எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-07-2008, 05:39 AM
இரவும் பகலும் தழுவிக்கொள்ளும்
பொன் மாலைப் பொழுதுகளில்
என் காலை புலர்கிறது
ஆடி முடித்து அடங்கும் நேரம்
இரண்டாமாட்ட காட்சியின் துவக்கம்
சில பாவப்பட்ட ஜீவன்களுக்கு மட்டும்
நாலு கால் நாய்களெல்லாம்
பங்களா பளிங்குகளில் படுத்துறங்க
கம்பிக் கதவுகளின் வெளியே
இரண்டு கால் நாயாக நான்.
வாழ்க்கையில் நிமிர்ந்து “நிக்கணும்”
எந்த நேரத்தில் சொன்னாரோ என் ஆசான்
நிற்பதே என் வாழ்க்கையாகி போனது
பொக்கை வாய் காந்தி நோட்டுகளும்
சீமான் வீட்டு ஆபரணங்களும்
வங்கிப் பெட்டகத்தில் கண்ணுறங்க
கொடியில் காயும் துணிகளுக்கும்
செடியில் பூக்கும் மலர்களுக்கும்
இரவுக் காவலன் பணி
தட்டினால் மட்டுமல்ல
குட்டினாலும் எட்டி விழும் என்னை
எதிர்த்து வந்தவர்களை
எப்படியும் பந்தாடி விடுவேனென்ற
ஏகபோக நம்பிக்கைக்கு பாதியும்
எட்டி வாங்கும் சம்பளத்திற்கு மீதியுமாய்
இரவு முழுவதும் மாரத்தான் ஓட்டம்
எல்லோருக்கும் இதமளிக்கும் இரவுகள்
என்னை மட்டும் சுடுகிறது
ஓர வஞ்சனையாய்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmai.com
junaid-hasani.blogspot.com
பொன் மாலைப் பொழுதுகளில்
என் காலை புலர்கிறது
ஆடி முடித்து அடங்கும் நேரம்
இரண்டாமாட்ட காட்சியின் துவக்கம்
சில பாவப்பட்ட ஜீவன்களுக்கு மட்டும்
நாலு கால் நாய்களெல்லாம்
பங்களா பளிங்குகளில் படுத்துறங்க
கம்பிக் கதவுகளின் வெளியே
இரண்டு கால் நாயாக நான்.
வாழ்க்கையில் நிமிர்ந்து “நிக்கணும்”
எந்த நேரத்தில் சொன்னாரோ என் ஆசான்
நிற்பதே என் வாழ்க்கையாகி போனது
பொக்கை வாய் காந்தி நோட்டுகளும்
சீமான் வீட்டு ஆபரணங்களும்
வங்கிப் பெட்டகத்தில் கண்ணுறங்க
கொடியில் காயும் துணிகளுக்கும்
செடியில் பூக்கும் மலர்களுக்கும்
இரவுக் காவலன் பணி
தட்டினால் மட்டுமல்ல
குட்டினாலும் எட்டி விழும் என்னை
எதிர்த்து வந்தவர்களை
எப்படியும் பந்தாடி விடுவேனென்ற
ஏகபோக நம்பிக்கைக்கு பாதியும்
எட்டி வாங்கும் சம்பளத்திற்கு மீதியுமாய்
இரவு முழுவதும் மாரத்தான் ஓட்டம்
எல்லோருக்கும் இதமளிக்கும் இரவுகள்
என்னை மட்டும் சுடுகிறது
ஓர வஞ்சனையாய்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmai.com
junaid-hasani.blogspot.com