mukilan
16-07-2008, 02:56 AM
மரபணுமாற்றத் தொழில்நுட்பம்
சென்ற பகுதியில் காலம் காலமாகச் செய்து வரப்படும் கலப்பினப் பெருக்கம் பற்றிக் கண்டோம். கலப்பினப் பெருக்கத்தாலேயே எல்லா நன்மைகளையும் அடைய முடியாதா? மரபணுமாற்றத்திற்கான தேவை என்ன?
1) கலப்பினப் பெருக்கம் செய்வதற்கு ஆண்டுகள் பல ஆகும். சுமார் 7 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை கூட ஆகும்.
2) தேவையான அனைத்துப் பண்புகளும் நெருங்கிய சிற்றினங்களிலேயே (Species) கிடைத்து விடுவதில்லை.
3) வேறு சிற்றினத்தில் அல்லது தூரத்து உறவினர்களிடம் இருந்து (Distant relates species)இருந்து மரபணுக்களை மாற்ற வேண்டுமாயின் அந்தச் சிற்றினத்தின் மகரந்தம் நாம் மேம்படுத்த நினைக்கும் சிற்றினத்தின் சூலகத்தை கருவுறச் செய்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.
4) அவ்வாறான சிக்கல்களை கடந்து நாம் நினைப்பதை அடைய கருவினை மீட்டுக் காத்தல் வேண்டும் (Embryo Rescue). அதற்கு நிறைய பொருள், மனித வளம், நேரம் செலவாகும்.
இந்த இடத்தில் ஒரு முக்கிய தகவலைச் சொல்ல விரும்புகிறேன். இத்தகைய கரு மீட்டுக் காத்தல் தொழில்நுட்பத்தினால்தான் உலகிலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் தாவரம் உருவானது. கோதுமையையும் "ரை" எனப்படும் மற்றொரு தானியத்தையும் கலப்பினப் பெருக்கம் செய்ததில் உருவானதுதான் ட்ரிட்டிக்கேல் (Triticale)
5. மிக முக்கியமாக வேறொரு உயிரினத்தில்(பாக்டீரியா, ஜெல்லி மீன்) உள்ள மரபணுக்களை தாவரங்களில் புகுத்த கலப்பின முறையால் முடியாது!
ஏன் வேறொரு உயிரினத்தில் இருந்து தாவரத்திற்கு மரபணுவை மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? சொல்கிறேன்.
பருத்தி உற்பத்தியினை காய்ப்புழுக்கள் (Boll worms) அடியோடு அழிக்கக் கூடிய சாத்தியம் உண்டு.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/ABWirrigted_cot.jpg
காய்ப்புழுவினைக் கட்டுப்படுத்த குடம் குடமாகப் பூச்சிக்கொல்லிகளை (பூச்சி மருந்து என்ற பதம் வெகுநாட்களாகவே தவறாகப் பயன் படுத்தப் படுகிறது. அது உண்மையிலே பூச்சியைக் கொல்லும் நச்சு) தெளிக்க வேண்டும். அப்படியும் விட்டேனா பார் எனச் சில காய்ப்புழுக்கள் டார்வினின் பரிணாம வளர்ச்சிப் படி தன் உடலமைப்பில் சில மாறுதல் களைச் செய்து கொண்டு அந்தப் பூச்சிக்கொல்லிகளை ஏதோ கொக்கோ-கோலா குடிப்பது போல குடித்து கும்மாளமிட ஆரம்பித்தன. இயற்கையாகவே மண்ணில் காணப்படும் பாக்டீரியா பாஸில்லஸ் துருண்ஜியன்ஸிஸ்- Bacillus thurungiensis. செல்லமாக BT. இந்த பாக்டீரியாக்கள் சுரக்கும் ஒருவித புரதம் அந்தக் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தும்(கொல்லும்). இதைக் கவனித்த பூச்சியியல்(Entomology) வல்லுனர்கள் அந்தப் புரதச் சுரப்புக்குக் காரணமான மரபணுவைக் கண்டறிந்தனர்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/GM-crop.gif
இந்த மரபணு தாவர மரபணுவுடன் ஒட்டிக்கொண்டால் அந்தத் தாவரமும் குறிப்பிட்ட அந்தப் புரதத்தைச் சுரக்கும் அல்லவா?. பணம் மிச்சமாகும். பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல்கேடு இல்லை. இது இயற்கையாகவே உள்ள புரதம் என்பதால் பூச்சிகளால் அவ்வளவு எளிதாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள முடியாது(பூச்சிகள் அப்படியும் எதிர்த்து நின்றது பின்னர் நடந்த கதை). பருத்தியின் காய்ப்புழு பிரச்சினை மட்டுமல்ல. களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் (Herbicide resistance), வைட்டமின் சத்து கொண்ட அரிசி( தங்க அரிசி- Golden rice), வாடாமல் இருக்கும் தக்காளி (Flavr Savr Tomato) போன்ற இன்னபிற விடயங்களைச் சமாளிக்கவும் பிற உயிரினங்கள் மரபணுக்களைக் கொண்டிருந்தன.
சரி இந்த மரபணுக்களை எப்படித் தாவர மரபணுவுக்குள் ஒட்ட வைப்பது?. அங்கேதான் முதன் முதலாக மரபணுமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
பாக்டீரியாவின் குரோமோசோம் டி. என்.ஏ வட்டமாகவோ அல்லது நீளமாகவோ (ஒற்றைக் கம்பி போல) இருக்கும்.அது மட்டுமல்லாமல் பாக்டீரியாக்கள் Ti-பிளாஸ்மிட் எனப்படும் குரோமோசோம் சாராத டி.என்.ஏக்களையும்(ஆம் ஒன்றுக்கும் மேல்) கொண்டிருக்கும்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/320px-Plasmid_englishsvg.png
இந்த பிளாஸ்மிட் தன்னிச்சையாகவே பெருக்கிக் கொள்ளும் ஒரு அபூர்வத் திறன் கொண்டது. இந்த பிளாஸ்மிட்களை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். அதற்கும் பல வழிகள் இருக்கின்றன். பிளாஸ்மிடை மட்டும் தவிர்த்து விட்டு பாக்டீரியாவின் செல்லை கரைக்க பல வேதிப் பொருட்கள் இருக்கின்றன.இந்தப் பிளாஸ்மிட்கள்தான் நமக்கு வேண்டிய மரபணுவைச் சுமந்து மற்றுமொரு பாக்டீரியாவுக்குள் கொண்ட செல்லும் வாகனம்(Vector).
அதே போன்று நமக்கு வேண்டிய மரபணு தரும் பாக்டீரியாவில், பாக்டீரியாவின் செல்லில் உள்ள மற்ற பொருட்களை வேதிப்பொருள் கொண்டு கரைத்து அதன் டி.என்.ஏவை மட்டும் தனியாக எடுக்க இயலும்.
சரி நம்மிடையே இப்பொழுது நமக்குத் தேவையான மரபணு தரும் டி.என்.ஏ இருக்கிறது. அதை சுமந்து செல்ல வாகனம் இருக்கிறது. ஆனால் இந்த வாகனத்தால் மற்றுமொரு பாக்டீரியாவின் தோலைக் கிழித்து உட்புகமுடியுமே தவிர தாவர செல்லின் தடித்த சுவற்றினை ஒன்றும் செய்ய முடியாதே!. அப்படியானால் அதை தாவரத்திற்குள் சுமந்து செல்வது யார்?
விடுவானா மனிதன்? அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்து விட்டாயிற்று. அக்ரோபேக்டீரியம் டூமிஃபேசியன்ஸ் (Agrobacterium tumifaciens) எனப்படும் ஒரு பாக்டீரியா தாவரச் செல்லின் சுவற்றைத் துளைத்து உட்புக முடியும். ஆனால் அது எந்த இடத்தில் தாவரத்தின் உட்புகுகிறதோ அந்த இடத்தில் ஒரு பெரிய கட்டி போன்ற வீக்கம் (Crown gall) ஏற்படும்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/Gall.jpg
அது நமக்குத் தேவையில்லாத குணமாயிற்றே? விட்டு விடுவோமா? கட்டிக்கு காரணமான அந்த மரபணுவைக் கண்டறிந்து அதை நீக்கம் செய்து விட்டோம்!
ஆமாம் நான் அடிக்கடி சொல்கிறேனே வெட்டுவது! ஒட்டுவது என்று? அது எப்படி? அதற்கும் வழி கண்ட விடாக்கண்டர்களல்லவா நாம். ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம் அல்லவா? அந்த ....ATGCGCTTAGGTAG.... என்ற டி. என். ஏ அமைப்பு. அதில் CGCTTAGG மட்டும் ஒரு குறிப்பிட்ட பண்பிற்குக் காரணமாய் இருக்கும். அதை மட்டும் வெட்டலாம். மற்றொரு இடத்தில் கொண்டு ஒட்டலாம். அதற்கு Restriction Endonucleases எனப்படும் ஒரு புரதம் உதவுகிறது. A க்கும் Tக்கும் இடையில் வெட்ட ஒரு வகை. G க்கும் Tக்கும் இடையில் வெட்ட ஒரு வகை என அதில் பலவகை. அதை மரபணுக் கத்திரிக்கோல் எனச் சொன்னாலும் பொருந்தும். வெட்டுவதற்கும் அதுதான் ஒட்டுவதற்கும் அதுதான்.
இப்பொழுது நமது மரபணுக் கத்திரிக்கோல் கொண்டு நம் வாகனம் பிளாஸ்மிட்டில் ஒரு வெட்டு. தேவையான நமது மரபணு ஆரம்பத்தில் பார்த்தோமே BT அதையும் தனியாக வெட்டு. இப்பொழுது பிளாஸ்மிட்டையும் மரபணுவையும் ஒட்டு! இப்படிச் சேர்த்த நமது வாகனம் அக்ரோபேக்டீரியம் டூமிஃபேசியன்ஸ் வரை மட்டும்தான். அதன் பின்னர் இந்தப் பாக்டீரியா கொண்டு தாவரத்தின் செல்லின் உள் புகச் சொல்லலாம். அப்படி உட்புகுந்ததும் இந்தப் பிளாஸ்மிட்டுடன் சேர்ந்த நமக்கு விருப்பமான மரபணு தனியாக கழன்று கொண்டு தாவரத்தின் டி.என். ஏவுடன் ஒட்டிக் கொள்ளும். அதற்கும் வழி இருக்கிறது.இப்படியாக பாக்டீரியாவின் மரபணு தாவர செல்லின் மரபணுவிற்குள் செலுத்தியாகிவிட்டது. நாம் எதிர்பார்த்த பண்பு வந்து விட்டதா என சோதனை செய்ய வேண்டும். சோதித்த வெற்றி அடைந்த செல்களை சேகரிக்கலாம். முறையான உணவு மற்றும் சூழல் அளிக்கப்படுகின்ற ஒவ்வொரு தாவர செல்லுக்கும் ஒரு முழுமையான செடியாக உருவாகக் கூடிய திறன் இருக்கிறது. அதற்கு ஆங்கிலத்தில் Totipotency எனப்பெயர். அந்தக் குணத்தின் படி மரபணுமாற்றம் செய்யப்பட்ட செல் திசு வளர்ப்பு முறையில் (Tissue culture) முழுச் செடியாக உருவெடுக்கிறது.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/1929223432.jpg
பின்னர் அந்தச் செடி ஆய்வகத்தில் இருந்து மெதுவாக இயல்பான வளர்ச்சி சூழலுக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு மாற்றப்பட்ட செடிகளின் விதைகள் கொண்டு விளைநிலங்களில் பயிரிடப்படுகின்றன.மரபணுமாற்றத் தொழில் நுட்பத்தின் எளிய விளக்கப்படம் கீழே!
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/plasmidexpression.gif
இன்று சற்று நீண்ட பதிவாகப் பதிவிட வேண்டிய அவசியம். ஒரு தொழில்நுட்பம் பற்றிய அறிமுகம் என்பதால் அதைப்பற்றி முழுமையாகக் கொடுக்க முனைந்தேன். கேள்விகள் இருந்தால் விளக்கச் சித்தமாயிருக்கிறேன்.:icon_b:
--வளரும்:icon_rollout:
சென்ற பகுதியில் காலம் காலமாகச் செய்து வரப்படும் கலப்பினப் பெருக்கம் பற்றிக் கண்டோம். கலப்பினப் பெருக்கத்தாலேயே எல்லா நன்மைகளையும் அடைய முடியாதா? மரபணுமாற்றத்திற்கான தேவை என்ன?
1) கலப்பினப் பெருக்கம் செய்வதற்கு ஆண்டுகள் பல ஆகும். சுமார் 7 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை கூட ஆகும்.
2) தேவையான அனைத்துப் பண்புகளும் நெருங்கிய சிற்றினங்களிலேயே (Species) கிடைத்து விடுவதில்லை.
3) வேறு சிற்றினத்தில் அல்லது தூரத்து உறவினர்களிடம் இருந்து (Distant relates species)இருந்து மரபணுக்களை மாற்ற வேண்டுமாயின் அந்தச் சிற்றினத்தின் மகரந்தம் நாம் மேம்படுத்த நினைக்கும் சிற்றினத்தின் சூலகத்தை கருவுறச் செய்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.
4) அவ்வாறான சிக்கல்களை கடந்து நாம் நினைப்பதை அடைய கருவினை மீட்டுக் காத்தல் வேண்டும் (Embryo Rescue). அதற்கு நிறைய பொருள், மனித வளம், நேரம் செலவாகும்.
இந்த இடத்தில் ஒரு முக்கிய தகவலைச் சொல்ல விரும்புகிறேன். இத்தகைய கரு மீட்டுக் காத்தல் தொழில்நுட்பத்தினால்தான் உலகிலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் தாவரம் உருவானது. கோதுமையையும் "ரை" எனப்படும் மற்றொரு தானியத்தையும் கலப்பினப் பெருக்கம் செய்ததில் உருவானதுதான் ட்ரிட்டிக்கேல் (Triticale)
5. மிக முக்கியமாக வேறொரு உயிரினத்தில்(பாக்டீரியா, ஜெல்லி மீன்) உள்ள மரபணுக்களை தாவரங்களில் புகுத்த கலப்பின முறையால் முடியாது!
ஏன் வேறொரு உயிரினத்தில் இருந்து தாவரத்திற்கு மரபணுவை மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? சொல்கிறேன்.
பருத்தி உற்பத்தியினை காய்ப்புழுக்கள் (Boll worms) அடியோடு அழிக்கக் கூடிய சாத்தியம் உண்டு.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/ABWirrigted_cot.jpg
காய்ப்புழுவினைக் கட்டுப்படுத்த குடம் குடமாகப் பூச்சிக்கொல்லிகளை (பூச்சி மருந்து என்ற பதம் வெகுநாட்களாகவே தவறாகப் பயன் படுத்தப் படுகிறது. அது உண்மையிலே பூச்சியைக் கொல்லும் நச்சு) தெளிக்க வேண்டும். அப்படியும் விட்டேனா பார் எனச் சில காய்ப்புழுக்கள் டார்வினின் பரிணாம வளர்ச்சிப் படி தன் உடலமைப்பில் சில மாறுதல் களைச் செய்து கொண்டு அந்தப் பூச்சிக்கொல்லிகளை ஏதோ கொக்கோ-கோலா குடிப்பது போல குடித்து கும்மாளமிட ஆரம்பித்தன. இயற்கையாகவே மண்ணில் காணப்படும் பாக்டீரியா பாஸில்லஸ் துருண்ஜியன்ஸிஸ்- Bacillus thurungiensis. செல்லமாக BT. இந்த பாக்டீரியாக்கள் சுரக்கும் ஒருவித புரதம் அந்தக் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தும்(கொல்லும்). இதைக் கவனித்த பூச்சியியல்(Entomology) வல்லுனர்கள் அந்தப் புரதச் சுரப்புக்குக் காரணமான மரபணுவைக் கண்டறிந்தனர்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/GM-crop.gif
இந்த மரபணு தாவர மரபணுவுடன் ஒட்டிக்கொண்டால் அந்தத் தாவரமும் குறிப்பிட்ட அந்தப் புரதத்தைச் சுரக்கும் அல்லவா?. பணம் மிச்சமாகும். பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல்கேடு இல்லை. இது இயற்கையாகவே உள்ள புரதம் என்பதால் பூச்சிகளால் அவ்வளவு எளிதாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள முடியாது(பூச்சிகள் அப்படியும் எதிர்த்து நின்றது பின்னர் நடந்த கதை). பருத்தியின் காய்ப்புழு பிரச்சினை மட்டுமல்ல. களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் (Herbicide resistance), வைட்டமின் சத்து கொண்ட அரிசி( தங்க அரிசி- Golden rice), வாடாமல் இருக்கும் தக்காளி (Flavr Savr Tomato) போன்ற இன்னபிற விடயங்களைச் சமாளிக்கவும் பிற உயிரினங்கள் மரபணுக்களைக் கொண்டிருந்தன.
சரி இந்த மரபணுக்களை எப்படித் தாவர மரபணுவுக்குள் ஒட்ட வைப்பது?. அங்கேதான் முதன் முதலாக மரபணுமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
பாக்டீரியாவின் குரோமோசோம் டி. என்.ஏ வட்டமாகவோ அல்லது நீளமாகவோ (ஒற்றைக் கம்பி போல) இருக்கும்.அது மட்டுமல்லாமல் பாக்டீரியாக்கள் Ti-பிளாஸ்மிட் எனப்படும் குரோமோசோம் சாராத டி.என்.ஏக்களையும்(ஆம் ஒன்றுக்கும் மேல்) கொண்டிருக்கும்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/320px-Plasmid_englishsvg.png
இந்த பிளாஸ்மிட் தன்னிச்சையாகவே பெருக்கிக் கொள்ளும் ஒரு அபூர்வத் திறன் கொண்டது. இந்த பிளாஸ்மிட்களை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். அதற்கும் பல வழிகள் இருக்கின்றன். பிளாஸ்மிடை மட்டும் தவிர்த்து விட்டு பாக்டீரியாவின் செல்லை கரைக்க பல வேதிப் பொருட்கள் இருக்கின்றன.இந்தப் பிளாஸ்மிட்கள்தான் நமக்கு வேண்டிய மரபணுவைச் சுமந்து மற்றுமொரு பாக்டீரியாவுக்குள் கொண்ட செல்லும் வாகனம்(Vector).
அதே போன்று நமக்கு வேண்டிய மரபணு தரும் பாக்டீரியாவில், பாக்டீரியாவின் செல்லில் உள்ள மற்ற பொருட்களை வேதிப்பொருள் கொண்டு கரைத்து அதன் டி.என்.ஏவை மட்டும் தனியாக எடுக்க இயலும்.
சரி நம்மிடையே இப்பொழுது நமக்குத் தேவையான மரபணு தரும் டி.என்.ஏ இருக்கிறது. அதை சுமந்து செல்ல வாகனம் இருக்கிறது. ஆனால் இந்த வாகனத்தால் மற்றுமொரு பாக்டீரியாவின் தோலைக் கிழித்து உட்புகமுடியுமே தவிர தாவர செல்லின் தடித்த சுவற்றினை ஒன்றும் செய்ய முடியாதே!. அப்படியானால் அதை தாவரத்திற்குள் சுமந்து செல்வது யார்?
விடுவானா மனிதன்? அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்து விட்டாயிற்று. அக்ரோபேக்டீரியம் டூமிஃபேசியன்ஸ் (Agrobacterium tumifaciens) எனப்படும் ஒரு பாக்டீரியா தாவரச் செல்லின் சுவற்றைத் துளைத்து உட்புக முடியும். ஆனால் அது எந்த இடத்தில் தாவரத்தின் உட்புகுகிறதோ அந்த இடத்தில் ஒரு பெரிய கட்டி போன்ற வீக்கம் (Crown gall) ஏற்படும்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/Gall.jpg
அது நமக்குத் தேவையில்லாத குணமாயிற்றே? விட்டு விடுவோமா? கட்டிக்கு காரணமான அந்த மரபணுவைக் கண்டறிந்து அதை நீக்கம் செய்து விட்டோம்!
ஆமாம் நான் அடிக்கடி சொல்கிறேனே வெட்டுவது! ஒட்டுவது என்று? அது எப்படி? அதற்கும் வழி கண்ட விடாக்கண்டர்களல்லவா நாம். ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம் அல்லவா? அந்த ....ATGCGCTTAGGTAG.... என்ற டி. என். ஏ அமைப்பு. அதில் CGCTTAGG மட்டும் ஒரு குறிப்பிட்ட பண்பிற்குக் காரணமாய் இருக்கும். அதை மட்டும் வெட்டலாம். மற்றொரு இடத்தில் கொண்டு ஒட்டலாம். அதற்கு Restriction Endonucleases எனப்படும் ஒரு புரதம் உதவுகிறது. A க்கும் Tக்கும் இடையில் வெட்ட ஒரு வகை. G க்கும் Tக்கும் இடையில் வெட்ட ஒரு வகை என அதில் பலவகை. அதை மரபணுக் கத்திரிக்கோல் எனச் சொன்னாலும் பொருந்தும். வெட்டுவதற்கும் அதுதான் ஒட்டுவதற்கும் அதுதான்.
இப்பொழுது நமது மரபணுக் கத்திரிக்கோல் கொண்டு நம் வாகனம் பிளாஸ்மிட்டில் ஒரு வெட்டு. தேவையான நமது மரபணு ஆரம்பத்தில் பார்த்தோமே BT அதையும் தனியாக வெட்டு. இப்பொழுது பிளாஸ்மிட்டையும் மரபணுவையும் ஒட்டு! இப்படிச் சேர்த்த நமது வாகனம் அக்ரோபேக்டீரியம் டூமிஃபேசியன்ஸ் வரை மட்டும்தான். அதன் பின்னர் இந்தப் பாக்டீரியா கொண்டு தாவரத்தின் செல்லின் உள் புகச் சொல்லலாம். அப்படி உட்புகுந்ததும் இந்தப் பிளாஸ்மிட்டுடன் சேர்ந்த நமக்கு விருப்பமான மரபணு தனியாக கழன்று கொண்டு தாவரத்தின் டி.என். ஏவுடன் ஒட்டிக் கொள்ளும். அதற்கும் வழி இருக்கிறது.இப்படியாக பாக்டீரியாவின் மரபணு தாவர செல்லின் மரபணுவிற்குள் செலுத்தியாகிவிட்டது. நாம் எதிர்பார்த்த பண்பு வந்து விட்டதா என சோதனை செய்ய வேண்டும். சோதித்த வெற்றி அடைந்த செல்களை சேகரிக்கலாம். முறையான உணவு மற்றும் சூழல் அளிக்கப்படுகின்ற ஒவ்வொரு தாவர செல்லுக்கும் ஒரு முழுமையான செடியாக உருவாகக் கூடிய திறன் இருக்கிறது. அதற்கு ஆங்கிலத்தில் Totipotency எனப்பெயர். அந்தக் குணத்தின் படி மரபணுமாற்றம் செய்யப்பட்ட செல் திசு வளர்ப்பு முறையில் (Tissue culture) முழுச் செடியாக உருவெடுக்கிறது.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/1929223432.jpg
பின்னர் அந்தச் செடி ஆய்வகத்தில் இருந்து மெதுவாக இயல்பான வளர்ச்சி சூழலுக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு மாற்றப்பட்ட செடிகளின் விதைகள் கொண்டு விளைநிலங்களில் பயிரிடப்படுகின்றன.மரபணுமாற்றத் தொழில் நுட்பத்தின் எளிய விளக்கப்படம் கீழே!
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/plasmidexpression.gif
இன்று சற்று நீண்ட பதிவாகப் பதிவிட வேண்டிய அவசியம். ஒரு தொழில்நுட்பம் பற்றிய அறிமுகம் என்பதால் அதைப்பற்றி முழுமையாகக் கொடுக்க முனைந்தேன். கேள்விகள் இருந்தால் விளக்கச் சித்தமாயிருக்கிறேன்.:icon_b:
--வளரும்:icon_rollout: