மதுரை மைந்தன்
18-07-2008, 03:11 PM
கல்யாணி ஒரு கல்லூரி மாணவி. அவளும் அவளது தோழிகளான கௌரி சரசுவதி மீனா ஆகியோர் ஒரு குறும்புக்கார படடாளம். கல்யாணிக்கு சற்று குறும்பு அதிகம். தெருவில் எதிர்ப்படும் பையன்களிடம் " உன்னோட ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கு. அசப்பிலே சூப்பர் ஸ்டார் மாதிரியே இருக்கே" என்பாள். அவர்களும் கூச்சத்துடன் தாங்ஸ் சொல்வார்கள். ஆனால் கல்யாணி தொடர்வாள் " வீட்டுக்குப்போய் நல்லா குளி. ஒரே கப் அடிக்குது". இதைக்கேட்டு தோழிகள் கொல் என்று சிரிப்பார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் பக்கத்து அம்மன் கோயிலுக்கு அவர்கள் தவறாமல் செல்வார்கள். கல்யாணிக்கு அம்மன் மீது பக்தி அதிகம். அன்றும் அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து பிராசாத தட்டுக்களுடன் அர்ச்சகர் அவற்றை விநியோகம் செய்தார். விபூதி குங்குமம் இவைகளுடன் பொட்டுக்கடலையை பிராசதமாக அவர் கொடுத்ததை வாங்கிக் கொண்டு கௌரி சூள் கொட்டினாள். என்ன ஆயிற்று என்று அவளிடம் கல்யாணி கேட்டதற்கு அவள் சொன்னாள் " எப்போதும் பொட்டுக்கடலை தான் பிரசாதமா? ஒரு சுண்டல் இல்லை சர்க்கரைப் பொங்கலை ஏன் பிரசாதமாக கொடுக்கக் கூடாது?".
கல்யாணி யோசித்தாள். கௌரியிடம் " உனக்கு சர்க்ரைப் பொங்கல் தானே வேணும். இதோ ஏற்பாடு பண்றேன்" என்று சொல்லி விட்டு தோழிகளின் காதில் ஏதோ கூறினாள். பிறகு அவள் தன் தலையை அவிழ்த்து விட்டுக் கொண்டு லோசாக ஆடத்துவங்கினாள். சிறுது சிறுதாக பக்தர்கள் அவர்களை சூழத் தொடங்கினார்கள். இந்தப் பொண்ணுக்கு சாமி வந்திருக்கு என்று பேசிக் கொண்டார்கள். கூட்டம் சேர சேர கல்யாணியின் ஆட்டம் பெரிதாயிற்று. தோழிகள் அவளைத் தாங்கி பிடித்தனர்.
பக்கத்து கிராமத்திலிருந்த வந்திருந்த ஒரு விவசாயியின் குடும்பம் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து கல்யாணியின் காலடியில் விழுந்தனர். மூத்த விவசாயி துண்டை கக்கத்தில் வைத்துக் கொண்டு இரு கரங்களையும் கூப்பி " ஆத்தா என் கஷ்டங்களை எல்லாம் நீக்கு. இரண்டு வருசமா விளைச்சல் சரி இல்லை. கடன் வாங்கி அதை திருப்பி தர முடியாம தத்தளிக்கிறேன்" என்றார்.
அது வரை கண்ணை மூடிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்த கல்யாணி கண்ணைத் திறந்து " பக்தா உன் கஷ்டங்களை நான் அறிவேன். அவைகளை நிவர்த்திக்க வேண்டுமானால் நீ எனக்கு சர்க்கரை பொங்கல் படையல் போட வேண்டும். அப்படி செய்தால் அரசாங்கத்திடம் சொல்லி உன் கடன்களை தள்ளுபடி செய்ய வைப்பேன்" என்று சொல்லி விட்டு ஆட்டத்தை தொடர்ந்தாள். (அன்று காலையில் தான் நிதி அமைச்சர் தனது பட்ஜெட் அறிக்கையில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக வந்த செய்தியை கல்யாணி படித்திருந்தாள். ஏழை விவசாயிக்கு அந்த செய்தி தெரியாது).
மூத்த விவசாயி " ஆத்தா அப்படியே செய்யறேன்" என்று சொல்லி தன்னிடமிருந்த பணத்தை திரட்டி மனைவியிடம் கொடுத்தார். மனைவி தனது மகனிடம் வேண்டிய பொருடகளை வாங்க லிஸ்ட் கொடுத்தனுப்பினாள். சிறுது நேரத்தில் இரண்டு செங்கல்களை அடுப்பாகவும் சிறு சுள்ளிகளை விறகாகவும் கொண்ட அடுப்பில் மீது ஒரு மண் பானையில் சர்க்ரைப் பொங்கல் கொதிக்கத் தொடங்கியது.
ஒரு இலையில் சர்க்கரைப் பொங்கலை வைத்து அதன் நடுவில் கர்ப்பூரத்தை ஏற்றி விவசாயியின் மனைவி அம்மனுக்கும் கல்யாணிக்கும் காட்டினாள். பிறகு ஆடிக்கொண்டிருந்த கல்யாணிக்கு சிறுது சர்க்கரைப் பொங்கலை ஊட்டினாள். தோழிகளுக்கும் சர்க்ரைப் பொங்கல் விநியோகம் செய்தாள். அந்த சமயத்தில் அங்கு வந்த பக்தர் ஒருவரிடமிருந்த தினத் தந்தி பேப்பரின் கொட்டை எழுத்து தலைப்புச் செய்தியான ' விவசியிகளின் கடன்கள் தள்ளுபடி' எனபதை படித்த மூத்த விவசாயி மிகுந்த உணர்ச்சி வயப்பட்டவராய் கல்யாணியின் காலில் விழுந்து அழுத வண்ணம் " ஆத்தா உன் மகிமையே மகிமை. என்னோட படையலை ஏற்று கடன்களை தள்ளுபடி செய்ய வைத்தாயே " என்று புலம்பினார்.
கல்யாணி சிறுது சிறுதாக ஆட்டத்தை நிறுத்தி மயக்கம் வந்தவள் போல் விழுந்தாள். பிறகு கண் முழித்து " நான் எங்கே இருக்கிறேன். எனக்கு என்ன ஆச்சு" என்றாள். விவசாயியின் மனைவி " அம்மா உன் மேல ஆத்தா வந்து எங்களுக்கு அருள் பண்ணினாள்" எனறாள். கல்யாணி ஒன்றும் புரியாதவள் போல முழிக்க தோழிகள் அவளிடம் " வா வீட்டுக்கு போகலாம். போகும் வழியில் நாங்கள் சொல்றோம்" என்று வெளியில் சென்றார்கள்.
கோயிலை விட்டு வெளியில் வந்தவுடன் கௌரி கல்யாணிடம் " உன்னோட நடிப்பு பிரமாதம். சர்க்கரைப் பொங்கலுக்கு தாங்ஸ்" என்றாள். அனைவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
அன்று இரவு கல்யாணி முன் அம்மன் தோன்றினாள். முதலில் கல்யாணி அம்மன் தான் ஒரு ஏழை விவசாயியை ஏமாற்றியதற்கு கோபம் கொள்வாளோ என்று பயந்தாள். ஆனால் அம்மன் சிரித்துக் கொண்டே " கல்யாணி உனது விளையாட்டுத்தனத்திலும் ஒரு நன்மை விளைந்திருக்கிறது. அந்த ஏழை விவசாயி கடன் தொல்லை தாங்காமல் என்னை தரிசித்தபின் குடும்பத்துடன் தற்கொலை செய்யவிருந்தான். ஆனால் உன்னுடய விளையாட்டின் மூலம் கடன்கள் தள்ளுபடி ஆனதை அறிந்து மகிழ்ச்சியுடன் சென்றிருக்கிறான்" என்று சொல்லி மறைந்தாள்.
வெள்ளிக்கிழமைகளில் பக்கத்து அம்மன் கோயிலுக்கு அவர்கள் தவறாமல் செல்வார்கள். கல்யாணிக்கு அம்மன் மீது பக்தி அதிகம். அன்றும் அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து பிராசாத தட்டுக்களுடன் அர்ச்சகர் அவற்றை விநியோகம் செய்தார். விபூதி குங்குமம் இவைகளுடன் பொட்டுக்கடலையை பிராசதமாக அவர் கொடுத்ததை வாங்கிக் கொண்டு கௌரி சூள் கொட்டினாள். என்ன ஆயிற்று என்று அவளிடம் கல்யாணி கேட்டதற்கு அவள் சொன்னாள் " எப்போதும் பொட்டுக்கடலை தான் பிரசாதமா? ஒரு சுண்டல் இல்லை சர்க்கரைப் பொங்கலை ஏன் பிரசாதமாக கொடுக்கக் கூடாது?".
கல்யாணி யோசித்தாள். கௌரியிடம் " உனக்கு சர்க்ரைப் பொங்கல் தானே வேணும். இதோ ஏற்பாடு பண்றேன்" என்று சொல்லி விட்டு தோழிகளின் காதில் ஏதோ கூறினாள். பிறகு அவள் தன் தலையை அவிழ்த்து விட்டுக் கொண்டு லோசாக ஆடத்துவங்கினாள். சிறுது சிறுதாக பக்தர்கள் அவர்களை சூழத் தொடங்கினார்கள். இந்தப் பொண்ணுக்கு சாமி வந்திருக்கு என்று பேசிக் கொண்டார்கள். கூட்டம் சேர சேர கல்யாணியின் ஆட்டம் பெரிதாயிற்று. தோழிகள் அவளைத் தாங்கி பிடித்தனர்.
பக்கத்து கிராமத்திலிருந்த வந்திருந்த ஒரு விவசாயியின் குடும்பம் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து கல்யாணியின் காலடியில் விழுந்தனர். மூத்த விவசாயி துண்டை கக்கத்தில் வைத்துக் கொண்டு இரு கரங்களையும் கூப்பி " ஆத்தா என் கஷ்டங்களை எல்லாம் நீக்கு. இரண்டு வருசமா விளைச்சல் சரி இல்லை. கடன் வாங்கி அதை திருப்பி தர முடியாம தத்தளிக்கிறேன்" என்றார்.
அது வரை கண்ணை மூடிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்த கல்யாணி கண்ணைத் திறந்து " பக்தா உன் கஷ்டங்களை நான் அறிவேன். அவைகளை நிவர்த்திக்க வேண்டுமானால் நீ எனக்கு சர்க்கரை பொங்கல் படையல் போட வேண்டும். அப்படி செய்தால் அரசாங்கத்திடம் சொல்லி உன் கடன்களை தள்ளுபடி செய்ய வைப்பேன்" என்று சொல்லி விட்டு ஆட்டத்தை தொடர்ந்தாள். (அன்று காலையில் தான் நிதி அமைச்சர் தனது பட்ஜெட் அறிக்கையில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக வந்த செய்தியை கல்யாணி படித்திருந்தாள். ஏழை விவசாயிக்கு அந்த செய்தி தெரியாது).
மூத்த விவசாயி " ஆத்தா அப்படியே செய்யறேன்" என்று சொல்லி தன்னிடமிருந்த பணத்தை திரட்டி மனைவியிடம் கொடுத்தார். மனைவி தனது மகனிடம் வேண்டிய பொருடகளை வாங்க லிஸ்ட் கொடுத்தனுப்பினாள். சிறுது நேரத்தில் இரண்டு செங்கல்களை அடுப்பாகவும் சிறு சுள்ளிகளை விறகாகவும் கொண்ட அடுப்பில் மீது ஒரு மண் பானையில் சர்க்ரைப் பொங்கல் கொதிக்கத் தொடங்கியது.
ஒரு இலையில் சர்க்கரைப் பொங்கலை வைத்து அதன் நடுவில் கர்ப்பூரத்தை ஏற்றி விவசாயியின் மனைவி அம்மனுக்கும் கல்யாணிக்கும் காட்டினாள். பிறகு ஆடிக்கொண்டிருந்த கல்யாணிக்கு சிறுது சர்க்கரைப் பொங்கலை ஊட்டினாள். தோழிகளுக்கும் சர்க்ரைப் பொங்கல் விநியோகம் செய்தாள். அந்த சமயத்தில் அங்கு வந்த பக்தர் ஒருவரிடமிருந்த தினத் தந்தி பேப்பரின் கொட்டை எழுத்து தலைப்புச் செய்தியான ' விவசியிகளின் கடன்கள் தள்ளுபடி' எனபதை படித்த மூத்த விவசாயி மிகுந்த உணர்ச்சி வயப்பட்டவராய் கல்யாணியின் காலில் விழுந்து அழுத வண்ணம் " ஆத்தா உன் மகிமையே மகிமை. என்னோட படையலை ஏற்று கடன்களை தள்ளுபடி செய்ய வைத்தாயே " என்று புலம்பினார்.
கல்யாணி சிறுது சிறுதாக ஆட்டத்தை நிறுத்தி மயக்கம் வந்தவள் போல் விழுந்தாள். பிறகு கண் முழித்து " நான் எங்கே இருக்கிறேன். எனக்கு என்ன ஆச்சு" என்றாள். விவசாயியின் மனைவி " அம்மா உன் மேல ஆத்தா வந்து எங்களுக்கு அருள் பண்ணினாள்" எனறாள். கல்யாணி ஒன்றும் புரியாதவள் போல முழிக்க தோழிகள் அவளிடம் " வா வீட்டுக்கு போகலாம். போகும் வழியில் நாங்கள் சொல்றோம்" என்று வெளியில் சென்றார்கள்.
கோயிலை விட்டு வெளியில் வந்தவுடன் கௌரி கல்யாணிடம் " உன்னோட நடிப்பு பிரமாதம். சர்க்கரைப் பொங்கலுக்கு தாங்ஸ்" என்றாள். அனைவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
அன்று இரவு கல்யாணி முன் அம்மன் தோன்றினாள். முதலில் கல்யாணி அம்மன் தான் ஒரு ஏழை விவசாயியை ஏமாற்றியதற்கு கோபம் கொள்வாளோ என்று பயந்தாள். ஆனால் அம்மன் சிரித்துக் கொண்டே " கல்யாணி உனது விளையாட்டுத்தனத்திலும் ஒரு நன்மை விளைந்திருக்கிறது. அந்த ஏழை விவசாயி கடன் தொல்லை தாங்காமல் என்னை தரிசித்தபின் குடும்பத்துடன் தற்கொலை செய்யவிருந்தான். ஆனால் உன்னுடய விளையாட்டின் மூலம் கடன்கள் தள்ளுபடி ஆனதை அறிந்து மகிழ்ச்சியுடன் சென்றிருக்கிறான்" என்று சொல்லி மறைந்தாள்.