PDA

View Full Version : கவிதைக் கலகம்



நாகரா
16-07-2008, 04:09 PM
என்னோடு
சமாதானம் பேச வந்தது
வெள்ளைத் தாள்

முகமெல்லாம்
கரி பூசி
அனுப்பி வைத்தேன்

இப்போது
உலகெங்கும்
கலகம் பேசித் திரிகிறது
அது

இளசு
16-07-2008, 05:44 PM
உலகெங்கும் பரவவேண்டும்
என்பதற்காகவே கரித்தீ மூட்டுவோர் உண்டு..

கருத்தீ இருப்பதால்
உலகெங்கும் பரவுவதும் உண்டு..


கவிப்பார்வைகள் நன்றே நாகரா அவர்களே!

நாகரா
17-07-2008, 02:25 AM
உம் உற்சாக வரிகளுக்கு நன்றி இளசு

பாலகன்
17-07-2008, 02:35 AM
என்னோடு
சமாதானம் பேச வந்தது
வெள்ளைத் தாள்

முகமெல்லாம்
கரி பூசி
அனுப்பி வைத்தேன்

இப்போது
உலகெங்கும்
கலகம் பேசித் திரிகிறது
அது

அப்ப கூட பின்பக்கம் வெள்ளையா இருக்குமே நாகரா

அன்புடன்

நாகரா
17-07-2008, 02:41 AM
அப்ப கூட பின்பக்கம் வெள்ளையா இருக்குமே நாகரா

அன்புடன்

வித்தியாசமான பார்வைக்கு நன்றி மணவாளரே!