mukilan
12-07-2008, 01:45 AM
அது ஒரு அழகிய நந்தவனம்.பூத்துக் குலுங்கும் மலர்கள்.. மயக்கும் மணம் பரப்பி நின்ற மகிழம்பூ மரங்கள். யாரோ ஒரு அழகிய பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அழகான பெண்ணுடன் நானா? அதானே நல்ல கனவாகத்தான் இருந்திருக்க வேண்டும். மார்கழி மாதத்தின் காலை நேரம். தலையையும் சேர்த்து மூடிக்கொண்டு, குளிருக்கு கம்பளி கொடுத்த கதகதப்பில்தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென மழை வந்த பொழுதே நான் சுதாரித்திருக்க வேண்டும்..... என் சகதர்மினி தான். கையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு என்னை எழுப்ப முயற்சிக்கிறாளாம்.
என் மனைவியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். கல்யாணம் முடிந்த புதிதில் போனால் போகிறதென்று கொஞ்சமே கொஞ்சம் என்று அழகாக இருந்தவள்தான்.. என்னாயிற்றோ மகள் பிறந்ததிலிருந்தே அழகோடு சண்டையிட்டுக் கொண்டவள் போல கிஞ்சித்தும் அழகு படுத்திக் கொள்வதே கிடையாது. நான் சொல்லியும் காண்பித்து விட்டேன்.
போதும் உங்க மூஞ்சிக்கு என்பாள்.
நான் மீறி ஏதேனும் சொல்லிவிட்டால் உடனே என் அம்மாவைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டு சண்டை பிடிக்க வந்துவிடுவாள். எல்லா வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை என்றால் எங்கள் வீட்டில் என் அம்மாவிற்கும் என் வீட்டுக்காரிக்கும் நல்ல பொருத்தம். அவர்கள் கூட்டணி எப்பொழுதும் ரொம்ப கெட்டி.எங்கே என்னைப் பட்டினி போட்டு விடுவார்களோ என்று அடிக்கடி வாய்மூடி வெளிநடப்பு செய்து விடும் சிங்கிள் மேன் நான்.
நான்... ? பேரு பரந்தாமன். சென்னையில் ஸ்டேட் பேங்கில் புரபேஷனரி ஆபிசராக இருக்கிறேன். ரயில்வே கலாசி வேலையில் இருந்து ஐ.ஏ.எஸ் வேலை வரைக்கும் எல்லா வேலைக்கும் முயற்சி பண்ணி தெய்வம் கைவிட்டப்பறம் என் முயற்சியின் திருவினையால வேலை வாங்கினேன். இங்கே சென்னைல நான் அம்மா, என் தர்மபத்தினி செல்வி, மகள் கயல்விழியோடு இருக்கிறேன்.
தூக்கம் என்பது எவ்வளவு அருமையான விசயம் இல்லையா? அப்படியே உடல் பாரத்தை இறக்கி மனபாரம் போக கண்ணை மூடிக்கொண்டு... அடடா. கிட்டத்தட்ட அது ஒரு தியானம். அதை அனுபவிச்சாதான் தெரியும். என் காதுக்கருகில் வெடி குண்டு வெடித்தாலும் என் தூக்கம் கலையாது. நித்திரையை நிரம்பவும் அனுபவிப்பேன் என்பதால் எனக்கு சுவாமி.நித்ரானந்தா என்றே பட்டம் கொடுக்கலாம். ஆனால் என்னைக்கூட தூக்கத்தில் எழுப்பும் வித்தையையும் கிராதகி கற்று வைத்திருக்கிறாள். ஆரம்பத்தில் காதுக்கருகில் பேசிப்பார்த்து... என்னை அசைத்துப் பார்த்து...ம்ஹீம் எதற்கும் அசையாத என்னை தண்ணீர் ஊற்றி(கவனிக்க தெளித்து அல்ல ஊற்றி) எழுப்பக் கற்றுக் கொண்டிருக்கிறாள். தூக்கத்தில் தண்ணீர் ஊற்றிய பிறகு தூக்கமாவது மண்ணாவது. என் தவம் கலைக்கும் இந்த மேனகைக்குச் சாபமா இட முடியும்?:eek:.
நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் அப்பா அலாரம் வாங்கிக் கொடுத்தார். அது அடித்து நான் கேட்டதெல்லாம் பகலில்தான். நமக்கும் நித்ராதேவிக்கும் அப்படி ஒரு காதல். மனிதர் உணர்ந்து கொள்ள.. சரி வேண்டாம் விட்டிடுங்க. அது யார் அவ நித்ராதேவி என் சக்களத்தி எனச் செல்வி ஓடி வந்து விடுவாள்.
ஆனால் என் அத்தைப் பையன் அனந்தராமன் அப்படியல்ல. பையன் படு உஷார்ப்பேர்வழி. நான் நித்ரானந்தா என்றால் அவன் உஷாரானந்தா.அலாரம் வைத்தால் அது அடிப்பதற்குள் எழுந்து அதனை ஆஃப் செய்பவன். உறங்குவானோ இல்லையோ தெரியாது. ஏதேனும் சத்தம் கேட்டால் உடனே எழுந்து விடுவான். இப்படித்தான் சிறுவயதிலே கிராமத்தில் பாட்டி வீட்டில் விடுமுறைக்கு நாங்கள் எல்லாம் சென்றிருந்த பொழுது ஏதோ சத்தம் கேட்டு விழித்தவன் பக்கத்து வீட்டில் திருடர்களைக் கண்டு அனைவரையும் எழுப்பி அவர்கள் பிடிபடக் காரணமாய் இருந்தான். ஊரே அவனைப் பாராட்டிப் பேச அத்தைக்கு இருப்புக் கொள்ளவில்லை. எங்கே போனாலும் எங்க அனந்து ரொம்ப சுறுசுறுப்பு.. எப்போவுமே உஷாரா இருப்பான் என்றெல்லாம் பெருமை பீற்றிக்கொள்வார். அந்தத் திருடன் பிடித்த கதையை மாட்டிக்கொண்ட ரெக்கார்டு டிஸ்க் போல அதையே வசனம் மாறாமல் சொல்லிக் காட்டுவார். மாமா அதைவிட ஒரு படி மேல். எங்க அனந்து சி.பி.ஐ ஆபிஸராவானாக்கும். நீ எல்லாம் என்னத்துக்குடா ஆவே மடி பிடிச்ச பயலே என்பார் என்னை.
அனந்து சென்னை மாநகராட்சிப் பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியாராக இருக்கிறான். சிறுவயதில் எங்கள் வீட்டிற்கு வருகையில் என் அம்மா எழுந்து வாசல் தெளிக்கும் சத்தம் கேட்டே எழுந்து விட்டேன் என்பான். என் அப்பாவும் தங்கை பையனை வானளாவப் புகழ்வார். நீயும் அவனைப் போல இருக்கணும் பரந்தாமா என்ற அட்வைஸ் வேறு. சரியென்று தலையாட்டுவதைத் தவிர வேறேன்ன செய்ய. அன்றிலிருந்து இன்று வரை தலையாட்டும் காரியத்தைச் சிரமேற்கொண்டு செய்து வருகிறேன்.
இன்று பேங்க் சென்று உக்காரக்கூட இல்லை. செல்போனில் அனந்துவின் அம்மா(அத்தை) அழைத்தார்.
என்ன ஆச்சு அத்தை என்றேன்.
பரந்தாமா, அனந்து மயங்கி விழுந்துட்டாண்டா. எனக்குப் பயமாயிருக்கு கொஞ்சம் வந்துட்டுப் போயேன் என்றார்.
மேனேஜரிடம் சென்று அரைநாள் பர்மிஷன் போட்டு விட்டு அனந்து வீட்டிற்குச் சென்றேன். போன மாதம்தான் அனந்துவிற்கு திருமணம் ஆகியிருந்தது.
அனந்துவின் மனைவி சுமதி வாங்கண்ணா! அவர் அங்கே படுத்திருக்கார்.. எனக்குப் பயமாயிருக்கு பாருங்க என்றார்.
நான் அனந்துவை எழுப்பினேன். ஈனஸ்வரத்தில் முனகினான். நம்பவே முடியவில்லை. காலடிச் சத்தம் கேட்டாலே எழுந்து விடும் அனந்துவா? ஒரு ஆட்டோ அமர்த்திக் கொண்டு டாக்டர்.பாத்ரூம்பூதம் கிளினிக்கிற்கு விரைந்தேன். டாக்டர் அனந்துவின் நாடி பிடித்துப் பார்த்தார். கண்களில் லைட் அடித்துப் பார்த்து விட்டு ஸ்லீப் டெப்ரிவியேசன் போலத் தெரியுதே என்றார். பின்னர் அவர் பரிந்துரைத்த சில தூக்க மாத்திரைகள் வாங்கிக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினோம்.
அனந்துவிடம் ஏன் டா தூங்கலை! என்றேன். சுமதி ராத்திரியெல்லாம் குறட்டை விடறாடா! எனக்குத் தூக்கம் போய்டறது என்றான். இதைக்கேட்டு சிரிப்பதா அழுவதா? என்றே தெரியவில்லை. ஆனால் தூக்கம் என்பது வரம் என்று புரிந்தது
இப்போ சொல்லுங்க நீங்க சுவாமி.நித்ரானந்தாவாக விரும்பறீங்களா இல்லை சுவாமி.உஷாரானந்தாவாக விரும்பறீங்களா?
...ஆங் சொல்ல மறந்திட்டேனே.. இப்போ அனந்துவை எப்படி எழுப்பறதுன்னு செல்வி கிட்ட போன்ல சுமதி டிப் கேட்கறாங்க. பின்னே அனந்துவிற்கு தூங்க ட்ரெய்னிங் கொடுத்தது நானாச்சே!:D சுவாமி.நித்ரானந்தாய நமக.:icon_rollout::icon_b:
என் மனைவியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். கல்யாணம் முடிந்த புதிதில் போனால் போகிறதென்று கொஞ்சமே கொஞ்சம் என்று அழகாக இருந்தவள்தான்.. என்னாயிற்றோ மகள் பிறந்ததிலிருந்தே அழகோடு சண்டையிட்டுக் கொண்டவள் போல கிஞ்சித்தும் அழகு படுத்திக் கொள்வதே கிடையாது. நான் சொல்லியும் காண்பித்து விட்டேன்.
போதும் உங்க மூஞ்சிக்கு என்பாள்.
நான் மீறி ஏதேனும் சொல்லிவிட்டால் உடனே என் அம்மாவைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டு சண்டை பிடிக்க வந்துவிடுவாள். எல்லா வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை என்றால் எங்கள் வீட்டில் என் அம்மாவிற்கும் என் வீட்டுக்காரிக்கும் நல்ல பொருத்தம். அவர்கள் கூட்டணி எப்பொழுதும் ரொம்ப கெட்டி.எங்கே என்னைப் பட்டினி போட்டு விடுவார்களோ என்று அடிக்கடி வாய்மூடி வெளிநடப்பு செய்து விடும் சிங்கிள் மேன் நான்.
நான்... ? பேரு பரந்தாமன். சென்னையில் ஸ்டேட் பேங்கில் புரபேஷனரி ஆபிசராக இருக்கிறேன். ரயில்வே கலாசி வேலையில் இருந்து ஐ.ஏ.எஸ் வேலை வரைக்கும் எல்லா வேலைக்கும் முயற்சி பண்ணி தெய்வம் கைவிட்டப்பறம் என் முயற்சியின் திருவினையால வேலை வாங்கினேன். இங்கே சென்னைல நான் அம்மா, என் தர்மபத்தினி செல்வி, மகள் கயல்விழியோடு இருக்கிறேன்.
தூக்கம் என்பது எவ்வளவு அருமையான விசயம் இல்லையா? அப்படியே உடல் பாரத்தை இறக்கி மனபாரம் போக கண்ணை மூடிக்கொண்டு... அடடா. கிட்டத்தட்ட அது ஒரு தியானம். அதை அனுபவிச்சாதான் தெரியும். என் காதுக்கருகில் வெடி குண்டு வெடித்தாலும் என் தூக்கம் கலையாது. நித்திரையை நிரம்பவும் அனுபவிப்பேன் என்பதால் எனக்கு சுவாமி.நித்ரானந்தா என்றே பட்டம் கொடுக்கலாம். ஆனால் என்னைக்கூட தூக்கத்தில் எழுப்பும் வித்தையையும் கிராதகி கற்று வைத்திருக்கிறாள். ஆரம்பத்தில் காதுக்கருகில் பேசிப்பார்த்து... என்னை அசைத்துப் பார்த்து...ம்ஹீம் எதற்கும் அசையாத என்னை தண்ணீர் ஊற்றி(கவனிக்க தெளித்து அல்ல ஊற்றி) எழுப்பக் கற்றுக் கொண்டிருக்கிறாள். தூக்கத்தில் தண்ணீர் ஊற்றிய பிறகு தூக்கமாவது மண்ணாவது. என் தவம் கலைக்கும் இந்த மேனகைக்குச் சாபமா இட முடியும்?:eek:.
நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் அப்பா அலாரம் வாங்கிக் கொடுத்தார். அது அடித்து நான் கேட்டதெல்லாம் பகலில்தான். நமக்கும் நித்ராதேவிக்கும் அப்படி ஒரு காதல். மனிதர் உணர்ந்து கொள்ள.. சரி வேண்டாம் விட்டிடுங்க. அது யார் அவ நித்ராதேவி என் சக்களத்தி எனச் செல்வி ஓடி வந்து விடுவாள்.
ஆனால் என் அத்தைப் பையன் அனந்தராமன் அப்படியல்ல. பையன் படு உஷார்ப்பேர்வழி. நான் நித்ரானந்தா என்றால் அவன் உஷாரானந்தா.அலாரம் வைத்தால் அது அடிப்பதற்குள் எழுந்து அதனை ஆஃப் செய்பவன். உறங்குவானோ இல்லையோ தெரியாது. ஏதேனும் சத்தம் கேட்டால் உடனே எழுந்து விடுவான். இப்படித்தான் சிறுவயதிலே கிராமத்தில் பாட்டி வீட்டில் விடுமுறைக்கு நாங்கள் எல்லாம் சென்றிருந்த பொழுது ஏதோ சத்தம் கேட்டு விழித்தவன் பக்கத்து வீட்டில் திருடர்களைக் கண்டு அனைவரையும் எழுப்பி அவர்கள் பிடிபடக் காரணமாய் இருந்தான். ஊரே அவனைப் பாராட்டிப் பேச அத்தைக்கு இருப்புக் கொள்ளவில்லை. எங்கே போனாலும் எங்க அனந்து ரொம்ப சுறுசுறுப்பு.. எப்போவுமே உஷாரா இருப்பான் என்றெல்லாம் பெருமை பீற்றிக்கொள்வார். அந்தத் திருடன் பிடித்த கதையை மாட்டிக்கொண்ட ரெக்கார்டு டிஸ்க் போல அதையே வசனம் மாறாமல் சொல்லிக் காட்டுவார். மாமா அதைவிட ஒரு படி மேல். எங்க அனந்து சி.பி.ஐ ஆபிஸராவானாக்கும். நீ எல்லாம் என்னத்துக்குடா ஆவே மடி பிடிச்ச பயலே என்பார் என்னை.
அனந்து சென்னை மாநகராட்சிப் பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியாராக இருக்கிறான். சிறுவயதில் எங்கள் வீட்டிற்கு வருகையில் என் அம்மா எழுந்து வாசல் தெளிக்கும் சத்தம் கேட்டே எழுந்து விட்டேன் என்பான். என் அப்பாவும் தங்கை பையனை வானளாவப் புகழ்வார். நீயும் அவனைப் போல இருக்கணும் பரந்தாமா என்ற அட்வைஸ் வேறு. சரியென்று தலையாட்டுவதைத் தவிர வேறேன்ன செய்ய. அன்றிலிருந்து இன்று வரை தலையாட்டும் காரியத்தைச் சிரமேற்கொண்டு செய்து வருகிறேன்.
இன்று பேங்க் சென்று உக்காரக்கூட இல்லை. செல்போனில் அனந்துவின் அம்மா(அத்தை) அழைத்தார்.
என்ன ஆச்சு அத்தை என்றேன்.
பரந்தாமா, அனந்து மயங்கி விழுந்துட்டாண்டா. எனக்குப் பயமாயிருக்கு கொஞ்சம் வந்துட்டுப் போயேன் என்றார்.
மேனேஜரிடம் சென்று அரைநாள் பர்மிஷன் போட்டு விட்டு அனந்து வீட்டிற்குச் சென்றேன். போன மாதம்தான் அனந்துவிற்கு திருமணம் ஆகியிருந்தது.
அனந்துவின் மனைவி சுமதி வாங்கண்ணா! அவர் அங்கே படுத்திருக்கார்.. எனக்குப் பயமாயிருக்கு பாருங்க என்றார்.
நான் அனந்துவை எழுப்பினேன். ஈனஸ்வரத்தில் முனகினான். நம்பவே முடியவில்லை. காலடிச் சத்தம் கேட்டாலே எழுந்து விடும் அனந்துவா? ஒரு ஆட்டோ அமர்த்திக் கொண்டு டாக்டர்.பாத்ரூம்பூதம் கிளினிக்கிற்கு விரைந்தேன். டாக்டர் அனந்துவின் நாடி பிடித்துப் பார்த்தார். கண்களில் லைட் அடித்துப் பார்த்து விட்டு ஸ்லீப் டெப்ரிவியேசன் போலத் தெரியுதே என்றார். பின்னர் அவர் பரிந்துரைத்த சில தூக்க மாத்திரைகள் வாங்கிக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினோம்.
அனந்துவிடம் ஏன் டா தூங்கலை! என்றேன். சுமதி ராத்திரியெல்லாம் குறட்டை விடறாடா! எனக்குத் தூக்கம் போய்டறது என்றான். இதைக்கேட்டு சிரிப்பதா அழுவதா? என்றே தெரியவில்லை. ஆனால் தூக்கம் என்பது வரம் என்று புரிந்தது
இப்போ சொல்லுங்க நீங்க சுவாமி.நித்ரானந்தாவாக விரும்பறீங்களா இல்லை சுவாமி.உஷாரானந்தாவாக விரும்பறீங்களா?
...ஆங் சொல்ல மறந்திட்டேனே.. இப்போ அனந்துவை எப்படி எழுப்பறதுன்னு செல்வி கிட்ட போன்ல சுமதி டிப் கேட்கறாங்க. பின்னே அனந்துவிற்கு தூங்க ட்ரெய்னிங் கொடுத்தது நானாச்சே!:D சுவாமி.நித்ரானந்தாய நமக.:icon_rollout::icon_b: