செல்வா
18-07-2008, 03:36 AM
நான் – முட்செடி
செடிஎன்று என்னை இப்போதுச் சொல்லமுடியாது
வெட்டப்பட்டு வீதியில் வீழ்ந்து கிடக்கிறேன்
நட்டு வளர்த்ததில்லை யாரும் என்னை
பாத்தி கட்டி நீரிறைத்துப் பார்த்து இரசித்ததுமில்லை
என்னை விதைத்த அன்னை எங்கோ இருக்கிறாள்
எங்கிருக்கிறாள என இன்றுவரைத் தெரியாது .. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை
வான் கொடுக்கும் எனது வயிற்றுக்குணவு
நானாக யாரிடமும் கையேந்தியதில்லை
ஏந்தினாலும் எனைத் தேற்றிப் பார்ப்பவர்களும் இல்லை
ஆனால் என்னைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் எப்போதும் பொறாமை
சீராட்டிப் பாராட்டி வளர்க்கும் செடிகளெல்லாம்
நோஞ்சானாக நோய்ப் பற்றியிருக்கும் போது
பாதையோரத்தில் கிடக்கும் நான் மட்டும் எப்படி நன்றாகச் செழிப்பாக இருக்கிறேன் என…
இதில் நான் செய்த பிழை என்னங்க?
தன்செடி ஏன் வளரவில்லை எனக் கவலைப்படுவதை விட்டு விட்டு
இவன் ஏன் இப்படி வளர்கிறான் எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
எனக்கோ என்னைப் பற்றியும் கவலையில்லை
பிறரைப்பற்றியும் கவலையில்லை
இல்ல இல்ல தப்பாதான் சொல்லிட்டேன்
கவலையில்லாமல் தான் இருந்தேன் …. நேற்று வரை
கவலை மட்டுமென்ன ஆசையும் தான்.. எனக்கு எந்த ஆசையுமில்லை அந்த மரம்போல் வளர வேண்டுமென்றோ இந்தக் கொடி போல் படரவேண்டுமென்றோ.. எந்தவொரு ஆசையுமில்லை…
எல்லாம் நேற்றுவரை தான்…
ஆடிக்காற்றில் அம்மி பறக்குமாமே…
அம்மி பறக்குமோ என்னவோ… ஆனால் நேற்றடித்தக் காற்றால் என் உயிர்க்காற்று இப்போது பறக்கப் போகிறது…
நேற்றையக் காலை நன்றாகத்தான் விடிந்தது… பின்னிரவில் லேசாகப் பெய்திருந்த பனியின் ஈரத்தால் காலை உணவும் நன்றாகவே முடிந்தது…
உடலும் மனமும் உற்சாகம் பெற காலை மஞ்சள் வெயிலில் உடலுக்குச் சக்தி சேர்த்துக் கொண்டிருந்தேன்…
அப்போது தான் வந்துச் சேர்ந்தது அந்தப் பாழாய்ப்போனக் காற்று…
இப்படி நான் திட்டினாலும் காற்றுக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் பெரும் பகையில்லை…
நாங்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் தீராத விளையாட்டுப் பிள்ளைகள்…
அன்றும் அப்படித்தான் காற்றுப்பட்டதும் உடலைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்தேன்.. வந்தவன் என்னை விளையாடக் கூப்பிட்டான். இருவருமாக ஓடிப்பிடித்து விளையாடத் துவங்கினோம் … விளையாட்டு வினையாகப் போவதுத் தெரியாமல்..
(இந்த விளையாட்டும் வினையும் விடவே விடாது போலருக்கே… என்ன கொடுமை அமரன் இது…)
அவன் போகும் இடமெல்லாம்.. அவனோடு கூட நானும் போனேன்… சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம் இருவரும்… நான் நின்ற படியேச் சுற்ற… அவன் என்னைச் சுற்றிச் சுற்ற… சுற்றிச் சுற்றி.. ஒருவழியாக சுற்றியது போதும் சற்று ஓய்வெடுக்கலாம் எனச் சுற்றுவதைச் சற்று நிறுத்தினேன்.
(சுத்து கொஞ்சம் அதிகம் தான்…. தலை சுத்திராமப் படிங்க…)
அப்போது வந்து என்னைச் சூழ்ந்தது அந்த அருமையான வாசம். காற்றிலாடியபடியே.. என்னை உரசிச் சென்றது அந்தச் சேலை…
அதன் மென்மை எனக்குப் பிடித்திருந்தது… எனது முள் நிறைந்த உடலை ஆதரவாய் வருடியது அது. என் மனமும் உடலும் ஒரு சேர நிறைந்தது.. புது மகிழ்ச்சி புது இரத்தம் உடலெங்கும் பாய.. சூரியனின் சுட்டெரிக்கும் வெயிலெல்லாம் எனக்குக் குளிர்வது போன்றுத் தோன்றியது.
அவ்வப்போது உரசிச் சென்றுகொண்டிருந்தச் சேலை… சற்று அழுத்தமாகப் பதிந்தது.. தடவிச் செல்லும் சேலையை நழுவவிட மனதில்லை.. நானும் தழுவிக்கொண்டேன் எனது முட்கரங்களால்.
சேலையின் மென்மையோடு காற்றும் சேர்ந்துக் கொள்ள என்னைச் சுற்றி நன்றாகப் படர்ந்தது சேலை…
காற்றிற்குப் பயந்ததோ… என நினைத்து நானும் நன்றாக பற்றிக் கொண்டேன். இறுக்கிப் பிடித்துக் கொண்ட சேலையால் சூரியனின் குளிரும் சுடவில்லை என்னை.
காற்று நின்றது…
அதுவரை என்னோடு அமைதியாகவிருந்தச் சேலை சட்டெனக் குரலெடுத்து அழவாரம்பித்தது…
சத்தம் கேட்டுப் பலர் ஓடி வந்தனர். தங்களுக்குள் ஏதேதோப் பேசிக்கொண்டனர்.
என்னிடமிருந்து சேலையைப் பிரிக்கத் துவங்கினர்.
“மெதுவா பக்குவமா எடுங்க சேலை கிழிஞ்சிடப்போகுது…” யாரோ சொன்னார்கள் சேலையின் சொந்தக்காரர்கள் போலிருக்கிறது.
எனக்குச் சேலையை விடமனதில்லை… அவர்கள் பிரிக்கும் போது அழுகையாக வந்தது.. அதுவரை நான் அழுததில்லை.. வாடியிருக்கிறென் உணவில்லாமல் பலநாள். அப்போது கூட அழுததில்லை. அழுதேன் ஆனால் என்னைக் கவனிப்பவர்கள் யாரும் இல்லை… எல்லோர் கண்ணும் சேலையின் மீதே…
எனக்கோ சேலையைப் பிரிவதே பெருந்துயராக இருந்தது. இன்னும் வலிந்துப் பற்றிக் கொண்டேன்.
“நல்லாச் சிக்கிக்கிச்சு கிளைய உடச்சாத்தான் எடுக்க முடியும் போலருக்கு…”
என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டுச் சுதாரிப்பதற்குள். மளுக் என உடைந்தது ஒருக் கிளை.
தாங்கமுடியாத வலி.. கத்தவில்லை நான்.
கத்தினாலும் யார்காதிலும் கேட்கப் போவதில்லை…
எங்கேச் சேலையை எடுத்து விடுவார்களோ என உடைந்த கிளையோடுச் சேர்த்து இன்னும் பலமாகப் பற்றினேன்.
விடவில்லை அவர்கள். ஒன்றிரண்டு பேராக இருந்தவர்கள் பலராயினர்… ஆளாளுக்கு போட்டிபோட்டுக் கொண்டு இழுத்ததில் சேலைக் கிழிந்து என் மனதிலிருந்து இரத்தம் வடிந்தது.
அதற்கு மேல் நான் பிடிக்கவில்லை.. விட்டு விட்டேன். ஆனாலும் அவர்கள் என்னை விடவில்லை… அதற்குள் எனது கிளைகள் பலவற்றை மண்ணைக் கவ்வ வைத்துவிட்டனர்.
அதோடு விட்டிருக்கலாம். சேலையைத் தான் எடுத்து விட்டார்களே.. போக வேண்டியது தானே… ஆனால் போகவில்லை திரும்ப திரும்ப அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். புதிது புதிதாக கதைகள் முளைத்தன. அந்தக் கதைகளைக் கேட்கும் என்வலிகூட மரத்துப் போய் புன்முறுவல் வர ஆரம்பித்து விட்டது… அடடா இந்த மனிதர்களிடம் தான் என்ன ஒரு கற்பனைச் சக்தி…
கூடிப் பேசிக்கொண்டிருந்தவர்கள் மத்தியிலிருந்து ஒரு குரல்…
“ இந்தச் செடி இங்கருக்கிறதால தானே பிரச்சனை முதல்ல இத வெட்டி போடுங்கப்பா…”
வெட்டி விட்டனர் என்னை அடியோடு… இதோ மண்ணில் வீழ்ந்து கிடக்கிறேன்.
வீழ்ந்து கிடந்த என்னைப் பார்க்கக் கூட வரவில்லை சேலை… கூட்டத்தோடு போனது.. போகும் போது யாரோ சொன்னார்கள்..
“நல்லவேள லேசாத்தான் கிழிஞ்சிருக்கு… தச்சிட்டு வெளியத் தெரியாத மாதிரிக் கட்டிக்கலாம்”
சேலையைத் தைக்கலாம் மண்ணில் வீழ்ந்த என்னைத் தைப்பது யார்..?
யாரோ என்னை மிதிக்கிறார்கள்… என்னால் மூச்சு விட முடியவில்லை… ஒரு முட்கரம் உடைகிறது… கவலையெதற்குக் கரத்தைப்பற்றி.. உயிரே போகப் போகிறது.
ஏதோப் பேசுகிறார்களே என்ன அது…
“ஸ்….ஸ்…. ஆ அம்மா…”
“என்னப்பா ஆச்சு….”
“முள்ளு குத்திருச்சும்மா….”
உயிர் போகும் போதும் எனக்குச் சிரிப்பு வந்தது… வந்து மிதிச்சுட்டு முள்குத்திடுச்சுண்ணு என்மேலேயே பழி போடுறாங்க.
சூரியன் மறுபடியும் வந்து விட்டான்… அதோ காற்றும் வந்து விட்டது…
இப்போதுக் காற்று என் நண்பனாக வரவில்லை...
இந்தக் காற்றுப்பட்டதும் என்னுடல் சிலிர்க்கவில்லை.. சூரியனோடு சேர்ந்து கொண்டு என் இரத்தத்தை உறிஞ்சுகிறான். நான் இறந்து கொண்டிருக்கிறேன்.
நான் இறந்து விடுவேன் ஆனால் என்னை வெட்டும் போது என்னிலிருந்து சிதறிய விதைகள் இதோ என்னிலிருந்து உறியப்பட்ட இரத்தத்தால் மழைபொழியும் போது... மறுபடி முளைக்கும்.
முடிந்தால் அவற்றையாவது காப்பாற்றுங்களேன்... வெட்டுப்படாமல்.
செடிஎன்று என்னை இப்போதுச் சொல்லமுடியாது
வெட்டப்பட்டு வீதியில் வீழ்ந்து கிடக்கிறேன்
நட்டு வளர்த்ததில்லை யாரும் என்னை
பாத்தி கட்டி நீரிறைத்துப் பார்த்து இரசித்ததுமில்லை
என்னை விதைத்த அன்னை எங்கோ இருக்கிறாள்
எங்கிருக்கிறாள என இன்றுவரைத் தெரியாது .. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை
வான் கொடுக்கும் எனது வயிற்றுக்குணவு
நானாக யாரிடமும் கையேந்தியதில்லை
ஏந்தினாலும் எனைத் தேற்றிப் பார்ப்பவர்களும் இல்லை
ஆனால் என்னைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் எப்போதும் பொறாமை
சீராட்டிப் பாராட்டி வளர்க்கும் செடிகளெல்லாம்
நோஞ்சானாக நோய்ப் பற்றியிருக்கும் போது
பாதையோரத்தில் கிடக்கும் நான் மட்டும் எப்படி நன்றாகச் செழிப்பாக இருக்கிறேன் என…
இதில் நான் செய்த பிழை என்னங்க?
தன்செடி ஏன் வளரவில்லை எனக் கவலைப்படுவதை விட்டு விட்டு
இவன் ஏன் இப்படி வளர்கிறான் எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
எனக்கோ என்னைப் பற்றியும் கவலையில்லை
பிறரைப்பற்றியும் கவலையில்லை
இல்ல இல்ல தப்பாதான் சொல்லிட்டேன்
கவலையில்லாமல் தான் இருந்தேன் …. நேற்று வரை
கவலை மட்டுமென்ன ஆசையும் தான்.. எனக்கு எந்த ஆசையுமில்லை அந்த மரம்போல் வளர வேண்டுமென்றோ இந்தக் கொடி போல் படரவேண்டுமென்றோ.. எந்தவொரு ஆசையுமில்லை…
எல்லாம் நேற்றுவரை தான்…
ஆடிக்காற்றில் அம்மி பறக்குமாமே…
அம்மி பறக்குமோ என்னவோ… ஆனால் நேற்றடித்தக் காற்றால் என் உயிர்க்காற்று இப்போது பறக்கப் போகிறது…
நேற்றையக் காலை நன்றாகத்தான் விடிந்தது… பின்னிரவில் லேசாகப் பெய்திருந்த பனியின் ஈரத்தால் காலை உணவும் நன்றாகவே முடிந்தது…
உடலும் மனமும் உற்சாகம் பெற காலை மஞ்சள் வெயிலில் உடலுக்குச் சக்தி சேர்த்துக் கொண்டிருந்தேன்…
அப்போது தான் வந்துச் சேர்ந்தது அந்தப் பாழாய்ப்போனக் காற்று…
இப்படி நான் திட்டினாலும் காற்றுக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் பெரும் பகையில்லை…
நாங்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் தீராத விளையாட்டுப் பிள்ளைகள்…
அன்றும் அப்படித்தான் காற்றுப்பட்டதும் உடலைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்தேன்.. வந்தவன் என்னை விளையாடக் கூப்பிட்டான். இருவருமாக ஓடிப்பிடித்து விளையாடத் துவங்கினோம் … விளையாட்டு வினையாகப் போவதுத் தெரியாமல்..
(இந்த விளையாட்டும் வினையும் விடவே விடாது போலருக்கே… என்ன கொடுமை அமரன் இது…)
அவன் போகும் இடமெல்லாம்.. அவனோடு கூட நானும் போனேன்… சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம் இருவரும்… நான் நின்ற படியேச் சுற்ற… அவன் என்னைச் சுற்றிச் சுற்ற… சுற்றிச் சுற்றி.. ஒருவழியாக சுற்றியது போதும் சற்று ஓய்வெடுக்கலாம் எனச் சுற்றுவதைச் சற்று நிறுத்தினேன்.
(சுத்து கொஞ்சம் அதிகம் தான்…. தலை சுத்திராமப் படிங்க…)
அப்போது வந்து என்னைச் சூழ்ந்தது அந்த அருமையான வாசம். காற்றிலாடியபடியே.. என்னை உரசிச் சென்றது அந்தச் சேலை…
அதன் மென்மை எனக்குப் பிடித்திருந்தது… எனது முள் நிறைந்த உடலை ஆதரவாய் வருடியது அது. என் மனமும் உடலும் ஒரு சேர நிறைந்தது.. புது மகிழ்ச்சி புது இரத்தம் உடலெங்கும் பாய.. சூரியனின் சுட்டெரிக்கும் வெயிலெல்லாம் எனக்குக் குளிர்வது போன்றுத் தோன்றியது.
அவ்வப்போது உரசிச் சென்றுகொண்டிருந்தச் சேலை… சற்று அழுத்தமாகப் பதிந்தது.. தடவிச் செல்லும் சேலையை நழுவவிட மனதில்லை.. நானும் தழுவிக்கொண்டேன் எனது முட்கரங்களால்.
சேலையின் மென்மையோடு காற்றும் சேர்ந்துக் கொள்ள என்னைச் சுற்றி நன்றாகப் படர்ந்தது சேலை…
காற்றிற்குப் பயந்ததோ… என நினைத்து நானும் நன்றாக பற்றிக் கொண்டேன். இறுக்கிப் பிடித்துக் கொண்ட சேலையால் சூரியனின் குளிரும் சுடவில்லை என்னை.
காற்று நின்றது…
அதுவரை என்னோடு அமைதியாகவிருந்தச் சேலை சட்டெனக் குரலெடுத்து அழவாரம்பித்தது…
சத்தம் கேட்டுப் பலர் ஓடி வந்தனர். தங்களுக்குள் ஏதேதோப் பேசிக்கொண்டனர்.
என்னிடமிருந்து சேலையைப் பிரிக்கத் துவங்கினர்.
“மெதுவா பக்குவமா எடுங்க சேலை கிழிஞ்சிடப்போகுது…” யாரோ சொன்னார்கள் சேலையின் சொந்தக்காரர்கள் போலிருக்கிறது.
எனக்குச் சேலையை விடமனதில்லை… அவர்கள் பிரிக்கும் போது அழுகையாக வந்தது.. அதுவரை நான் அழுததில்லை.. வாடியிருக்கிறென் உணவில்லாமல் பலநாள். அப்போது கூட அழுததில்லை. அழுதேன் ஆனால் என்னைக் கவனிப்பவர்கள் யாரும் இல்லை… எல்லோர் கண்ணும் சேலையின் மீதே…
எனக்கோ சேலையைப் பிரிவதே பெருந்துயராக இருந்தது. இன்னும் வலிந்துப் பற்றிக் கொண்டேன்.
“நல்லாச் சிக்கிக்கிச்சு கிளைய உடச்சாத்தான் எடுக்க முடியும் போலருக்கு…”
என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டுச் சுதாரிப்பதற்குள். மளுக் என உடைந்தது ஒருக் கிளை.
தாங்கமுடியாத வலி.. கத்தவில்லை நான்.
கத்தினாலும் யார்காதிலும் கேட்கப் போவதில்லை…
எங்கேச் சேலையை எடுத்து விடுவார்களோ என உடைந்த கிளையோடுச் சேர்த்து இன்னும் பலமாகப் பற்றினேன்.
விடவில்லை அவர்கள். ஒன்றிரண்டு பேராக இருந்தவர்கள் பலராயினர்… ஆளாளுக்கு போட்டிபோட்டுக் கொண்டு இழுத்ததில் சேலைக் கிழிந்து என் மனதிலிருந்து இரத்தம் வடிந்தது.
அதற்கு மேல் நான் பிடிக்கவில்லை.. விட்டு விட்டேன். ஆனாலும் அவர்கள் என்னை விடவில்லை… அதற்குள் எனது கிளைகள் பலவற்றை மண்ணைக் கவ்வ வைத்துவிட்டனர்.
அதோடு விட்டிருக்கலாம். சேலையைத் தான் எடுத்து விட்டார்களே.. போக வேண்டியது தானே… ஆனால் போகவில்லை திரும்ப திரும்ப அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். புதிது புதிதாக கதைகள் முளைத்தன. அந்தக் கதைகளைக் கேட்கும் என்வலிகூட மரத்துப் போய் புன்முறுவல் வர ஆரம்பித்து விட்டது… அடடா இந்த மனிதர்களிடம் தான் என்ன ஒரு கற்பனைச் சக்தி…
கூடிப் பேசிக்கொண்டிருந்தவர்கள் மத்தியிலிருந்து ஒரு குரல்…
“ இந்தச் செடி இங்கருக்கிறதால தானே பிரச்சனை முதல்ல இத வெட்டி போடுங்கப்பா…”
வெட்டி விட்டனர் என்னை அடியோடு… இதோ மண்ணில் வீழ்ந்து கிடக்கிறேன்.
வீழ்ந்து கிடந்த என்னைப் பார்க்கக் கூட வரவில்லை சேலை… கூட்டத்தோடு போனது.. போகும் போது யாரோ சொன்னார்கள்..
“நல்லவேள லேசாத்தான் கிழிஞ்சிருக்கு… தச்சிட்டு வெளியத் தெரியாத மாதிரிக் கட்டிக்கலாம்”
சேலையைத் தைக்கலாம் மண்ணில் வீழ்ந்த என்னைத் தைப்பது யார்..?
யாரோ என்னை மிதிக்கிறார்கள்… என்னால் மூச்சு விட முடியவில்லை… ஒரு முட்கரம் உடைகிறது… கவலையெதற்குக் கரத்தைப்பற்றி.. உயிரே போகப் போகிறது.
ஏதோப் பேசுகிறார்களே என்ன அது…
“ஸ்….ஸ்…. ஆ அம்மா…”
“என்னப்பா ஆச்சு….”
“முள்ளு குத்திருச்சும்மா….”
உயிர் போகும் போதும் எனக்குச் சிரிப்பு வந்தது… வந்து மிதிச்சுட்டு முள்குத்திடுச்சுண்ணு என்மேலேயே பழி போடுறாங்க.
சூரியன் மறுபடியும் வந்து விட்டான்… அதோ காற்றும் வந்து விட்டது…
இப்போதுக் காற்று என் நண்பனாக வரவில்லை...
இந்தக் காற்றுப்பட்டதும் என்னுடல் சிலிர்க்கவில்லை.. சூரியனோடு சேர்ந்து கொண்டு என் இரத்தத்தை உறிஞ்சுகிறான். நான் இறந்து கொண்டிருக்கிறேன்.
நான் இறந்து விடுவேன் ஆனால் என்னை வெட்டும் போது என்னிலிருந்து சிதறிய விதைகள் இதோ என்னிலிருந்து உறியப்பட்ட இரத்தத்தால் மழைபொழியும் போது... மறுபடி முளைக்கும்.
முடிந்தால் அவற்றையாவது காப்பாற்றுங்களேன்... வெட்டுப்படாமல்.