எழுந்து அமர முயன்றார். அவரால் எழ முடிந்தது.
தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த கவியரசரின் அமர வரிகள் செவிக்குள் நுழைந்து, மூளையை உசுப்பி இதழோரம் குறுநகையை விளைவித்தது. ஆனால் சற்றே கோணியிருந்த வாயால் அதை வெளிப்படுத்தமுடியாமல் கட்டிலில் கிடந்தார் கவுதமன்.
இருபத்தி மூன்று வருடங்கள்.....இளமையையை, மகிழ்ச்சியைத் தின்ற வருடங்கள். வருடம் ஒருமுறை விருந்தாளியாய் வந்து குடும்பத்துடன் இருந்து போன வருடங்கள். ஆரம்பத்தில் கண் கலங்கினாலும், அடுத்தடுத்த வருடங்களில், அவருடைய சமாதானங்களும், பிள்ளைகளுக்காகத்தானே என்ற அவரது செயலில் இருந்த நியாயமும், புரிந்ததால் எந்த உணர்வும் இல்லாமல் பெட்டியைத் தயார் செய்த கமலா, அப்பா போனால் அடுத்தமுறை என்னென்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்ட பிள்ளைகள் என அனைத்திலும் அவரை, இழந்தவனாக்கிய இருபத்திமூன்று வருடங்கள்.
இரண்டு மாதத்துக்கு முன்னர்தான் போதும் என்று உறுதியாக முடிவெடுத்து நாடு திரும்பியிருந்தார். எல்லாம் நன்றாகத்தான் நிகழ்ந்துகொண்டிருந்தது, அன்றைக்கு மாலை கமலா செய்து கொடுத்த சூடான பலகாரத்தை சாப்பிட்டு முடிக்கும்வரை. சிறிது நேரத்திலேயே எந்த பிடிமானமுமில்லாமல் தரையில் சரிந்தவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். இத்தனை வருடங்களாக பெட்ரோலியத்துறையில் பணிபுரிந்ததால், தொடர்ச்சியான அந்த இரசாயனக் காற்றை சுவாசித்ததால்...அதன் நச்சு, மூளையின் ஒரு பகுதியைத் தாக்கி அதனை செயலிழக்க வைத்துவிட்டதாகச் சொல்லி உடலின் இடது பக்கம் இயங்காத நிலையில் வீட்டுக்கு அனுப்பினார்கள்.
அதனோடு தொடர்ச்சியாய் இரண்டுமுறை வலிப்பும் வந்ததால், அவரை படுக்கையில் சாய்த்துவிட்டிருந்தது. மீண்டும் மழலைக்கு மாறியவரைப் போல குழறிய சொற்களையே பேச முடிந்தது.இப்போது அவருடைய நல்ல துணை அவரது விடுபட்ட வாழ்க்கையின் நினைவுகள்தான்.
அப்பாவைப் பற்றி ஒரு கவிதை வாசித்துவிட்டு தன்னை அதில் பொருத்திப் பார்த்து எந்த விதத்திலும் பொருந்தாதைப் பார்த்து தூக்கம் வரா இரவுகளைக் கழித்திருக்கிறார். மகன் முதல் வகுப்புக்கு போகத் தொடங்கியதுமே பயணம் மேற்கொண்டவர். இப்போது அந்த மகனுக்கே ஒரு மகன் இருக்கிறான். மூன்று வயது. துரு துருவென்று கொள்ளை அழகு.
மகனை நினைக்கும் போதெல்லாம் தன் இயலாமையை நினைத்து நெஞ்சம் பதறும். வளரும் பருவத்தில், அவனுடைய வளரும் அறிவுத் தினவுக்கு அவரால் எந்த பங்கும் அளிக்க முடியவில்லை. வந்துபோகும் கொஞ்ச நாட்களில் பாதியை அவருக்காகவே காத்திருக்கும் வேலைகளே காலி பண்ணிவிடும். மீதி நாட்களில் வீட்டிலேயே இருந்தாலும் ஓய்வெடுக்கவே விரும்புவார். ஏதேனும் ஒரு கேள்வியுடன் அவரை அவன் அணுகும்போது ஆயாசமாய் அம்மாவிடம் கேள் என்று கை காட்டி விடுவார்.
மகனுக்கு ஐந்து வருட இடைவெளியில் பிறந்த மகளின் மழலையைக் கூட அருகிருந்து அனுபவிக்க முடியவில்லை. முதல் இரண்டு வருடங்களில் இவர் அருகில் சென்றாலே அலறினாள். மனம் வெறுத்துப் போவார். ஆனால் வளர வளர அப்பாவிடம் அதிகமாக ஒட்டிக்கொண்டாள். ஆனால் மகன் சற்று விலகியே இருந்தான். இப்போதும் அதே இடைவெளியை பின்பற்றுகிறான்.
ஒருமுறை அவனை அழைத்துக்கொண்டு கடைக்குப் போனபோது, பொருள்களை வாங்கும் சுவாரசியத்திலிருந்தவன் இவரைத் தாத்தா என்று அழைத்துவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான். அப்பாவைவிட அதிகமாய் தாத்தாவிடம் இருந்தவன். பாவம் அவனும் என்ன செய்வான்.
கண்களின் ஓரம் கசிந்த கண்ணீரையும் துடைக்க மனமில்லாமல் படுத்திருந்தவரின் பார்வையில் கமலா கடந்து போவது நீர்த்திரைகளுக்கிடையில் தெரிந்தது.
இத்தனை வருடங்களில் அவர் சம்பாதித்த சொத்துக்களிலெல்லாம் மிகப் பெரிய சொத்தாக கமலாவை நினைத்தார். தான் அருகில் இல்லாத குறை தெரியாமல், வீட்டு நிர்வாகத்தையும் பார்த்துக்கொண்டு, பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டு அவள் பட்ட கஷ்டங்கள் தான் பட்டதைவிட அதிகம் என்று எப்போதுமே நினைப்பார். ஆனால் அவளையும் காயப் படுத்தியிருக்கிறார்.
பக்கத்து தெருவில் அமைத்திருந்த பஞ்சமுகவிநாயகர் ஆலயத்தில் விநாயகச் சதுர்த்தியில் சிலை வைக்கும் அந்த ஒன்பது நாட்களும் காலையில் விசேஷ அர்ச்சனையும், அபிஷேகமும் நடை பெறுமென்றும், முன் கூட்டியே பணம் கொடுத்து பெயரைப் பதிவு செய்துகொள்பவர்களின் பெயரில் அவர்கள் முன்னிலையில் அபிஷேகம் நடத்தப்படுமென்றும் அறிவித்திருந்தார்கள். அதற்கு பணம் செலுத்தப் போனவரைப் பார்த்து அந்த கோவில் நிர்வாகி
"வாங்க சார்...என்ன வேணும்?" என்றதும், தயங்கி...
"அபிஷேகத்துக்கு பணம் கட்ட வந்திருக்கேன்....."
' சார் நீங்க..............." என்று நிர்வாகி இவர் யாரெனத் தெரியாமல் இழுத்ததும்,
'பக்கத்துல அம்மன் நகர்ல இருக்கேன்..."
"அம்மன் நகர்லயா? அங்க எந்த வீடு?"
"அதாங்க செகெண்ட் கிராஸ்ல இருக்கே அந்த மாடி வீடு"
" செல்வரத்தினம் வீடா?"
"இல்ல சார்...மனைவி பெயரை சொல்லவிடாமல் இதுவரைத் தடுத்து வந்த அவரது ஈகோவை விட்டு, தயக்கத்துடன், கமலா...." என்று சொன்னவுடன்,
"அடடே நீங்கதான் கமலா மேடத்தோட கணவரா? நீங்கதான் துபாய்ல இருக்கீங்களா? எப்ப சார் வந்தீங்க? "
அவர் வரிசையாய் எழுப்பியக் கேள்விகளாலும், என்னைவிட என் மனைவியை அதிகமாகத் தெரிந்திருக்கிறதே என்ற எரிச்சலிலும் அவருக்கு கோபம் வந்தது. அடக்கிக்கொண்டு,
"ஆமா சார். ஒரு வாரம் ஆச்சு. இந்தாங்க புதன் கிழமைக்கு புக் பண்ணிடுங்க" என்று மேலும் பேச விருப்பமில்லாதவராக காசைக் கொடுத்துவிட்டு ரசீது வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவர் கமலாவைப் பார்த்து,
"மேடம் இந்த ஏரியாவுல ரொம்ப பிரபலம் போல இருக்கு. ரெண்டுதெரு தள்ளி இருக்கிற கோவில்ல இருக்கிற ஆளுங்களுக்குக் கூட உன்னை நல்லா தெரிஞ்சிருக்கு?"
அவரது நக்கல் பேச்சைப் புரிந்துகொள்ளாமல் கமலாவும் எதார்த்தமாக,
'அப்படியெல்லாம் இல்லைங்க. நான் அடிக்கடி கோவிலுக்குப் போவேன். பசங்கப் பேர்ல அர்ச்சனை செய்யப் பணம் கொடுப்பேன் அதான் தெரிஞ்சிருக்கும்"
"இல்லையே நான் இன்னாருன்னு சொன்னா தெரியல, ஆனா உன்னோட புருஷன்னு சொன்னதும் உடனே தெரிஞ்சிக்கிட்டாங்களே" விஷமமாய் அவர் கேட்டதையும் விஷமமாக எடுத்துக்கொள்ளாமல்,
" யார்ன்னு கேட்டா துபாய்ல இருக்கிறவர்ன்னு சொல்லியிருந்தீங்கன்னா டக்குன்னு தெரிஞ்சிகிட்டிருப்பாங்களே. இந்த ஏரியாவுல நீங்க மட்டும்தானங்க துபாய்ல இருக்கீங்க' என்று சாதரணமாய்ச் சொன்னாள்.
அதானே அப்படி முதலிலேயே சொல்லியிருக்கலாமே என்று அவள் சொன்னதில் உள்ள நியாயம் புரிந்தாலும், தன் சுயத்துக்கு நேர்ந்த அடியாக அந்த நிகழ்வை நினைத்த அவர் அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு கமலாவிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தார்.
படுக்கையிலேயே நிகழ்ந்துவிடும் தன் இயற்கை கழிவு வெளியேற்றத்தையும் சின்ன முகச் சுழிவு கூட இல்லாமல் சுத்தம் செய்யும் அவளை, அவரது சைகையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அவரது தேவைகளை பூர்த்தி செய்யும் அவளை, நினைத்து மீண்டும் கண்ணீர் முட்டியது. நான் பாவிம்மா. பணம் மட்டுமே பாக்கத் தெரிஞ்ச நான், உங்க மனங்களைப் பாக்கத் தவறிட்டேனே. என்று மனதுக்குள் மருகினார்.
மகள் திருமணம் முடிந்து ஒரு வாரம் தங்கள் வீட்டிலிருந்து விட்டு புகுந்த வீடு போவதாக இருந்தார்கள். ஆனால் அவரது விடுமுறை அவர்கள் கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னமே முடிவதால் அவரால் வழியனுப்புமன்று இருக்க முடியாது என்று சொன்னதும், மகள் அழுதுகொண்டே,
"அப்பா இன்னும் ரெண்டு நாள்தானே. லீவை ஒருநாலு நாளைக்கு நீட்டிக்க முடியாதா?" என்று கேட்டதற்கு,
'அதான் கல்யாணமெல்லாம் நல்லபடியா முடிஞ்சிடிச்சில்ல. நல்ல நாள்ங்கறதால நாளன்னக்கிப் போகப் போறீங்க. நான் எதுக்கும்மா. என்னால விடுமுறையை நீட்டிக்க முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அடுத்தமுறை மகளுடன் தொலைபேசியில் பேசும்போது மிகவும் வருத்தப்பட்டுப் பேசினாள். இதோ அந்த செல்ல மகளும் தன் மகளுடன் என்னைப் பார்க்க வந்திருக்கிறாள். தாய்க்கு தான் கொஞ்சமும் சலைத்தவளல்ல என்று சொல்வதைப் போல எனக்குப் பணிவிடைகள் செய்கிறாள். அவள் எப்படி வளர்ந்தாள், யாரிடம் கதை கேட்டாள், கதை சொன்னாள்....என்று எதுவுமே அவருக்குத் தெரியாது.
நான் ஒரு ஆதர்ச அப்பாவாய் என்றுமே இருந்ததில்லை. ஆனால் எனக்குக் கிடைக்காத எல்லாம் என் பிள்ளைகளுக்குக் கிடைக்கவேண்டும் என்ற வெறியில் பணம் சேர்த்தேன். ஆனால் சேர்ந்திருந்து மகிழலாம் என்று நினைத்து வந்த நேரத்தில் இந்த நிலையில் ஆண்டவன் என்னை வைத்துவிட்டான்...எண்ணங்களின் இட வலமில்லா பலமுனைத் தாக்குதலில் உள்ளமும் சோர்வாகி கண்களை இறுக மூடிக் கொண்டார்.
பேச்சுக் குரல் கேட்டது. மகனிடம் மருமகள் பேசுவது கேட்டது.
" என்னங்க..வாசல்ல இருக்கிற உங்க அப்பாவோடப் பெயர்ப் பலகையை மாத்திட்டு உங்கப் பேரை வெய்யுங்கன்னா கேக்க மாட்டேங்கறீங்களே. என் பிரண்ட்ஸ்செல்லாம் கேக்கறாங்க. என்னடி உங்க கணவருக்கு எதுவும் முக்கியத்துவம் இல்லையான்னு?"
" இங்க பாரு குமுதா....இது அவர் கட்டின வீடு. அவர் வாழற வரைக்கும் மட்டுமில்ல, அவர் போன பிறகும் அந்த போர்ட் அங்கதான் இருக்கும். எங்களுக்காக அவர் இழந்ததெல்லாம் போதும். இதையும் அவர் இழக்கவேண்டாம். எங்களோட இருக்க முடியலையேன்னு அவர் எவ்வளவு வருத்தப் பட்டிருப்பார்? அது மட்டுமில்ல குமுதா, அவர் சின்ன வயசுல ஆசைப்பட்ட எதுவும் அவருக்குக் கிடைக்கல. அந்த நிலைமை எங்களுக்கும் வந்துடக்கூடாதுன்னுதான் இவ்ளோ கஷ்டப்பட்டார். அந்தக் கஷ்டத்தோட பலன் தான் இப்ப நாங்க நல்லா இருக்கறதும், அவர் நல்லாயில்லாம இருக்கறதும். ஸோ இனி இதைப் பத்தி பேசாதே. தெரியுதா?"
மகன் சொன்னதைக் கேட்டதும் கவுதம் மனம் லேசானது. இதுவரை மனதைப் பிறாண்டிய சுயகழிவிரக்கம் அகன்றுவிட்டது. என் விருந்தாளி வாழ்க்கையில் எங்கோ ஒரு இடத்தில் என் செயல் அவர்களுக்கு என்னை ஆதர்ச அப்பாவாய்க் காட்டியிருக்கிறது. அவர்களை நான் புரிந்து கொண்டதை விட என்னை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோதும் எனக்கு. என் மிச்சமுள்ள வாழ்நாளை நிம்மதியாய்க் கழித்துவிடுவேன்......
மனதெல்லாம் சந்தோஷத்துடன் எழுந்து அமர முயன்றார். அவரால் எழ முடிந்தது.